திங்கள், 14 மார்ச், 2011

இந்தியாவா? 'இந்தி'யா வா?


'தமிழ்பிளாக்கன்' என்று ஒரு பதிவு எழுத ஆரம்பித்திருந்தேன். வழக்கம்போல முதல்பாரா எழுதி மூன்றுமாத காலம் ஆகின்றது. அப்படியே மூடிவைத்திருக்கிறேன். பெரும்பாலும் பின்னூட்டமிடும் பதிவர்கள் வெறுமனே மொய்வைக்கும் முறைக்காக எங்காவது இரண்டு வரியைப் படித்துவிட்டு அதை காப்பி&பேஸ்ட் செய்து கமெண்ட் எழுதிவிட்டு "ஆகா!சூப்பர்", "அருமை", "நல்லாருக்கு" என்பது போன்று டெம்ப்ளேட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர். மலேரியா ஜூரம் வந்தவரைப்போல ஒருநாளைக்கு ரெண்டு பதிவு எழுதி 'பிரபலன்' ஆகும் கனவில் துடிப்பவரும் பலருண்டு. மிகச்சில பதிவர்களின் வலைப்பக்கங்களைத்தவிர மற்ற வலைப்பதிவுகளில் பெரிய அளவு சீரியஸ் விவாதங்கள் நடைபெறுவது அரிதாகவே இருக்கின்றது. மாற்றாக தற்போது கூகிள் பஸ், ப்ளாக்கைவிட மிகச்சிறப்பான விவாதத்தளமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் மாறி இருப்பதால் நிறைய ப்ளாக்கர்கள் தற்போது பஸ்ஸர்களாக மாறி வருகின்றனர். கூகிள் பஸ்ஸில் ஆழமான விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதில் புருஷோத்தமன் பொன்னுசாமி (குழலி அண்ணன்), சிவகுமார் மா, பலூன் மாமா(கல்வெட்டு) போன்றோரும், இன்னும் விவாதங்களில் சீரிய பங்கெடுப்பாளர்களாக கேவிஆர், மணிஜி, குசும்பன், ஜோசப் பால்ராஜ், கென், அய்யனார், ஜ்யோவ்ராம் சுந்தர், மணிஜி, யுவகிருஷ்ணா, அதிஷா போன்ற பல பழம்பெரும் பதிவர்களும் இருக்கின்றனர்.

சமீபத்தில் நான் படித்தவற்றுள் மிக ஆழமான புள்ளிகளை தொட்டுச் செல்வதாகவும் அடர்த்தியானதாகவும் நான் உணர்ந்த பஸ்ஸை இங்கு பகிர விரும்புகிறேன். மா.சிவகுமார் அவர்களின் "இந்தி தேசிய மொழியா? இந்தி கற்பது அவசியமா?" என்பது பற்றிய விவாதங்களை உள்ளடக்கிய இந்த பஸ் ஆழமான தகவல்கள் விரும்புவோருக்கு ஒரு தூண்டுபுள்ளியாக அமையும் என்று எண்ணுகிறேன்.
***********************************************************************

சிவகுமார் மா - Buzz - Public
தேர்தல் கூட்டணி பற்றிப் பேசும் சந்திப்பில், ராகுல் காந்தி இந்தியில் பேசியதால் கருணாநிதியின் மனம் புண்பட்டதாம்.

இதற்கும் 'தேசியக் கட்சியுடன் பேசப் போனால் இந்தியில் பேசாமல் எதில் பேசுவார்கள்' என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாமே!

(தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் ஊர் பெயர் எழுதியதற்கு இப்படித்தான் சமாதானம் சொன்னார்கள்).


 2 people publicly reshared this - அத்திவெட்டி ஜோதிபாரதி and Santhappan Sambandham
10 people liked this - subramanian rajaraman, Karthik J, Kathir கதிர், O.R.B Raja, அத்திவெட்டி ஜோதிபாரதி and 5 others

Akilan R - அவர் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் இவர் மனம் புண்பட்டிருக்காதோ..? இப்படித்தானே தமிழகத்தில் இந்தி ஒழிக்கிறேன் என்று இரண்டாவது மொழியாக கூட இந்தி படிக்க விடாமல் தமிழரை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட விட்டு பார்த்தவர்கள், ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கூட இல்லாமல் முதல் மொழியாக ஆக்கி பல ஆங்கில வழி கல்வி கூடங்களுக்கு அனுமதி அளித்து, இன்று தமிழ் எழுத பேச தெரிந்த இளைஞர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.Mar 10

சிவகுமார் மா - அகிலன்,

நீங்கள் இரண்டு முரணான கருத்துக்களைச் சொல்கிறீர்கள்.

1. இந்தி படிக்காததால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறோம்.
2. ஆங்கிலம் படித்ததால் தமிழ் பேச தெரிந்த இளைஞர்கள் அருகிப் போய் விட்டார்கள்.

எனக்குப் புரிந்த வரை (எனக்கு சரி எனப்படும்) திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கை:

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில மொழி ஆட்சி மொழியாக இருக்கும் (அந்த மாநிலத்தில் நடக்கும் மாநில மற்றும் மத்திய அரசு பணிகள் அனைத்திலும்).

வெளி உலகுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும்.

வேறு மாநிலத்துக்குப் போக விரும்புபவர்கள் அந்த மாநில மொழியைக் கற்றுக் கொண்டு போக வேண்டும். எந்த மொழிக்கும் முதலிடம், முன்னுரிமை கிடையாது.

இன்னொன்றையும் யோசித்துப் பாருங்கள்:

இன்று ஆங்கிலம் அல்லது இந்தி பேசத் தெரியாத தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மக்களவையிலோ, மாநிலங்களவையிலோ செயல்பட முடியாத நிலை இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் இருப்பதைப் போல உடனக்குடன் மொழி பெயர்க்கும் பணியாளர்கள் மூலம் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியிலும் பேசவும், அதை விரும்பிய மொழியில் கேட்கவும் ஏன் வசதி செய்யக் கூடாது.

15 மொழிகள் என்று வைத்துக் கொண்டால் கூட 200க்கும் மேற்பட்ட வகைகளில் மொழிமாற்றப் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். ஆயிரக்கணக்கான பேர் அந்தத் துறையில் ஈடுபட்டுத் தேர்ச்சி பெறுவார்கள். அதன் மூலம் இந்திய மொழிகளுக்கிடையே உறவாடலும், கருத்துப் பரிமாற்றமும் வளரும்.

எல்லா வேறுபாடுகளையும் (diversity) அழித்து ஒற்றை கலாச்சாரத்தை உருவாக்குவது என்றும் நடக்க முடியாத ஒன்று.Mar 10

Akilan R - நான் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை தவறாக சொல்லவில்லை. நீங்கள் சொல்லும் கூற்றுப்படி ஆங்கிலம் இல்லாமல் வெளிநாடுகளுக்கு, ஐ நா சபைக்கெல்லாம் செல்ல முடியாதுதான். நான் கேட்க வந்தது பிறகு ஏன் இந்திஐ மட்டும் ஒழிப்போம் என்றெல்லாம் பேசுகிறார்கள்? வெறும் ஓட்டுக்காக பேசும் பேச்சுதானே இது?

குண்டு சட்டிக்குள் என்று நான் சொன்னது இந்தியாவிற்குள். உதாரணமாக இன்று என் கல்வி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் இருந்து மாணவர்கள் படிக்கிறார்கள். வெவ்வேறு மாநிலத்தார் கூடி பேசும் நிலை வரும்போது அனைவரும் இந்தியில் பேசுகிறார்கள். தமிழன் மட்டும் பேந்த பேந்த முழிக்கிற நிலைமை உள்ளது. அவர்களை ஆங்கிலத்தில் பேச சொன்னால் அவர்கள் கேட்கிறார்கள்: "மற்றவர்களுடன் உரையாட ஆங்கிலம் படிக்கும் நீங்கள் இந்தியை மட்டும் ஒழிப்போம் என்று பேசுவது நியாயமா? ஏன் தேசிய மொழியில் பேசும் இந்தியர்களான எங்களை ஆங்கிலத்தில் பேச சொல்கிறீர்கள்?" இதற்கு நான் என்ன பதில் சொல்ல?Mar 10

சிவகுமார் மா - நீங்கள் சொல்லும் சூழல் இந்தியாவில் நிலவுவது வருத்தமான உண்மை. நானும் பல இடங்களில் இந்தக் கேள்வியைச் சந்தித்திருக்கிறேன்.

இந்தியா பல்வேறு தேசிய இனங்களின் தாயகம். இந்தியாவுக்கு ஒற்றை தேசிய மொழி இருக்க முடியாது.

இலங்கைக்கு இரண்டு தேசிய மொழிகள், மலேசியா/சிங்கப்பூரில் மூன்று (நான்கு?) தேசிய மொழிகள். அவற்றைப் போல இந்தியாவுக்கு குறைந்தது 16 தேசிய மொழிகள்.

'தேசிய மொழியில்' பேசுகிறோம் என்று இந்தியில் பேசுபவர்கள் சொன்னால், நாமும் அவர்கள் இருக்கும் சூழலில் தமிழில் பேசலாம் (தமிழும் இந்தியாவின் தேசிய மொழிதான்).

(கூட்டத்தில் இருக்கும் ஒருவருக்குப் புரியாத மொழியில் பேசுவது அநாகரீகம். அது இந்தி பேசும் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. )Mar 10

Akilan R - நீங்கள் நான் சொல்வதை தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன். அவர்கள் இந்திகாரர்கள் அல்ல. அவர்களுடைய தாய் மொழி எல்லாம் வெவ்வேறு. அவர்கள் கூட்டத்தில் உள்ள எல்லோருக்கும் புரிய வேண்டும் என்றுதான் இந்தியில் பேசுகிறார்கள். உதாரணமாக என் லாபிலேயே கன்னடரும் ஒரு பெங்காளியும்உள்ளனர். அவர்கள் இந்தியில்தான் பேசுவர். 16 மொழிகள் தேசிய மொழி என்றாலும் இந்திதான் இந்தியாவின் வழக்கு மொழி என்பதை நினைவு கூர்கிறேன்.

மற்றவருடன் உரையாட வேண்டும் என்று ஆங்கிலம் கற்றுகொல்வதை பற்றி கவலை படாதவர்கள் இந்தியை மட்டும் தடை செய்ய வேண்டும் என்று ஏன் பேச வேண்டும்?Mar 10

Akilan R - அவர்கள் இந்திகாரர்கள் என்றால் நான் உடனே 'நான் மட்டும் என் தாய்மொழியை ஏன் விட வேண்டும் நான் தமிழில்தான் பேசுவேன்' என்று அவர்களிடம் சொல்லியிருப்பேன். ஆனால் அவர்கள் வெவ்வேறு மொழியினத்தார். தத்தம் நண்பர்களுடன் அவர்களது தாய்மொழியில் பேசுபவர்கள். கூட்டத்தில்தான் (மற்றவர்க்கு புரிய வேண்டும் என்று ) தம் தாய் மொழியை விட்டு இந்தியாவின் வழக்கு மொழியான இந்தியில் பேசுகிறார்கள். அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்வதற்கு எனக்கே வெட்கமாக உள்ளது. :-( Mar 10

சிவகுமார் மா - 1. இந்தியாவில் இந்தி மொழி பேசும் பகுதிகள் எண்ணிக்கையில் முதலிடம் (பெரும்பான்மை இடம் கிடையாது.

2. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஓரிசா, மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் அந்தந்த பகுதிக்கான தேசிய இனங்கள் பல நூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மொழிகள் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

3. இந்தி பேசும் பகுதிகளில் (குஜராத், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம்) - இந்தியின் ஆதிக்கத்தால் முக்கியமான மொழிகள் அழிந்து போய் விட்டன அல்லது அழியும் நிலையில் இருக்கின்றன.

4. தமிழ்நாட்டில் மையம் கொண்ட இந்தி எதிர்ப்பு நிகழ்ந்திரா விட்டால், இன்னும் சில நூற்றாண்டுகளில் அழிந்து போகும் திசையில் 2ல் சொன்ன தேசிய மொழிகள் அடி எடுத்து வைத்திருக்கும்.

5. இந்தியா என்பது 3ல் சொன்ன மைய நிலப்பகுதி மட்டும்தான், சூழ்ந்த தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு தேசிய இனங்கள் இந்தி பேசும் பகுதிகளின் colony என்று ஏற்றுக் கொண்டால்தான் இந்தி மொழியை வழக்கு மொழி என்று ஏற்றுக் கொள்ள முடியும்.

the authority of a thousand is not worth the humble reasoning of a single individual என்று

அறிவியலைப் பற்றி கலிலியோ சொன்னது போல, நமது நிலைப்பாட்டை தெளிவாக வைத்துக் கொண்டு எத்தனை பேர் கூட்டத்திலும், தனி ஒருவராக கருத்தைச் சொல்லலாம்.Mar 10

Akilan R - ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஆங்கிலம் மட்டும் பெரும்பான்மை மொழியா? அதை படிக்க ஒப்புக்கொள்வது ஏன்?
பெரும்பான்மை பார்த்து வருவதல்ல வழக்கு மொழி. எல்லோரும் சேர்ந்து ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதே அது.

எந்த மொழியை வழக்கு மொழியாக ஏற்றாலும்(தமிழ் உட்பட ) ஒரு சில மாநிலத்தார் அதனை தாய்மொழியாக கொண்டுள்ளனர் என்ற நிலை இருக்கத்தான் செய்யும். அதற்காக அவர்கள் நம்மை அடிமை படுத்த எண்ணுகிறார்கள் என்று சொல்ல முடியாது.Mar 10

சிவகுமார் மா - ஃபிரான்சில் ஆங்கில மொழியை ஒப்புக் கொள்வது இல்லை. ஃபிரெஞ்சு மொழிக்கு நெருக்கமான உறவுடன் இருக்கும் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தா விட்டால், ஃபிரெஞ்சு மொழி அழிந்து விடும் என்று உணர்வு.

ஒன்றுக்கொன்று நெருக்கமான உறவுடைய இந்திய மொழிகளில் ஒன்றை ஆதிக்கம் செலுத்த விட்டால், மற்ற மொழிகள் காலப்போக்கில் மறைந்து ஒழிந்து போகும்.

(அதனால் என்ன என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.)

மனிதரால் பேசப்படும் மொழி 'வெறும் தகவல் பரிமாற்ற கருவி' என்று சிலர் சொல்வது கிடையாது. ஒரே மொழியில் பேசுபவர்கள் தமக்குள் ஆழமான தொன்மையான கலாச்சார பரிமாற்றங்களைச் செய்து கொள்ள முடிகிறது. இன்னொரு மொழியில் அதே பரிமாற்றம் கிடைக்காது. ஒரு மொழியை இழப்பது அந்த கலாச்சார வளத்தை இழப்பதாகி விடும்.

75 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தேசிய மொழி பற்றி விவாதம் வந்த போது இன்றைக்கு இருக்கும் தகவல் தொழில் நுட்பங்கள் வளர்ந்திருக்கவில்லை. அதனால் மொழிமாற்ற சாத்தியங்கள் குறைவாக இருந்திருக்கலாம். அதனால், இணைப்பு மொழியாக (வெவ்வேறு மொழி பேசும் மக்கள் உறவாடும் இடத்தில் மட்டும்) ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டார்கள் இந்தி மொழி பேசாத மக்களின் தலைவர்கள்.

21ம் நூற்றாண்டில் அதுவும் தேவைப்படாது. ஒருவர் தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்று தேர்ச்சி பெற்று மற்றவர்களுடன் உறவாட, மொழி மாற்றக் கருவிகளைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் உள்ளன.

தொழில் புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழி, வழக்கு மொழி என்ற கேள்வி குறைவாகவே இருந்திருக்கும். மிகச்சிலரே மாற்று மொழி பேசும் பகுதிகளுக்கு பிரயாணம் செய்திருப்பார்கள். பயணத்துக்கு முன்பு அந்தப் பகுதி மொழியைக் கற்றுக் கொண்டு போயிருப்பார்கள்.

திராவிட அரசியல்வாதிகள் வியாபாரிகளாக உருவெடுக்காமல் இருந்திருந்தால், தொடர்ந்து சிந்தித்து காலத்துக்கு ஏற்ப மொழிக்கொள்கையை வளர்த்துச் சென்றிருப்பார்கள்.

அது நடக்காமல், (நீங்கள் சொல்வது போல) ஆங்கிலம் மூலை முடுக்கெல்லாம் ஊடுருவி நிற்பது நமது தோல்வி.Mar 10 (edited Mar 11)

டிபிசிடி TBCD - @அகிலன்

//ஏன் தேசிய மொழியில் பேசும் இந்தியர்களான எங்களை ஆங்கிலத்தில் பேச சொல்கிறீர்கள்?"//

இந்தியாவிற்கு இன்னமும் தேசிய மொழி என்று எதுவும் நிறுவப்படவில்லை. இந்தி நடுவண் அரசின் அதிகாரப்பூர்வ மொழி. அந்தந்த மாநிலங்களில் பேசப்படும் மொழியும், ஆங்கிலமும், அந்தந்த மாநிலங்களுக்கு உள்ளது.

இந்தி தேசிய மொழியாக மாற்றப்பட வேண்டும் என்று தான் இந்தியயை வலுக்கட்டாயமாக பள்ளிகளில் திணிக்க முற்பட்டனர்.

நீங்கள் கூறிய பிற மாநிலங்களில் அவர்கள் பேசிய மொழிகள் இன்று வழக்கொழிந்து அந்த இடத்தில் இந்தி மட்டுமே கோலோச்சுகின்றது.Mar 10


அரசு பாரி - @அகிலன்

1947க்கு முன்பு பெரும்பான்மை மக்களால் பேசப்பட்ட மொழி பெங்காலி... அது எப்படி பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாக இந்தி ஆனது!?Mar 10


அரசு பாரி - @அகிலன்

இரண்டு எடுத்துகாட்டுகளை பார்ப்போம்...

1. இந்தியை ஏற்றுக்கொண்டதால், அண்டை மாநிலமான கேரளாவில் 40சதவிகித மக்களுக்கு மலையாளம் பேச மட்டுமே தெரியும். எழுத தெரியாது.

2. இந்தியை ஏற்றுக்கொண்டதால் மராட்டிய மொழியே வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டை பொருத்தவரை இந்தி எதிர்ப்பு என்பது இந்தி திணிப்பை எதிர்த்து தான் இருந்தது... மற்றபடி தனிமனிதர்கள் தேவைப்பட்டால் கற்க எந்த தடையும் இல்லை.Mar 10


சிவகுமார் மா -

//இந்தியை ஏற்றுக்கொண்டதால் மராட்டிய மொழியே வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கிறது.//

அந்த வெறுப்புதான், சிவசேனா போன்ற கட்சிகளின் தீவிர அரசியலுக்குக் காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.Mar 10
அரசு பாரி - @அகிலன் பலர் நினைத்துக்கொண்டிருப்பது போல மொழி என்பது வெறும் தொடர்புக்கொள்ளும் கருவி அல்ல (communication medium) அதையும் தாண்டி பல உள்ளன.

1. அகிலன் என்கிற தனிமனிதன் வாழ்நாள் முழுவதும் லைப்பரரி ஆப் காங்கிரஸில் உட்கார்ந்து படித்தால் கூட அறிவு, சிந்திக்கும் திறன், கற்கும் திறன் போன்றவை உயர்ந்து விடாது. அறிவு, சிந்திக்கும் திறன், கற்றல் திறன் மூன்றும் தலைமுறை சுழற்சியோடு தொடர்புடையவை. ஒரு சமூகம் தலைமுறை சுழற்சியில் பெரும் அறிவை மொழியின் ஊடாக பொதிந்து வைத்துள்ளது.

2. ஒரு சமூகத்தின் தாய்மொழியை சிதைப்பதன் மூலம் அந்த சமூகத்தின் அறிவு, சிந்திக்கும் திறன், கற்றல் திறன் மூன்றையும் சிதைக்க முடியும் அல்லது பின்னோக்கி தள்ள முடியும்.Mar 10 (edited Mar 10)

அரசு பாரி - @மா.சி

//அந்த வெறுப்புதான், சிவசேனா போன்ற கட்சிகளின் தீவிர அரசியலுக்குக் காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.//

மராட்டிய மக்களின் உணர்வுகளை வைத்து சிவசேனா அரசியல் மட்டுமே செய்கிறது. மராட்டிய மொழி, வாழ்வாதாரம் போன்றவற்றில் சிவசேனா அரசியல் விளையாட்டு விளையாடுகிறது.Mar 10

Akilan R - @அரசு பாரி:

நீங்கள் கூறுவதை நான் நன்றாக அறிவேன். இங்கு தமிழில் உரையாடுவதற்கும், மேலும் என் நண்பர்களிடையேயும் நான் இருக்கும் அலுவலகம், குழுமங்கள் போன்றவற்றிலும் தமிழை நான் முன்னிறுத்தி போராடுவதற்கும் அதுவே காரணம். எனக்கும் மா.சி. அவர்களுக்கும் பொதுவாக இருந்த இந்த குணங்களே எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட காரணம்.

communication medium என்ற அளவில் நான் பேசியதற்கு காரணம் நான் பேசியது எல்லாம் ஆங்கிலத்தையும் இந்தியையும் பற்றியது என்பதால். அவை நமது தாய் மொழி அல்லவாகையால் நமக்கு அவை தொடர்பு கருவிகளே.Mar 10

Akilan R -

//மராட்டிய மக்களின் உணர்வுகளை வைத்து சிவசேனா அரசியல் மட்டுமே செய்கிறது. மராட்டிய மொழி, வாழ்வாதாரம் போன்றவற்றில் சிவசேனா அரசியல் விளையாட்டு விளையாடுகிறது//

அதுதான் தமிழகத்திலும் நடக்கிறது என்பதே நான் சொல்ல வந்தது.Mar 10

சிவகுமார் மா - @அரசு பாரி,

அகிலனின் கேள்வி, ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை வளர்த்து விட்டு இந்தியை மட்டும் எதிர்ப்பதன் போலி அரசியலைப் பற்றியது.

அது திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டுக்கு இழைத்த துரோகம் என்பது உண்மைதானே!Mar 10

அரசு பாரி - @அகிலன், @மா.சி

ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டு இந்தியை எதிர்க்க வேண்டியதேன்? இதை புரிந்துக்கொள்ள 1947 பிந்தைய அரசியலில் நடந்த தகிடுத்தோம்கள், சதிகளை புரிந்துக்கொள்ள வேண்டியிருகிறது.

நேரு, படேல் மட்டுமல்ல... அம்பேத்கர் உடன் பணியாற்றிய 5 பேரும் சமஸ்கிருதத்தை பின்னணியாக கொண்டவர்கள்... சமஸ்கிருதத்தை முன்மொழிவதன் மூலம் தங்களுடைய சமூகத்தை முன் நகர்த்தி மற்ற சமூகத்தை பின் தள்ள நடந்த சதி தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நடந்த மொழி சார்ந்த குளறுபடிகள்.

சமஸ்கிருதத்தை முன்மொழிய நடந்த முயற்சி தோல்வியடைந்தபொழுது... சமஸ்கிருதத்தை அடிதளமாக கொண்ட இந்தியை முன்மொழிந்து தங்களுடைய சமூக இருப்பையும், அதிகாரத்தையும் தக்க வைக்க முயற்சித்தார்கள்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்திடன் குவியும் அதிகாரத்தை முதன் முதலில் அடையாளம் கண்டு எதிர்த்தவர்கள் பஞ்சாபிகளே! மொழி சார்நத போராட்டமாக அது அமையவில்லை... அது முழுக்க, முழுக்க பிராந்திய போராட்டமாக இருந்தது. இதனால் கிட்டதட்ட 20 லட்சம் பஞ்சாபிகள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமே இது மொழி சார்ந்த போராட்டமாக இருக்கிறது... மற்றபடி உள் ஆழ்ந்து பார்த்தால் சமஸ்கிருதத்தை அடிதளமாக கொண்ட சமூகம் முன்னோக்கியும்... மற்ற சமூகத்தை பின் தள்ளும் ஒரு ஆயுதமாக மொழியை பயன்படுத்தினார்கள் என்பது தான் உண்மை.

திராவிட இயக்க முன்னோடிகள் இதன் சிக்கலையெல்லாம் விரிவாக மக்கள் மன்றத்தில் வைக்கவில்லை (அண்ணா உட்பட) ... உணர்வு மட்டத்தில் இந்த பிரச்சினையை கையாண்டார்கள்.

பெரியார் போன்றவர்கள் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்ட காரணம் 18ம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஐரோப்பியர்கள் முன்னோக்கி சென்றுக்கொண்டிருந்த காரணத்தால்... ஆங்கிலத்தை முன்மொழிந்து... தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை பயன்படுத்தினால்.... தமிழ் சமூகத்திற்கு கூடுதல் வளர்ச்சி கிட்டும் என்று எண்ணியிருக்கலாம் Mar 10 (edited Mar 10)

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் -

 மாயாவதி உள்ளிட்ட இலட்சோபலட்ச மக்களின் தாய்மொழியும் இந்திதான் ;-) Mar 10 (edited Mar 10)

அரசு பாரி - @ரமாதாஸ்

உ.பி, பீகார் போன்ற மாநிலங்களின் இன்றைக்கு கிராம மக்கள் பேசுகிற மொழியும் மேட்டுகுடி இந்தியும் வேறுபடுகிறபொழுது... மிக அழுத்திருத்தமாக சொல்ல முடியும்... எல்லோரையும் இந்து என்று கழுத்தறுக்கிற இந்திய சட்டம் போல... "இந்தி" என்று உ.பி, பீகார் மக்களின் மொழியும் சிதைக்கப்பட்டடுள்ளது.

பல லட்சகணக்கான மக்களின் தாய்மொழி இந்தியே கிடையாது... "இந்தி" அவர்களின் தாய்மொழி என்று இந்திய (பார்ப்பன, பனியா) அதிகாரத்தால் திணிக்கப்பட்டுள்ளது.Mar 11 (edited Mar 11)

பிரியமுடன் பிரபு - Mm    Mar 11

Akilan R - இதற்கு மேல் இங்கு நான் பேசுவது நல்லதல்ல என்று படுகிறது. மொழி பற்றிய விவாதம் என்பது போய், திராவிட 'முன்னேற்ற' கட்சிகளின் போலி அரசியலின் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சு போடும் முகம் வெளிப்படுகிறது. ஒரு இனத்தையே வெறுப்பது அல்லது எதிர்ப்பது என்றுமே போலி, ஆதாய அரசியல்வாதியின் குணம் என்றார் நெல்சன் மண்டேலா. (இதை அவர் வெள்ளையர்களை தென் ஆப்ரிக்காவில் இருந்து துரத்த வேண்டும் என்று குரலிட்டவர்களை நோக்கி சொன்னார்.) இதுவே இங்கு என்னுடைய கடைசி பதிலீடு.Mar 11

அரசு பாரி - @அகிலன்

பல்வேறு இடங்களில் சுட்டிகாட்டியது... மீண்டும் நினைவு ஊட்ட வேண்டியுள்ளது... திராவிட இயக்க முன்னோடிகள் யாரும் குறிப்பிட்ட இனத்தை தாக்க வேண்டும், விரட்ட வேண்டும் என்று வலியுறுத்தியது கிடையாது. பெரியாரின் காலக்கட்டத்தில் அவ்வாறு செய்ய நினைத்திருத்தால்... அவருக்கிருந்த மக்களின் பலத்திற்கு முன்பு.. அச்செயல் ஒரு கட்டளையில் முடிந்திருக்கும். அதே போல அண்ணா காலத்திலும்!

ஒரு குறிப்பிட்ட இனத்தின் அதிகார வெறியையும், ஆதிக்க சிந்தனையும் சுட்டிக்காட்டும்பொழுது... உங்களை மாதிரியானவர்கள் போலி நடுநிலைமை வேடம் கட்டுவீர்கள்!

இங்கே ஆமாச்சு பேசியிருக்கிறார்...
இந்தியாவில் எத்தனை தேசிய இனங்கள் இருக்கிறது, அவர்களின் பண்பாட்டுடைமை இருக்கிறது.

ஆனால் open office இந்தியா பதிப்புக்கு Bharatiaya OO என்று பெயர் வைக்க யார் காரணம்?
Bharatiaya என்ற சொல் எங்கிருந்து வந்தது?

இந்தியாவில் இதுவரை நடந்துள்ள எத்தனை ஆராய்ச்சி பெயர்கள் சமஸ்கிருதம் அல்லாத பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நுண்ணரசியலை புரிந்துக்கொள்ள மறுத்து... இது போலிதனம், அது ஆதாயத்திற்காக செய்கிறார்கள்.. புறங்கையால் எதையும் தள்ளிவிட்டு போவது எளிது!Mar 11 (edited Mar 11)

Balloon MaMa - .

//மொழி பற்றிய விவாதம் என்பது போய், திராவிட 'முன்னேற்ற' கட்சிகளின் போலி அரசியலின் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சு போடும் முகம் வெளிப்படுகிறது. //

திராவிடம் என்பது ஆரியவாதத்திற்கு (சனாதன பார்ப்பன) எதிரான கலக அரசியல் குறியீடு.

இதை பெரியார் சரியாகப் பயன்படுத்தினார்.
வீரமணி என்பவர் திராவிடம் என்பது அவரின் கல்லூரி மற்றும் அறக்கட்டளையைக் காக்க என்ற அளவில் பயன்படுத்தி வருகிறார்.
கருணாநிதி அவரின் குடும்ப நன்மைக்காகப் பயண்படுத்தி வருகிறார்
ஜெயலலிதா , கேப்டன் காந்த் ...அது என்ன என்றே தெரியாமல் அப்படிப்பெயர் கொண்ட கட்சிக்குத் தலைமை தாங்குகிறார்கள்.


எனவே திராவிடம் என்பது என்ன என்று தெரியாமல் இந்தக்கால அரசியல் மொக்கைகளோடு இணைத்துப்பேச வேண்டாம்.

இந்தியாவில் இருந்தாலும் வடகிழக்கு மாநிலங்களில் என்ன நடக்கிரது என்பது கடைக்கோடி தமிழனுக்குத் தெரியாது. இந்தியா என்பது பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. அதை கிந்தி என்று தட்டையாகப் பார்த்து பேசமுடியாது.

மொழித்திணிப்பை எதிர்த்து வெற்றி பெற்றதால்தான் இன்று தமிழ் திரைப்பட உலகம் கோலிவுட்டைவிட சாதிக்கிறது. கிந்தியை ஏற்றுக்கொண்டிருந்தால் இங்கும் கான்கள்தான் ஆட்சி செய்திருப்பார்கள். இது ஒரு சின்ன உதாரணம்.


மொழி என்பது அடையாளம் மட்டுமல்ல வரலாறு. அதை இழக்கமுடியாது.
.Mar 11

ப்ரியன் / Vignesh Palaniswamy - Hindi yetrukondiruntal India muluthum kuthirai otti irukkalam , paavam tamilargal English ah yetrukondu ulgam yendra kundu satiyil kuthirai ooti kondirukkiraragal     Mar 11

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் - //உ.பி, பீகார் போன்ற மாநிலங்களின் இன்றைக்கு கிராம மக்கள் பேசுகிற மொழியும் மேட்டுகுடி இந்தியும் வேறுபடுகிறபொழுது..//

ஒரே மொழி அம்மொழியையே பொதுவாய் பேசும் பல்வேறு இனத்திற்கு இனம் - ராஜ்யத்திற்கு ராஜ்யம் வேறுபடுவது இயல்பான ஒன்று.

ஆற்றல் படைத்தோர் அச்சிறு சிறு தனித்தன்மைகளை கூட பொதுத்தன்மையென்ற பெயரால் நசுக்கத் தான் செய்கிறார்கள். கொங்குநாட்டிற்கு இருக்கும் தனித்தன்மையை தமிழ்நாடு நசுக்குகிறது. தமிழ்நாட்டிற்கு இருக்கும் தனித்தன்மையை இந்தியா நசுக்குகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் தனித்தன்மையை அமேரிக்கா போன்ற நாடுகள் நசுக்குகின்றன..

ஒருத்தன் ஒரு மொழிபேசுவோரெல்லாம் ஓரினம் என்று சொல்கிறான். வரலாறு அவன் சேர சோழ பாண்டிய இனங்களாக இருந்ததை வெளிப்படையாக தெரிவிக்கும் போதும். ஒருவன் அரசியல் சாசனத்தைக் காட்டி ஒரே நாடு ஒரெ இனம் என்று கூப்பாடு செய்கிறான் - அப்படி இணைத்த ஒரே இழை தூய்மையான ஆன்மீகம் ஒன்றைத்தவிர வேறில்லை என்பதை மறந்து. மற்றொருவன் உலகத்துக்கெல்லாம் நாட்டாமை.. உலக மக்கள் எல்லாரும் ஒன்று என்ற மேதாவித்தனத்தை சுட்டி சுரண்டிக் கொண்டிருக்கிறான். கம்யூனிஸ்ட் இன்டர்னேஷனல் அதைவிட பலே! ;-)

மொழியால் ஒரு இனத்தை தாராளமாய் ஏற்படுத்துங்கள். அதில் யார்மாட்டும் துவேஷம் இல்லாது செய்யுங்கள்.

மேட்டுக்குடின்னு நகரத்தில் இருப்போரை குறிப்பிடறீங்களா? கிராமங்களில்தான் அந்த வேறுபாடு ஜாஸ்தி.

பீகார் மாநில மைதிலி மொழி உள்ளிட்ட இன்ன பிற விவகாரங்களும் அறிவேன். ஆனாலும் மாயாவதி போன்ற கோடானு கோடி மக்களின் தாய் மொழியும் இந்திதான்!Mar 11 (edited Mar 11)

subramanian rajaraman -

மிகமிக பயனுள்ள அலசல். மா.சி அவர்களும், அகிலன், டி.பி.சி.டி, அரசு பாரி ஆகியோரும் இந்த விவாத்தை இன்னும் முன்னகர்த்திச் செல்ல வேண்டுகிறேன். என்னைப்போன்ற பலருக்கு மிகப் பயனுள்ளதாக அமையும்.EditMar 11

டிபிசிடி TBCD -

 //அப்படி இணைத்த ஒரே இழை தூய்மையான ஆன்மீகம் ஒன்றைத்தவிர வேறில்லை//

ஆன்மிகம் தானே இன்றளவிற்கும் பிரித்து வைத்து கொண்டியிருக்கின்றது..Mar 11

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் - @TBCD

அதனாலதான் நான் தூய்மையான ஆன்மீகம்னு சொன்னேன். அப்படி பட்டவங்க இதையெல்லாம் காதுலையே போட்டுக்க மாட்டாங்க. unlike me ;-)Mar 11

Balloon MaMa - .

தேசிய மொழி

இந்தியாவில் தேசிய மொழி (National Language. ..similar to national flag, national anthem, national animal ) என்ற ஒன்று கிடையாது. ஒன்றும் தெரியாத கிணற்றுத்தவளைகள் கண்டது கேட்டது என்று வாய்மொழியாக இந்த பொய்யைப் பரப்பி வருகின்றனர். :-((((

இது பற்றி பல இடங்களில் பேசியாகிவிட்டது
http://simulationpadaippugal.blogspot.com/2006/02/blog-post_22.html
http://tvpravi.blogspot.com/2007/04/hate-hindi-and.html

--

மாநில அரசாங்கம் நினைத்தால் நரிக்குறவர் மொழியைக்கூட அவர்கள் மாநிலத்திற்கு official language ஆக வைத்துக் கொள்ளலாம்.

ஹிந்தி "தேசிய மொழி" (National language) என்பது உண்மையல்ல.

THE CONSTITUTION OF INDIA
PART XVII
OFFICIAL LANGUAGE

(பி.கு:
CONSTITUTION OF INDIA வின் வேறு எந்தப் பிரிவிலும் தேசிய மொழி பற்றி இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.)

PART XVII
OFFICIAL LANGUAGE
CHAPTER I.—LANGUAGE OF THE UNION

CHAPTER II.—REGIONAL LANGUAGES

CHAPTER III.—LANGUAGE OF THE SUPREME COURT,
HIGH COURTS, ETC.

http://india.gov.in/
Home > Government > Constitution of India : English Version

.Mar 11

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் - @Balloon MaMa - true to a large extent but only in theory.

I applied for a current account with HDFC bank for our business.

Gave our Board Resolution Copy in Tamil & Director Seal in Tamil.

The assistant manager & local bank authority got stunned.

He was of the opinion that Bank authorities will reject it & asked things in English. I stuck to my decision.

I only said - never was a law enacted in this land of that kind, by default it is a practice to copy paste such things from previous instances that happened in English[1] or an inferiority attitude towards one's own language[2] or a pre-conceived opinion that expressing in English elevates one's status[3].

Today the account is going to get created without any issue only to the surprise of many banking authorities that such a thing is acceptable in their own Bank.

The same thing happened when we registered a Trust & provided the trust deed in Tamil. The sub-registrar of Pallavaram municipality was surprised that she has never met such a thing in her experience over the years, but that was allowed.

Isn't it unfortunate to say that this still happens after 30 years of Dravidian parties in rule that claims to have got back the lost glory?

English comfortably sits today in place where Dravidian parties accused Sanskrit or Hindi was/ would sitting/ sit with people's wish.

Most of them say its unusual and ask Why? I only say, there isn't any special reason whatsoever to do this. It is as usual as speaking to my mom, dad, brothers & sisters & I live in my land. [to be open, Even people in my own family finds its different ;-)] Check back the reason why are you not doing so [1] [2] [3] or [?] ?

We are equally smart not to send a parcel out of Tamilnadu covered or documented or labeled totally in Tamil, probably like a Japanese or French.

Not to mention, it was the Brahmin community that adopted English in its life, at the earliest stages of post East India Company, British India's history, when they took the opportunity of jobs offered under them on a large scale, qualifying themselves for it, which Justice party & others followed followed ;-)

I have reason to write all these in English though. ;-)Mar 11 (edited Mar 11)

Balloon MaMa - @ ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

//தூய்மையான ஆன்மீகம்னு //

1.ஆன்மீக‌ம் என்றால் என்ன?
2.அதன் உட்பிரிவுகளான "தூய்மையான ஆன்மீகமும்" , "தூய்மைஅற்ற ஆன்மீகமும்" எந்த தூய்மையில் வேறுபடுகிறது?

புரியல தயவு செய்து விளக்கவும். ( காப்பி ரைட் டிபிசிடி)
.Mar 11

Janakiraman n -

//இந்தியாவில் தேசிய மொழி (National Language. ..similar to national flag, national anthem, national animal ) என்ற ஒன்று கிடையாது. ஒன்றும் தெரியாத கிணற்றுத்தவளைகள் கண்டது கேட்டது என்று வாய்மொழியாக இந்த பொய்யைப் பரப்பி வருகின்றனர்//

அப்படியல்ல... The official language of the Union shall be
Hindi in Devanagari script. என்பது ஆர்டிகில் 343ல் கூறப்பட்டுள்ளது. இதன் படி, இந்திய ஒன்றியத்தின் அலுவலக ரீதியான மொழியாக ஹிந்தி பயன்படுத்தப்படவேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சொல்லும் விதி. இது ஒருவகையில் தேசிய மொழி என்று தான் புரிந்துகொள்ளவேண்டும்.

அதே போல, national flag, national anthem, national animal போன்றவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாதவை....Mar 11

டிபிசிடி TBCD - @சானகி இராமன் -

நடுவண் அரசுக்கு அலுவலக் மொழி இந்தி. தேசிய மொழி என்பது மாநில அரசுகளில் அலவல் மொழியாக ஆங்கிலமும், அந்த மாநில மொழியும் இருக்கு. அரசியல் சாசனத்தில் ஏற்றாமல் தேசிய மொழி இந்தி என்று நீங்களாக அறிவிக்க முடியாது. அதை அறிவிக்க எடுத்த முயற்சிகளை வங்காளம் ., தமிழகம் போன்ற மாநிலங்கள் எதிர்த்து, அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் மக்கள் 5 கோடி. 11 தேசிய மொழிகள் இருக்கு. இந்தியாவில் மக்கள் தொகை 100 கோடி...30 மொழிகள் கூட தேசிய மொழிகள் ஆக்கலாம்...ஆனால் ஆக்க மனசில்லை..அவர்களுக்கு இந்தி மட்டுமெ ஆகனும்..அதன் மூலம் சமுசுகிருதம். !Mar 11

Balloon MaMa - @ Janakiraman n

// இது ஒருவகையில் தேசிய மொழி என்று தான் புரிந்துகொள்ளவேண்டும்.//

இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும் என்று நீங்கள் யாருக்குச் சொல்கிறீர்கள்? இந்திய அரசு சார்பாக எல்லா இந்தியக்குடிமகன்களுக்குமா? அல்லது எனக்கா?

அலுவல்மொழி என்பதும் தேசியமொழி என்பதும் ஒரே அர்த்தம் கொண்டது என்று நீங்கள் குஜராத் கோர்ட் ஜட்ஜ்ஜை எதிர்த்து வழக்குப்போடலாம்.

// Hindi is not national language: Gujarat HC
The Gujarat High Court has observed that there is nothing on record to suggest that any provision has been made or order issued declaring Hindi a national language of India.//

http://www.deccanherald.com/content/48899/hindi-not-national-language-gujarat.html

http://articles.timesofindia.indiatimes.com/2010-01-25/india/28148512_1_national-language-official-language-hindi

.


யானை என்ற விலங்கு அதுபாட்டுக்கு இருக்கிறது எப்போதும் யானையாக. குருடர்கள் அதை பானை என்றும், முறம் என்றும் ,உலக்கை என்றும் , தூண் என்றும் புரிந்துகொள்வதுபர்றி அதுக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்தாலும் அதற்கு எந்தக் குறையும் வரப்போவது இல்லை.

**

என்னளவில் "அலுவல் மொழி" என்பதும் "தேசிய மொழி" என்பதும் வேறு.
(நானும் ஹைகோர்ட் ஜட்ஜும் ஒருவகை குருடர்கள் என்று கொள்வோம்)

**

உங்களைப் பொறுத்தவரை "அலுவல் மொழி" என்று சொன்னாலும் அதை "தேசிய மொழி "என்றே புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் பாக்கியவான் Janakiraman n :-))

.Mar 11

Balloon MaMa - @ Janakiraman n

//அதே போல, national flag, national anthem, national animal போன்றவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாதவை...//


??? @$%&^$%*((^%&()(( ????

இதற்குப்பேசமால் இந்திதான் தேசியமொழி அதைச் சொல்லாத இந்திய கான்ஸ்டியூசன் சரியல்ல் என்று சொல்லிவிடலாம்.

இல்லாத ஒன்றைப் பாதுகாக்கச்சொல்லி ஏன் இந்திய அரசியல் சட்டம் இப்படி மெனக்கிடுகிறது?


http://india.gov.in/govt/documents/english/coi_part_full.pdf

51A. It shall be the duty of every citizen of India—
(a) to abide by the Constitution and respect its ideals and institutions, the National Flag and the National Anthem;

Appendix I
http://india.gov.in/govt/documents/english/coi_appendix.pdf

//integrity of India or bringing about cession of a part of the territory of India or secession of a part of the territory of India from the Union or causing insult to the Indian National Flag, the Indian National Anthem and this Constitution; and..//

97. Prevention of activities
//(b) directed towards disclaiming, questioning or disrupting the sovereignty and territorial integrity of India or bringing about cession of a part of the territory of India or secession of a part of the territory of India from the Union or causing insult to the Indian National Flag, the Indian National Anthem and this Constitution,//


.Mar 11

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் -

//1.ஆன்மீக‌ம் என்றால் என்ன?
2.அதன் உட்பிரிவுகளான "தூய்மையான ஆன்மீகமும்" , "தூய்மைஅற்ற ஆன்மீகமும்" எந்த தூய்மையில் வேறுபடுகிறது?//

for me both are same. I qualified ஆன்மீகம் with தூய்மை adjective for people who might have other opinions about it ;-)

i am not a guru of it. in search of it, so probably will let u know & explain if i could elevate myself to one of such kind (with or without the assistance of a guru) & if i find that u are in real search of it. meantime if interested u too search and let me know back if you attain it & i qualify for it in ur opinion.Mar 11 (edited Mar 11)

டிபிசிடி TBCD - @மாசி -

சில பின்னுரைகள் ஈசல் (spam) என்று குறிக்கப்பட்டு மறைந்துள்ளது போல..பாருங்க !Mar 11

Balloon MaMa - @ Vigneshwari M -

//அரசியல் சாசனம் சொல்லவில்லை.. ஒத்துக்கொள்கிறேன்.. ஆனா மெஜாரிட்டி கிட்ட நாம தோற்கிறோமா இல்லயா?? எந்த மொழியும் மற்றொரு மொழியை விட உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை.. ஆனால் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே அறிந்த காரணத்தினால் உலகம் முழுக்க சுற்றி புகழடைந்த தமிழனால் இந்தியாவின் வட பக்கம் செல்ல முடியவில்லையே!! விதிவிலக்குகளை பற்றி நான் பேசவில்லை!!//

யார் சொன்னார்கள் நாம் தோற்கிறோம் என்று ???

மொழியைக் காத்த ஒரே காரணத்தால்தான் இன்றும் கோலிவுட் உலகள‌வில் பேசப்படுகிறது. இல்லை என்றால் நீங்களும் நானும் எதோ ஒரு பிச்சைக்கார கான்களுக்கு மட்டுமே இரசிகராக இருப்போம். இணையத்தில் சிறப்பாக இருக்கவும் இதே காரணம்.

.

நீங்கள் செய்ய வேண்டியது இந்தியா முழுமைக்கும் இரயில் பஸ் என்று டூர் ஒரு 6 மாத காலத்திற்கு. இந்தியால் சுயமிழந்த மக்களையும் கலாச்சாரங்களையும் நேரில் அறியமுடியும். அதுவரை தமிழகத்தில் தமிழ் செய்யும் சிறப்பு தெரியாது உங்களுக்கு.

.Mar 11 (edited Mar 11)

Balloon MaMa - .

மொழி என்ற அளவில் எதுவும் எங்கேயும் இருக்கட்டும். ஆனால் இதுதான் எல்லாருக்கும் என்று தட்டையாக இந்தியாவில் பேசினால் அவர்கள் இந்திய கலாச்சார கூட்டு அடையாளத்தை உணராதவர்களே.

உங்கள் அம்மாவும் நல்லவர் என் அம்மாவைப் போலவே என்றுதான் என்னால் சொல்லமுடியுமே தவிர. உங்கள் அம்மாதான் சிறந்தவர் அவரே எல்லோரையும்விட உயர்வானவர் பொதுவானவர் என்று சொல்லமுடியாது ஏன் என்றால் எனக்கென்று அம்மா இருக்கிறார்.

அடையாளமற்ற அனாதைகள் வேண்டுமானால் கிந்திதான் எனது அடையாளம் என்று தஞ்சம் புகலாம்.

.Mar 11

குடுகுடுப்பை kudukuduppai -

//மொழியைக் காத்த ஒரே காரணத்தால்தான் இன்றும் கோலிவுட் உலகள‌வில் பேசப்படுகிறது. இல்லை என்றால் நீங்களும் நானும் எதோ ஒரு பிச்சைக்காரகான்களுக்கு மட்டுமே இரசிகராக இருப்போம். இணையத்தில் சிறப்பாக இருக்கவும் இதே காரணம்.

.

நீங்கள் செய்ய வேண்டியது இந்தியா முழுமைக்கும் இரயில் பஸ் என்று டூர் ஒரு 6 மத காலத்திற்கு. இந்தியால் சுயமிழந்த மக்களையும் கலாச்சாரங்களையும் நேரில் அறியமுடியும். அதுவரை தமிழகத்தில் தமிழ் செய்யும் சிறப்பு தெரியாது உங்களுக்கு.//

அப்படியே வழிமொழிகிறேன்.Mar 11

குடுகுடுப்பை kudukuduppai -

என்னுடைய பகடியான பதிவொன்று இதையொட்டி
http://varungalamuthalvar.blogspot.com/2008/11/blog-post_10.htmlMar 11

Balloon MaMa - .@ Vigneshwari M -

// என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் ஹிந்தியில் பேசும் பொழுது நான் மட்டும் ஒன்றும் புரியாமல் என் நண்பர்களிடம் " What does that mean ?" என்று திரும்ப திரும்ப கேட்கும் நிலை எதனால் வந்தது???//


என்ன செய்யலாம் சொல்லுங்கள். என்னைச் சுற்றி உள்ளவர்கள் நரிக்குறவர்மொழில் பேசுகிறார்கள். ஒரு பெருங்கூட்டமே ஹீப்ரு மொழியில் பேசுகிறார்கள் இதை எல்லாம் படிக்கவிடாமல் என்னை யார் செய்தார்கள்?

உங்களுக்கு தேவை என்றால் படித்துக் கொள்ளுங்கள். அதற்காக அரசாங்க வரிப்பணத்தில் வாடிப்பட்டி கோவிந்துக்கும் இந்தி சொலித்தந்து அவன் என்ன மத்தியப்பிரதேசத்தில் மாங்காயா விற்கப்போகிறான்.

பிறக்கும்போது எனக்கு கோபால் , ஜாவா கூடததான் தெரியாது பிழைப்பிற்காக கற்றுக்கொண்டேன். இதற்கும் கலைஞர்தான் காரணமா?
.Mar 11

அரசு பாரி - @விக்னேஸ்வரி

உங்களை போன்ற தனிமனிதர்கள் சில ஆயிரம் பேரின் வட இந்தியர்களின் உடன் தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால் 6 கோடி தமிழர்கள் இந்தி படிக்க வேண்டும் என்று கோருவது நியாயமா?

பழைய பதிவு ஒன்று
ஜப்பானிய மொழி கற்றுதராத... திராவிட ஆட்சியாளர்கள் ஓழிக!
http://pktpariarasu.blogspot.com/2007/08/blog-post_01.htmlMar 11 (edited Mar 11)

டிபிசிடி TBCD -

//பிறக்கும்போது எனக்கு கோபால் , ஜாவா கூடததான் தெரியாது பிழைப்பிற்காக கற்றுக்கொண்டேன். இதற்கும் கலைஞர்தான் காரணமா?// :-))))))Mar 11

குடுகுடுப்பை kudukuduppai - Vigneshwari M -

//ஒரு தலைமுறைக்கே ஹிந்தி என்ற மொழியை அறியக்கூட விடாமல் செய்தது தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றியா?? சொல்லுங்கள்//

இந்தியை தேவையானவர்கள் கற்றுக்கொள்ளட்டும். மறைமுகமாக இந்தி எதிர்ப்பு , தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடத்தை காப்பாற்றியிருக்கிறது. வட இந்திய மொழிகளை இந்தி அழித்துவிட்டது போகப்போக தெரியும்.Mar 11

Balloon MaMa - @ Vigneshwari M -

 //ஒரு தலைமுறைக்கே ஹிந்தி என்ற மொழியை அறியக்கூட விடாமல் செய்தது தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றியா?? சொல்லுங்கள்//

ஹலோ ... தமிழைக் காக்கத்தான் போராட்டம். அதனால் தமிழ் வளர்ந்துள்ளது.
தமிழ் நாட்டில் உள்ள எத்தனை பேருக்கு நரிக்குறவர் மொழி தெரியும்? உங்கள் மண்ணில் உங்களோடு வாழும் இவர்களின் மொழிதெரியாமல் போனதற்காக என்றாவது வெட்கப்படுள்ளீர்களா?

உங்கள் ஆபிசில் எல்லாம் கிந்தி பேசுகிரார்கள் என்றால் , உங்கள் முதலாளி அவர்காசில் எல்லாருக்கும் கிந்தி கற்றுக்கொடுக்கட்டும். எங்கள் ஆபிசில் ஜப்பான்காரர் வருமுன் சிலபாடங்களைச் சொல்லித்தருவார்கள்.

இதையும் கருணாநிதிதான் செய்ய வேண்டுமா?

.Mar 11

குடுகுடுப்பை kudukuduppai -

ஆங்கிலம், தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் விரைவில் அழித்துவிடும் என்பதும் உண்மை.Mar 11

Vigneshwari M -

தமிழக அரசாங்கங்களின் தமிழ் பற்றினால் தான் தமிழ் வழியில் படிக்கும் பள்ளிகள் மிக நல்ல முறையில் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன!! only now the government has started to give preference to the ppl who studied in Tamil medium..
Can anybody tell me that how many of your children are studying in Tamil medium schools??Mar 11

குடுகுடுப்பை kudukuduppai -

தமிழ்வழிக்கல்வி முற்றிலும் செயல்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது, காரணம், ஜெர்மனோ, ஜப்பானோ, சீனனோ கண்டுபிடிப்புகள், ஆராய்சிக்கட்டுரைகள் வைத்திருக்கிறான், காலனி ஆதிக்க நாடான நாம் ஆங்கிலக்கூலிகள், எனவே ஆங்கில மீடியம் வருவது தவிர்க்கமுடியாது, இது அனைத்து இந்தியாவிற்கும் பொருந்தும். தமிழை ஒரு மொழியாகவும், வரலாறு , அன்றாட செய்திகள் படிக்கவும் அனைத்து பள்ளிகளிலும் சேர்த்தல் அவசியம். ஆங்கில மீடிய மாணவனுக்கும் வரலாறு தமிழில் போதிக்கப்படவேண்டும்.இதன் மூலம் தமிழின் பயன்பாடு புரியும்.Mar 11 (edited Mar 11)

Balloon MaMa - .

உங்களுக்கு உங்கள் தாய்மொழியில் காதல் இருந்தால் தமிழ் தெரிந்ததற்காக பெருமைப்பட வேண்டுமே தவிர , தனக்கென சொந்த வரிவடிவம்கூட இல்லாத ஒரு மொழி தெரியாமல்போனதற்கு வெட்கப்படக்கூடாது. உலக அளவில் பல்லாயிரம் மொழிகள் உள்ளன. எத்தனை மொழிக்கு வெட்கப்படுவீர்கள்?
.Mar 11

சிவகுமார் மா -

இங்கு பேசிய அகிலன் மற்றும் பேசும் ஸ்ரீராமதாஸ் தமிழ் பயன்பாட்டுக்காக பல் வேறு தளங்களில் போராளிகளாக செயல்படுவதை நான் அறிவேன். ராமதாஸ் வங்கிக் கணக்குத் தொடங்க சாதித்ததை (மேலே அவர் சொல்லியிருப்பது) தமிழ்நாட்டில் வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

விக்னேஷ்வரியும் தமிழ் மொழிப் பற்றுடன் பேசுகிறார். (அவரது கருத்துக்கள் spamல் போய் விடுகின்றன. Not Spam சொன்ன பிறகும் அதே சிக்கல்)

எழுப்பப்படுபவை இரண்டு கேள்விகள்:
1. இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர பிற மக்களால் இந்தி புழக்க மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், நாமும் ஏன் இந்தி கற்றுக் கொண்டு இந்திய அரசியலிலும், வணிகத் துறையிலும் செயல்படும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது?

2. இந்தியை முழு வெறுப்போடு அகற்றிய திராவிட இயக்கங்கள், தமிழை வளர்த்து, தமிழுக்கான இடம் ஏற்படுத்தாமல் அந்த இடத்தில் ஆங்கிலத்தை ஆதிக்கம் செலுத்த விட்டது போலித்தன் இல்லையா?

என்னைப் பொறுத்த வரை, இரண்டாவது கேள்வியை நாம் முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்:

தமிழ்நாட்டை விட இரண்டு மடங்கு மக்கள் தொகையுடைய ஜப்பான், தமிழ்நாட்டுக்குச் சமமான (அல்லது சற்றே அதிகமான) மக்கள் தொகையுடைய தென்கொரியா, ஜெர்மனி, ஃபிரான்சு போன்ற நாடுகளில் அவர்கள் மொழியிலேயே தொழில் நடத்துகிறார்கள், உயர் கல்வி பயில்கிறார்கள், ஐக்கிய நாடுகள் சபையிலும் பேசிக் கொள்கிறார்கள்.

தாய்மொழி வழிக்கல்வி, செயல்பாடுதான் ஒவ்வொருவருடைய சிந்தனைத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் தமிழ்நாட்டில் ஆரம்பக் கல்வி முதல், உயர் ஆராய்ச்சி வரை, வணிக/அரசு செயல்பாடுகள் அனைத்தும் தமிழில் செய்யும் நிலை உருவாக வேண்டும்.

இது சாதிக்க முடியாத ஒன்று இல்லை. 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசு இலக்குகள் அமைத்து, நிதி ஒதுக்கிச் செயல்பட்டால், தேவைப்பட்ட வளங்களை தமிழில் மொழிமாற்றி, மொழிமாற்ற வல்லுனர்களை உருவாக்கி, வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று (குத்துமதிப்பான கணக்கு) தோன்றுகிறது.

இதற்குத் தேவையான அரசியல் உறுதி, குடும்ப/வியாபார அரசியலைத் தவிர்த்தால் தமிழ்நாட்டு ஆட்சியாளருக்கு நிச்சயம் கிடைத்து விடும்.

தமிழில் இல்லாதது இல்லை என்று சாதித்து தொடர்ந்து அதை நிலைநாட்ட வழி ஏற்படுத்திய பிறகு தமிழ்நாட்டு மக்கள் ஆங்கிலத்தை உலகத் தொடர்புக்காகவும், இந்தியை இந்தியத் தொடர்புக்காகவும், வங்காள மொழியை பங்களாதேசத்துடன் தொடர்புக்காகவும், ஜப்பானிய மொழியை ஜப்பானுடன் தொடர்புக்காகவும் (இன்னும் சேர்த்துக் கொள்ளுங்கள் :-) கற்கும் வசதிகளை சூழலை நிச்சயமாக ஏற்படுத்த வேண்டும்.

இது என்னுடைய கருத்து.Mar 11 (edited Mar 11)


அரசு பாரி - @ஆமாச்சு
//
Not to mention, it was the Brahmin community that adopted English in its life, at the earliest stages of post East India Company, British India's history, when they took the opportunity of jobs offered under them on a large scale, qualifying themselves for it, which Justice party & others followed followed ;-)
//

கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருவதற்கு முன்பே... ஐரோப்பியர்களுடன் செட்டியார்கள் (நகரத்தார்) வணிக தொடர்பில் இருந்தார்கள்.

நகரத்தாரின் இரட்டை பேரேடு முறையே double entry system -த்தின் அடித்தளம்.

அதோடு ஆங்கில ஆட்சி எங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் செட்டியார்கள்... பரவியிருந்தார்கள்.

ஆங்கிலேயர்களுடன் வணிக மற்றும் பொருளாதார தொடர்பில் இருந்த செட்டியார்களின் ஆங்கில அறிவு தான் நீதிகட்சியின் ஆங்கில சார்ப்புக்கு காரணமேயொழிய... ஏனென்றால் அப்போதைய பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதிகளான பிள்ளைமார், செட்டியார், முதலியார் போன்றோர் தான் நீதிகட்சியின் அடித்தளம்.

செட்டியார்கள் (நகரத்தார்கள்) ... பார்ப்பனர்களை மிக கடுமையாக எதிர்த்தவர்கள்... அவர்களுடைய எந்த கோயிலும்... பார்ப்பனர்கள் வைத்து வழிபாடு செய்யமாட்டார்கள். பண்டாரத்தை வைத்தே வழிபாடு செய்வார்கள்.

பார்ப்பன சமூகத்தை பார்த்து நீதிகட்சியும் மற்றவர்களும் ஆங்கிலத்தை கற்றுகொண்டார்கள் அல்லது கடைப்பிடித்தார்கள் என்பது வரலாற்று திரிபு.Mar 11

அரசு பாரி - @மா.சி

தமிழ் மொழி மட்டுமே இனி தனித்த அடையாளத்துடன் இருக்கபோவதில்லை! அவ்வாறான ஒன்றை உருவாக்கவும் இன்றைய உலக மயமாக்கல் சூழலில் இயலாது!

ஜப்பானிய மொழி எவ்வாறு ஆங்கில மொழியுடன் கலந்து ... தற்பொழுது ஒரு புதிய வடிவத்தை முன்னெடுத்து செல்கிறதோ... அதுபோல தமிழையும் தன்னியல்பான மொழி கலத்தல் மூலம் முன்னகர்த்தி செல்ல வேண்டும்.

ஆனால் இந்திய ஆதிக்க சூழலானது தமிழ் பரிணாமம் அடைவதை தடுக்கிறது. இந்திய ஆதிக்க சூழல் கிட்டதட்ட அனைத்து பிராந்திய மொழிகளையும் இல்லாதொழித்து... 'இந்தி' (அ) சமஸ்கிருத அடையாளத்துடன்... உலக மொழிகளுடன் கலக்க முனைகிறது.Mar 11

Balloon MaMa - @சிவகுமார் மா

சிவா,
யாருடைய தமிழ் உணர்வையும் , அவர்களின் பங்களிப்பையும் குறைசொல்வது நோக்கம் அல்ல.

அகிலன் , ஸ்ரீராமதாஸ் மற்றும் விக்னேஷ்வரி தமிழ் பயன்பாட்டுக்காக பல் வேறு தளங்களில் போராளிகளாக இருக்கலாம்.

இங்கு பேசப்படுவது (குறைந்த பட்சம் நான்) ....

1.இந்தி தெரியாமல் போனதால் ஆபிசில் பேசமுடியவில்லை.
2.இந்தியைவிரட்டியதால் சல்மான்கானுடன் பேசமுடியவில்லை.
3.இந்தியைவிரட்டியதால் தமிழகம் என்ன பலன் அடைந்தது. எனது மருமகன் மும்பையில் "சப்பாத்தி இருக்கா?" என்று கேட்க ரொம்ப கஸ்டப்படுகிறார்.
4. இந்திதான் தேசியமொழி

....
போன்ற பொதுப்புத்தியில் உறைந்து இருக்கும் எண்ணங்களை நோக்கியே
எனது பதில்கள்.

தினமலர்கூட தமிழில்தான் பத்திரிக்கை நடத்துகிறது. அதற்காக அது தமிழ் உணர்வுள்ள பத்திரிக்கை என்று சொல்லமுடியாது. அது முழுக்க முழுக்க சனாதனத்தை பரப்ப தமிழைப் பயன்படுத்தும் பத்திரிக்கை.

.Mar 12

டிபிசிடி TBCD -

இந்தி தேவையா இல்லையா என்று தீர்மானிக்காதவர்கள் கூட, இது போன்ற விவாதங்களை கவனிக்கும் பொழுது இந்தி தெரிந்திருந்தால் நான் அதுவாக ஆகியிருப்பேன், இதுவாக ஆகியிருப்பேன் என்று சிலர் சொல்வதை கேட்டு தவறான எண்ணத்துடன் செல்லக்கூடும்.

அதை தெளிவுப்படுத்தவுமே ஒவ்வொரு முறை இதை யார் பேசினாலும், கல்வெட்டு (எ) பலூன் மாமா, பாரி.அரசு போன்றவர்கள் உண்மையயை/கருத்தை முன் வைக்கிறார்கள்.

இத்தனை காலம் இணையத்தில் பல் வேறு விவாதக்களத்தில் பலர் பேசி வந்தாலும், இந்தி தேசிய மொழி என்று அறிந்தோ அறியாமலோ, பாடம் சொல்ல மட்டும் அணி அணியாய் வந்த வண்ணம் இருக்கின்றனர். அத்தகைய கட்டமைப்பு நம் கண்ணுக்கு எட்டாமல் நடந்த வண்ணமே இருக்கின்றது.

இந்தி கற்க முடியாமல் செய்துவிட்டனர் என்று பேசுவதெல்லாம் வெட்டிப் பேச்சாக மட்டுமே நான் கருதுவேன். நிச்சமயாக நம்மில் 50% பேரேனும் தனியார் பள்ளிகளில் படித்திருக்ககூடும். தனியார் பள்ளிகள் அனைத்திலும் இந்தி கற்க வேண்டுமென்பவர்கள் கற்க வசதியுண்டு. அது போக, ஊருக்கு ஊர் இந்தி பிரச்சார சபா என்று ஒன்றில் இன்றும் பலர் இந்தி கற்றே வருகின்றனர்.

இந்தியை தமிழகத்தில் கற்றாலும், பேச்ச மொழியாக இல்லாத வரை அதை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் அரை குறையான மொழியயையே கற்க முடியும். அதனாலேயே இந்தி கற்றவர்கள் கூட நாளாவட்டத்தில் அந்த மொழியயை மறக்கின்றனர்.

இந்தி கற்க விடாமல் செய்துவிட்டனர் என்று சொல்பவர்களின் அடுத்த குற்றச்சாட்டு, இந்தி பேச முடியாதபடி அனைவருமே தமிழில் பேசுகிறார்கள் என்பதாகவும் வரும். இதை தான் வடநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் சொல்கின்றனர்.

வடநாட்டினர் சென்னையில் தானி பிடிப்பதற்காக அனைத்து ஓட்டுனர்களுக்கும் இந்தி ஏன் சொல்லிக்கொடுக்கவில்லை என்று கேட்கின்றனர். அந்த தானி ஓட்டுனர் படிப்பறியில்லாதவராக இருந்தால் அவர் எப்படி இந்தி கற்றியிருப்பார். எப்படி பேசுவார் என்று ஒரு அடிப்படை சிந்தனை கூட அவர்களுக்கு ஏற்படாது.

அவர்கள் வீட்டு கொல்லையில் அனைவருமே இந்தி பேசுவது போல உலகம் முழுவதும் இந்தி பேசுவதாக அவர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள்.

இந்தி கற்றவர்கள் அனைவருமே வாழ்வில் சிறந்து விளங்கக்கூடும் என்றால் பெங்களூரில் இருக்கும் இந்தி மட்டுமே பேசும் கூர்க்காக்களும், பானி பூரி விற்பவர்களும் ஏன் சிறந்து விளங்கவில்லை என்ற கேள்விக்கு பதில் எனக்கு இது வரை கிடைக்கவில்லை.

இவர்கள் அனைவரும் வடக்கே பீகார், உ.பி, போன்ற இடங்களிலிருந்து வருகின்றனர். இது முழுக்க முழுக்க இந்தி பேசும் மக்கள் கொண்ட இடம்.

நம்மவர்கள் இந்தி கற்க வேண்டுமென்பது வடக்கே போய் தொழில் செய்து சிறக்க வேண்டுமென்பதற்காக என்று நான் நம்பவில்லை.

அலுவலகத்தில் ”இந்தி”யர்களின் அரட்டையில் தனித்து விடப்பட்டதாக உணரும் பொழுது இந்த உணர்வு இவர்களுக்கும் வரக்கூடும்.

பல மொழி பேசுபவர்கள் இருக்குமிடத்தில், பிறரை மதியாமல், பொதுவான இணைப்பு மொழியான ஆங்கிலத்தை பேசாமல், சிலருக்கு மட்டுமே புரியும், இந்தியில் பேசும், நபர்களுடன் பேச இந்தி கற்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக நினைக்கிறேன். இது போன்ற நபர்களுக்கு இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. ஒரு மொழி, ஒரு மதம், என்பது ஒரு போதும் நடக்காது என்று எடுத்து சொல்லி, பொது மொழியில் பேசுங்கள்.Mar 12

Akilan R -

 இங்கு பதிலளிக்க வேண்டாம் என இருந்தேன். ஆனால் சில வரலாற்று தவறுகளையும் குறைகளுடைய வாதங்களையும்(logical fallacies) சுட்டிக்காட்ட வேண்டும் என்று தோன்றியதால் மீண்டும்.
முதலில் மா.சி அவர்களது கடைசி பதிலீடை வழிமொழிகிறேன். உடனே தமிழில் அறிவியல் வளர்க்க அரசு முனைய வேண்டும்.
இரண்டு: நான் தமிழை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். தமிழை ஒழித்து இந்தியை கொண்டு வர வேண்டும் என்பது என் வாதமல்ல. தற்போதைய போலி அரசியல்வாதிகளின் நிலையை உரைப்பதே என்னுடைய நிலைப்பாடு.

@பலூன் மாமா

//வீரமணி என்பவர் திராவிடம் என்பது அவரின் கல்லூரி மற்றும் அறக்கட்டளையைக் காக்க என்ற அளவில் பயன்படுத்தி வருகிறார்.
கருணாநிதி அவரின் குடும்ப நன்மைக்காகப் பயண்படுத்தி வருகிறார்
ஜெயலலிதா , கேப்டன் காந்த் ...அது என்ன என்றே தெரியாமல் அப்படிப்பெயர் கொண்ட கட்சிக்குத் தலைமை தாங்குகிறார்கள்.
....
மொழி என்பது அடையாளம் மட்டுமல்ல வரலாறு. அதை இழக்கமுடியாது.//
அதே நான் சொல்வது. :-)

//உங்களுக்கு தேவை என்றால் படித்துக் கொள்ளுங்கள். அதற்காக அரசாங்க வரிப்பணத்தில் வாடிப்பட்டி கோவிந்துக்கும் இந்தி சொலித்தந்து அவன் என்ன மத்தியப்பிரதேசத்தில் மாங்காயா விற்கப்போகிறான்.//

ஆமோதிக்கிறேன். கூட இதையும் கேட்கிறேன்: பிறகு ஏன் ஆங்கிலத்தை மட்டும் விழுந்து விழுந்து கற்றுத்தருகிறார்கள்? (ஆங்கில மொழியோடு நிற்கவில்லை இது; அனைத்து பாடங்களையுமே அதில்தான் சொல்லித்தருகிறார்கள்.)

@குகுடுப்பை:
//தமிழ்வழிக்கல்வி முற்றிலும் செயல்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது, காரணம், ஜெர்மனோ, ஜப்பானோ, சீனனோ கண்டுபிடிப்புகள், ஆராய்சிக்கட்டுரைகள் வைத்திருக்கிறான், காலனி ஆதிக்க நாடான நாம் ஆங்கிலக்கூலிகள், எனவே ஆங்கில மீடியம் வருவது தவிர்க்கமுடியாது,//

சீனாவும் நம்மை போன்றே முன்னாளில் நன்றாக இருந்து பிறகு ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து சிதைந்து விடுபட்ட நாடே. அறுபதுகளில் இந்தியாவும் சோவியத்தும் சேர்ந்துதான் சீனாவின் முதல் ஆராய்ச்சி பல்கலைகழகங்களை நிறுவின. (அப்போது சீனா இன்னும் படையெடுக்கவில்லை. IIT போன்று அமைக்க வேண்டும் என்று சீனா ஆசைப்பட்டது.) அவர்கள் அதன் பின்னர் தங்கள் மொழியிலேயே பாடங்களை பயின்று இன்று தாங்கள் சொல்லிய நிலைக்கு வந்துள்ளார்கள். அப்படியெனில் தமிழ் அந்த நிலையை அடையாமல் எங்கும் ஆங்கிலம் வந்ததற்கு யார் காரணம் என்பதே எனது கேள்வி. நம்மை ஆண்ட ஆண்டு கொண்டிருக்கும் நல்லவர்கள் என்பது எனது பதில். அது தவறெனில் யார் காரணம் என்பதை கூறுங்கள்.

@அரசு பாரி:
//தமிழ் மொழி மட்டுமே இனி தனித்த அடையாளத்துடன் இருக்கபோவதில்லை! அவ்வாறான ஒன்றை உருவாக்கவும் இன்றைய உலக மயமாக்கல் சூழலில் இயலாது!

ஜப்பானிய மொழி எவ்வாறு ஆங்கில மொழியுடன் கலந்து ... தற்பொழுது ஒரு புதிய வடிவத்தை முன்னெடுத்து செல்கிறதோ... அதுபோல தமிழையும் தன்னியல்பான மொழி கலத்தல் மூலம் முன்னகர்த்தி செல்ல வேண்டும்.

ஆனால் இந்திய ஆதிக்க சூழலானது தமிழ் பரிணாமம் அடைவதை தடுக்கிறது. இந்திய ஆதிக்க சூழல் கிட்டதட்ட அனைத்து பிராந்திய மொழிகளையும் இல்லாதொழித்து... 'இந்தி' (அ) சமஸ்கிருத அடையாளத்துடன்... உலக மொழிகளுடன் கலக்க முனைகிறது.//

அதாகப்பட்டது தமிழ் தனித்த அடையாளத்துடன் இருக்க வேண்டியதில்லை (அது முடியாது.) தமிழ் ஆங்கிலத்துடந்தான் கலந்து(என்ன வார்த்தை அது? ஆங்..பரிணாமம்) செல்ல வேண்டும். இந்தி அதை தடுக்கிறது.
தடுக்கிறது எப்படின்னு எனக்கு புரியல. எனக்கு புரியறது என்னன்னா தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிழ் சாவறது பேர் பரிணாமம்; பள்ளிகளில் இந்தி கத்து கொடுத்து நாலு இந்தி வார்த்தை தமிழோட கலந்தா அது இந்தி திணிப்பு.

அதோட மட்டும் இல்ல. ஆங்கிலமும் வேண்டாம் இந்தியும் வேண்டாம் தமிழை வளருங்கள், ஆங்கிலத்தை வளர்த்த போலிகளை நம்பாதீர் னு சொல்றவங்க தமிழ் பண்பாடு தெரியாதவங்க, ஆனா இந்தி எதிர்ப்புன்னு சும்மா ஓட்டுக்காக மட்டும் பேசிட்டு தமிழ் வழி அறிவியலையும் கல்வியையும் வளர்க்காத போலிகள் நல்லவர்களாம். நான் என்ன சொல்ல??Mar 12 (edited Mar 12)

Akilan R -

இங்கு நிலவும் இன்னொரு கருத்து இந்திக்காரர்கள் இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் ஏன் பேச மறுக்கிறார்கள் என்பதும் அரசியல் சாசனப்படி ஆங்கிலமும் ஒரு இணைப்பு மொழிதான் என்பதும்.
//மாநில அரசுகளில் அலவல் மொழியாக ஆங்கிலமும், அந்த மாநில மொழியும் இருக்கு.//
அதைதான் நான் ஏன் என்று கேட்கிறேன். நமது நாட்டை சேர்ந்த இன்னொரு மாநிலத்தின் மொழியை இணைப்பு மொழியாக ஒப்புக்கொள்ள மனம் வராத இந்த அரசியல்வாதிகள் ஆங்கிலத்தை மட்டும் ஒப்புக்கொல்வதேன்? ஒட்டு அரசியல் என்கிறேன். இவர்கள் தமிழை வளர்க்கவில்லை. அழிக்கத்தான் செய்தார்கள்.Mar 12

சிவகுமார் மா -

1. தமிழில் அறிவியல் மட்டுமில்லை, மேலாண்மை, சட்டம், பொருளாதாரம், வரலாறு போன்ற எல்லா துறைகளிலும் புத்தகங்கள் மொழிபெயர்க்க/உருவாக்க வேண்டும்.

2. மொழியை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், மொழிக்கொள்கையை காலத்துக்கு ஏற்ப வளர்க்காமல், மக்களை ஏமாற்றி தமது வியாபரத்தை வளர்ப்பதிலேயே நேரம் செலவழித்ததன் விளைவுதான் தமிழகமெங்கும் பரவி நிற்கும் ஆங்கிலக் கல்வி மோகம், ஆங்கில வழி வங்கி/நிறுவன செயல்பாடுகள்.

3. விக்னேஷ்வரி ஒரு கேள்வி கேட்டிருந்தார் - எத்தனை பேரின் குழந்தைகள் தமிழ் வழிக் கல்வி பயில்கிறார்கள்? இன்றைய சூழலில் இணையத்தில் செயல்படும் பெரும்பாலானோரின் குழந்தைகள் ஆங்கில வழிக் கல்விதான் பயில்கிறார்கள்.

நடுத்தர/படித்த பெண்களிடையே (குழந்தைகளின் அம்மாக்கள்) ஆங்கில வழிக்கல்விதான் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் (இந்தி இரண்டாவது மொழியாகப் படித்தால்தான் அதிக மதிப்பெண் எடுக்க முடியும்) என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதை தவறு என்று சொல்வதால் மனம் மாறி விடப் போவதில்லை. 'ஆரம்பப் பள்ளி முதல் உயர் ஆராய்ச்சி வரை தமிழ் வழிக் கல்வி சாத்தியம், அதன் மூலம் குழந்தைகள் சாதிக்கிறார்கள்' என்று வருவது வரை ஆங்கில வழிக் கல்வி மோகம் மாறப் போவதில்லை.

4. நாம் ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் விவாதிப்பதை விட ஆமாச்சு ஒரு சூழலில் உறுதியாக நின்று தமிழுக்கு இடம் ஏற்படுத்திக் கொடுப்பதன் மதிப்பு பல மடங்கு அதிகம்.Mar 12

Akilan R - @விக்னேஸ்வரி:

நன்றி. :)
@மா சி:
உங்கள் பதிலை முழுவதும் ஆமோதிக்கிறேன்.Mar 12

சிவகுமார் மா -

வசதி இல்லாத ஏழைக் குழந்தைகளை தமிழ்வழி அரசு பள்ளிகளில் படிக்க வைத்து விட்டு, தமிழ் மொழியில் வளங்களை வளர்க்கப் போராடாமல்/முயற்சிக்காமல், இருப்பது போன்ற அயோக்கியத் தனம் இருக்க முடியாது.

'தயாநிதி மாறனுக்கு இந்தியும் ஆங்கிலமும் பேசத் தெரிந்ததால், கட்சியில் மற்ற தொண்டர்களைத் தாண்டி அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்பும், அமைச்சர் பதவியும் கொடுத்தோம்' என்று அயோக்கியத்தனம் திமுக தலைவர் கருணாநிதியிடமிருந்து வந்தது நினைவிருக்கலாம்.

இன்றைக்கு ஓரளவு வசதியுள்ளவர்கள் எப்படியாவது தங்கள் குழந்தைகளை 'மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அனுப்பி விட வேண்டும்' என்ற ஆயிரமாயிரம் ரூபாய்கள் செலவழிப்பதற்குக் காரணம் 'தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு எதிர்காலம் இல்லை' என்ற அவர்கள் நம்பிக்கை. அப்படிப்பட்டச் சூழல்தான் இருக்கிறது. அதற்கு பொறுப்பு 'தமிழ் உணர்வாளர்கள்' என்று காகிதப் புலிகளாக உறுமிக் கொண்டிருப்பவர்கள்தான்.Mar 12

Balloon MaMa - @அகிலன்

//ஆனா இந்தி எதிர்ப்புன்னு சும்மா ஓட்டுக்காக மட்டும் பேசிட்டு தமிழ் வழி அறிவியலையும் கல்வியையும் வளர்க்காத போலிகள் நல்லவர்களாம். நான் என்ன சொல்ல??//

இந்தி எதிர்ப்பு என்பது உணர்வுபூர்வமான போராட்டம்.
இப்போது இருக்கும் கழக பிரியாணிக்குஞ்சுகளை வைத்து முன்னோர்கள் நடத்திய ஒன்றினை எடைபோடக்கூடாது.

தமிழ் வழி அறிவியலையும் கல்வியையும் வளர்க்காத போலிகளை நல்லவர்கள் என்று இங்கு யார் சொல்லியுள்ளார்கள்? பெயருடன் சொல்லுங்கள்

தயவுசெய்து திராவிடம் என்றால் கழக பிரியாணிக்குஞ்சுகளையும் அதன் சுயநலத்தலைமையயும் வைத்துமட்டும் எடைபோடாதீர்கள். குஸ்பூகூடத்தான் கழகத்தில் இருக்கிறார். :-))

**
தமிழ் வழி அறிவியலையும் கல்வியையும் வளர்க்க எந்த முயற்சியும் எடுக்காத இதுவரை ஆண்ட எல்லாக் கழக அரசுகளையும் நான் குற்றம் சுமத்துகிறேன்.

*

நீங்கள் கேட்டுள்ள அடுத்த கேள்வி
//பிறகு ஏன் ஆங்கிலத்தை மட்டும் விழுந்து விழுந்து கற்றுத்தருகிறார்கள்?//

கிந்தி என்பது சனாதன சமச்கிரக மொழியின் ஒன்றுவிட்ட தம்பி.
கிந்தியை ஏற்பது என்பது, சனாதன ஒட்டகத்தின் தலையை கூடாரத்தில் அனுமதிப்பது போன்றது. அதன்பின்னால் சனாதன வர்ணாசிரம முழு ஒட்டகம் உள்ளே வந்துவிடும்.

கர்நாடகம் வரை ஆடும் காவிக்கட்சி ஏன் தமிழ்நாட்டில் காலூன்றமுடியவில்லை?

இது மொழி தாண்டிய பேரரசியல் அகிலன். இதில் உங்களின் நிலை எனக்குத் தெரியாது. சொன்னாலும் எந்த அளவுக்கு உங்களுக்குப் புரியும் என்று தெரியவில்லை. (இது உங்களை நான் உரையாடல்கள்மூலம் அரியாததால் மட்டுமே)

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்:
------------------------------------------
சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏன் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து கிறித்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மாறினார்கள்? அவர்கள் ஏன் இந்தியாவிலேயே சைவ, வைணவ மதங்களுக்கு மாறியிருக்கக்கூடாது?

*
அதே நிலைதான் ஆங்கிலத்தை ஆதரிப்பதற்கும். சனாதனக் கருமாந்திரங்களில் இருந்து விட்டுவிடுதலையாக வேண்டும் என்றால் அந்த வாடையே இல்லாத ஒன்றைத்தான் ஆதரிக்க வேண்டுமே தவிர , பேயின் சித்தப்பா பிசாசை ஆதரிக்கக்கூடாது. சரி ஏன் ஆங்கிலம் ஹீப்ருவை ஆதரிக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். ஏற்கனவே அறிமுகமான ஒன்று என்பதால் மட்டுமே.
.Mar 12

Balloon MaMa - @சிவகுமார் மா

// 'தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு எதிர்காலம் இல்லை' என்ற அவர்கள் நம்பிக்கை. அப்படிப்பட்டச் சூழல்தான் இருக்கிறது. அதற்கு பொறுப்பு 'தமிழ் உணர்வாளர்கள்' என்று காகிதப் புலிகளாக உறுமிக் கொண்டிருப்பவர்கள்தான்.//

உண்மை மறுத்துச் சொல்ல ஏதும் இல்லை.

தமிழுக்கான மொழிப்பங்கை ஆற்றும் ஒரு கடமையும் உள்ளது. அதே நேரத்தில் "கிந்தி படிக்காமல் ரொம்ப கஸ்டாமாயிருக்கு" என்று சொல்லி மற்றவர்களை தவறான சிந்தனைக்கு இட்டுச்செல்லும் உரையாடல்களையும் எதிர்கொள்ளவேண்டும்.
,Mar 12

Balloon MaMa - சிவகுமார் மா

//4. நாம் ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் விவாதிப்பதை விட ஆமாச்சு ஒரு சூழலில் உறுதியாக நின்று தமிழுக்கு இடம் ஏற்படுத்திக் கொடுப்பதன் மதிப்பு பல மடங்கு அதிகம்.//

தமிழுக்கான மொழிப்பங்கை ஆற்றிய ஆமாச்சுவிற்கு (அகிலன் ?) சலாம் (கிந்தி சலாம்)

**
அவர் அங்கேயும் போராடியது ஆங்கிலத்தை எதிர்த்து என்று நினைக்கிறேன். ஒருவேளை கிந்தியாய் இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பாரா? :‍-))) கிந்தி ப்ரியராய் இருப்பதால் கேட்கிறேன். #doubt
.Mar 12

சிவகுமார் மா -

//அவர் அங்கேயும் போராடியது ஆங்கிலத்தை எதிர்த்து என்று நினைக்கிறேன். ஒருவேளை கிந்தியாய் இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பாரா? :‍-))) கிந்தி ப்ரியராய் இருப்பதால் கேட்கிறேன். #doubt //

ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். இன்றைய தேதியில் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் பயன்பாட்டுக்கும் பலனுள்ள வகையில் உழைக்கும் முதல் 10 பேர் பெயர்களை பட்டியல் போட்டால் அதில் ஆமாச்சு என்று ஸ்ரீராமதாஸ் பெயர் தவறாமல் இருக்கும்.

இந்தியை வெறுக்கத் தேவையில்லை, இந்தியை நேசிப்பது குற்றமில்லை. என் தாய் வாழ வேண்டும் என்றால் மற்ற தாய்களை வெறுக்க வேண்டும் என்று பொருளில்லை.Mar 12 (edited Mar 12)

Balloon MaMa - @சிவகுமார் மா -

//இந்தியை வெறுக்கத் தேவையில்லை, இந்தியை நேசிப்பது குற்றமில்லை. என் தாய் வாழ வேண்டும் என்றால் மற்ற தாய்களை வெறுக்க வேண்டும் என்று பொருளில்லை.//

உங்கள் அம்மாவும் நல்லவர் என் அம்மாவைப் போலவே என்றுதான் என்னால் சொல்லமுடியுமே தவிர. உங்கள் அம்மாதான் சிறந்தவர் அவரே எல்லோரையும்விட உயர்வானவர் பொதுவானவர் என்று சொல்லமுடியாது ஏன் என்றால் எனக்கென்று அம்மா இருக்கிறார்.

அடையாளமற்ற அனாதைகள் வேண்டுமானால் கிந்திதான் எனது அடையாளம் என்று தஞ்சம் புகலாம்.

மொழி என்ற அளவில் எதுவும் எங்கேயும் இருக்கட்டும். ஆனால் இதுதான் எல்லாருக்கும் என்று தட்டையாக இந்தியாவில் பேசினால் அவர்கள் இந்திய கலாச்சார கூட்டு அடையாளத்தை உணராதவர்களே.
.Mar 12

Gopalakrishnan (Gopi) T -

//இந்தி தெரியாமல் போனதால் ஆபிசில் பேசமுடியவில்லை//

இந்தி அலுவல் மொழியாக கொண்ட அலுவலகத்தில் இந்தி தெரியாமல் போனால் குறை உங்களிடம். யாரும் உங்களை இந்தி கற்க தடை விதிப்பதில்லை.

ஆங்கிலத்தை அலுவல் மொழியாக கொண்ட நிறுவனங்களில் குழுவினர் ஆங்கிலமற்ற வேற்று மொழியில் அலுவல் பணிகளை பேசுவதால் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதை மனிதவளத்துறையில் எடுத்துச் சொல்லி நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு (தொடர்புடையோர் பணிநீக்கம் வரை கடுமையான தண்டனைகள் கொண்ட) சட்டங்களை பெரும்பாலான நிறுவனங்கள் வைத்துள்ளன.

இந்நிறுவனங்களில் அலுவல் ரீதியாய் இல்லாமல் தனிப்பட்ட சேதிகளை வேற்று மொழியில் சிலர் பேசினால் நமக்கென்ன? நமக்கு புரிந்த மொழியில் தனிப்பட்ட சேதிகளைப் பேசுவோரிடம் நட்பு பாராட்டவே நேரம் போதவில்லை.

"க்யா ஆல் ஹே யார்" அப்படின்னு என்னை ஒருத்தன் கேட்டா "அருமையா இருக்கேன். நீ நல்லாயிருக்கியா"ன்னு தான் நான் பதில் சொல்வேன். "படியா ஹை"ன்னு பதில் சொல்வேன்னு எதிர்பார்த்தா அது அவன் தப்பு. அலுவல் தவிர அவன் கிட்ட எனக்கென்ன வெறென்ன உறவு?Mar 12

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் - @Balloon MaMa

எமது செயல் ஆங்கிலத்திற்கு எதிரானது அல்ல.Mar 12

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் -

வடமொழி பார்ப்பனர் மொழி மட்டும் அல்ல. தேய்ந்து தேய்ந்து அது கடைசியாக அதிகமாக பார்ப்பனர் வசம் எஞ்சியிருந்தது. அதுவும் கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளில் போய்விட்டது. வடமொழியறியாது சமண பவுத்த கருத்துக்களையும் முழுமையாக அறிந்துணர்தல் கடினம்.

அதில் எண்ணற்ற பல உன்னதவிஷயங்கள் பொதிந்துள்ளதென்பதை ஓரளவிற்காவது கற்றுத் தேர்ந்து உணர்ந்து ஏற்கிறேன். அதுவும் தமிழ் நாட்டுச் சான்றோர்கள் பலர் கொண்ட உயர்ந்த கருத்தும் நிகரானவையே.

நிகரான உயர்கருத்துக்களையும் வழக்கங்களையும் உலகின் எல்லாச் சமூகங்களும் எல்லா காலத்திலும் கொண்டிருந்திருக்கின்றன. எமது சமுதாயமும் கொண்டிருந்தது என்று சொல்வது சரி. எமது சமுதாயம் மட்டும்தான் உயர்ந்த பண்பாட்டின் உறைவிடமாய் இருந்தது எனச் சொல்வது அநாகரிகம்.Mar 12 (edited Mar 12)

அரசு பாரி - @அகிலன்
//
அதாகப்பட்டது தமிழ் தனித்த அடையாளத்துடன் இருக்க வேண்டியதில்லை (அது முடியாது.) தமிழ் ஆங்கிலத்துடந்தான் கலந்து(என்ன வார்த்தை அது? ஆங்..பரிணாமம்) செல்ல வேண்டும். இந்தி அதை தடுக்கிறது.
தடுக்கிறது எப்படின்னு எனக்கு புரியல. எனக்கு புரியறது என்னன்னா தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிழ் சாவறது பேர் பரிணாமம்; பள்ளிகளில் இந்தி கத்து கொடுத்து நாலு இந்தி வார்த்தை தமிழோட கலந்தா அது இந்தி திணிப்பு.
//

இந்த மாதிரியான எகனை, மொகனை பேச்சுகளை 5 வருடமாக இணையத்தில் நிறைய பார்த்தாச்சு! :)

சமூகங்களுக்கிடையிலான மொழி, பண்பாடு ஊடாடல், கலத்தல் மற்றும் தாக்கம் பற்றி கொஞ்சம் வாசித்து அறிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

ஆங்கிலத்தின் தேவையை பற்றிய நேரு மற்றும் அண்ணா இடையிலான கடிதங்கள், உரையாடல்களை படித்தாலே ஓரளவு தெளிவு கிட்டும்.

அதிகாரத்தின் வழியிலான மொழி, பண்பாட்டு ஆதிக்கதிற்கும்..
தேவையின் அடிப்படையிலான மொழி, பண்பாட்டு கலத்தலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கு! முந்தையது சமூகத்தை அடிமையாக்கும் செயல்... பிந்தையது சமூகத்தை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்வது.

அப்புறம் இந்தி தடுக்கிறது.... இதை விளக்குவதற்கு இங்கே நேரமும், பொறுமையும் இல்லை... சிறிய அறிமுகம் மட்டும்....

மொழி சார்ந்த ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது... 6 கோடி பேருக்கு தமிழ் தாய்மொழி என்பது 8கோடி பேருக்கு தமிழ் தாய்மொழி என்று மாறுவதல்ல... மொழி வளர்ப்பதன் நோக்கமே சமூகத்தை முன் நகர்த்துவதற்காக தான்!

மொழியை உரம் போட்டு வளர்க்க முடியாது.... பிற சமூகங்களுடன் மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், தத்துவம் மற்றும் சிந்தனை போன்றவற்றை பறிமாற்றம் செய்வதன் மூலம் மட்டுமே வளர்ச்சி காண முடியும்.

உலகின் பிற சமூகங்களுடன் மொழி, பண்பாட்டு தாக்கதிற்கு 'இந்தி' அரசாங்கம் மிக பெரிய தடையாக இருக்கிறது.

'இந்தி' அரசாங்கம் சமஸ்கிருதத்தை உலகின் பிற அரசாங்களுடன் பறிமாற்றம் செய்கிறது. ஆனால் இந்தியாவின் பிராந்திய மொழிகள் மற்றும் பண்பாடுகள் பறிமாற்றம் செய்யப்படுவதில்லை..

மிகச்சிறந்த எடுத்துகாட்டு வங்காள மொழி.. தமிழுக்கு நிகரான தொன்மையும்... கலை, இலக்கிய செல்வம் நிறைந்த வங்காள மொழி 'இந்தி' அரசாஙகத்தால் சிதைவடைந்துள்ளது.Mar 12 (edited Mar 12)
அரசு பாரி - இந்தி தேசிய இனிப்பு
அதை தின்றால் இனிக்காதோ!?
அந்தோ...
அது இனிப்பல்ல...
சமூகத்தை மெல்ல கொல்லும்...
'இந்து' தேசிய கனவின் நஞ்சு!Mar 12 (edited Mar 12)

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் -

//கர்நாடகம் வரை ஆடும் காவிக்கட்சி ஏன் தமிழ்நாட்டில் காலூன்றமுடியவில்லை? //

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற திருமூல வாசகம் இன்று தமிழகத்து மூல மந்திரமாய் ஒலிப்பதாலோ என்னவோ ;-)

அது சரி, அன்றைய மொத்த மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி(+)யையும் கணக்கு பண்ணி தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் கும்மிடிப்பூண்டிக்கும் குமரிக்கும் இடையில் திராவிட மானம் திராவிட பண்பாடு என்பதிலிருந்தெல்லாம் கூனிக் குறுகி தமிழ் மானம் தமிழ் இனம் என்று பட்டம் பறக்கவிட்டு நூலறுந்து கொண்டிருப்பது ஏன்?Mar 12 (edited Mar 12)

பின்குறிப்பு : இந்தக் கட்டுரைக்கு அதிகபட்சம் பத்து வாசகர்களையும், மூன்று பின்னூட்டங்களையும், மூன்று தமிழ்மணம் வாக்குகளையும் எதிர்பார்க்கிறேன். :))))))

14 பேரு கிடா வெட்டுறாங்க:

பா.ராஜாராம் சொன்னது…

நல்ல பகிர்வு விந்தை மனிதன்!

என்னை மாதிரி 'பஸ்' ஏறி வரத் தெரியாதவனுக்கு இப்படியான தளப்பகிர்வு மூலம் அறிந்து கொள்ள உதவியதற்கும் , பகிர்விற்கும் மிகுந்த நன்றி! பஸ்' ஸில் நடக்கிற விஷயங்களை இப்படி அப்பப்போ பகிருங்கள். முன்பு, மணிஜி கூட ஒரு பஸ்ஸை paginthirunthaar. jaaliyaaga irunthathu. :-)

informative!

ஜோதிஜி சொன்னது…

இரவு மீண்டும் வருகின்றேன்.

பெருங்காயம் சொன்னது…

எதையும் திணிப்பதால்தான் பிரச்சினையே. இதைப்போல் பிளாக்கில் பல விவாதங்கள் பார்த்தாயிற்று. பெரும்பாலும் இந்திக்கு கிளை பிடிப்பவர்கள் வடக்கிலும், அரபி நாட்டிலும் வேலை பார்க்கும் சிலரே. இந்தி படித்தால் என்ன வாழ்க்கையே மாறிவிடுமா? மத்திய அரசின் வேலை கிடைக்குமா? யாருக்கு எது தேயையோ அதைக் கறறுக் கொள்ளலாம். இந்தியாவில் ஒரே மொழி அது இந்தி என்ற மாயையை உருவாக்கிவிட்டனர்.

ராஜ நடராஜன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி விந்தை மனிதன்.பஸ் நீண்ட பயணமாக இருப்பதால் மீண்டும் வருகிறேன்.நன்றி.

நிலவு சொன்னது…

நடிகர்கள் - சாதி சங்கங்கள் வழியாக சட்டமன்ற புரட்சிhttp://powrnamy.blogspot.com/2011/03/blog-post_14.html

ஜோதிஜி சொன்னது…

மின் அஞ்சல் வழியாகவும் வந்து சேர முழுமையாக படிக்க முடிந்தது. நன்றி ராஜாராமன்.

சமீபத்தில் சாயப்பட்டறையை தேடி நண்பர் புனே, சோலாப்பூர் மற்றும் உள்ளடங்கிய பகுதிகளுக்குள் சென்ற போது அலுவலகத்தில் கூட பேசும் மொழி மராட்டி மட்டுமே. ஆங்கிலம் என்பதும் ஹிந்தி என்பதும் தீண்டத்தகாத மொழி. அவர்கள் எவரும் பிச்சை எடுக்கவில்லை.

ஹிந்தி தெரிந்தவர் என்று அழைத்துக் கொண்டு சென்றவர் கூட திண்டாடியது தான் மிச்சம்.

ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட், நேபாளாம் கீழே உள்ள பகுதிகள் என்று பல பகுதிகளில் இருந்து இங்கு பணிபுரியும் தொழிலாளர்களை கூர்ந்து கவனிக்கும் போது அவர்களின் வட்டார மொழி தான் முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறார்கள். ஹிந்தி தேவைப்பட்டால் தான் பேசுகிறார்கள். ஏனப்பா என்றால் என் மொழி தான் எனக்கு தேவை என்கிறார்கள். இத்தனைக்கும் படிப்பறிவு அற்றவர்கள். அவர்களும் பிச்சை எடுக்கவில்லை. திருப்பூரில் நன்றாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழர்களுக்கு எப்போதும் ஒரு குணம் உண்டு. மொழியை கற்றுக் கொள்வது என்பதை விட நம் தாய் மொழியை கேவலப்படுத்துவதில் நமக்கு நாமே என்ன பட்ட வேண்டுமென்றாலும் கொடுக்கலாம். அந்த அளவிற்கு ரொம்ப புத்திசாலிங்க. கல்வெட்டு சொன்னது போல குறவர் பாஷை பேசினால் உடனடி வேலை வாய்ப்பு என்றால் மறுநாளே வ்ரிசை கட்டி நின்று கொண்டு அதற்கு மு.க. தான் காரணம் என்பார்கள்.

நானும் ஆர்வத்தில் ஹிந்தியில் மூன்று பரிட்சை தேர்ச்சி அடைந்தேன். இன்று வரைக்கும் பத்து காசுக்கு பிரஜோயனமில்லை. மற்ந்தும் போய்விட்டது. அதெல்லாம் சரி வங்கியில் இந்த ஹிந்தியை வலிய திணித்து உள்ளதைப் பார்க்கும் போது விமான பயணத்தில் கிழவிகள் என்ற விமான பணிப்பெண்கள் ஹிந்தி மட்டும் பேசும் போது ஒரு முறை வாந்தி எடுத்து துப்பி விடலாமா என்று யோசித்தது இப்போது நினைவுக்கு வருகின்றது.

மொழியை கற்பது தவறில்லை. ஆனால் விழியை இழந்து விட்டு கற்பது தான் கேள்விக்குறி.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>மலேரியா ஜூரம் வந்தவரைப்போல ஒருநாளைக்கு ரெண்டு பதிவு எழுதி 'பிரபலன்' ஆகும் கனவில் துடிப்பவரும் பலருண்டு.

ஹி ஹி உண்மை தான்..( நாங்க தப்பு செய்வோம்.. ஆனா ஒத்துக்குவோம்..ஹா ஹா )

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>
பின்குறிப்பு : இந்தக் கட்டுரைக்கு அதிகபட்சம் பத்து வாசகர்களையும், மூன்று பின்னூட்டங்களையும், மூன்று தமிழ்மணம் வாக்குகளையும் எதிர்பார்க்கிறேன். :))))))

வர வர நக்கல் ஜாஸ்தி ஆகிடுச்சு. உங்களுக்கு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>விவாதங்களை உள்ளடக்கிய இந்த பஸ் ஆழமான தகவல்கள் விரும்புவோருக்கு ஒரு தூண்டுபுள்ளியாக அமையும் என்று எண்ணுகிறேன்.

இது உண்மைதான்

Indian சொன்னது…

// தமிழில் அறிவியல் மட்டுமில்லை, மேலாண்மை, சட்டம், பொருளாதாரம், வரலாறு போன்ற எல்லா துறைகளிலும் புத்தகங்கள் மொழிபெயர்க்க/உருவாக்க வேண்டும்.//

இதற்கான முதற்படியாக பல நூறு ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை திரு. இராம.கி அய்யா அவர்கள் தன்னுடைய வளவு வலைப்பதிவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

அந்த சொற்களை தமிழ்ச்சொல்லாக்கம் என்ற பதிவில் தொகுத்து வருகிறேன்.

Indian சொன்னது…

ஹிந்தி கற்பது பாவச்செயலா?

இந்த இடுகையையும் படித்துப் பாருங்கள்.

Indian சொன்னது…

தமிழகம் முழுக்க ஆங்கிலக்கல்வி - விஜயகாந்த் என்ற இடுகையிலும் விரிவான விவாதம் நடைபெற்றது. ஆனால் இவ்விடுகை தற்போது திரு.மதிபாலா அவர்களால் பூட்டப்பட்டுள்ளது.

Oracle சொன்னது…

ஹிந்தி தேசிய மொழி கிடயாது. இதை நாம் மிக தெளிவாக அறிவது அவசியம்
ஹிந்தி படிதால் வேலை கிடைக்கும் ## எந்த மடயன் சொன்னது.

இந்திய மக்கள் அனைவரும் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும். இந்திய பாராளுமன்றதில் அளிக்க பட்ட உறுதி மொழி.

பெரியார் எழுதி குமுததில் மீன்டுமொறு முறை பதிவான கட்டுரை என் நினைவுக்கு வருகிரது. எல்லாரும் ஆங்கிலம் கற்று கொள்ள வெண்டும் என்று அதில் வலியுறுத்தி இருப்பார்.

Paleo God சொன்னது…

அருமையான விவாதத்தொகுப்புக்கு நன்றி விந்தையாரே. இது சார்ந்த மற்ற விவாதங்களையும் நீங்களே தொகுத்து வைக்கலாம் # வேண்டுகோள் :))

Related Posts with Thumbnails