tag:blogger.com,1999:blog-45311668691305633132024-03-13T10:20:01.243+05:30விந்தைமனிதன்போராடக் கற்றுக்கொள்; கற்றுக்கொள்ளப் போராடு!vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comBlogger134125tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-50217042121245577702013-09-26T10:17:00.001+05:302013-09-26T10:26:42.301+05:30லூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">யுதிர்ஷ்டிரனுக்கு கடுப்பு கடுப்பாய் வந்தது. அலுத்துச்
சலிச்சி வீட்டுக்கு வந்தா கொஞ்சம் காப்பித்தண்ணி போட்டுக் கொடுக்கக்கூட ஆளில்லை. வீமன்
எங்கியாச்சும் கல்யாண வீட்டுல சமையலுக்குப் போயிருப்பான்.. சம்பளத்தோட சாப்பாடும் உண்டுங்கிறது
கூடுதல் சவுரியம்.. சின்னவனுவோ ரெண்டு பேரும் குதுர மேய்க்கவும் கதைப்பொஸ்தவம் படிக்கவும்தான்
லாயக்கு. பாஞ்சாலி அர்ச்சுனங்கிட்ட குலாவிக்கிட்டு காட்டுப்பக்கம் போயிருப்பா போலருக்கு..
பெத்த தாயாச்சும் கொஞ்சம் காப்பித்தண்ணி குடுப்பான்னு பாத்தா முந்தாநாளு உருளக்கெழங்கு
கறிய கொஞ்சம் அதிகமா தின்னுட்டு வாய்வுத்தொல்லைன்னு நெஞ்சைப் புடிச்சிக்கிட்டு சுருண்டு
படுத்திருக்கு கெழம்..</span><span lang="TA" style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">எப்பயும் ஊர்ஞாயம் பேச நாலுபேரு வந்து நிப்பானுவோ.. இன்னிக்கி
ஒரு பயலையும் காணும். மண்பானையத் தொறந்து கொஞ்சம் ஜில்லுன்னு தண்ணியக் குடிச்சிட்டு
திண்ணையில வந்து உக்காந்தான்..</span><span lang="TA" style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">“அப்பப்பப்பா.. என்னா வெயிலு.. என்னா வெயிலு.. பேருதான்
காடு... வெக்கை கொளுத்துது மச்சான்”ன்னு சொல்லிக்கிட்டே மேல்துண்டை எடுத்து வேர்வைய
தொடைச்சிக்கிட்டு தரையத் தட்டிவுட்டுட்டு பக்கத்துல வந்து உக்காந்தான் கிருஷ்ணன்.</span><span lang="TA" style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">“தங்கச்சி.. கொஞ்சம் சில்லுன்னு தண்ணி கொண்டுட்டு வாம்மா”ன்னு
குரல்கொடுத்த கிருஷ்ணன்கிட்ட கொஞ்சம் கடுப்பா “அவ நடுலவன்கூட காட்டுக்கு சுள்ளி பொறுக்கப்
போயிருக்கா போல.. உம்ம அத்தையும் மேலுக்கு நோவுதுன்னு படுத்திருக்கு.. இரும்.. நானே
போயி எடுத்தாரேன்”ன்னு சொல்லி மறுவடி எந்திரிச்சிப் போயி தண்ணி கொண்டாந்து கொடுத்த
யுதிர்ஷ்டிரன்</span><span lang="TA" style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">“என்ன மச்சான் சலிச்சிப்போயி வந்திருக்கீரு.. போன காரியம்
என்னாச்சு</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">?
</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">காயா பழமா</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">?</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">” ன்னான்.</span><span lang="TA" style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">“எங்கய்யா... நீரு விடாக்கண்டன்னா உம்ம பங்காளி கொடாக்கண்டனா
இருக்கான்.. “அவந்திமிரு... சீட்டாடித் தொலைச்சதை என்ன உரிமைல திருப்பிக் கேக்குறான்..
அப்டியே பாவம்புண்ணியம் பாத்து கொடுக்கலாம்னு பாத்தாக்கூட எங்கப்பன் வதவதன்னு நூறுபேத்த
பெத்துப் போட்டுட்டான்.. அம்பது வேலி நெலம்.. மிராசுதார்னு பேருதான்.. எழவு பாகப்பிரிவினை
பண்ணா குடிசை போடக்கூட ஆளுக்கு முப்பது குழி நெலம்தான் தேறும்.. இதுல சித்தப்பன் மக்களுக்கு
எங்கேருந்து குடுக்குறது</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">?</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">”ன்னு திரும்பிக் கேக்குறான் மச்சான்.. நானும் என்னன்னமோ
அகடவிகடம்லாம் பண்ணிப் பாத்துட்டேன்.. பய அசையலையே.. வயல் என்ன வரப்புகூட தரமுடியாதுங்கிறான்..ஊருல
இருக்குற பெரிய மனுசன் பூரா அவம்பக்கம்தான் பேசுறானுவோ”ன்னான் கிருஷ்ணன்.</span><span lang="TA" style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">கொஞ்சநேரம் மேலாக்க கூரைய வெறிச்சிப் பாத்துட்டு இருந்தான்
யுதிர்ஷ்டிரன்.. ரொம்ப நேரமா அசையாம நின்ன கெவுலி ஒண்ணு சுள்ளுன்னு பாய்ஞ்சி எதுத்தாப்புல
இருந்த பூச்சியக் கவ்வுனிச்சி.. கெவுலியையும் பூச்சியையும் வேடிக்கை பாத்துட்டு இருந்தவங்கிட்ட
கிருஷ்ணன்</span><span lang="TA" style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">“ஏம்மச்சான்.. நம்மகிட்டதான் டாகுமெண்ட்டெல்லாம் வலுவா
இருக்கே... பேசாம கோர்ட்டுல போட்ருவமா</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">?</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">”ன்னான்</span><span lang="TA" style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">“மிச்சமிருக்குறது அந்த பேப்பரும் பாஞ்சாலி காதுல மூக்குல
கெடக்குற குந்துமணி தங்கமும்தான்.. அதை வித்து வக்கீலைப் புடிச்சி நோட்டீஸ் வுட்டு
கேஸ் போட்ரலாம்தான்.. அது கோர்ட்டுக்குப் போயி நம்பராகி பெட்டிசன் காப்பிய பிரதிவாதிக்குக்
குடுக்குறதுக்குள்ளாற என்னோட புள்ளகுட்டிங்க வளந்து ஆளாயிடும் மச்சான்.. அதுக்குமேல
வாய்தாவுக்கு வாய்தா போட்டு</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">தீர்ப்பாயி</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">அப்பீலு</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">மேல்கோர்ட்டுன்னு
நம்ம கட்டை தெக்க போற வரைக்கும் காலணா காசுக்கு ஆவாது.. வேற ஏதாச்சும் யோசனை சொல்லும்”</span><span lang="TA" style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">“வேற என்னய்யா சொல்றது</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">? </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">பொண்ணு கட்டிக் குடுத்த பாவத்துக்கு நானும் உங்ககூட கெடந்து
அல்லாடுறேன்.. வேணும்னா நம்ம மாமம்மச்சானுவோ</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">சேக்காளியளைச்
சேத்துக்கிட்டு மோதிப்பாப்பம்.. இந்தப் பக்கம் நாலு தலை</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">அந்தப்பக்கம் நாலு தலை உருளத்தான் செய்யும்.. வக்காளி
நாம பெரிசா</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">,
</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">அவம்பெரிசான்னு பாத்துருவோம்.. என்ன சொல்றீரு</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">?</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">” ஆவல் ஆவலாய்க் கேட்டான் கிருஷ்ணன்..</span><span lang="TA" style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">“சொம்மாக் கெடவும் மச்சான்.. இதென்ன அந்தக்காலம் மேரின்னு
நெனைச்சீரா.. இப்போ சர்க்காரு</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">போலீசு</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">சட்டம்னு ஆயிரத்தெட்டு இருக்கு.. லாக்கப்ல போட்டு நொங்கிப்புடுவானுவோ
நொங்கி... இதெல்லாம் ஒரு மயிறும் கதைக்காவாது... நான் பாஞ்சாலி கழுத்துல கெடக்குற நகைநட்டை
வித்து பணம் ரெடி பண்றேன்.. பட்டணம் போயி நாலுக்கு எட்டு ஒரு ரூம்பைப் புடிப்போம்..
நமக்குத் தெரிஞ்ச தொழில் ஜோசியம் கைவசம் இருக்கு.. நாலைஞ்சி மாசம் கழிச்சி வீமனை வெச்சி
சின்னதா நாலு பெஞ்சுப்பலவை போட்டு மெஸ்சும் வைக்கலாம்.. வழக்கு வாய்தா</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">வம்பு</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;">,</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">சண்டைன்னு
போவாம உருப்படியா பண்ணுவோம்.. நீரும் வாரும் கூடமாட ஒத்தாசையா இருக்கும்”னு சொல்லிகிட்டே
துண்டை ஒதறிப் போட்டுக்கிட்டு எந்திரிச்சான் யுதிர்ஷ்டிரன்.</span><span lang="TA" style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">இதுக்குமேல கதைய எப்டி எழுதித் தொலைக்கிறது..மொறைப்படி
பாத்தா பயலுவோ வெட்டுக்குத்துன்னு எறங்கி அடிச்சிக்கிட்டு சாவணுமே.. இப்ப என்ன பண்ணித்
தொலைக்கிறதுன்னு தாடியச் சொறிஞ்சிக்கிட்டு முழிச்சிட்டு இருந்தான் வியாசன். “நீரு என்ன
எழவோ பண்ணித் தொலையும்.. சீக்கிரம் கதையச் சொல்லி முடிச்சா நானும் டைப்படிச்சிக் குடுத்து
முடிச்சிட்டுப் போயிருவேன்.. ஆயிரத்தெட்டு சோலி கெடக்கு”ன்னு மொனகிக்கிட்டே கையில இருந்த
தந்த ஊசியால பல்லுக் குத்த ஆரமிச்சான் விநாயகன்.</span><span lang="TA" style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Arial; mso-hansi-font-family: Arial;">.</span><span lang="TA" style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
</div>
vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-63181489326874532642013-05-05T17:17:00.000+05:302019-05-21T11:14:51.291+05:30ஸ்வர்ணா என்றொரு தேவதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="Apple-style-span" style="color: #222222; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; font-size: 13px; line-height: 18px;">நீண்டதூரப் பேருந்துப் பயணங்களில் ஜன்னலோர இருக்கையும், "சார் என்ன பண்றீங்க" ரீதியில் ஆரம்பித்து உயிரை எடுக்காத, தொந்தரவற்ற பக்கத்து இருக்கைப் பயணியும் வாய்க்கப்பெற்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ரகுநாதன் அன்று கொஞ்சம் விசேஷமாகவே ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான்... முன்னிருக்கையில் அடர்த்தியான கூந்தலில் கதம்பச்சரம் சூட்டி அமர்ந்திருந்தவளின் ஒன்றிரண்டு முடியிழைகள் முகத்தில் உரசப்பெறுவதன் மூலம்! ரகுநாதனுக்குக் கவிதை எழுதும் உந்துதல் வந்தது... ஸ்வர்ணலக்ஷ்மியின் நினைவுகளும்.<br /><br />ஸ்வர்ணலக்ஷ்மி பதினொண்ணாங்கிளாஸ் அட்மிஷனுக்காக நுழைந்தபோது மொத்த ஸ்கூலுமே "கால் கண்டார் காலே கண்டார்! தோள் கண்டார் தோளே கண்டார்" என்று பார்த்தவிழி பூத்து நின்றது.வாத்தியார், பையன்கள் என்ற வித்தியாசங்கள் மறைந்து சகலரும் ஜோதியில் ஐக்கியமாகி இருந்தனர்.<br /><br />கால்விரல்கள்கூடத் தெரிந்துவிடாதபடிக்கு சர்வஜாக்கிரதையாய் அசைந்துவரும் தாவணிகளை மட்டும்தான் அவன் கண்டிருக்கிறான்.<br />கணுக்கால் தெரியும் மினிஸ்கர்ட், வினோதமான மேல்சட்டை, சுமார் மூன்றடி நீளத்தில் காற்றில் கொஞ்சிக் கொண்டிருக்கும் கூந்தலை அடிக்கடி சரிசெய்யும் நீண்ட மெல்லிய விரல்கள்... இத்யாதி,இத்யாதி! ஆற்றில் வலைக்குச் சிக்காமல் துள்ளி நழுவும் கெண்டைமீன் போல கண்கள் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஸ்வர்ணாவுக்கு. நொடிக்கு மூன்றுதரம் சிரிக்கும் வித்தையை எங்கிருந்துதான் கற்றாளோ! சாயங்கால வெயில் மாந்தளிரில் பட்டால் ஒருமாதிரி மின்னுமே, அதுபோல வெளுப்புமில்லாமல் மாநிறமும் இல்லாமல் ஒரு நிறம் அவளுக்கு... ராட்சஸி!<br /><br />கூடப்படிக்கும் பெண் எவளாவது லேசாகத் திரும்பிப் பார்த்தாலே அடுத்தநாள் சுவரிலோ போர்டிலோ இன்னாருக்கும் இன்னாருக்கும் லவ்வு எனக் காவியம் படைக்கும் கிறுக்குப்பயல்கள் ஊர் அது. ஸ்வர்ணலக்ஷ்மியோ முழுக்க முழுக்க ஸ்நேகம் ததும்பி நின்றாள். எல்லோருக்கும் ஒரு சிரிப்பு... ஒரு தொடுகை... ! பையன்கள் அவ்வப்போது லீவ்லெட்டர் கொடுப்பதற்காகவே ஸ்டாக் வைத்திருக்கும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தலைவலி இன்னபிற வியாதிகள் எல்லாம் ஸ்வர்ணலக்ஷ்மி வந்தபின் மாயமாய்ப் போயின... தேவதைகள் சொஸ்தப்படுத்துவதற்காகவே அவதரிக்கின்றனர் போலும்!<br /><br />ஏகப்பட்ட பையன்கள் தப்பும் தவறுமாய் காதல்கடுதாசிகளை விதம்விதமாக எழுதிக்குவிக்க ரெண்டுகுயர், மூணுகுயர் நோட்டெல்லாம் இளைத்துத் துரும்பாய்ப்போன கொடுமையெல்லாம் நடந்தேறின. பனிரெண்டாவதுக்கு கெமிஸ்ட்ரி வகுப்பெடுக்கும் பாலமுருகன் வாத்தியாரும் கைநோக லெட்டர் எழுதியதாகச் செவிவழிச் செய்திகள் உண்டு! எல்லாக் கடுதாசிகளையும் சின்னப்புன்னகையாலும் "சேச்சே! நான் உன்ன லவ்வெல்லாம் பண்ணலடா" என்று ஒற்றைவாசகத்துடனும் எளிதாகக் கடந்து கொண்டிருந்தாள் ஸ்வர்ணா. 'சிரிச்சி சிரிச்சி பேசறா... அப்புறம் ஏன் லவ்வு பண்ணலங்கிறா?' என்ற கேள்வி, ஒதுக்கி வீசப்பட்ட பாடப்புத்தகங்களைக் கரையான் அரிப்பதுபோல ஒவ்வொருத்தனையும் அரித்துத் தின்றது. காதல் துளிர்க்கப்பெற்றவர்களும், காதல் மறுக்கப்பட்டவர்களுமாக ஏகப்பட்ட புதுக்கவிஞர்கள் பிறப்பெடுத்தனர். மொத்தத்தில் "எங்கெங்கு காணினும் ஸ்வர்ணாவடா" என்றாகிப்போனது.<br /><br />ஒண்ணாங்கிளாசிலிருந்து கூடப்படிக்கும் பெண்களிடம் பேசியறியாத ரகுநாதனுக்கு ஸ்வர்ணா அவனிடம் வந்து எது பேசினாலும் ஏதோ மந்திர உச்சாடனம்போல இருந்தது. "ஹோம் வொர்க் முடிச்சிட்டியாடா?" என்று கேட்டால்கூட மிதத்தல், பறத்தல் போன்ற அதிமானிட வேலைகளெல்லாம் செய்ய ஆரம்பித்தான். ஒன்றரை குயர் நோட்டு முழுக்க "அன்பே ஸ்வர்ணா!ஆருயிர் செய்யுதடி உன்னால் தர்ணா" என்று ஆனாவுக்கு ஆவன்னா, ணாவன்னாவுக்கு ணாவன்னா எல்லாம் போட்டு படுஜோராகக் கவிதை எல்லாம் எழுதத்தான் செய்தான். ஆனால் ஸ்வர்ணாவிடம் பேசித் தொலையும்போது மட்டும் நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டு சதிவேலை செய்யும். நாலு பசங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து கதைபேசத் தொடங்கினால் ஸ்வர்ணாவுக்கு என்ன பிடிக்கும், ஸ்வர்ணா நாளைக்கு என்ன ட்ரெஸ்ஸில் வருவாள், ஸ்வர்ணாவின் அண்ணன் ஏன் இவ்வளவு தடியாக ராட்சசன் மாதிரி இருக்கிறான் என்பது போன்ற விவரங்கள் அலசி ஆராயப்பட்டன.<br /><br />ஸ்வர்ணாவுக்கு மொத்த ஸ்கூலுமே தன்னைச் சுற்றி இயங்கி வருவதெல்லாம் ஒரு விஷயமாகத் தோன்றவே இல்லை. வந்தாள்... சிரித்தாள்.. பேசினாள்..சிரித்தாள்.. படித்தாள்..சிரித்தாள்..ஹோம்வொர்க் செய்தாள்..சிரித்தாள்...ஹோம்வொர்க் செய்யாமல் திட்டு வாங்கினாள்..சிரித்தாள்.. இன்னும் தாள்..தாள்..தாள்! அழகான பெண்களுக்கு அறிவு என்பது ஆட்டுக்கு வால்போல என்ற தொன்மொழிகளெல்லாம் ஸ்வர்ணாவுக்கு செல்லுபடியாகாது. ஹெட்மாஸ்டர் பஞ்சாபகேச அய்யருக்கு ஸ்வர்ணா என்றாலே ஒரே பூரிப்புதான். ப்ராக்ரஸ் ரிப்போர்ட் பார்த்து வயிறெரிந்தவர்கள் சுதந்திரதினக் கலை நிகழ்ச்சிகளில் பாரதமாதா வேஷம் கட்டியபோது குளிர்ந்துபோனார்கள். "பாரதி கனவில் வந்த" கவிதையைப் படித்தபோது தமிழ்வாத்தியார் வாயில் எத்தனை பல் சொத்தைப்பல்லென்ற நெடுநாள் சந்தேகம் தீர்ந்துபோனது.<br /><br />இப்படியான பிரக்யாதிகள் கொண்ட ஸ்வர்ணா ரகுநாதனையும் நண்பனாக ஏற்றுக்கொண்டதற்கு பாட்டன் முப்பாட்டன் உள்ளிட்ட பரம்பரையே பூர்வஜென்ம புண்ணியங்கள் செய்திருப்பதாகக் கருதிக் கொண்டான் ரகுநாதன். ஒருவழியாகப் ப்ளஸ்டூ பரிட்சை முடிவுகளும் வெளிவந்து மார்க் ஷீட்டும், கையுமாக "போயிட்டு வரேண்டா" என்று சொல்லி ஸ்வர்ணா விடைபெற்றபோது "ராசாத்தீ... ஏம் உசிரு என்னதில்ல..." என்று பக்கத்து ஆடியோகேசட் கடையிலிருந்து ஷாகுல் ஹமீது உருகிக் கொண்டிருந்தார்.<br /><br />"வெளங்காமுட்டி பய.. ஒழுங்கா படிடான்னு கழுதமாரி கத்தியும்.... பாருடி ஒம்புள்ளையை! தொள்ளாயிரத்தி அம்பது மார்க்கோட பேந்தப் பேந்த முழிச்சிட்டு இருக்கு. எம்மவன் டாக்டருக்கு படிக்கப்போறான்னு நானும் ஊரெல்லாம் பீத்திக்கிட்டு வந்ததுக்கு இதான் லட்சணம்..."<br />கத்திக் கொண்டிருந்த அப்பாவுக்குத் தெரியுமா ஸ்வர்ணா சிரிப்பால் களவாண்டு போன மார்க்குகள் ஒரு நூத்தம்பது இருக்குமென்று? அவரவர் பாடு அவரவர்க்கு... அவரவர் கவலை அவரவர்க்கு.<br /><br />காலம் ரகுநாதன் கையில் ஒரு எஞ்சினியரிங் பட்டத்தையும், அவன் தகப்பனாருக்கு நான்குலட்சம் கடனையும் பரிசாகத் தந்ததும், இடையில் அவனது வாழ்க்கையில் சுமார் மூன்று ஒருதலைக் காதல்களும் இரண்டு இருதலைக் காதல்களும் கடந்துபோனதும், ஒவ்வொரு காதல் கடந்து போகும்போதும் ஸ்வர்ணாவின் முகம் மின்னிப் போனதும், முப்பதாயிரம் மாதவருமானமும் முன்னந்தலை வழுக்கையுமாக முதிர்கண்ணனாகி நின்ற ரகுநாதனுக்கு கல்யாண மார்க்கெட்டில் நல்ல விலைபடிய பேரம் பேசப் பட்டுக் கொண்டிருப்பதுமாக சுமார் ஒரு மாமாங்கம் ஃப்ளாஷ்பேக்கை விரித்துச் சொன்னால் கோடிபெறும்.<br /><br />என்றாவது ஒருநாள் கிங்ஃபிஷர் ஸ்ட்ராங்கும், பழங்கதைகளும், கொசுவர்த்திக் கொளுத்தல்களுமாகக் கூடிக்கலையும் நண்பர்குழாத்தின் பேச்சுக்களின் இறுதிப்புள்ளி சுற்றிச்சுற்றி ஸ்வர்ணாவில் வந்துநின்று சின்ன மௌனத்துடனும் பெருமூச்சுடனும் முடிவுபெறுவதும் வாடிக்கை. அப்படித்தான் ஒருநாள் அந்த அரிய பெரிய தகவலைக் கண்டுபிடித்து வந்து சொன்னான் ஆரம்பப்பள்ளி ஆசிரியனாகக் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் தங்கபாண்டியன்... "டேய் ஸ்வர்ணா ஊருக்குப் போயிருந்தேன். அவ தஞ்சாவூர்ல பிஎஸ்ஸி படிச்சிட்டு இருந்தப்பவே ஒரு பையனோட லவ்வாம்... ஃபைனல் இயர்ல பிரச்சினையாகி அந்தப் பையனோட ஓடிப்போயிட்டா. இப்போ அவ கோயம்புத்தூர்லதான் இருக்காளாம். புருஷன் ஆடிட்டரா இருக்கார்போல. நல்லா செட்டிலாயிட்டா. ரெண்டு குழந்தைங்க பொறந்தப்புறம் வீட்டுலயும் ராசியாயிட்டாங்களாம். அவளும் எம்பிஏ முடிச்சிருக்காளாம்" என்றபோது அரிஸ்டாட்டில் 'யுரேகா' சொல்லி ஓடிக் கொண்டிருந்தபோது அடைந்திருந்த உணர்ச்சிகளை அவன் முகத்தில் காண முடிந்தது. அப்போது முடிவு செய்தான் ரகுநாதன் எப்படியாவது ஒருதடவை ஸ்வர்ணாவைப் பார்த்துவிட்டு வந்துவிடுவதென்று.<br /><br />ஒருவழியாக ஸ்வர்ணாவின் கோயம்புத்தூர் முகவரியைக் கண்டுபிடித்து ஒரு சுபமுகூர்த்த சுபநாளில் கோயமுத்தூருக்கு ஆம்னி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்ததுதான் ஆரம்ப பாராக்களுக்கு அடிப்படை. ஒருவழியாக சிங்காநல்லூரில் இறங்கி அட்ரஸ் விசாரித்துக்கொண்டு காலிங்பெல்லை அழுத்திவிட்டுக் காத்திருந்தபோது பத்து விநாடிகளுக்குள் பதினைந்துமுறை வியர்த்திருத்தான்.<br /><br />"யாரு" என்றபடியே கதவைத் திறந்த ஸ்வர்ணா லேசாகப் பூசினாற்போல இருந்தாள். ஆடிமாசக்காவேரிபோல் அலைபாய்ந்திருந்த கண்களில் மார்கழிமாச அகண்டகாவேரிபோல அமைதியும் ஆழமும் நிறந்திருந்தன. அதே ஸ்வர்ணா! இன்னும் ஸௌந்தர்யமாக...<br /><br />"நீங்க...நீ... ஹேய் ரகுதான! என்னடாது? வானத்துலருந்து குதிச்சமாதிரி திடீர்னு வந்து நிக்கிறே?" ஆச்சர்யமாக வரவேற்றாள்.<br /><br />"சும்மாதான்பா. கோயமுத்தூருக்கு வேலையா வந்தேன். பசங்ககிட்ட பேசிட்டு இருந்தப்போ நீ இங்கதான் இருக்கிறதா சொன்னாங்க. அதான் அப்பிடியே உன்னைப் பாத்திட்டு போகலாம்னு.."<br /><br />அதே சிரிப்பு! "தாங்க்ஸ்டா! ஸ்கூலுக்கு அப்புறம் நம்ம க்ளாஸ்மேட் யாரையுமே பாக்கலை. மொதமொதல்ல உன்னைத்தான் பாக்குறேன்"<br /><br />பேசினாள்..சிரித்தாள்..பேசினாள்..சிரித்தாள்...புருஷன் பற்றி... குட்டி ஸ்வர்ணா பற்றி... சாகசங்கள் நிறைந்த அவளது காதல்கதை பற்றி... எப்போது பார்த்தாலும் இங்கிலீஷில் பீட்டர் விடும் ஃபிஸிக்ஸ் வாத்தியார் பற்றி... காதலித்தே ஆகவேண்டும் என்று கெஞ்சி காலில் விழுந்த பனிரெண்டாம் வகுப்பு குமாரசாமி பற்றி.. இன்னும் ஏதேதோ.<br /><br />புருஷனுக்கு ஃபோன் பண்ணி அவனிடம் கொடுத்தாள். ஸ்வர்ணாவிடம் இருந்து சிரிப்பையும், வழியும் அன்பையும் கடன்வாங்கியனைப்போலவே அவரும் பேசினார். ஹ்ம்ம்.. கொடுத்து வைத்த மனிதன்! மதியம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அவள் புருஷன் சொல்ல, அவனும் தலையாட்டினான். சாப்பாடு முடிந்து "நான் கெளம்பறேன் ஸ்வர்ணா! நேரமாச்சு" என்று எழுந்தவனிடம் "இருடா! கொஞ்சநேரம் பேசிட்டுப் போ! அவருக்கு ஆஸ்திரேலியா விசா அப்ரூவ் ஆயிடிச்சு. அடுத்தமாசம் ஃபேமிலியோட கெளம்பிடுவோம். ஆமா உனக்கு எப்படா கல்யாணம்?" என்றாள்.<br /><br />"பார்த்துகிட்டு இருக்காங்க ஸ்வர்ணா. கூடிய சீக்கிரம் ஆயிடும்னு நினைக்கிறேன்" என்றபடி இன்னும் அரைமணிநேரம் ஓடிப்போனது. ரகுநாதன் ஸ்வர்ணாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.<br /><br />கதவைத் திறக்குமுன் "ரகு... ஒரு நிமிஷம்" என்ற ஸ்வர்ணா லேசாக அவன் முன்னுச்சி மயிரைக் கலைந்திட்டு அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டுச் சொன்னாள்.<br /><br />"நீ என்னை லவ் பண்ணேனு எனக்கு தெரியும்டா. உன்னோட காதலுக்கு இதான் என்னோட கிஃப்ட். சரி போயிட்டு வாடா. ஆஸ்திரேலியா போறதுக்கு முன்னாடி ஃபோன் பண்றேன். மறக்காம ஏர்போர்ட் வந்திடு" என்று கதவைத் திறந்தாள்.<br /><br />வெளியேவந்து ஆட்டோ பிடித்து ரயில்நிலையம் வந்து சீட் சரிபார்த்து அமர்ந்த ரகுநாதனுக்கு ஏனோ கொஞ்சம் அழவேண்டும் போலத் தோன்றியது... கவிதை எழுத வேண்டும் போலவும்...</span></div>
vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-41025720437191415122012-01-31T15:53:00.000+05:302012-01-31T15:53:16.614+05:30லவ்வு கவுஜ..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTgjEH-oGOTQdWTkiKAmmuSQykrDkzoh3kvTrMRGJOD1SOsn854XieEO8dsRZug-vHFwSqlQxBnRqPAMWbBS4k7FvjgMGgl4sPaRl1m3Vx2NGHo3q3twHMXMD2yu8noDMBIm9YhXyjbUM/s1600/True_Romance_by_chevvy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTgjEH-oGOTQdWTkiKAmmuSQykrDkzoh3kvTrMRGJOD1SOsn854XieEO8dsRZug-vHFwSqlQxBnRqPAMWbBS4k7FvjgMGgl4sPaRl1m3Vx2NGHo3q3twHMXMD2yu8noDMBIm9YhXyjbUM/s400/True_Romance_by_chevvy.jpg" width="285" /></a></div><div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;">விமலா கமலா</div><div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;">அமலா சுமலா</div><div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;">எல்லோருமே அழகிகள்தான்</div><div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;">எவளைக் காதலிக்கலாமென்று</div><div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;">யோசித்துக் கொண்டிருந்தவேளை</div><div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;">விமலா கெமிஸ்ட்ரி வாத்தியாரோடும்</div><div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;">கமலா கண்கள் கருவாயன் மேலும்</div><div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;">அமலா மட்டும் அப்பாசொல்படி</div><div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;">அம்மி மிதிக்க</div><div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;">சுமலாவிடம் கேட்டேன்</div><div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;">"சும்மா லவ் பண்ணலாமா?"</div><div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;">சுமலா சொன்னாள்</div><div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;">"டூ லேட். டு லெட் போர்டு கழற்றி</div><div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;">நாலு நாளாச்சு"</div></div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-47023093220788657562012-01-01T11:40:00.001+05:302012-01-02T00:22:36.991+05:30மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் 4<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
ரொம்ப காலமாச்சுது என் ப்ளாக்கைத் தொறந்து. கூகிள் பஸ்ல டெண்டடிச்ச பொறவு ப்ளாக் பக்கம் வரவே மனசு தோணலை. கூகிள் பஸ் ஒரு குறும்புக் குழந்தை. சிலீர்னு சிரிக்கும்.. அப்பிடியே அசந்த நேரம் பாத்து வெரலைக் கடிச்சி வைக்கும்.. தோணிச்சின்னா நம்ம மேல ஒண்ணுக்கடிக்கவும் செய்யும். துறுதுறுன்னு ஓடியாடி எல்லாத்தையும் கலைச்சிப் போட்டுக் கெறங்கடிக்கும். அது ஒரு அனுபவம்டா சாமீ! திடீர்னு ஒரு நாளு குழந்தை திடீர்னு காணாமப் போயிடிச்சி. அழுவுற புள்ள வாயில குச்சிமுட்டாய சொருவுற மாதிரி கூகிள் ப்ளஸ்னு ஒன்னைச் சொருவிட்டானுங்க கூகிள் காரனுங்க. அப்டியே ஒரு மாதிரி சமாளிச்சி அட்ஜஸ்ட் பண்ணி ப்ளஸ்லயும் ஓட ஆரமிச்சாச்சின்னு வைங்களேன். நேத்திக்கு ஏதோ தேடப்போயி நம்ம பபாஷா ப்ளாக் பக்கம் மேய்ஞ்சிட்டு இருந்தப்ப "மூன்றாவது பெர்த்- உமா சீரிஸ் 3" ரிலே ரேஸ் கதை கண்ணுக்குப் பட்டிச்சி. ரெண்டு மூணு மாசம் முன்னாடி இருக்கும்னு நினைக்கிறேன். மணிஜியோட ஃபேவரைட் உமாவை வெச்சி ஒரு ரிலே ரேஸ் தொடர்கதை எழுதலாமேன்னு மணிஜி ஒரு ஸ்பார்க்கைக் கெளப்ப விதூஷ் தூபம் போட, விதூஷ், மணிஜி, பபாஷா, நேசமித்திரன், நம்ம பாரா சித்தப்பூ, மனசை அள்ளுறா மாதிரி கவிமழை பொழியிற லதாமகன், அப்புறம் நானு எல்லாருமா இந்த ரிலே ரேஸ் தொடரை எழுதலாம்னு ஒரு பேச்சி. நான் அப்டியே மறந்து தொலைச்சிட்டேன். மப்புல பேசுறது எது நம்மளுக்கு ஞாவகம் இருக்கு. இப்பப் பாத்தா அப்டியே ஆடி மாசக்காவேரி மாதிரி அலை அலையா பொரளுற கூந்தலை அசால்ட்டா ஒத்தக்கையால ஒதுக்கிக்கிட்டு அச்சு அசலா முன்னாடி வந்து நிக்கிறா உமா. "சம்முவம்..எட்றா வண்டிய"ன்னு நானும் களத்துல குதிச்சிட்டேன். இதோ "மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் 4".<br />
<br />
மொதோ மூணு பார்ட்டும் படிக்க அப்டியே இங்கிட்டு போங்க..<br />
<br />
விதூஷ் : <a href="http://vidhoosh.blogspot.com/2011/10/blog-post_29.html" target="_blank">மூன்றாவது பர்த் (உமா சீரிஸ் - ரிலே ரேஸ் கதை) </a><br />
<br />
மணிஜி: <a href="http://www.thandora.in/2011/10/2.html" target="_blank">மூன்றாவது பர்த் ...உமா சீரிஸ் -2 </a><br />
<br />
பலாபட்டறை ஷங்கர்: <a href="http://palaapattarai.blogspot.com/2011/10/3.html" target="_blank">மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3. </a><br />
<br />
***********************************************************************************<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-trnDlJE_dqk/Tv_4kw7W1QI/AAAAAAAAAc4/uNGAtaLwyvU/s1600/In_the_train_by_DoctorChe.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-trnDlJE_dqk/Tv_4kw7W1QI/AAAAAAAAAc4/uNGAtaLwyvU/s400/In_the_train_by_DoctorChe.jpg" width="400" /></a></div><br />
<br />
<br />
..."ரகுநாதன்" என்றான் ஸ்வீட்டாக!<br />
<br />
பெண்களிடம், அதுவும் என்னை மாதிரி அழகான பெண்களிடம் பேசும்போது மட்டும் ஆணின் குரல் அபாரக் குழைவைப் பெற்றுவிடுவது எனக்கு எப்போதும் ஆச்சர்யம்தான். அபூர்வமாக, குரலில் வேண்டுமென்றே கொஞ்சம் கடுமையை ஏற்றிக்கொண்டு பேசும் ஆண்கள்கூட 'தப்பித்துக் கொள்ளும்' மனோபாவத்தில் பேசுவதாக எனக்குத் தோன்றுவது அங்குமிங்கும் நான் அரைகுறையாகப் படித்த ஃப்ராய்டின் பாதிப்பால்கூட இருக்கலாம். எனக்கு மீண்டும் இந்த ரிலே ரேஸ் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தில் மணிஜி குறிப்பிட்ட "கன்னியர் தம் கடைக்கண்ணை காட்டி விட்டால் காளையருக்கு மாமலையும் சிறு கடுகாம் “ வரி ஓடத் துவங்கியது. முதல் அத்தியாயத்தைத் தொடங்கி என்னை மீண்டும் 'லைம்லைட்'டுக்குக் கொண்டுவந்த விதூஷுக்கு வேறு உடம்பு சரியில்லையாம். சென்னை போய் இறங்கிய பின் ஒரு தடவை நேரில் சென்று நலம் விசாரித்துவர வேண்டும்.<br />
<br />
இப்போது முழுசாக அவனை நோட்டம் விட்டேன். ஆள் ஜம்மென்றுதான் இருக்கிறான். முகத்தில் ஒரு 'ஃப்ரீக் அவுட் பாய்'க்கான குறும்பும், தன்னம்பிக்கையானவன் என்பதற்கான வெளிச்சமும் சரிசமமாகப் பரவி இருந்தது. பெரும்பாலான பெண்களுக்கு இந்த மாதிரி மிக்ஸிங்கில் இருக்கும் ஆண்களை மிகவும் பிடித்துவிடும் இல்லையா? எனக்கும்தான்! அச்சச்சோ.. நீங்கள் விபரீதமாக எதையும் கற்பனை செய்து தொலைத்து விடாதீர்கள்.. நீங்கள் நினைப்பதுபோல இல்லை. அவ்வப்போது என்னைப் பார்த்து ஏதோ யோசிக்கிறான் போல!<br />
<br />
வழக்கமாக என்ன யோசிப்பார்கள்?<br />
<br />
"அழகான பெண்களுக்கு வாய்க்கும் புருஷன்மார்களெல்லாம் முன்வழுக்கையோடும், சரிந்த தொந்தியோடும் இருப்பார்கள்" என்றுதான் யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன். புருஷன் இடத்தில் தன்னை ரீப்ளேஸ் செய்துகொள்ளும் தற்காலிக சந்தோஷம்! அவ்வளவு ஈஸியா என்ன ஒரு பெண்ணை விழவைப்பது? ச்சை! ரொம்பவும்தான் ஃப்ராய்டுத்தனமாக யோசிக்கிறேன்.<br />
<br />
"என்னங்க.. பேரைக் கேட்டீங்க, அப்டியே யோசனையில ஆழ்ந்துட்டீங்க போல! என் பேருல ஏதாச்சும் விசேஷம் இருக்குதா என்ன?"<br />
<br />
தூண்டில்!தூண்டில்!!<br />
<br />
"இல்லைங்க ரகு! சும்மாதான்!"<br />
<br />
ரகு.. ரகு.. பேரைச் சுருக்கிக் கூப்பிட்டாச்சு..செத்தான் இனி!<br />
<br />
"தாங்க்ஸ்ங்க" என்றான்.<br />
<br />
"எதுக்கு?"<br />
<br />
"ரகுன்னு ஷார்ட்டா கூப்டதுக்கு" என்று சிரித்தான். ரோஸ் நிறத்தில்.. பளீரென்று...இன்னும் சிகரெட்டால் கற்பழிக்கப்படாத ஆரோக்கிய ஈறுகள்... கிள்ளலாம் போல!<br />
<br />
"யூ ஆர் சச் அன் இண்ட்ரஸ்ட்டிங் கோ பேஸஞ்சர் ரகு"<br />
<br />
மீண்டும் சிரித்தான்.<br />
<br />
ரமணனின் ட்ரேட் மார்க் சிரிப்பு!<br />
<br />
பாவி..ரமணா! இத்தனை வருஷங்கள் ஓடிய பிறகும்.. நொடிக்கு நொடி.. பாரதிக்கு நந்தலாலா.. எனக்கு ரமணன்<br />
<div style="text-align: center;"><br />
</div><div style="text-align: left;"> "கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்</div><div style="text-align: left;"> கீதம் இசைக்குதடா நந்தலாலா"</div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><br />
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/a2SsarLBmrw?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
<div style="text-align: center;"><i><span style="font-size: x-small;"> [ காக்கைச் சிறகினிலே - துள்ளாத மனமும் துள்ளும்]</span></i></div><br />
லேசாகப் பொங்கித் தளும்பி சின்னக் கோடாய்க் கன்னம் வழியே கீழிறங்கியது.<br />
<br />
"ஹலோ! என்னாச்சுங்க... திடீர்னு?"<br />
<br />
ரகுவின் குரல் மீண்டும் ட்ரெய்னுக்குள் இழுத்து வந்தது.<br />
<br />
"நத்திங் ரகு. திடீர்னு என்னென்னமோ ஞாபகம். ஸாரி..வெரி ஸாரி"<br />
<br />
ஜன்னல் கம்பிகளில் கன்னத்தைச் சாய்த்து ஒரு கையை முட்டுக்கொடுத்தபடி பார்வையை வெளியே மாற்றினேன். அசுரவேகத்தில் ரிவர்ஸில் ஓடிக் கொண்டிருந்த வெளிச்சப்புள்ளிகள்.. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ரமணன். "“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்” என்ற ரமணன்... " தமிழால் மட்டும் இல்லையடி பெண்ணே.. உன்னாலும்தான்" என்று குறும்பாய்ச் சிரித்த ரமணன்... கம்பனையும் ஷெல்லியையும் காதலிக்கக் கற்றுத்தந்த ரமணன்... ஃப்ராய்டு,நீட்ஷே, சார்த்தர், நெரூதா என்று ஜன்னல்களை விரியத் திறந்த ரமணன்...<br />
<br />
களிமண்ணாய் இருந்த உமாவைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய ரமணன்...<br />
<br />
மூளைச் சிதறல்கள் சுற்றிலும் தெறித்துக் கிடக்க வெறித்துப்போன விழிகளுடன் மல்லாந்து கிடந்த என் ரமணன்...<br />
<br />
எனக்கு அழவேண்டும் போல இருந்தது.<br />
<br />
மெல்ல எழுந்து நடந்து பாத்ரூமை நெருங்கி, உள்நுழைந்து தாழ்ப்பாளிட்டேன்.<br />
<br />
ஒரு பாட்டம் அழுதுதீர்த்து, முகம் கழுவித் துடைத்துக்கொண்டு பாத்ரூம் கதவைத் திறந்து வெளியே வந்தேன்.<br />
<br />
அங்கே... அங்கே...<br />
<br />
<br />
டிஸ்கி: இந்த ரிலே ரேஸ் கதையின் அடுத்த பாகத்தைத் தொடர கூகிள் பஸ், ப்ளஸின் டான் அண்ணன் ராமச்சந்திரன் கிருஷ்ணமூர்த்தி முன் வந்திருக்கிறார். மேலும் பாரா சித்தப்பூ, நேசன், லதாமகன் ஆகியோரையும் அழைக்கிறேன்</div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-64615781682285019952011-07-23T16:29:00.001+05:302011-07-23T16:29:57.062+05:30தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். பகுதி-2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUtJrljIXyyMNXYdZ-luSdOkj0x3FwuqY7Yfkz3wKRhLFS2q98_-owy2hMXq9Ke8DsCmTVAr8SBdmkWsQXpndBfiJZVBmXqBKjF8VC9jYR-wdGE2m2oxJNfJWDCwDA2nS6rwSWdxP97Qo/s1600/arivu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="248" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUtJrljIXyyMNXYdZ-luSdOkj0x3FwuqY7Yfkz3wKRhLFS2q98_-owy2hMXq9Ke8DsCmTVAr8SBdmkWsQXpndBfiJZVBmXqBKjF8VC9jYR-wdGE2m2oxJNfJWDCwDA2nS6rwSWdxP97Qo/s400/arivu.jpg" width="400" /></a></div><br />
<br />
எந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று முதன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல்கிறாரோ, அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் என்பதாக என்மீது பொய்யான பிரச்சாரத்தை இதே மத்தியப் புலனாய்வுத் துறையினர்தான் 1991ஆம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டபோதுஏடுகள் வாயிலாகப் பரப்பினர்.அந்த கொடூரமான குற்றச்சாட்டு அடங்கிய 'இந்தியா டுடே' தமிழ்வார இதழை இணைத்துள்ளேன். தயைகூர்ந்து முழுமையாக வாசித்துப் பாருங்கள்.<br />
<br />
என்னை விசாரணைக்கென அழைத்துச் சென்ற முதல்நாளே சிறப்புப் புலனாய்வுத் துறையின் (SIT) அலுவலகம் அமைந்திருந்த 'மல்லிகை' கட்டிடத்தின் முதல்மாடியில் இருந்த டி.ஐ.ஜி (DIG) இராஜூ அவர்கள் முன்பு நிறுத்தப்பட்டபோது அவர் எனது படிப்பு பற்றி விசாரிக்கிறார். நான் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டயப் படிப்பு (DECE) படித்தவன் என்றபோது அவர் கேட்டார் "நீதான் குண்டு தயாரித்துத் தந்தவனா?" - இதை முன்பே எனது முறையீட்டுமடலில் குறிப்பிட்டிருக்கிறேன். இதையே அன்று ஏடுகள் மூலம் பிரச்சாரம் செய்தனர். அதன் ஒரு உதாரணமே மேற்சொன்ன 'இந்தியா டிடே'.<br />
<br />
எனது பெற்றோர் கல்வி ஒன்றே பெரும் சொத்தெனக் கருதி என்னைப் படிக்க வைத்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கிணங்கவே உண்மையான ஈடுபாட்டுடன் படித்தேன். அதன் காரணமாகவே நல்ல மாணவன் என்ற பெயருடன் எனது 10ஆம் வகுப்பையும் மின்னணுவியல் (DECE) படிப்பையும் நிறைவு செய்தேன்.<br />
<br />
எனது ஆசிரியர்கள் எனக்கு வாழ்க்கைப்பாடம் சொல்லித்தந்தனரே தவிர குண்டு செய்வதற்குச் சொல்லித்தரவில்லை. எனது பெற்றோரின் உழைப்பாலும், எனது உழைப்பாலும் நான் பெற்ற கல்வி எனக்கும் என் குடும்பத்தார்க்கும் பயன்பட்டதோ இல்லையோ புலனாய்வுத்துறையினருக்கு இவ்வழக்கில் என்னைப் பொய்யாகப் பிணைத்து தூக்குமேடையில் நிறுத்தப் பயன்பட்டது என்றுதான் சொல்வேன்.<br />
<br />
எந்த 'இந்தியா டுடே' மூலம் என்னை வெடிகுண்டு நிபுணர் என1991ல் பொய்ப்பிரச்சாரம் செய்தனரோ, அதே ஏடு, 1996ஆம் ஆண்டு 'துப்பில் துவாரங்கள்' எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரை தீட்டியது. அக்கட்டுரை புலனாய்வுத்துறையினர் (CBI, SIT) செய்துள்ள பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது, 'வெடிகுண்டு குறித்தும் எந்தப் புலனாய்வும் செய்யப்படவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளது.<br />
<br />
புலனாய்வுத்துறையினரின் விசாரணையை விமர்சனம் செய்யும் வகையில் அமைந்த அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக 'இந்தியா டுடே' இதழ்மீது அன்று சிறப்பு நீதிமன்றத்தில் புலனாய்வுத்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர் என்பதைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.<br />
<br />
அவ்வாறு 'குண்டு நிபுணராக' முதலில் சித்தரிக்கப் பயன்படுத்தப்பட்ட எனது கல்வி, இறுதியில் பெட்டிக் கடையிலும் மிகச்சாதாரணமாகக் கிடைக்கும் அன்றாட வாழ்வில் பயன்படும் 9 வோல்ட் மின்கலம் (பேட்டரி செல்) வாங்கித் தந்தேன் என்பதான குற்றச்சாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டது.<br />
<br />
இந்நிலையில் நான் எத்தனை தூரம் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை இது தொடர்பான ஆதாரங்களை முன்வைப்பதன் மூலம் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.<br />
<br />
எனது வழக்கு முழுக்க முழுக்க தடா ஒப்புதல் வாக்குமூலங்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்புக் கூறப்பட்டது. இது குறித்துத் தீர்ப்புரை பக்கம் - 2660 பத்தி (Para) 80இல், கீழ்க்கண்டவாறு உள்ளது.<br />
<br />
80.மேற்கூறிய முக்கிய சர்ச்சையில் முடிவு காண்பதற்கு, ரசு தரப்பானது மேல்முறையீட்டாளர்கள் பலரும் அளித்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலங்களையே நம்பியுள்ளது.இந்த வாக்குமூலங்கள் தடாச்சட்டத்தின் பிரிவு 15-ன் படி பதிவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.<br />
<br />
என்றும், பக்கம்: 2843 பத்தி 658 இல் கீழ்க்கண்டவாறும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.<br />
<br />
658. திரு.ராஜீவ்காந்தியைக் கொலை செய்யச் சதி புரிந்த குற்றச்சாட்டை நிறுவுவதற்கு எதிரிகள் அளித்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையே முக்கியமாக நம்பியுள்ளனர்; இந்த வாக்குமூலங்கள் தடாச் சட்டத்தின் 15(1) பிரிவின்படி பதிவு செய்யப்பட்டவையாகும்.<br />
<br />
ஆகையால் தடா ஒப்புதல் வாக்குமூலமே முதன்மை ஆதாரமாக(Substantive Evidence)க் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.<br />
<br />
இத்'தடா' வாக்குமூலங்களை நிரூபிக்கத் துணை ஆதாரங்களாகவே (Corroborative Evidence) மற்றவை பயன்படுத்தப்பட்டன. நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேற்சொன்ன கருத்தின் அடிப்படையிலேயே என் வாதத்தை முன்வைக்கிறேன்.<br />
<br />
1.9 வோல்ட் மின்கலம் குறித்து எனது ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லப்படுவதில் உள்ள வாசகங்களை அப்படியே தர விரும்புகின்றேன்.<br />
<br />
"மேலும் நான் 9 வோல்ட் மின்கலம் இரண்டு (Golden Power) வாங்கி சிவராசனிடம் கொடுத்தேன். இவைகளைத்தான் அவர் குண்டு வெடிக்கச் செய்யப் பயன்படுத்தினர்.<br />
<br />
இவ்வழக்கில் 9 வோல்ட் மின்கலம் சம்பந்தமாக விசாரிக்கப்பட்ட சாட்சிகள் .அ.சா 91 மொய்தீன், அ.சா 252 சீனிவாசன், அ.சா. 257 மேஜர் சபர்வாள், அ.சா 280 சந்திரசேகரன் ஆகியோர் ஆகும். இவர்களில் அ.சா252, அ.சா 257, அ.சா 280 ஆகியோர் தடயவியல் நிபுணர்கள். அவர்கள் சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 9 வோல்ட் மின்கலம் பற்றி நிபுணத்துவக் கருத்து (Expert Opinion) மட்டுமே அளித்துள்ளனர். எனவே அவர்களுடைய சாட்சியம் எனது வழக்கை எவ்வகையிலும் பாதிக்கவில்லை.<br />
<br />
அ.சா 91 மொய்தீன் என்ற கடை ஊழியரின் சாட்சியம்மட்டுமே என் வழக்கோடு தொடர்புபடுத்தி வருகிறது. அவரது சாட்சியத்தையும், அவரை விசாரித்து வாக்குமூலம் பதிசு செய்ததாகக்கூறும் ஆய்வாளர் அ.சா 266 வெங்கடேசன் சாட்சியத்தின் தொடர்புடைய பகுதியையும் உங்களது பரிசீலனைக்குத் தருகிறேன்.<br />
<br />
இவ்வழக்கில் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட 288 அரசு சாட்சியங்களில், மேற்சொன்ன ஒரே சாட்சியான அ.சா 91 மொய்தீன் நம்பகத்தன்மை குறித்து மட்டுமே உச்சநீதிமன்றத்தில் 25 மனுதாரர்களின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் தனது வாதுரையை எடுத்துரைத்தார் என்பதைத் தங்களது பார்வைக்குத் தருகிறேன்.<br />
<br />
மேற்சொன்ன இரண்டு சாட்சிகளான அ.சா 91, அ.சா 266 ஆகியோரின் சாட்சியத்தைப் படிக்கும்போது தாங்களே உணர்வீர்கள் அ.சா 91 எத்தனை பொய்யான சாட்சியம் என்பதை. முறிப்பாக அ.சா266 கூறுவதுபோல் அ.சா 91 இன் கடையில் மின்கலம் வாங்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் எதையும் நான் கொடுக்கவில்லை என்பதால்தான் அவ்வாறான எந்த வாக்குமூலத்தையும் நீதிமன்றத்தில் புலனாய்வுத்துறையினரால் தாக்கல் செய்ய முடியவில்லை. அதனால்தான் அ.சா 266 தனது முதல்விசாரணை பக்கம் 6இல் 16-08-1991 அன்று நான் வாக்குமூலம் கொடுத்ததாகவும், அவரே மீண்டும் முரண்பாடாக பக்கம் 15இல் 15-08-1991 என்றும் மாற்றி மாற்றிக் கூறுகிறார்.<br />
<br />
2. வழக்கின் மிக முக்கியமான ஆவணமாக, ஆதாரமாக அரசு தரப்பால் காட்டப்படுவதும், உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுவதுமான 7-5-1991 தேதியிட்ட ஒயர்லெஸ் செய்தி (Exh. P-392) குறித்த தீர்ப்புரைகளில் வரும் பகுதிகளைக் கீழே தருகிறேன்.<br />
<br />
முதல் எதிரி நளினி குறித்த வழக்கைப் பற்றி விவாதிக்கும்போது நீதியரசர் வாத்வா, பத்தி. 429, 430 இல் (State of Tamilnadu Vs Nalini and Ors AIR 1999 SC 2640)-<br />
<br />
429. 7-5-1991இல் சிவராசன், சென்னையிலிருந்து இலங்கையில் இருக்கும் பொட்டு அம்மானுக்கு கம்பியில்லாத் தந்தி வழியாக அனுப்பிய ஒரு சங்கேதச்செய்தியை விண்டு பார்த்தபோது பின்வருமாறு உள்ளது: 'அந்தப்பெண் இந்து மாஸ்டர் இல்லத்தில் மூத்த மகள் ஆவாள். நமது நோக்கம் எங்கள் மூவரைத் தவிர யாருக்கும் தெரியாது. அதிகாரத்துக்கு வரப்போகும் கட்சியின் ஆதரவைப் பெறுவதுதான் நோக்கம் என நான் அந்தப் பெண்ணுக்கும் சொல்லி இருக்கிறேன். இங்கு வி.பி.சிங் வருகிறார். நாங்கள் வரவேற்போம். இதேபோல் எல்லாத் தலைவர்களையும் வரவேற்போம்.<br />
<br />
நான் பையப்பைய நெருங்கிக் கொண்டிருக்கிறேன். நமது நோக்கத்தை நான் சொலிவிட்டால், அந்தப்பெண் உறுதியாக நம் பக்கம் நிற்பார் என்பதில் ஐயமில்லை.<br />
<br />
நாங்கள் அப்பெண்ணுடன் நெருங்கிப் பழகி வருகிறோம். எங்களுக்கு முழு மனநிறைவு உள்ளது. நோக்கத்தை அவரிடம் வெளிப்படுத்தலாம். அவரை நம்பலாம் என்று பெண்கள் சொல்கிறார்கள்.<br />
<br />
நான் திரும்பி வந்தால் உங்கள் ஆளாகத் திரும்பி வருவேன். நாம் தூள் வணிகத்தில் வலுவாக இருக்கிறோம்.'<br />
<br />
430. இந்த மூத்த மகள் என்பது நளினி(ஏ1)யைக் குறிக்கும். இந்து மாஸ்டர் முருகனை(ஏ3)க் குறிக்கும்<br />
<br />
...தொடரும்.<br />
</div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-22821099900222129962011-07-21T22:53:00.000+05:302011-07-21T22:53:31.120+05:30தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். பகுதி-1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT8uFjWZHy0i1jN4EXBceqqMO45pLa1Jo9eOEFfaJ45bkYsBQqyRdYEmS1cu7kHEysIdgy776PgDoBs_iu18fPjHa9ixh_2oKSpUIkO-DsU4oqfgHMr1YkMpx2WC12csrFUdydrgyXQB4/s1600/Gandhi+5.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="346" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT8uFjWZHy0i1jN4EXBceqqMO45pLa1Jo9eOEFfaJ45bkYsBQqyRdYEmS1cu7kHEysIdgy776PgDoBs_iu18fPjHa9ixh_2oKSpUIkO-DsU4oqfgHMr1YkMpx2WC12csrFUdydrgyXQB4/s400/Gandhi+5.bmp" width="400" /></a></div><br />
<br />
பதிவுலகம் பக்கம் வந்து நீண்ட காலமாகிவிட்டது. எதையும் தொடர்ந்தாற்போல் சற்றுநேரம் சிந்திக்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்ததே காரணம். வெறுமனே கூகிள் பஸ்ஸில் கும்மியடித்துக் கொண்டிருந்துவிட்டேன். தொடர்ந்தாற்போல ஒரு நல்ல கட்டுரையையோ, கதையையோகூட வாசிக்கும் அளவு மனதை ஒழுங்கு செய்ய இயலவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் மிகவும் வைராக்கியத்துடன் ஒரு புத்தகத்தை வாசித்திருந்தேன். என் மனதில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்திய புத்தகங்களுள் அது முக்கியமான ஒன்று!<br />
<br />
மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தனது வாழ்வின் மிகப்பெரும் பகுதியை சிறைப்பறவையாகவே கழித்துக் கொண்டிருக்கும் பேரறிவாளனின் "தூக்குக்கொட்டடியில் இருந்து ஒரு முறையீட்டு மடல்" என்ற நூல்தான் அது. அதனை தமிழ் இணையவாசிகள் எத்தனைபேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. என்னால் ஒரு பத்துபேர் அந்தப் புத்தகத்தை வாசிக்க நேர்ந்தால், அது என் பாக்கியம் எனக் கருதி அந்த நூலை தட்டச்சு செய்து எனது வலைப்பூவில் ஏற்றுகிறேன். ஒரு சிறு துரும்பாக எனது பணி அமையும் என்று கருதுகிறேன்.<br />
<br />
இந்த நூலுக்கு நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களும், நீதியரசர் எச்.சுரேஷ் அவர்களும் எழுதிய அணிந்துரைகளை இத்தொடரின் கடைசியில் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.<br />
<br />
எனது கருத்துக்கள் போதும். இனி, புத்தகத்துக்குள் நுழையலாம்.<br />
<br />
தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். - அ.ஞா.பேரறிவாளன், மரணதண்டனைச் சிறைவாசி, த.சி.எண். 13906, நடுவண் சிறை, வேலூர்-2.<br />
<br />
மதிப்பிற்குரிய அம்மா/அய்யா! வணக்கம்!<br />
<br />
நான் அ.ஞா.பேரறிவாளன்.ராஜீவ் கொலைவழக்கில் பொய்யாகப் பிணைக்கப்பட்டு மரணதண்டனைச் சிறைவாசியாக அடைக்கப்பட்டுக் கிடப்பவன்.எனது கருணைமனு மேதகு குடியரசுத்தலைவர் அவர்களின் மேலான பரிசீலனையில் இருப்பதால் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டுள்ளவன். 19 வயதுச் சிறுவனாக அடைக்கப்பட்ட நான், 34 வயது நிரம்பிவிட்ட நிலையில் கடந்த 14 1/2 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும், துன்பப்பொருமல்களிலும் காலம் கரைப்பவன். வயதின் முதிர்ச்சியும் உயிர்காப்புப்போரின் அயர்ச்சியும் தந்துவிட்ட மாறாத தழும்புகள் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே புதல்வன் நான்.<br />
<br />
துன்பம் சூழ்ந்த தீவில் நிற்பினும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. தங்களைப்போன்ற மனிதநேய உள்ளங்களின் துணை இருப்பதால், மரணத்தை வெல்வேன் என்ற நம்பிக்கை உண்டு. ஏற்கனவே நான் கைது செய்யப்பட்டதன் பின்னணி, சட்டப்புறம்பான காவல், துன்புறுத்தி ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் பெற்ற முறை, வாக்குமூலம் தொடர்பான முரண்பாடுகள், சிறைத்துன்பங்கள் எனப் பல்வேறு செய்திகளை உள்ளடக்கி, முறையீட்டுமடல் ஒன்றை 1999-2009 ஆண்டுக் காலப்பகுதியில் தங்களுக்கு அனுப்பி இருந்தேன். (இணைப்பு-1)<br />
<br />
அம்மடலோடு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உள்ள முரண்பாடுகள், பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டி ஒரு ஆவணமும் இணைத்திருந்தேன். (இணைப்பு-2) அவற்றில் எனது தரப்பின் நியாயத்தைப் படித்துணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.<br />
<br />
இந்நிலையில் மீண்டும் ஒரு மடல் எழுதக்காரணம், மரணதண்டனைத் துன்பத்தோடு 14 1/2 ஆண்டுகளின் பின்னும் சிறைவாழ்வு நீடிக்கிறதே என்பதால் மட்டுமல்ல. இருவேறு முக்கியத் திருப்பங்கள் ஏற்பட்ட காரணத்தினால் இம்மடல் எழுதுகிறேன்.<br />
<br />
முதலாவது காரணம், மேதகு குடியரசுத் தலைவர் எமக்குக் கருணை காட்டும்படி அரசுக்குப் பரிந்துரைத்த செய்தி அறிந்தபின் கொண்ட நம்பிக்கையும், மகிழ்ச்சியும்.<br />
<br />
மேதகு குடியரசுத்தலைவர் அவர்களின் பரிந்துரையோடு, 1999 ஆம் ஆண்டில் திருமதி சோனியா அவர்கள் எம் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நான் உள்ளிட்ட நால்வருக்கும் தண்டனையை நிறைவேற்றுவதில், தனக்கோ, தனது குடும்பத்தினருக்கோ விருப்பம் இல்லை எனச்சொல்லி, மேதகு குடியரசுத்தலைவர் அவர்களுக்கு எழுதிய மடல், எனது தண்டனையை மாற்றியமைத்துவிடும் என்ற நம்பிக்கையை மேலும் வலுவாக்கியுள்ளது.<br />
<br />
தற்போதைய அரசு திருமதி சோனியா அவர்களின் தலைமையிலான கூட்டணி அரசு என்பதால் அவரது விருப்பத்தைப் பிரதிபலிப்பதாகவும் மனிதநேயக் கண்ணோட்டத்தோடு மேதகு குடியரசுத் தலைவர் எடுத்துள்ள நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் அரசின் பரிந்துரை அமையும் என்ற நம்பிக்கையோடு உள்ளேன்.<br />
<br />
இம்முறையீட்டுமடலுக்கான இரண்டாவது மிக முக்கியக் காரணம், எமது வழக்கில் முன்னாள் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகவும், பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் (MDMA) அதிகாரியாகவும் அங்கம் வகித்து இவ்வாண்டின் (2005) மார்ச் திங்களில் ஓய்வு பெற்றவரான திரு.இரகோத்தமன் அவர்கள் இக்கொலை தொடர்பாக, 'குறுந்தகடு' (CD) ஒன்றை வெளியிட்டு, அது தொடர்பாக ஏடுகளுக்கு வழங்கிய பேட்டியே.<br />
<br />
10-08-2005 தேதியிட்ட 'குமுதம்' வார இதழின் பேட்டியின் இறுதியில் திரு.இரகோத்தமன் சொல்கிறார்-<br />
<br />
"கொலை நடந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் இதுவரை விடை இல்லை" என்கிறார் இரகோத்தமன். அவை "ஸ்ரீபெரும்புதூரிலிருந்து கொலைக்குப் பிறகு சிவராசனும் சுபாவும் ஆட்டோவில் தப்புகிறார்கள். அவர்களுடன் மூன்றாவது நபர் ஒருவரும் பயணிக்கிறார். அவர் யார் என்பது இன்றுவரை தெரியவில்லை.<br />
<br />
மனித வெடிகுண்டு தனு பயன்படுத்திய வெடிகுண்டு பெல்ட்டைத் தயாரித்துக் கொடுத்தது யார் என்பதும் தெரியவில்லை."<br />
<br />
உங்களில் யாருக்காவது தெரியுமா?<br />
<br />
31-07-2005 தேதியிட்ட 'ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழின் பேட்டியில் இறுதிக்கேள்வியும் அவரின் பதிலும்:<br />
<br />
"ராஜீவ் கொலைவழக்கில் கண்டுபிடிக்க முடியாத விஷயம் ஏதாவது உண்டா?"<br />
<br />
"ஒரே ஒரு விஷயம் இருக்கிறது... தனு தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு 'பெல்ட்'டைச் செய்து கொடுத்த நபர் யார்... என்கிற விஷயம்தான்!"<br />
<br />
ஆம். இதுவரை வெளிவராத, கண்டுபிடிக்கவே முடியாமல் உள்ள, பல்நோக்குக் கண்காணிப்புக்குழு (MDMA) விசாரணைக்கான கருப்பொருளாக உள்ள இந்த வெடிகுண்டு பற்றிய ரகசியத்தோடுதான், எனது வாழ்வும் கல்வியும் பொய்யாகப் பிணைக்கப்பட்டு என்னைத் தூக்குக் கயிற்றில் நிறுத்தியிருக்கிறது.<br />
<br />
...தொடரும்<br />
</div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-20980679541680502582011-05-18T02:15:00.001+05:302011-05-18T02:44:54.440+05:30கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட... (வயதுவந்தோர் மட்டும்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHPKNnxeBD9YX1CAx3sKpMobHCmU_8uMoM2EqQr9bb1PXKzL7yzkNaNDeR1lBDSwzflIV4LW08qRJAxfxf2SIJjiCtYFIijnKr-8pxFhk7_332zwfYhaUxkyE4f6eUU84PlZUwpTubHWw/s1600/p2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="375" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHPKNnxeBD9YX1CAx3sKpMobHCmU_8uMoM2EqQr9bb1PXKzL7yzkNaNDeR1lBDSwzflIV4LW08qRJAxfxf2SIJjiCtYFIijnKr-8pxFhk7_332zwfYhaUxkyE4f6eUU84PlZUwpTubHWw/s400/p2.jpg" width="400" /></a></div><br />
இப்பல்லாம் ப்ளாக் பக்கம் எட்டிப் பாக்குறதே இல்ல. முழுநேர கூகிள் பஸ்ஸராயிட்டேன்.அரட்டைக்கு அரட்டை, விவாதத்துக்கு விவாதம், நட்புக்கு நட்பு, ஜாலிக்கு ஜாலின்னு எல்லாமே தெகட்டத் தெகட்ட கிடைக்குது. அதுவும் கொஞ்சநாளா நைட் சர்வீஸ் பஸ் வுடுறேன் பேர்வழின்னு தமிழிலக்கியப்பாடல்களா எடுத்து செம்ம அரட்டை. இன்னிக்கு நைட் சர்வீஸ் பஸ்சு 18 +னு வெச்சிக்கிட்டு குற்றாலக்குறவஞ்சில இருந்து கொஞ்சம் பாட்டை எடுத்து அரட்டை அடிக்க ஆரமிச்சேன். பஸ் உலக நண்பர்களின் ஆலோசனைப்படி அதை எடுத்து இங்க பதிவா போடுறேன்.<br />
<br />
சிற்றிலக்கியங்கள்ல குற்றாலக்குறவஞ்சியும் ஒண்ணு. ரொம்ப இண்ட்ரஸ்டிங். அதுல இருந்து சில பகுதிகள்:<br />
<br />
குறிசொல்லும் குறவனும், குறத்தியும் ஊடல்கொண்டாடும் பாட்டுக்கள். குறவன் காதல் பித்தேறித் தவிக்கிறான். குறத்தி அவனை எள்ளிச் சிரிக்கிறாள்.<br />
<br />
<br />
<b>குன்றத்தைப் பார்த்தால் கொடியிடை தாங்குமோ சிங்கி! தன்</b><br />
<b>கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா!</b><br />
<br />
குன்றுமாதிரி நிமிர்ந்து நிக்கிற உன் கொங்கைகளைப் பாத்தாலே மலைப்பாய் இருக்கிறதடி சிங்கி!. சின்னக்கொடி போன்ற இடை எப்டியடி இவ்ளோ கனத்தைத் தாங்கும்?!<br />
<br />
சிங்கி சொல்றா:<br />
<br />
யோவ்! அதப்பத்தி நீ என்னாத்துக்கு கவலைப்படுற. சுரைக்காய் காய்ச்சிருக்குற செடிக்கு சுரைக்காய் பாரமா என்ன? போவியா வேலைய பாத்துக்கிட்டு!<br />
<br />
<b>இல்லாத சுற்றெல்லாம் எங்கே படித்தாய்நீ சிங்கி! நாட்டில்</b><br />
<b>நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா!</b><br />
<br />
முன்னாடியெல்லாம் இப்டி நெளிவு சுளிவா ஒனக்கு பேச வராதேடி சிங்கி! எப்டிடி இப்போ மட்டும் என்னாமா தளுக்கி குலுக்கி பேசுற! எங்க போய்டி கத்துகிட்ட இதெல்லாம்?!<br />
<br />
உன்னைமாரி ஊட்ல குழிபறிச்சிட்டு இருந்தா ஆவுமாய்யா! நாடு,நகரம்னு நாலு எடம் சுத்தி நாலு நல்ல மனுசன், பெரிய மனுசனைப் பாத்து குறி சொல்லிட்டு வாரப்ப, அவங்ககிட்ட இருந்து நல்ல விஷயமா நாலு கத்துக்கிட்டு வரலாம்யா!<br />
<br />
<b>பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கி! நடுப்</b><br />
<b>பட்டப் பகலில்நான் எட்டிக் கொடுப்பேனா சிங்கா!</b><br />
<br />
பொட்டில கெடக்குற பாம்புமேரி என்னா அழகா வளைஞ்சு சுருண்டு இருக்குற உன்னோட பெண்மைய மோகத்துல ஆடவைக்க வேண்டாமாடி என் செல்லச் சிங்கி?!<br />
<br />
யோவ்! என்னய்யா மனுசன் நீ! எந்த மறைப்பும் இல்லாத வெட்டவெளியில நல்ல சாதிப் பாம்பா இருந்தா ஆடுமாய்யா? ஒனக்குத்தான் புத்திகெட்டு அலையிதுனா நானுமா அலையணும்! மருவாதியா அப்பால போயிடு!<br />
<br />
<b>கட்டிக்கொண் டேசற்றே முத்தம் கொடுக்கவா சிங்கி! நடுப்</b><br />
<b>பட்டப் பகலில்நான் எட்டிக் கொடுப்பேனா சிங்கா!</b><br />
<br />
சரி அத வுடு! கொஞ்சநேரம் உன்னைக் கட்டிப் புடிச்சிக்கிட்டு ஒரு முத்தமாவது கொடுத்துக்கிறேனேடி சிங்கி!<br />
<br />
என்னாது! முத்தமா? யோவ்! பட்டப்பகல்ல வேலவெட்டிய பாக்காம பேசுற பேச்சாய்யா இது? வெக்கங்கெட்ட மனுசா! மொதல்ல நீ எடத்த காலி பண்ணு. போ போ<br />
<br />
<b>முட்டப் படாமுலை யானையை முட்டவோ சிங்கி! காம</b><br />
<b>மட்டுப் படாவிடில் மண்ணோட முட்டடா சிங்கா</b><br />
<br />
ஏண்டி சிங்கி! ஆனைக்குட்டிங்க மேரி இருக்குதுங்களே ஒன்னோட மாருங்க! என்னோட தலையால முட்டிப் பாக்கணும்னு தோணுதுடி! முட்டிப்பாக்கவா?<br />
<br />
இந்தாய்யா! இந்த இழுவயெல்லாம் எங்கிட்ட ஆவாது. ஒனக்கு அரிப்பெடுத்தா தோ இருக்கு பாரு மண்ணுமுட்டு! அதுல போயி முட்டிக்க போ!<br />
<br />
<b>சேலை உடைதனைச் சற்றே நெகிழ்க்கவோ சிங்கி! சும்மா</b><br />
<b>நாலுபேர் முன்எனை நாணம் குலையாதே சிங்கா</b><br />
<br />
ஏண்டி சிங்கி! சீலைத்துணிய இம்புட்டு இறுக்கமாவா கட்டுவ? இந்தா பாரு, தோலு எப்பிடி செவந்திருக்கு! நான் வேணா கொஞ்சம் லேச தளத்தி வுடவாடி?<br />
<br />
ந்தே! அந்தாண்ட போ மொதல்ல! நாலு மக்கமனுசங்க இருக்குற எடத்துல என் மானத்த வாங்குறதே ஒனக்கு வேலையா போச்சு<br />
<br />
<b>பாதம் வருடித் துடைகுத்த வேண்டாமோ சிங்கி! மனப்</b><br />
<b>போதம் வருடிப்போய்ப் பூனையைக் குத்தடா சிங்கா</b><br />
<br />
அடியே என் சிங்காரி! என்னால இதுக்கு மேல தாங்காது! நீயும் ஊரு ஒலகம்லாம் சுத்தி வந்துருப்பே! வாடி, உன்னோட காலை மெதுவா புடிச்சி வுடுறேன். அப்புறமா ஆகவேண்டிய 'முக்கிய'மானதை ஆரமிக்கலாம்.<br />
<br />
யோவ்! ஒடம்புபூரா கொழுப்பேறித்தான் முறுக்கிக்கிட்டு திரியிற. ஒருத்தி ஊரெல்லாம் சுத்தி களைச்சிப்போயி வந்தா.... போயி அந்தால ஓடுது பாரு பூனை, அதப்புடிச்சி நீ பண்ண வேண்டிய 'காரிய'த்தை பண்ணிக்கோ!<br />
<br />
<b>நாக்குத் துடிக்குதுன் நல்வாயிதழுக்குச் சிங்கி! உன்றன்</b><br />
<b>வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் அல்லவோ சிங்கா</b><br />
<br />
உம்பேச்சே இம்புட்டு இனிப்பா இருக்கே! உன்னோட நாக்கும், எச்சியும் எம்புட்டு இனிப்பா இருக்கும். கொஞ்சூண்டு சாப்டு பாத்துக்கிறேனேடி செல்லம்! என் சிங்கி!!<br />
<br />
என்னாய்யா இது புதுசா இருக்கு! ஒனக்கு எப்பவும் கள்ளுதானேய்யா ருசியா இருக்கும். இன்னிக்குத்தான் தேடுறியாக்கும் என்னோட நாக்கை? நீ வேணும்னா தர்றதுக்கும் வேண்டாம்னா போறதுக்கும் நான் ஆளு இல்ல ஆமா. முடியாது முடியாது<br />
<br />
<b>ஒக்கப் படுக்க ஒதுக்கிடம் பார்க்கவோ சிங்கி! பருங்</b><br />
<b>கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா</b><br />
<br />
அடியேய் சிங்கி! ஏண்டி என்னை இப்டி சூடேத்திக்கிட்டு இருக்குற? சரி சரி வா! நல்ல மறைவா ஒரு பாத்துட்டு வாரேன். கொஞ்ச நேரம் படுத்து தூங்கிட்டு போவலாம்.<br />
<br />
அய்யே! தூங்க கூப்புடுற மூஞ்சை எங்களுக்குத் தெரியாது? தூங்கலாம் அப்டீனு கூப்டுவே. அப்டி இப்டி கூத்தாடி எல்லாக் 'காரிய'த்தையும் பண்ணிடுவ. எங்களுக்குத் தெரியாது ஒன்னோட பவுசு?! ஒழுங்கு மரியாதையா மொதல்ல சோத்துக்கு வழி பாரு மாமா. போயி கொக்குப் புடிச்சி அடிச்சி ஆக்குறதுக்கு ஒரு எடத்தைப் பாரு மொதல்ல<br />
<br />
<b>வித்தைக் காரியுன்னை வெல்லக் கூடாதடி சிங்கி! அது</b><br />
<b>சந்தேக மோவுன் தலைப்பேனைக் கேளடா சிங்கா</b><br />
<br />
எப்பிடிப் பேசிப் பாத்தாலும் மடங்க மாட்றியேடி! ஏண்டி, ஒருவேள என்னாலதான் உன்னை மடக்க முடியலையா இல்ல எவனுக்கும் மடங்காத ராட்சசியா. சொல்றி சிங்கி!<br />
<br />
யோவ்! என்னைப் பத்திதான் ஊரு ஒலகத்துக்கே தெரியுமேய்யா. இந்தா.. அடுத்தாப்புல எதைச் சொன்னா கவுருவான்னு தலையச் சொறிஞ்சிட்டே நிக்கிறியே. ஒந்தலையில இருக்குற பேனைக் கேட்டுப்பாரு. அது சொல்லும்யா என்னோட பவுச!<br />
<br />
<b>தென்னா டெல்லாமுனைத் தேடித்திரிந்தேனே சிங்கி! அப்பால்</b><br />
<b>இந்நாட்டில் வந்தென்னை எப்படி நீகண்டாய் சிங்கா</b><br />
<br />
ஏண்டி இப்டி இரக்கமில்லாம பேசுற? நானும் உன்னைத்தேடி தெக்கத்திச்சீம பூரா தேடித்தேடி களைச்சிப்போயிதானேடி வந்துருக்கேன்?<br />
<br />
சரி அதெல்லாம் கெடக்கட்டும். அப்பறம் எப்டிய்யா என்னைக் கண்டுபுடிச்ச?<br />
<br />
<b>நன்னகர்க் குற்றால நாதரை வேண்டினேன் சிங்கி! மணிப் </b><br />
<b>பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா</b><br />
<br />
தோ இருக்காரு பாரு திருக்குற்றாலநாதர்! அவர்ட்ட வேண்டிக்கிட்டேண்டி. எப்டியாவது என்னோட ஆள எனக்கு கண்ணுல காட்டிடுன்னு!<br />
<br />
அய்ய! ரொம்பத்தான் ஆசையா அலைஞ்சிருக்க போல! சரிசரி வாய்யா! அதான் என்ன கண்டுபுடிச்சிட்டல்ல. போயி மறுக்கா கும்புட்டுட்டு வந்துடுவோம்<br />
<br />
<b>பாடிக்கொள் வாரெவர் ஆடிக்கொள் வாரெவர் சிங்கி! நீதான்</b><br />
<b>பாடிக்கொன் டாற்போதும் ஆடிக்கொள் வேனடா சிங்கா</b><br />
<br />
சரிடி என் தங்கம்! சாமிய யாரு பாடுறது? யாரு பாட்டுக்கு ஆடுறது?<br />
<br />
இந்தா... நீ ஆடி ஒரு கழுதையும் பாக்காது. நானே ஆடுறேன். நீ பாடுய்யா<br />
<br />
<b>பார்க்கப் பொறுக்குமோ பாவியென் ஆவிதான் சிங்கி! முன்னே</b><br />
<b>ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறார்களோ சிங்கா!</b><br />
<br />
அடிப்பாவி மவளே! ஏற்கனவே நான் ரொம்ப சூடா இருக்கேண்டி. இதுல நீ ஆட வேற போறேன்னு சொல்ற. நீ ஆடுறதைப் பாத்தா எனக்கு அடக்கிக்கிட்டு இருக்க முடியாதேடி! செத்தே போயிடுவேண்டி.நான் என்ன பண்ணுவேன்?!<br />
<br />
ஏய்யா பொழப்பு கெட்ட மனுசா! ஆக்கப் பொறுத்த நீரு ஆறப் பொறுக்க மாட்டீரோ?! இருய்யா, பூசையெல்லாம் முடிச்சிட்டு, அப்புறமா வீட்டுக்கு போயி நெதானமா எல்லா 'காரிய'த்தையும் பாக்கலாம்<br />
**************************************<br />
அடுத்தாப்புல ஒரு டவுனு பொண்ணு.வசந்தவல்லின்னு பேரு. ரொம்ப பவுசா நாகரீகமா வளந்த பெரியதனக்காரரு வூட்டுப்பொண்ணு! குற்றாலநாதர் கோயில் வீதியில பந்து வெளையாண்டுட்டு இருக்கா. அவளைப் பாக்குறாரு கவிஞரு. ஒடனே கவிதை கரைபொரண்டு ஓடுது. அவளை வர்ணிக்கிறாரு பாருங்க! யாத்தேய்....<br />
<br />
<b>செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயஞ்செயம் என்றாட- இடை </b><br />
<b>சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட-இரு </b><br />
<b>கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட- மலர்ப் </b><br />
<b>பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே!</b><br />
<br />
"நல்லா கலரா செவசெவன்னு செவந்த கைய்யில போட்ருக்குற அந்த வளவியெல்லாம் இருக்கே அதெல்லாம் கலின் கலின் னு சத்தம் போடுறது "வெற்றி!வெற்றி"னு கூப்பாடு போடுறாமேரியே இருக்கு! இவ பாட்டுக்குக்கு எதப்பத்தியும் ரோசன இல்லாம குதிச்சிக் குதிச்சி வெளையாடுறாளே, எவ்ளோ பெரிய மாருங்களை வெச்சிக்கிட்டு இருக்கா.. இந்த ஆட்டம் போட்டாக்கா சின்னூண்டு இடுப்பு ஒடிஞ்சி போனாலும் போயிடுமேன்னு அவ கால்ல கெடக்குற சிலம்பும், தண்டையும் பொலம்பிகிட்டே ஆடுதுங்க. இவளோட மாருங்க இருக்கே! அது ரெண்டும் அசப்புல அவ வெச்சிக்கிட்டு வெளையாடுற பந்து மாதிரியே இருக்குங்க. அதுங்களோட திரட்சியான வடிவத்துக்கு அந்த பந்துதான் போட்டியா, எதிரியா இருக்கும்போல அப்டி ஒரு அழகு! ஆனா யார்ட்ட போட்டி போடுறது?! பந்து தோத்துடுது. அதான் அந்த கொடும்பகையான பந்தை தோக்கடிச்ச கர்வத்துல அவளோட மாருங்களும் குதிச்சி வெளையாடுது. பூமாலைமேரி இருக்குற வசந்தவல்லி பந்தாடுனதைப் பாத்தா இப்டியெல்லாம் தோணுதுய்யா! இது மட்டுமா... இன்னம் இருக்குங்காணும்!"<br />
<br />
அடுத்த பாட்டு<br />
<br />
<b>பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாடக் - குழல் </b><br />
<b>மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட - இனி </b><br />
<b>இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிசை திண்டாட - மலர்ப் </b><br />
<b>பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே!</b><br />
<br />
"அவளோட காதுல போட்ருக்குற தோடுஜிமிக்கி இருக்கே, அதுங்க அவளோட கண்ணு ரெண்டுமேலயும் பொரண்டு பொரண்டு ஆடுதுங்க. அது எப்டிய்யா தோடுஜிமிக்கி கண்ணுக்கு வந்திச்சின்னு கேக்குறீங்களா? அவ கண்ணு ரெண்டும் அவ்ளோ பெரிசுய்யா. காது வரைக்கும் நீண்டுருக்கு. சொம்மா ஆறடி நீளத்துக்கு மேகம் மேரி விரிஞ்சி கெடக்குதுல்ல கன்னங்கரேல்னு அவளோட கூந்தல்! அதுல அவ வெச்சிருக்கிற பூவுல இருக்குற வண்டுங்கல்லாம் அவ போடுற ஆட்டத்துல கூந்தல்ல இருந்து எந்திரிச்சி ஓடுதுங்க. அதப் பாத்துட்டு மம்முதன் வில்லுல நாணா இருக்குற வண்டெல்லாம் கலைஞ்சி ஓடுதுங்களாம். அவளோட சின்னஞ்சிறு இடை தளந்து தளந்து ஆடுதாம், ஏன்? நம்ம அழக பாத்துட்டு இந்த ஒலகம் என்ன பாடு படுதோன்னு கவலையில ஆடுதாம். சொம்மா பூ கணக்கா அப்டி பந்து வெளையாண்டுட்டு இருக்கா நாம் ஈரோயினு!"<br />
<br />
அதுக்கடுத்த பாட்டு<br />
<br />
<b>இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ - மனம் </b><br />
<b>முந்திய தோவிழி முந்திய தோகரம் முந்திய தோவெனவே - உயர் </b><br />
<b>சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிய </b><br />
<b>பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரிபொற் பந்து கொண்டாடினளே!</b><br />
<br />
"இந்தமேரி கெட்ட ஆட்டம் போடுறாளே... இவ மகாலட்சுமியா இல்ல ரதியா இல்ல தேவலோக ரம்பையா இல்ல யாராச்சும் மோகினியா! என்னமா மின்னல் மேரி ஆடுறாய்யா!! இவ மனசுதான் அவ்ளோ வேகமா முன்ன போயி ஆடுதா? இல்ல அவளை முந்திக்கிட்டு கண்ணு ரெண்டும் ஆடுதா? இல்ல நெசமாமே கையாலதான் ஆடுறாளா? ஆட்டத்துக்கு பேர்போன அந்த கூத்தபெருமானே, அதாம்யா மூணாம்பிறைய தலையில வெச்சிக்கிட்டு ஆடுவாரே அவரு! நல்லா பொருத்தமாத்தான் அவரு கோயிலு இருக்குற தெருவுல நம்ம ஈரோயினு அம்சமா பந்து வெளையாடுறா. பொற்பந்துன்னா பொன்னாலான பந்து இல்ல. அம்புட்டு கனத்தை பூ மேரி இருக்குற இவ எப்டி சொமப்பா! இவ கைய்யி பட்டு அந்த பந்து தங்கம் மேரி தகதகன்னு மின்னுது. அந்த பந்த வெச்சிட்டு ஆடுறா இவ!"<br />
<br />
ஹும்ம்! இந்தமாதிரி தேன்சிந்தும் பாட்டையெல்லாம் விட்டுப்புட்டு, காக்காவலிப்பு வந்தவன் மாதிரி வெட்டிவெட்டி பாடுற, ஆடுற பாட்டுக்களை ரசிக்கவேண்டிய நெலைமைக்கு ஆளாயிட்டோம்!</div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-65923788813913818412011-04-19T00:56:00.000+05:302011-04-19T00:56:07.020+05:30நாய்வாய் எச்சில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgPSjeBi27iPp-_w2nY-phUWes1S1vHKIhq7Ij6Zc_plrPEvjiJeiVBb5MFycQgVZocgh2eShSa5HJtNQ2abFbGrs-iE1mZnvQN1z231FxU4MszC3dpH1nPyRJ1kWTSvBHSJZI5dv72OQ/s1600/Pain_by_SentinelsMelody.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="280" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgPSjeBi27iPp-_w2nY-phUWes1S1vHKIhq7Ij6Zc_plrPEvjiJeiVBb5MFycQgVZocgh2eShSa5HJtNQ2abFbGrs-iE1mZnvQN1z231FxU4MszC3dpH1nPyRJ1kWTSvBHSJZI5dv72OQ/s400/Pain_by_SentinelsMelody.jpg" width="400" /></a></div><br />
தனித்த வெய்யிற்பொழுதில்<br />
கருகிப்போன புற்களை<br />
மென்று தீர்க்கிறது பசு...<br />
<br />
காசுகள் குலுங்கா<br />
திருவோட்டுடன்<br />
காலணிகள் தேவையற்ற<br />
கட்டைக்கால் பிச்சைக்காரன்<br />
பசிமரத்த வயிற்றோடு...<br />
<br />
வலியைப் பிடுங்கிப்போடும்<br />
பிரயத்தனத்தில்<br />
நாய்வாய் எச்சிலாய்<br />
வழிகிறதென் காதல்<br />
</div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-83185073755389417702011-04-17T20:09:00.000+05:302011-04-17T20:09:37.242+05:30கொங்கை முகங்குழைய... (வயதுவந்தோர் மட்டும்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKH3lsseUa5csSGaIt6PE1b0foQkZmieBeliaMkNFzTgh9xeY1AtITLlVlaqMXEbEc2r40XNKN30JFn31BsfNd2VXA7CCZHjL7dOSZg0rf7eEGd2BynGlkRH6VsW-ljuz8jdrf_1xDdOA/s1600/DSC_0076.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKH3lsseUa5csSGaIt6PE1b0foQkZmieBeliaMkNFzTgh9xeY1AtITLlVlaqMXEbEc2r40XNKN30JFn31BsfNd2VXA7CCZHjL7dOSZg0rf7eEGd2BynGlkRH6VsW-ljuz8jdrf_1xDdOA/s400/DSC_0076.JPG" width="400" /></a></div><span class="Apple-style-span" style="color: #222222; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; font-size: 13px; line-height: 18px;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="color: #222222; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; font-size: 13px; line-height: 18px;">காமம்...! ஒற்றை வார்த்தையைச் சுற்றிச் சுழல்கிறது ஒழுக்கம்சார் உலகம்! காமம் என்பது வெறும் நுகர்வாய் மாற்றப்பட எதிர்விளைவாய் வெடிக்கின்றன பண்பாட்டு குண்டுகள். ஒரு பூவின் மலர்ச்சியாய் இயல்பாய் இருக்கப்பட வேண்டியது செயற்கையாய் ஊதிப் பெருக்கப்பட்டு வாழ்வின் கணந்தோறும் நிறைத்து மூச்சுமுட்ட வைக்கின்றது.<br />
<br />
காமம் என்ற சொல் மனதில் காட்சிப்படுத்தப்படுகையில் பல திசைகளில் பாயத்துவங்குகின்றது நினைவெனும் காட்டுக்குதிரை!<br />
<br />
காமத்திலிருந்துதான் கடவுளுக்கான பயணம் துவங்குகிறது என்கிறார் ஓஷோ. காமத்தைக் குட்டையாக்கித் தேக்கிவைக்கப்பட்ட கற்பனைகள் அழுகி நாற்றமெடுக்க சாக்கடையாய் வாழப் பழகிவிட்ட நாமோ அவரை வெறும் செக்ஸ் சாமியார் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம். திராவிடர்களின் ஆதிக் கலாச்சார மரபிலிருந்துதான் காமம்சார்ந்த தாந்த்ரீக விஷயங்களை உள்ளடக்கி அதர்வணவேதம் படைக்கப் பட்டது.<br />
<br />
தந்த்ரா என்று ஒரு ரகசிய மார்க்கம் பௌத்தத்தின் ஒரு பிரிவினரால் வளர்த்தெடுக்கப்பட்டது. காமத்திலிருந்து கடவுளுக்குச் செல்லும் பயணத்தின் தேடல்களை உள்ளடக்கிய தந்த்ரா இன்றும் பலரால் வியாபார நோக்கமாக மாற்றப்பட்டு வெறும் காமநுகர்வினை வர்ணக் காகிதங்களில் கட்டித் தரும் காமதேனுவாகிவிட்டது.<br />
<br />
"Chastity is nothing but lack of opportunity" என்று வேடிக்கையாய் சொல்வார் பெர்னாட்ஷா.காமம் தவறென்று கற்பிக்கப்பட்டு பாலியல் வறட்சிக்குள் தள்ளப்பட்ட சமூகம், ரகசியமாய் "ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்" என்று புதிய வேதம் பாடிக் கொண்டிருக்கின்றது.<br />
<br />
காமம்பாடும் இலக்கியங்களும், காமம் சொட்டும் கலைக் கோயிலகளும் செழித்திருந்த காலம் போய் கழிவறைக் கிறுக்கல்களே இலக்கியமாய்க் கற்பிதம் செய்யப்படுகின்றது.<br />
<br />
எனக்கு ஒரு கதை நினைவிலாடுகின்றது;<br />
<br />
ஒரு துறவியும் அவரது சீடனும் ஆற்றைக் கடக்கத் தயாராகிக் கொண்டிருந்த வேளை. ஆற்றிலோ வெள்ளம் தலைக்குமேலே போகின்றது. நீந்திக் கடக்கலாம் என்று முடிவெடுக்கும்போது ஒரு இளம்பெண்ணின் குரல். துறவியைப்பார்த்து அவள் சொல்கிறாள் "சுவாமி! எனக்கு நீந்தத் தெரியாது. தயைசெய்து என்னையும் அக்கரை சேர்ப்பீர்களா?" அக்கரை சேர்க்கிறேன் பேர்வழி என்று இளம்பெண்கள்மீது அக்கறை காட்டும் இக்காலத் துறவி அல்ல அவர்; நிஜமாகவே அவர் துறவி! சற்று யோசித்தவர் சரி எனச் சொல்லி அவளையும் சுமந்துகொண்டு நீந்தி அக்கரையில் இறக்கிவிட்டு வழியனுப்புகிறார்.<br />
<br />
சிறிதுதூரம் சீடன் மௌனமாகக் குருவைத் தொடர்கிறான். பின் மெதுவாய்த் தயங்கித் தயங்கிக் கேட்கிறான் "குருவே! தாங்களோ துறவி! தாங்கள் ஒரு இளம்பெண்ணை சுமந்து வந்தது சரியா?" என்று.<br />
<br />
மெல்லப் புன்னகைத்த குரு சொல்கிறார் " நான் அவளை அப்போதே இறக்கிவிட்டேனே? நீ இன்னுமா சுமந்து வருகிறாய்?!" என்று.<br />
<br />
இப்படித்தான் நாமும் கணந்தோறும் காமத்தைக் கற்பனையில் சுமந்து திரிகிறோம்.<br />
<br />
காமத்தை இயல்பாய் அதன் அழகு மிளிரப் பாடிய தமிழ் இலக்கியங்கள் கணக்கிலடங்கா.<br />
<br />
பெரும்பாலோர் ஆணின் காமத்தை செய்வினையாகவும் (active), பெண்ணின் காமத்தை செயப்பாட்டுவினை(passive) ஆகவுமே வர்ணிக்கையில் புகழேந்திப்புலவர் நளவெண்பாவில் தமயந்தியின் காமத்தை செய்வினை (active) யாக வர்ணிக்கிறார்:<br />
<br />
நளன் மிகப்பெரும் வீரன்! இருளைக் கிழித்துப்பாயும் மின்னல்போலப் பாய்ந்துசெல்லும் வேலைக் கொண்டவன்! போர்க்களத்தில் வீரமாய்க் களமாடும் நளனின் விம்மித்து அகன்ற மார்புகளின் மீது வனப்புமிக்க கொங்கைகளை மோதி கண்கள் தனது கூந்தலின்மேலும், நளனின் உயிர்மீதும், நீண்டு விரிந்துபோய்த் தன் செவிமீதும் அலைமோதக் காதல் பெருக்கிக் கலவிச் சண்டை செய்கின்றாளாம் தமயந்தி!<br />
<br />
<b style="color: #38761d;">"குழைமேலுங் கோமான் உயிர்மேலுங் கூந்தல்<br />
மழைமேலும் வாளோடி மீள – இழைமேலே<br />
அல்லோடும் வேலான் அகலத் தொடும்பொருதாள்<br />
வல்லோடுங் கொங்கை மடுத்து."</b><br />
<br />
அடுத்த பாடல் இன்னும் அழகு! என் மனதில் என்றும் நீங்காத ஒரு பாடல்!<br />
<br />
நளனுடைய படை யானைப்படை. களங்களில் மிகுந்த பிளிறல் சத்தங்களோடு போரிட்டு எதிரிகளை துவம்சம் செய்யும். ஆனால் நளனுடைய அதிகாரமெல்லாம் போர்க்களங்களில் மட்டும்தான். பள்ளியறையில் நடக்கும் போரில் தமயந்தியின் போர்க்கருவிகளே ஆட்சி செய்கின்றனவாம். என்ன மாதிரியான கருவிகள்?! குங்குமமும், சந்தனமும் குழைத்துப் பூசப்பட்ட வளமையான கொங்கைகள்! காதுவரை நீண்டு பார்வையிலேயே காதலனை விழுங்கிச் செரித்துப்போடும் கண்கள்! அவளது வளையல்கள் எழுப்பும் கிண்கிணி நாதம்தான் இங்கு போர்முரசு!<br />
<br />
பகைவர்களை எப்போதும் கொல்லும் யானைப்படைவேந்தனோடான கலவிப்போரில் அவனுடைய மார்புகளோடு மோதி அவளின் கொங்கைகள் குழைகின்றன! காரிருளாய் அவிழ்ந்து கலைந்து விரிகிறது அவள் கூந்தல்! போர்முரசாய் ஒலிக்கின்றன அவளது வளையல்கள்! காமத்தில் சிவந்த அவளது கண்கள் நீண்டு அலைபாய்கின்றன!<br />
<br />
<b style="color: #38761d;">"கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலையச்<br />
செங்கயற்கண் ஓடிச் செவிதடவி – அங்கை<br />
வளைபூச லாட மடந்தையுடன் சேர்ந்தான்<br />
விளைபூசற் கொல்யானை வேந்து."</b><br />
<br />
செயற்கையாய்க் குப்பிகளில் அடைக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் போன்றதல்ல காமம்! அது ஒளி புக முடியாக் காட்டுக்குள் பூத்திருக்கும் ஒற்றைப்பூ! நுகரத் தேவை, நீண்டு நெடிதான தேடல்....! துடைத்துவிட்டுத் தூக்கியெறியும் காகிதமல்ல... எல்லாம் ஒடுங்கிப் போய் மனம் அசைவற்றுப் போகும் உள்ளொளிப் பயணம்! "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" என்பது கடவுளுக்கல்ல.... காமத்திற்கே பொருந்தும்.<br />
<br />
தென்றலின் மென்மையாய்த் துவங்கும் காமத்தின் பயணம் சூறைக்காற்றாய் மாறி சாத்திரக் கட்டுகளை சாய்க்கவேண்டும். பொருதிய உடல்களில் மூச்சு மட்டுமே மெல்ல ஓடிக் கொண்டிருக்க வேண்டும். மூடிய இமைகளுக்குள்ளிருந்து வழிய வேண்டும் காதலின் வெள்ளத்தில் முங்கு நீச்சல் அடித்துக் கரையேறிய நிறைவு! அணைத்திருக்கும் கரங்களுக்குள் ஒருவருக்கொருவர் உயிர் ஒடுங்கிக் கொள்ளவேண்டும்.<br />
<br />
முத்தமிட்டுத் தீராமல் மோதிக்கொண்டே இருக்கும் கடலலைபோல் நானும் தேடிக்கொண்டே இருக்கின்றேன் நான் உள்ளொடுங்கும் தருணங்களை!<br />
<br />
எத்தனை தேக்கியும் விழிகளுக்குத் தப்பிக் கொண்டே இருக்கின்றது குருடன் கண்ட சிற்பமாய்! கழுத்தறுபட்ட ஆட்டினின்று கொப்புளிக்கும் குருதியாய்ப் பொங்கிக் கொண்டே இருக்கின்றது தீராக்காமம்!</span></div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-91526086538275843172011-04-15T16:29:00.000+05:302011-04-15T16:29:08.174+05:30அஸ்வத்தாமாக்கள் சாவதில்லை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRzT_8PXUCWinpCAGLDfpp4lcZhExSxrkGZPKuEZLil2U-0kI2PY6zPhbnIndkPTH9aJ87j_TYRWVVwiDNFxKewq1Zhc3oVRAvEjWQ7A7oaU4d2zbt4G1ikWFzSN6Z4O-YlxJMQnqe54k/s1600/aswathama.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" r6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRzT_8PXUCWinpCAGLDfpp4lcZhExSxrkGZPKuEZLil2U-0kI2PY6zPhbnIndkPTH9aJ87j_TYRWVVwiDNFxKewq1Zhc3oVRAvEjWQ7A7oaU4d2zbt4G1ikWFzSN6Z4O-YlxJMQnqe54k/s320/aswathama.jpg" width="175" /></a></div>அஸ்வத்தாமனின் மனம் எரிந்துகொண்டிருந்தது. தனிமையும், துக்கமும், நிராசையும், கோபமும் அவனை அலைக்கழிக்க தன்னை துரும்பாய் உணர்ந்தான். அவன் விழிகள் கண்ணீரும் ஆற்றாமையின் சுவாலையும் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன.<br />
<br />
<br />
<br />
<br />
'துரோகத்தால் என் வாழ்வு சிதைக்கப்பட்டுவிட்டது. நான் தனியனானேன். எல்லோரும் என்னைக் கொண்டாடிய காலம் கனவாய்ப் போய்விட்டது. இன்று நான் யாருக்கும் உபயோகமின்றி சிறு துரும்பென நிற்கிறேன். குருஷேத்திரக் களத்தில் ஒவ்வொரு ஷத்திரியனும் தன் பங்கை நடத்தி அழியாப்புகழ் பெற்று சுவர்க்கம் அடைந்தனர். தந்தையே! என்னை ஏன் விட்டுச் சென்றீர்? துரியா! என் உயிரே! நண்பா! என்னால் ஏதும் கையாலாகாது என்றெண்ணித் தூங்குகிறாயா? சற்றே விழி நண்பா! என் விழிகளில் இருந்து உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? என்ன செய்வேன் இனி?'<br />
<br />
<br />
<br />
அது குருஷேத்திரத்தின் பதினெட்டாம் நாள் படுகளம். எங்கும் மரண ஓலம் மட்டுமே எஞ்சி இருந்தது. குருஷேத்திரம் எனப்படும் ஸமந்தபஞ்சகத்தின் ஓரமாய் இருந்த குளக்கரையில் துரியோதனன் வீழ்ந்துகிடந்தான். ராஜ்யக் கனவுகள் கலைந்து மரணத்தில் சாயை கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகத்தில் கவியத் துவங்கி இருந்தது. துரியனின் உதடுகள் வெடித்துக் கிடந்தன. இமைகள் கிறங்கி இருந்தன. துரியனின் தலையைத் தாங்கி இருந்த அஸ்வத்தாமன் சிறிது நீரள்ளி துரியனின் உதடுகளில் தடவினான்.<br />
<br />
<br />
<br />
"துரியா! என் அரசே! என் தோழனே! கொஞ்சம் கண்திற! எனக்குக் கட்டளை இடு" பதற்றத்தோடு கெஞ்சினான் அஸ்வத்தாமன்.<br />
<br />
<br />
<br />
துரியன் மெல்ல இமை திறந்தான்.<br />
<br />
<br />
<br />
"அஸ்வத்தாமா! எல்லாரும் மாண்டார்களா? என் பந்துமித்திரர் எவரேனும் எஞ்சி இருக்கிறார்களா? தர்மத்தின் பக்கம் நின்று என் ராஜ்யம் காக்க நான் முன்னெடுத்த போர் முடிந்ததா? குந்தியின் புத்திரர்கள் எப்படி நண்பா குருவம்சத்தின் ராஜ்யபாரத்தை சொந்தம் கொண்டாட முடியும்? கடைசியில் அதர்மம் வென்றதா? எல்லாரும் மாண்டபின் நான் மட்டும் ஏன் இன்னும் உயிர்த்திருக்கிறேன்?"<br />
<br />
<br />
<br />
"இல்லை துரியா! இன்னும் யுத்தம் பாக்கி இருக்கின்றது. உன் கட்டளைக்காகத்தான் காத்திருக்கிறேன். ஒரு சொல்... பாண்டவரின் வம்சத்தை வேரறுத்து வருகிறேன். இந்த யுத்தத்தின் இறுதிப்பலியாக பாண்டவர்களின் தலைகள் இருக்கட்டும். கட்டளையிடு நண்பா!"<br />
<br />
<br />
<br />
துரியன் முகத்தில் உயிரின் மலர்ச்சி துளிர்த்தது. சற்றே உடலை அசைத்து எழுந்தான். பிளக்கப்பட்ட தொடையின் வாதையில் அவன் முகத்தில் வேதனையின் ரேகைகள். தன் குருதி கலந்த குளத்து நீரள்ளி அஸ்வத்தாமனின் கைகளில் தெளித்தான். "இக்கணம் முதல் கௌரவசேனையின் இறுதி சேனாதிபதியாக நீயிருப்பாய் அஸ்வத்தாமா. வஞ்சம் முடித்து வா! உன் வரவுக்காய் என் மூச்சு காத்துக் கொண்டிருக்கும்"<br />
<br />
<br />
<br />
அஸ்வத்தாமா எழுந்தான். மிச்சமிருக்கும் தன் ஆயுதங்கள் அனைத்தும் சேகரித்தான். அபாண்டவம் என்னும் தன் அஸ்திரத்தைக் கையிலெடுத்தான். மீதம் நடக்க இருப்பவற்றையும் காணச்சகியாத சூரியன் தன் மறைவிடம் புகுந்தான்.<br />
<br />
<br />
<br />
இரவு எல்லாவற்றையும் விழுங்கிக் கொள்கிறது. அது தன் கர்ப்பப்பையில் எல்லா ஜீவராசிகளையும் பாதுகாக்கிறது. அதன் கதகதப்பில் அனைத்தும் துயில் கொள்கின்றன. ஆனால் நிராசையின், துயரத்தின், தனிமையின், துரோகத்தின் தகிப்பை, வெக்கையை உணர்ந்தவர் இரவின் கதகதப்பில் உறங்குவதில்லை. அவர்கள் இமைகள் மூடா நெடுங்கதவமாகி இரவை விழுங்கிச் செரித்துவிட முயன்றுகொண்டே இருக்கின்றன. அவர்களின் துக்கம் பெரும் ஓலமாகி தனிமையின் நிசப்தத்தை விரட்டிவிட முயன்றுகொண்டே இருக்கின்றது.<br />
<br />
<br />
<br />
அஸ்வத்தாமன் அந்த இரவில் விழித்திருந்தான். பாண்டவர் பாசறையில் புகுந்தான். எதிர்த்தவர், உறங்கியவர் என வேறுபாடற்று இருக்க இமைகளை மூடிக்கொண்டே தன் ஆயுதங்களைப் பிரயோகித்தான். எங்கும் எழுந்த மரணஓலம் அவனை உன்மத்தனாக்கி இருந்தது. மானுடத்தின் ஆதிச் சுவையான வன்முறையை, குருதிச் சுவையை அவன் பரிபூரணமாக ருசிக்கத் துவங்கி இருந்தான். ஒவ்வொரு தலை வீழும்போதும் அவன் கரங்களுக்குள் புதிய ஜீவன் பாய்ந்தது. அவன் புலன்களனைத்தும் பரிபூரண விழிப்பில் இருந்தன. அவை மரணத்தின் விளையாட்டை உணர்ந்து கிளர்ந்தன. <br />
<br />
<br />
<br />
அன்றைய பகலின் இழப்பைவிட அஸ்வத்தாமன் இரவில் தனித்து நடத்திய வேட்டை குரூரமாக இருந்தது.<br />
<br />
<br />
<br />
'அதோ உறங்கிக் கொண்டிருக்கின்றனர் என் ஜென்மசத்ருக்கள்! என் பழி முடிக்கும் காலம் இதோ...'<br />
<br />
<br />
<br />
அஸ்வத்தாமனின் வாளின் நுனியில் அறுந்து விழுந்தன ஐந்து தலைகள். ஆவேசத்துடன் பாய்ந்து அள்ளிக்கொண்ட அஸ்வத்தாமா காற்றினும் கடிதாய் விரைந்தான்.<br />
<br />
<br />
<br />
"துரியா! இதோ பழிமுடித்தேன். இதோ உன் எதிரிகளின் உயிரற்ற தலைகளைப் பார்! யுத்தம் முடிந்தது. முடித்தவன் அஸ்வத்தாமன்! நீ கடைசியில் ஜெயித்துவிட்டாய் துரியா! திற! உன் விழிகள் நிறைய நிரப்பிக் கொள் இந்தத் தலைகளை!"<br />
<br />
<br />
<br />
பழிதீர்க்கக் காத்திருப்பவர் எப்போதும் ஒரு தவமாகவே அதைக் கைக் கொள்கின்றனர். அவர்களின் புலன்களனைத்தும் ஒரு புள்ளியில் ஒடுங்கி இருக்கின்றன. வஞ்சம் தீர்க்கும் அந்த ஒற்றைப்புள்ளியை நோக்கியே அவர்களின் பாதை நீள்கிறது. பாதையெங்கும் நிறைந்திருக்கும் ஓலமும், குருதியின் வீச்சமும் அவர்களை உண்டு அவ்ர்களை உரமூட்டுகின்றன. இறுதிப்புள்ளியில் வஞ்சம் தீர்ப்பவரது அத்தனை புலன்களும் ஊழிக்காலப் பெருவெள்ளமாய்த் திறக்கின்றன. அதன் வீர்யத்தில் அத்தனை சாஸ்திரங்களும், தர்மங்களும் தாமாகவே ஒடுங்கிப் போய்விடுகின்றன. பழிதீர்த்தலின் உச்சத்தில் அவன் ஸ்கலிதம் நீக்குகிறான். லேசாக நடுங்குகிறான்.<br />
<br />
<br />
<br />
துரியன் விழித்தான். துரியனது குரல் அஸ்வத்தாமனை பூமிக்கு இழுத்து வருகின்றது.<br />
<br />
<br />
<br />
"மூடனே! ஆத்திரத்தில் அறிவிழந்து போனாயோ! இந்தத் தலைகளைப் பார்! அட மடையா! இவர்களின் இளமைவடியும் முகங்களைப்பார்! இளம்பஞ்சபாண்டவர்களைக் கொன்று அவர்களின் தலையைக் கொண்டு வந்திருக்கிறாயே! மூர்க்கனே! பாண்டவர்களைக் கொன்றுவருகிறேன் என்று கூறிய வார்த்தைகளை நம்பி மோசம்போனேனே! என் இறுதிப் பார்வையை நிராசைப்பார்வையாக்கிவிட்டாயே!" <br />
<br />
<br />
<br />
வேதனையுடன் மூடிய துரியனின் விழிகள் அதன்பின் திறக்கவே இல்லை.<br />
<br />
<br />
<br />
அஸ்வத்தாமன் விதிர்விதிர்த்துப்போனான். 'பாண்டவர்களுக்குப்பதில் அவர்கள் பிள்ளைகளையா கொன்றேன்? பாவிகள் இப்போதும் தப்பித்தார்களா?' மடங்கி அழத் தொடங்கியவனின் தோள்தொட்டான் கிருஷ்ணன்.<br />
<br />
<br />
<br />
"அஸ்வத்தாமா! யுத்தம் முடிந்தது. இன்னும் ஏன் வஞ்சத்தோடு திரிகிறாய்! நீ பிராமணன்... கடமையை முடிப்பது மட்டும்தான் உன் பணி! இதோ சுற்றிலும் பார்... மகாபாரதமெங்கும் நிறைந்துகிடக்கின்றனர் நிராசையும், தனிமையும், துரோகமும் பீடிக்கப்பட்டோர்! அதோ பார்! ஏகலைவனை... உன் தந்தையின் துரோகத்தால் வனமெங்கும் பித்தனாய்த் திரிந்து கொண்டிருப்பதை... இன்னும்... இன்னும் துக்கத்தாலும், துரோகத்தாலும் புறக்கணிப்பாலும் எத்தனைபேர்... அம்பை தொடங்கி,சிகண்டியும், அரவானும், கர்ணனும்... இதோ உத்தரை முடிய... வேண்டாம் அஸ்வத்தாமா... உன் வஞ்சத்தை இதோ இந்த ஸமந்தபஞ்சகத்தோடு இறக்கிவைத்துவிடு. இல்லையேல் அது உன்னைத் தின்று செரித்துவிடும்."<br />
<br />
<br />
<br />
அஸ்வத்தாமா கைகூப்பினான். "இல்லை கிருஷ்ணா! என்னால் இனி உறங்கமுடியாது. பாரதயுத்தம் நெடுகிலும் பாண்டவர்கள் துரோகத்தாலும் வஞ்சனையாலும் மட்டுமே வென்று வந்திருக்கிறார்கள். அஸ்வத்தாமா இறந்தான் என்று பொய்யுரைத்து குருத் துரோகத்தின்மூலம் என் தந்தையைக் கொன்றார்கள். ஆண்மையற்ற சிகண்டியை முன்னிறுத்தி குலத்தின் பிதாமகனான பீஷ்மனைக் கொன்றார்கள். நிராயுதபாணியான கர்ணனைக் கொன்றார்கள். மற்போரில் இடுப்புக்குக் கீழே தாக்குதல் முறையல்ல என்று தெரிந்தும் இதோ என் ஆருயிர் துரியனை வஞ்சகமாய்க் கொன்றார்கள். இன்னும்... இன்னும் பாரதயுத்தமெங்கும் துரோகம் மட்டுமே ஆட்சிசெய்து வந்திருக்கின்றது. கிருஷ்ணா! இனி நீயிருக்கும்வரை பாண்டவர்களைக் கொல்லமுடியாது என்று எனக்குத் தெரியும். நான் போகிறேன் கிருஷ்ணா! இன்னும் சொல்கிறேன் கேள்! சலனமற்று ஓடும் நதிபோன்ற வாழ்க்கையில் துரோகம் ஒரு சுழிப்பை ஏற்படுத்திச் செல்கிறது. அதன் சுழலில் சிக்குபவர் எப்போதும் இறப்பதில்லை. அவர் கண்கள் என்றும் மூடுவதில்லை. துரோகிக்கப்பட்டவரது தீனக்குரலால்தான் பூமியெங்கும் நிரம்பியிருக்கின்றது. அதன் ஒலியில் நான் கலந்திருப்பேன் கிருஷ்ணா! பாண்டவர்களின் செவிப்பறையை அந்த ஒலி காலாகாலத்துக்கும் கதவடைத்துப் போடட்டும். அவர்களின் நெஞ்சம் இருளால் பீடிக்கப்பட்டதாய் இருக்கட்டும்"<br />
<br />
<br />
<br />
அஸ்வத்தாமா காற்றோடு கரைந்துபோனான். யுகாந்திரங்களைத் தாண்டியும் அவன் அலைந்துகொண்டே இருக்கின்றான். துரோகத்தாலும் வஞ்சனையாலும் யாரெல்லாம் பீடிக்கப் பட்டிருக்கின்றனரோ அவர்களில் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறான்.<br />
<br />
<br />
<br />
அஸ்வத்தாமா இறக்கவில்லை. அஸ்வத்தாமாக்களுக்கு என்றும் சாவில்லை!</div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-91232077275692725642011-04-14T22:16:00.001+05:302011-10-19T10:15:47.666+05:30சதுரங்கராணி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlbALcAZaF7CFOlc3lPZSru9tXaTmQ1DO7UBSqjhgTU0Jv1ZA4IaayX4FQ7GoDXPkMeGqBB11Gpki86FVI2sf7an02SoGvbKsEmmEr6BhPq1umme22oRRKLllGyZ20ZiWu1_xWwkiUh7Q/s1600/Chess___Black_Queen_by_GisaPizzatto.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlbALcAZaF7CFOlc3lPZSru9tXaTmQ1DO7UBSqjhgTU0Jv1ZA4IaayX4FQ7GoDXPkMeGqBB11Gpki86FVI2sf7an02SoGvbKsEmmEr6BhPq1umme22oRRKLllGyZ20ZiWu1_xWwkiUh7Q/s640/Chess___Black_Queen_by_GisaPizzatto.jpg" width="416" /></a></div><br />
நானும் நீயும்<br />
சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தோம்<br />
நெடுங்காலமாகவே<br />
வெள்ளைக்காய்கள் எப்போதும்<br />
உனதாகவே...<br />
சீறிப்பாயும் ராணிக்காயினை<br />
உபயோகப்படுத்த<br />
எப்போதும்<br />
தெரிவதில்லை எனக்கு<br />
குறுக்கில் பாயும் பிஷப் காய்கள்<br />
உன் விரல்களில்...<br />
<br />
உன் ஒவ்வொரு முத்தத்திலும்<br />
வெட்டுப்பட்டனர் சிப்பாய் தொடங்கி<br />
ரூக் வரை<br />
<br />
நீ செக் சொன்னபோது<br />
உறைந்துபோன<br />
எனது காலத்தின்<br />
உள்ளிருந்து<br />
எழுதிக் கொண்டிருக்கிறேன்<br />
இந்தக்கவிதையினை<br />
<br />
கடந்து செல்கிறாய்<br />
மெல்லிய புன்னகையுடன்<br />
சதுரங்கங்களின் ராணியென!<br />
<div><br />
</div></div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-68718717048042964472011-04-14T10:35:00.000+05:302011-04-14T10:35:19.709+05:30களங்களை இழக்கலாம்; யுத்தத்தை அல்ல!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKax15eraUBAjJBQZWRgc3H5wwnIO_vagWdoZPaKhb5jLmJ-qfvprQ0RIg4dniRob4bSSCDIYegXndYpvsOZQdF4ipSlv6c7b8vwIf89ohevDdVUb9nmhFrTkVcbZiXIBDTvUvF8MovMM/s1600/rise_from_the_fall_1_by_xidis777-d3cbxut.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKax15eraUBAjJBQZWRgc3H5wwnIO_vagWdoZPaKhb5jLmJ-qfvprQ0RIg4dniRob4bSSCDIYegXndYpvsOZQdF4ipSlv6c7b8vwIf89ohevDdVUb9nmhFrTkVcbZiXIBDTvUvF8MovMM/s640/rise_from_the_fall_1_by_xidis777-d3cbxut.jpg" width="425" /></a></div><br />
ஒருவழியாக முடிந்தேவிட்டது பதினான்காவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள். இன்னும் ஒருமாதம் காத்திருக்க வேண்டும் நம்மை ஆளப்போவது நரிகளா இல்லை ஓநாய்களா என்று தெரிந்துகொள்ள! இந்த சட்டப்பேரவைத்தேர்தலின் முடிவுகள் எவ்வாறாக இருந்தாலும் சரி. அடுத்த ஐந்தாண்டுகளில் உண்மையான இன உணர்வும், மொழிப்பற்றும் கொண்டவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய ஒரு கண்ணோட்டம் :<br />
<br />
"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்று ஒரு பழமொழி உண்டு. தமிழுணர்வாளர்கள் பல்வேறு திசைகளில் சிதறிக்கிடப்பதை துரோகிகளும் எதிரிகளும் தமக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டனர். அனைத்துத் தமிழுணர்வாளர்களாலும் மதிக்கப்படும் தலைவரான வைகோ இந்தத் தேர்தல் களத்தில் அப்புறப்படுத்தப்பட்டார். ஈழச்சொந்தங்களை அரவணைத்திருக்கவேண்டிய திமுக கட்சி இன்று இனவுணர்வு, சுயமரியாதை எல்லாம் இழந்து எந்த காங்கிரஸை வேரறுக்க அந்த இயக்கம் தொடங்கப்பட்டதோ அந்த காங்கிரஸின் பாதாரவிந்தங்களே சரணம் என்று சரணடைந்துவிட்டது. பாலிவினைல் போர்டுகளின் புகைப்படங்களில் மட்டுமே மீசை முறுக்கித்திரியும் திருமாவளவனும் திமுகவைத் தொடர்ந்து காங்கிரஸின் முகாமுக்குள் அடைக்கலமாகிவிட்டார்.<br />
<br />
பார்ப்பனத்தாரகை ஜெயலலிதா சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் திடீர் 'ஈழத்தாயாக' அவதரித்துப் பார்த்தார். அந்தத் தேர்தலுக்குப்பின் அந்த அவதாரம் பல்லிளித்துப்போனது. ஆனாலும் துரோகிகளை ஒழித்துக்கட்டினால் எதிரிகளுக்கு முகம் கொடுப்பது எளிதாக இருக்கும் என்ற வியூகத்தில் ஒரு பகுதி தமிழுணர்வாளர்கள் இந்தத் தேர்தலிலும் அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். "பிரபாகரனைத் தூக்கில் போடு" என்று தீர்மானம் நிறைவேற்றிய ஜெயாவை ஆதரிப்பதுதானா தமிழுணர்வு என்று எதிர்த்தரப்பு கேலிபேசத் தொடங்கியது. தாங்கவியலா மனவலியுடனேயே தமிழுணர்வாளர்கள் திமுகவை வீழ்த்தும் ஆயுதம் ஜெயாதான் என்ற யதார்த்தக்கசப்பை விழுங்கிக்கொண்டு களத்தில் நின்றனர்.<br />
<br />
ஆகக்கூடி தேர்தல் தேர் தெருவெல்லாம் சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தேவிட்டது. எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இனி வழக்கம்போலவே பழைய காட்சிகள் புத்தம்புது ஈஸ்ட்மென் கலரில் மீண்டும் அரங்கேற்றம் செய்யப்படும். மீனவர்கொலைகளும், தமிழர்களின் வாழ்வியல் சூறையாடப்படுதலும் சிந்துபாத்தின் கன்னித்தீவுக்குப் போட்டியாக தினம்தினம் தொடரும். ஆள்வோரின் 'அலகிலாத் திருவிளையாடல்களில்' நாளொரு ஊழலும், பொழுதொரு லஞ்சலாவண்யமும் நடந்தேறிக்கொண்டே இருக்கும்.<br />
<br />
ஆனால் இந்தத் தேர்தலில் தமிழுணர்வு, இனப்பற்று இவற்றை முன்னிறுத்திப் போராடிய தமிழுணர்வாளர்களுடைய பணி இனிதான் துவங்குகின்றது. கலை, பண்பாடு, அன்றாட வாழ்வியல் என எல்லாவகைகளிலும் நம்மைச் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கும் கும்பலுக்கு ஒரு முடிவுரை எழுதும் பணி!<br />
<br />
மறுமலர்ச்சி திமுகவானாலும் சரி, 'நாம் தமிழர்' இயக்கமானாலும் சரி, நெடுமாறன், தியாகு, தாமரை, பெரியார் தி.க, தமிழ்த் தேசிய பொதுவுடைமைக்கட்சி, மே பதினேழு இயக்கம் என்று பல்வேறு பெயர்களில் பல்வேறு திசைகளில் பயணப்படும் தமிழுணர்வாளர்கள் இப்போதுமுதல் ஒருங்கிணைக்கப்படவேண்டும்.<br />
<br />
இவர்கள் ஒவ்வொரு இயக்கத்தின் கொள்கைகளும், வழிமுறைகளும் முரண்படலாம். தேர்தல் அரசியலில் ஈடுபடும் இயக்கமாக ஒன்று இருக்கும்; தேர்தல் மறுப்பு அரசியல் செய்யும் இயக்கமாக ஒன்று இருக்கும்; பெரியாரின் சிந்தனைகளைப் பரப்புரை செய்வதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதுமாக ஒன்று இருக்கும்; மார்க்சிய அரசியலைப் பேசுவதாக ஒன்று இருக்கும்; பெரியாரையும், மார்க்சையும் இணைத்துச் செயல்படும் இயக்கம் ஒன்று இருக்கும்; இன அழித்தொழிப்புக்கு ஆளான ஈழச் சொந்தங்களின் இழிநிலைக்கு நியாயம் கேட்பதாக ஒன்று இருக்கும்!<br />
<br />
ஆறுகள் பிறக்கும் இடமும், நிலமெல்லாம் செழிக்கச்செய்து பயணப்படும் பாதைகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் ஒன்று சேர்வது ஒரே கடல்தான். இயக்கங்களின் கொள்கைகளும், நடைமுறைகளும், போராட்டமுறைகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் இவர்களின் முதலும் முக்கியமுமானதான இலக்கு தமிழர் வாழ்வு, தமிழர் நலன் என்பதாகவே இருக்கின்றது. ஆனால் நெல்லிக்காய் மூட்டையாக சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழுணர்வாளர்களும் ஒரு கூட்டமைப்பின்கீழ இணையவேண்டும். ஒரு இயக்கம் இன்னொன்றுக்காக எந்த சமரசமும் செய்துகொள்ளத் தேவையில்லை. ஆனால் பொதுவான நோக்கத்தின் அடிப்படையில் ஒரு செயல்திட்டம் அமைத்துச் செயல்படவேண்டும்.<br />
<br />
இன்றைய நாடாளுமன்ற சனநாயக அரசியலில் தேர்தலின்மூலம் அதிகாரத்துக்கு வருவது என்பது தவிர்க்கமுடியாத அம்சமாகிவிட்டது. மக்களின் அங்கீகாரத்துக்கு அதுவே சிறந்த மற்றும் ஒரே வழியாக இருக்கின்றது. எனவே அனைத்துத் தமிழுணர்வாளர்களின் கூட்டமைப்பு அடுத்த தேர்தலில் யாராலும் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுக்கவேண்டும்.<br />
<br />
தமிழினத்தின்மேல் காலங்காலமாகத் தொடுக்கப்பட்டுவரும் பண்பாட்டு அழிப்புத் தாக்குதலை, இப்போது பார்ப்பனீயத்தோடு சேர்ந்து உலகமயமாக்கலும், ஏகாதிபத்தியங்களும் மிகத்தீவிரமான அளவில் செய்து வருகின்றன. எதிரிகளின் ஒருங்கிணைவு வலுவாக இருக்கின்றது. அதற்கெதிரான விழிப்புணர்வை ஒவ்வொரு தமிழனிடமும் ஏற்படுத்தவேண்டும். எமது கலைகளும், வாழ்வியலும், குன்றாத பண்பாட்டுவளங்களும் மீட்டெடுக்கப்பட்டு செழுமைப்படுத்தப்பட வேண்டும்.<br />
<br />
நாள்தோறும் நம்முன்னே நிற்கின்றன புதிய புதிய போராட்டங்கள்! எதிர்கொள்ளும் வலிமையும், நட்புச் சக்திகளுடனான ஒருங்கிணைப்பும் இல்லாவிட்டால் நாம் இனிவரப்போகும் காலங்களிலும் 'புல்லுக்கு மட்டுமே நீர்பாய்ச்ச' வேண்டிய பரிதாபகரமான நிலையில் இருப்போம்.<br />
<br />
தோழர்களே! இந்தத்தேர்தலில் தமிழுணர்வாளர்களின் போராட்டம் விழலுக்கிறைத்த நீரென மாறலாம்! வெற்றியின் பலன்களை வீணர்கள் ருசிக்கலாம்! ஆனால்...<br />
<br />
இரண்டாம் உலகப்போரின்போது வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன வாசகத்தை நான் நினைவுபடுத்துகிறேன்...<br />
<br />
"நாம் களங்களை இழக்கலாம்! யுத்தத்தை அல்ல!"<br />
</div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-51199445043115408802011-04-12T23:06:00.000+05:302011-04-12T23:06:42.762+05:30புணர்தலும் புணர்தல் நிமித்தமும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNUw2oj-2yBGMWck2xaVAq5sT73TWoq4JhIGsmJ9z4TWTwDQq97ttoLSYko3f3Xf2rj4M2GkWOmQ9a4H_mSIC84qjIV1wo3XpWT-0RFEX-rwGzdNsxyFcEVv6lAY4GdxjELTQLuKmq5Kc/s1600/masterbation_by_canoodlecake-d3bcz9s.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNUw2oj-2yBGMWck2xaVAq5sT73TWoq4JhIGsmJ9z4TWTwDQq97ttoLSYko3f3Xf2rj4M2GkWOmQ9a4H_mSIC84qjIV1wo3XpWT-0RFEX-rwGzdNsxyFcEVv6lAY4GdxjELTQLuKmq5Kc/s640/masterbation_by_canoodlecake-d3bcz9s.png" width="480" /></a></div><span class="Apple-style-span" style="color: #222222; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; font-size: 13px; line-height: 18px;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="color: #222222; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; font-size: 13px; line-height: 18px;">புணர்ச்சியைவிட சுவாரஸ்யமானவை<br />
அது பற்றிய கற்பனைகள்<br />
<br />
பதின்பருவச்<br />
சுயமைதுனங்களின் இறுதியில்<br />
எப்போதும்<br />
எட்டிப் பார்க்கும்<br />
துளி கண்ணீர்<br />
<br />
"படத்தோட இருவது ரூவா"<br />
"படமில்லாம பத்து ரூவா"<br />
ரோட்டுப் புத்தகங்கள்...<br />
கதைகளின் நீதி<br />
"தவறுக்கு வருந்துகிறேன்"...<br />
<br />
"புள்ளிராஜா"க்களின்<br />
பயமுறுத்தல்களிலும்<br />
ஆணுறை வாங்க அச்சத்திலும்<br />
காற்றில் பீய்ச்சப்பட்டு<br />
கழிந்துபோயின கல்லூரிக்காலங்கள்<br />
<br />
'வாலிப வயோதிக<br />
அன்பர்களை'த் தேடும்<br />
விடுதி வைத்தியர்களும்<br />
<br />
'அது மிகப் புனிதமானது'<br />
கட்டுரைகளின் நாயகர்களும்<br />
<br />
காம்புகள் மட்டும் மூடப்பட்ட<br />
"கவர்ச்சி தப்பில்லை" பேட்டிகளும்<br />
<br />
கனவுகளின் சன்னல்களைத்<br />
திறப்பதுவும் மூடுவதுமாய்....<br />
<br />
பிறிதொருநாள்...<br />
<br />
அரையிருட்டின் ஐந்தாம் நிமிட<br />
இறுதியில்<br />
தோன்றியது<br />
<br />
இந்தக் கவிதையை எழுத...<br />
<br />
புணர்ச்சியைவிட சுவாரஸ்யமானவை<br />
அது பற்றிய கற்பனைகள்...</span></div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-79830065708486922782011-04-11T09:49:00.000+05:302011-04-11T09:49:34.999+05:30வாங்களேன் கொஞ்சம் அரட்டை அடிக்கலாம்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrOV16L5eBKesxqtiXvpPmHz3N0noxgcUu2uyWgj8sV6hMGvhcWUpa5smIh3LM6KZ8hOzeIJrW6SakRjSSfVnRreNenFZvwPrcORMdX1zROVdHCJc6DbKKFOUEuy4uROGHNGHaJ-qPfd4/s1600/mv1.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="298" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrOV16L5eBKesxqtiXvpPmHz3N0noxgcUu2uyWgj8sV6hMGvhcWUpa5smIh3LM6KZ8hOzeIJrW6SakRjSSfVnRreNenFZvwPrcORMdX1zROVdHCJc6DbKKFOUEuy4uROGHNGHaJ-qPfd4/s400/mv1.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Merchant of venice<br />
</td></tr>
</tbody></table><br />
<br />
நான் ஒன்றும் நிரம்பப்படித்த மேதாவியோ, படைப்பாற்றல் மிக்க இலக்கியவாதியோ அல்லன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில முத்துச் சிதறல்களைக் கண்டு அவற்றின் மின்னற்கீற்றுகளில் மனதைப் பறிகொடுத்து மயங்கி நிற்கும் எளியவன். எனக்குக் கவிதை பிடிக்கும். காதலியின் முத்தம் போல, கவிதைகளில் கிறங்கப் பிடிக்கும். சின்னச்சின்ன கற்பனைகளில், கவிதைக்கீற்றுகளில் வாழ்வெனும் புதையல் ஒளிந்திருக்கின்றது என்றெண்ணி மகிழப் பிடிக்கும். எனக்குப் பிடித்த, என்னைக் கிறுக்குப் பிடிக்கவைத்த சிற்சில கவிதை வரிகளைப் பகிர்வதுடன் எனது தமிழ்மண நட்சத்திரவாரத்தைத் துவங்கலாம் என்று நினைக்கிறேன்<br />
<br />
1) என் எட்டாம் வகுப்புத் தமிழாசிரியர் பக்கிரிசாமி அவர்கள் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது இராமாயணம் பற்றி வேடிக்கையாகச் சொல்வார் "எலேய்! ராமாயணம் ஒண்ணும் பெரிய புண்ணாக்கெல்லாம் இல்ல. அந்தக்காலத்துல பயலுவ நம்மள ஏமாத்த கட்டிவுட்ட கதெதாண்டா அது, சுருக்கமா ரெண்டே வரில சொல்றேம்பாரு ராமாயணக்கதெய... ராமன் பொண்டாட்டிய ராவணன் தூக்கிட்டுப் போனான்; அடிச்சிப்புடிச்சி அனுமாரு கொண்டுவந்தான். அவ்ளோதாண்டா". தீவிர பெரியாரிஸ்ட்டான அவர் வாயில் புகுந்து எழும் புராணப்பாத்திரங்களுக்கு உயிர் மட்டும் இருந்திருந்தால் எத்தனைமுறை வேண்டுமானாலும் 'நாண்டுகிட்டு' செத்துப்போகும்.<br />
<br />
கொஞ்சம் விவரம் புரிந்தபிறகு ஒருசில கம்பராமாயணப்பாடல்களைப் படித்தபோது கம்பனில் மயங்கிநின்றேன். "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" என்பது பொய்மொழியன்று!<br />
<br />
<br />
"அஞ்சிலே ஒன்று" எனத்துவங்கும் பாட்டில்<br />
<br />
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி<br />
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி<br />
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்<br />
அஞ்சிலே ஒன்றுவைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் "<br />
<br />
பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவின் மைந்தனான அனுமன், பஞ்சபூதங்களில் ஒன்றான விசும்பின் வழியே பஞ்சபூதங்களில் ஒன்றான கடலைத்தாவி, பஞ்சபூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாதேவியைக்கண்டு, தென்னிலங்கை நாட்டில் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை வைத்தான். அவன் நம்மைக் காப்பான் என்பது பொருள்.<br />
<br />
இந்த வார்த்தைச் சித்துவிளையாட்டு உங்களை மயக்குகிறதா இல்லையா?<br />
<br />
இன்னொரு பாடல்! இராம இராவணப்போரின் இறுதிநாள். இராமனது அம்பால் இராவணன் துளைக்கப்பட்டு களத்திலே வீழ்ந்து கிடக்கிறான். இராவணன் மாவீரன். முன்னொரு காலத்தில் அவன் தவம் செய்தபோது சிவன் தன்முன்னே தோன்றவில்லை என்பதற்காக கைலாய மலையையே அப்படியே பெயர்த்து தன் தோள்களில் தூக்கிய பலசாலி. பிறன்மனைமேல் கொண்ட காதலால் வீழ்ந்தவன். அவனை ஊடுருவிச் சென்ற இராமனது அம்பு அவனது உயிரை மட்டும் குடிக்கவில்லையாம்! வேறென்ன செய்கிறது? ஒரு எள் இருக்கின்ற மிகச்சிறிய இடம் கூட மிச்சம் வைக்காமல் அவன் உடலைத் துளைத்திருந்த இராமபாணமானது அவன் உடலின் உட்புகுந்து தேடிப்பார்க்கிறதாம்! எதை? சீதைமேல் அவன்கொண்ட காதல் அவனுக்குள் எங்காவது மிச்சம் இருக்கின்றதா என்று அலசி ஆராய்ந்து பார்க்கிறதாம்!<br />
<br />
இப்போது இந்தப்பாடலைப் படித்துப் பாருங்கள்!<br />
<br />
"வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்<br />
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி - இழைத்தவாறோ !<br />
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்<br />
உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி "<br />
<br />
2) எனக்கும் வாழ்க்கைக்கும் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது ஒரு சூதாட்டம். அவ்வப்போது வெல்வதும், தோற்பதுவுமாக நடக்கும் இந்த ஆட்டத்தின் ருசியில் ஊறிப்போய்க் கிடக்கிறது மனது. சூதாட்டத்தின் ஜோக்கராக என்னையே மாற்றிக் கொள்கிறது வாழ்க்கை சில பொழுதுகளில். எதனைப் பெறுவதற்காக இந்த ஆட்டத்தை நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்? என் எல்லா உடைமைகளையும் பணயம் வைக்கச்சொல்லி என்னைத் தூண்டுவது எது? "ஆட்டக்களத்தில் கேள்விகளுக்கு இடமில்லை. யுத்தம் செய் அல்லது செத்துப்போ" என்று கொக்கரிக்கிறது வாழ்க்கை. நானும் அதையே வேண்டுகிறேன் "வெற்றியின் ருசி தெரியாமல் வெறுமனே மூச்சு விடுவதால் மட்டுமே என் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. எனக்குத் தேவை வெற்றியின்பின் மகுடம் சூட்டும் கரங்களே! கண்ணீர் துடைக்க அல்ல!" என்று யுத்தபேரிகை முழக்குகிறேன்.<br />
<br />
மனுஷ்யபுத்திரனின் இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்! உங்கள் நாடி நரம்புகளில் எதோ ஒரு உத்வேகம் பாய்கிறதல்லவா?<br />
<br />
உரியதைக் கொடு<br />
************************<br />
<br />
நான் வெற்றி பெற இயலாது<br />
என்பதே<br />
உன் முடிவானால்<br />
<br />
வாழ்க்கையே<br />
என்னைத் தோற்கடித்து விடு<br />
<br />
திட்டவட்டமாக<br />
யாவரும் அறியும்படி<br />
என் தோல்வியை உரத்துச் சொல்<br />
<br />
ஒரு மூட்டைப் பூச்சியை<br />
நசுக்குவது போல<br />
நசுக்கித் தடவு<br />
<br />
விழுங்கி<br />
வாயைத் துடைத்துக் கொண்டு போ<br />
உன்னிடம் எனக்கென்ன வருத்தம்?<br />
<br />
ஆனால்<br />
தயவு செய்து கொடுக்காதே<br />
ஆறுதல் பரிசுகளை மட்டும்<br />
<br />
ஏதோ கிடைத்ததே<br />
என்று போக<br />
இது பிரார்த்தனையல்ல<br />
சண்டை<br />
<br />
3) பல வருடங்களுக்கு முன்னர் என் ஆங்கில ஆசிரியர் செல்வராஜ் அவர்கள் ஷேக்ஸ்பியரின் 'மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்' நாடகத்தின் ஆங்கிலம், தமிழ் இரண்டு பதிப்புகளையும் கொடுத்து என்னைப் படிக்கச் சொல்லி இருந்தார். தமிழாக்கத்தில் ஒரு கவிதை என்னை கட்டிப்போட்டது.<br />
<br />
ஷைலாக் என்னும் வட்டித்தொழில் செய்யும் யூதன் தனது எதிரியான ஆண்டனியோ என்பவன் தனக்குத்தர வேண்டிய தொகைக்குத் தாமதமானதால் வழக்குமன்றம் செல்கிறான். அவனது வாதங்களாக அவன் சொல்லும் வசனம் அது. வில்லன் பாத்திரமாக இருக்கும் ஷைலாக் தனது தரப்பு நியாயங்களைப் பட்டியலிடும்போது ஒரு யூதனாக தான் எவ்வாறெல்லாம் , அவமானப் படுத்தப் படுகிறேன், எவ்வாறெல்லாம் ஒடுக்கப்படுகிறேன் என்று அடுக்குகிறான்:<br />
<br />
"நானொரு யூதன். ஒரு யூதனுக்கு கண்கள் இல்லையா? எனக்கும் உம்மைப்போல கைகளும், கால்களும், அங்கங்களும், உணர்ச்சிகளும், விருப்புவெறுப்புகளும், பந்தபாசங்களும் இல்லையா? நீங்கள் உண்ணும் அதே உணவைத்தான் நானும் உண்கிறேன். உங்களைக் காயப்படுத்தும் அதே ஆயுதங்கள் என்னையும் காயப்படுத்தும். உங்களைப்போலவே எனக்கும் நோய்களும் வரும். உங்களைக் குணப்படுத்தும் மருந்து என்னையும் குணப்படுத்தும். உங்களுக்காக வருகின்ற வசந்தகாலமும், கோடையும் எனக்கும் சேர்த்தே வருகின்றன. என் உடலைக் குத்தினால் உம்மைப்போலவே எனக்கும் ரத்தம் கசியும். உம்மைச் சிரிக்கச் செய்பவை என்னையும் சிரிக்கச் செய்யும். நீவிர் விஷம் ஊட்டினால் நான் சாகத்தான் செய்வேன். ஏனெனில் நானும் உம்மைப்போலவே மனிதப்பிறவியே! நீங்கள் எம்மைத் துன்புறுத்தினால் நான் பழிவாங்கக்கூடாதா? நானும் உம்மைப்போல் ஒரு மனிதனே! உமக்குப் பொதுவான எல்லாம் எனக்கும் பொதுவாகவே இருக்கின்றன..." என்று ஷைலாக்கின் வாதங்கள் நீள்கின்றன.<br />
<br />
"Hath<br />
not a Jew eyes? hath not a Jew hands, organs,<br />
dimensions, senses, affections, passions? fed with<br />
the same food, hurt with the same weapons, subject<br />
to the same diseases, healed by the same means,<br />
warmed and cooled by the same winter and summer, as<br />
a Christian is? If you prick us, do we not bleed?<br />
if you tickle us, do we not laugh? if you poison<br />
us, do we not die? and if you wrong us, shall we not<br />
revenge? If we are like you in the rest, we will<br />
resemble you in that. If a Jew wrong a Christian,<br />
what is his humility? Revenge. If a Christian<br />
wrong a Jew, what should his sufferance be by<br />
Christian example? Why, revenge. The villany you<br />
teach me, I will execute, and it shall go hard but I<br />
will better the instruction"<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><object width="320" height="266" class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://0.gvt0.com/vi/T_5adzpdkdw/0.jpg"><param name="movie" value="http://www.youtube.com/v/T_5adzpdkdw&fs=1&source=uds" /><param name="bgcolor" value="#FFFFFF" /><embed width="320" height="266" src="http://www.youtube.com/v/T_5adzpdkdw&fs=1&source=uds" type="application/x-shockwave-flash"></embed></object></div>அன்று யூத இனம்! இன்று தமிழினம்! இனத்தால், மொழியால் தமிழனாய் இருக்கும் ஒரே பாவத்துக்காக ஈழத்தில் அழிக்கப்படும் தமிழினத்திற்கு இந்த வரிகளைப் பொருத்திப் பாருங்கள்! தானாடாவிட்டாலும் தன் சதையாடவில்லையா நமக்கு? வாழ்வுரிமை அனைத்தும் அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட ஓர் இனத்துக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?<br />
<br />
குறைந்தபட்சம் நம்மால் ஆகக்கூடியது சிங்களப்பேரினவாதத்தின் இனப்படுகொலைகளுக்குப் பங்காளியாய் நின்றிருந்த காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து வேரறுப்போம். பதவி சுகத்தில், அதிகாரப் பசியில் , ஆனிப்பொன் மஞ்சத்தில் மல்லாந்திருப்பதற்காய் இன அழித்தொழிப்புக்கு காங்கிரஸின் காலை நக்கித் துணைநின்ற திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!<br />
</div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com29tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-15762516908716142342011-04-04T01:57:00.001+05:302011-04-04T08:16:57.420+05:30நான்...கிரிதரன்! - 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo0ryVeX6-563ULvOK5t4Cdc8duGAcn76hmnHkN6_PdCxqavRj0twIZcYIxgn8cjxUYFgTizic4jp25wYkOnSrgwzvQlL8zborVPbR9dp_UwB9a8FlEHPvmirguS-ofJOV_9MjPCk34Sg/s1600/playboy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo0ryVeX6-563ULvOK5t4Cdc8duGAcn76hmnHkN6_PdCxqavRj0twIZcYIxgn8cjxUYFgTizic4jp25wYkOnSrgwzvQlL8zborVPbR9dp_UwB9a8FlEHPvmirguS-ofJOV_9MjPCk34Sg/s640/playboy.jpg" width="484" /></a></div>ட்ரம்மில் அடுத்த லோடு தோல்களை ஏற்றிக் கொண்டிருந்தான் முரளி. சுறுசுறுப்பான பையன். மதியம் ஒரு மணியில் தொடங்கி இரவு மணி இரண்டு ஆகியும் துறுதுறுவென்று வேலை செய்துகொண்டிருக்கிறான். எனக்கு கண்கள் இரண்டும் கோவைப்பழமாகச் சிவந்து எரிந்துகொண்டிருந்தன. தொடர்ந்து முப்பத்தி ஆறு மணி நேரமாக ரூமுக்கே போகாமல் கண்டினியூவஸ் ஷிப்ட். மதியம் தின்ற அரை வேக்காட்டு லெமன் சோறு செரிக்காமல் வயிற்றோடு யுத்தம் செய்து கொண்டிருக்கின்றது.<br />
<br />
ஓரமாய் வந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தேன். கொஞ்சம் என் முன்கதைச் சுருக்கத்தைச் சொல்லி விடுகிறேன்.<br />
<br />
அது சென்னையின் ஒதுக்குப்புறமாக குரோம்பேட்டைப் பகுதி நாகல்கேணியில் இருந்த ஒரு சின்ன லெதர் ஃபேக்டரி. பதப்படுத்தப்பட்ட தோல் அதாவது ரா மெட்டீரியலை பர்ச்சேஸ் செய்து அதன் அடுத்தகட்ட ப்ராசஸை மட்டும் எடுத்துச் செய்யும் ஒரு ஜாப் வொர்க் யூனிட். இரவு பகல் இருபத்திநாலு மணிநேரமும் மூன்று ஷிப்டுகளை ஓட்டினால்தான் போட்ட முதல் கைக்குத் திரும்ப வரும். அரசாங்கத்தின் பொல்யூஷன் கண்ட்ரோல் போர்டின் கிடுக்கிப்பிடிகளால் தோல்பதனிடும் தொழில் நசித்துப் போய்க் கொண்டிருந்த காலகட்டம்.<br />
<br />
நான் கிரிதரன். தஞ்சை மாவட்டத்தின் ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, முட்டிமோதி ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக் லெதர் டெக்னாலஜி படித்துமுடித்து இப்போது ஆயிரத்தி எண்ணூறு ரூபாய் சம்பளத்துக்கு இந்தக் கம்பெனியில் ட்ரெய்னீ டெக்னீஷியனாகச் சேர்ந்து நாற்பத்தியிரண்டு நாள்களாகின்றன.வீட்டில் இருந்து வாங்கிவந்த எட்டாயிரம் ரூபாயை வைத்து ஒரு சிறிய வீட்டை வாடகைக்குப் பிடித்து நானும் என் நண்பனும் தங்கி இருக்கிறோம்.<br />
<br />
இருபத்தியிரண்டு வயதில் எனக்கு வாழ்க்கை புரிய ஆரம்பித்திருக்கிறது. எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என் பெற்றோர் எனக்கு வறுமையைக் காட்டியதில்லை. ஓரளவு மதிப்பெண்களுடன் வாணியம்பாடியின் அந்த தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் லெதர் டெக்னாலஜி சேர்ந்தபோது என்னை பயமுறுத்திய இரண்டு விஷயங்கள் ஆங்கிலம், மிக சகஜமாய்ப் பழகும் பெண்கள். இரண்டுமே எனக்குக் கைவரும்போது நான் இறுதியாண்டில்! பிடிவாதன், மூர்க்கன், நினைத்ததை எப்பாடுபட்டாவது அடையவேண்டும் என்ற வெறியுடையவன். ஐந்தரை அடி உயரம், கருப்பு நிறம், லேசான திக்குவாய். இதுதான் நான்.என்னைப்பற்றி இன்னும் நீங்கள் போகப்போகத் தெரிந்து கொள்வீர்கள்.<br />
<br />
ஜெனரல் ஷிப்ட் என்றுதான் பேர். எட்டுமணிக்குப் போனால் ரூமுக்குத் திரும்ப இரவு பதினோரு மணியாகிவிடும். மடிப்புக் குலையாத உடுப்புடன் வேலை, பல ஆயிரங்களில் சம்பளம் என்றெல்லாம் கனவுகளோடு எஞ்சினியரிங் காலேஜுக்குள் நுழைந்த நாட்கள் மனதில் புகைபடிந்த பழைய புகைப்படம் போல் ஆகிவிட்டன. கம்பெனிக்குள் நுழைந்தவுடனேயே மாற்று உடுப்புக்களை போட்டுக்கொண்டு அன்றைய லோடினை ட்ரம்மில் ஏற்றுவதற்கான ஆயத்தங்களைச் செய்யவேண்டும். ட்ரம்மில் ஓட்டுவதற்கான கெமிக்கல்களை செலக்ட் செய்து அவற்றை தனித்தனி பக்கெட்டுகளில் ஊற்றி மிக்ஸ் செய்து ட்ரம்மில் ஏற்றப்பட்ட தோலுடன் கலந்துவிட்டு, அடுத்தடுத்து க்வாலிட்டி கண்ட்ரோலுக்காகக் காத்திருக்கும் தோல்களைப் பார்க்க ஆரம்பித்தால், முடிப்பதற்குள் ட்ரம் ஓடி முடிந்திருக்கும். இறக்கி அவற்றைக் காயவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். மீண்டும் அடுத்த லோடு, அடுத்த ட்ரம், கெமிக்கல்கள்.<br />
<br />
நான் படித்த லெதர் டெக்னாலஜி துறையில் வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருந்த காலகட்டம். எப்படியோ முட்டிமோதி இந்த கம்பெனியில் வேலையில் சேர்ந்தாகிவிட்டது. இப்படியே இன்னும் இரண்டு வருடங்களை ஓட்டினால் அடுத்தடுத்து சின்னச்சின்னதாக வளர்ச்சிகள், அடுத்தடுத்த கம்பெனி... முப்பது வயதை நெருங்கும்போது ஒரு முப்பது அல்லது முப்பத்தைந்தாயிரத்தைத் தொடும் சம்பளம்... யோசிக்கவே அயர்ச்சியாய் இருந்தது. எத்தனை கனவுகள்! எல்லாம் கசங்கிப்போய் இன்று இந்தக் கம்பெனியில்..... படிப்பதற்காக வாங்கிய மூன்று லட்சம் ரூபாய் கடனும், அதற்கான வட்டியும் நினைவுகளில் வந்துவந்து அழுத்திக்கொண்டே இருக்கின்றது<br />
<br />
எனக்கு வாய்த்த ஷிப்ட் சூப்பர்வைசர் ஆனந்தன் என்கிற சனியனின் டார்ச்சர் வேறு. தலையில் கருங்கல்லைத் தூக்கிப்போட்டுவிடலாமா என்று தோன்றும். சுமார் இருபது பேர் வேலைபார்க்கும் இந்த கம்பெனியில் அவன் கண்ணுக்கு நான் மட்டும்தான் உறுத்துகிறேன் போல! டிப்ளமோ படித்துவிட்டு சூபர்வைசராக இருக்கும் அவன் வேலைக்கு டிகிரி படித்த நான் சவாலாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்று இல்லைதான். கூடுதலாக இன்னொரு காரணமும்....<br />
<br />
பத்மினி!<br />
<br />
நாட்டுக்கட்டை, நாட்டுக்கட்டை என்பார்களே, இவளைப்பார்த்தால் அதன் முழு அர்த்தமும் விளங்கும். கருந்தேக்கு மரத்தில் கடைந்தெடுத்த சிற்பம்போல் இருப்பாள். இருபது வயது. கல்யாணமாகி இரண்டு வருஷம் ஆகிறது. புருஷன் குடிகாரன். இரண்டு பாட்டில் சாராயம் இருந்தால் பெற்ற தாயாரைக்கூட விற்றுவிடுவான். பத்மினியின் இரவுகள் கண்ணீரில் மிதந்தன.<br />
<br />
நான் இந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த நான்காம் நாளில் பத்மினி என்னை அவளுக்குள் உறிஞ்சிக்கொண்டாள். அவள் தாபத்திற்கு நானா, இல்லை என் காமத்துக்கு அவளா என்று தெரியவில்லை. ஸ்டோர் ரூமிலும், மொட்டைமாடி இரவுகளிலும், அவளது ஒதுக்குப்புறக் குடிசையிலும் முப்பது சொச்சம் நாட்கள் கரைந்து காணாமல் போயின.<br />
<br />
சிகரெட்டை காலின்கீழ் நசுக்கி உள்ளே நுழைந்தேன்.<br />
<br />
என்னைப் பார்த்தவுடன் ஏதோ எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்த பத்மினி அருகே வந்தாள்.<br />
<br />
ஒரு சின்ன பக்கெட்டில் அந்த லோடுக்குத் தேவையான கெமிக்கல்களை எடுத்து பத்மினியிடம் நீட்டினேன். பக்கெட்டை வாங்குவதற்குப் பதிலாய் புடவை முந்தானை விலகி அருகில் வந்து "என்ன இன்னைக்கு கண்டுக்கவே மாட்டேன்கிறீங்க?" என்று லேசாய் உரசினாள். சட்டென அவளைத் தள்ளி விட்டேன். அவள் முகம் சுருங்கியது. சட்டென அவள் முகம் வாடியதைப் பார்த்து.. “முப்பது மணி நேரம் தொடர்ந்து வேலை பாத்திட்டிருக்கேன்.. புரியாம உரசுறியே.."<br />
<br />
"புரிஞ்சிதான் உரசினேன்..." என்று முணுமுணுத்துக்கொண்டே அவள் நகர...<br />
அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்<br />
<br />
கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து இன்றுவரை எனக்கு இருந்த ஒரே வடிகால் பத்மினிதான். என் கோபம், வெறி, மன அழுத்தம் எல்லாவற்றையும் இவள் உடலில்தான் இறக்கி வைக்கிறேன். அன்புக்கும் பகிர்தலுக்கும் ஏங்கும் ஜீவன். கிடைத்தவுடன் கன்றுக்குட்டிபோல துள்ளிக்குதிக்கிறாள். 'அவளைப்போய்த் திட்டி...ச்சே...'<br />
<br />
அடுத்தடுத்து ஆக வேண்டிய வேலைகளைப் பார்த்து முடித்து நிமிர்ந்தேன். இன்னும் அரைமணிநேரம் ஓய்வெடுக்கலாம். 'சரி...பத்மினியையாவது சமாதானப்படுத்தலாம்' என்றெண்ணி...<br />
<br />
"பத்மினி... எனக்கு டீ எடுத்துட்டு வா" என்றேன்<br />
<br />
டீ கொண்டுவந்தவளோடு பேசிச் சிரித்துக் கொண்டே ஊதிக்குடிக்கத் தொடங்கினேன்.<br />
<br />
"என்னடி மூஞ்செல்லாம் இன்னிக்கு ரொம்ப பளபளப்பா இருந்திச்சி. புருஷன் செமையா கவனிச்சானோ!" என்று அவளை வம்பிழுத்தேன்.<br />
<br />
"அவன் கிழிச்சான். நாலு கிளாஸ் சாராயத்தை எறக்குனா அவனுக்கு எது எங்க இருக்குன்னே தெரியாது... அப்புறம் என்னத்தைப் பண்ணி...."<br />
<br />
லோடு ஆர்டருக்கு வெளியே போயிருந்த ஷிப்ட் சூபர்வைசர் ஆனந்தன் உள்ளே நுழைந்தான். பத்மினியை மடக்க முயன்று தோற்றதால் ஏற்கனவே அவனுக்கு இருந்த இயலாமையின் எரிச்சல் இப்போது எங்கள் இருவரையும் சேர்ந்து பார்த்ததில் அவனுக்கு அதிகமாகி இருக்கவேண்டும்<br />
<br />
"ஏய் கிரி இங்க வா."<br />
<br />
ரூமுக்குள் கூப்பிட்டவனை எரிச்சலாய் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.<br />
<br />
"எத்தனாவது லோடு ஓடிட்டு இருக்கு"<br />
<br />
"மூணாவது லோடு இப்பத்தான் சார் ஏத்தியிருக்கேன். இன்னும் டூ அவர்ஸ் ஆகும்"<br />
<br />
"வேலையப் பாக்காம என்ன அவகிட்ட புடுங்கிகிட்டு இருக்கே? எப்ப பாத்தாலும் கைல புடிச்சிக்கிட்டே திரிவியோ?"<br />
<br />
எனக்கு சுர்ரென்று ஏறியது. கையில் இருந்த டீ தம்ளரை அவன் முகத்தில் விசிறினேன். சுடச்சுட அலறினான்.<br />
<br />
"ங்கோத்தா. சூபர்வைசர்னா அந்த வேலைய மட்டும் புடுங்கு போதும். என் வேலைய நான் ஒழுங்கா செய்யலன்னா அத மட்டும் கேளு. நான் எவகிட்ட படுக்கிறேன், எவகிட்ட இளிக்கிறேன்னு மாமா வேலை பாக்குற வேலையெல்லாம் வேணாம். போடா நீயும் உன் கம்பெனியும்"<br />
<br />
சூபர்வைசர் ரூமை விட்டு வெளியே வந்த என்னை பத்மினி திகிலாய்ப் பார்த்தாள். என் பேகை எடுத்துக்கொண்டு வெளியேறினேன்.<br />
<br />
(பயணம் தொடரும்...)</div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-11733352902448273552011-03-31T04:08:00.001+05:302011-03-31T10:17:00.520+05:30விலக்கப்பட்ட கல்லே வீட்டுக்கு மூலைக்கல்லாயிற்று ( வைகோ பற்றிய பார்வை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixv1-N8OjnEE1HJdnbzjdvTFipU6zx4Pv2l9qNKbbPuLuInXdVZ3rOhSnhT0ERKsCok-AlzHtkYTkQeeqYOvdTyXQcO6_YUz1epDqTPysR3lM737CObJ7WeTddjNY2iELM3VJyJwcFSFE/s1600/Graf_Anderssen_Last_Stand_by_Rufus_Jr.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixv1-N8OjnEE1HJdnbzjdvTFipU6zx4Pv2l9qNKbbPuLuInXdVZ3rOhSnhT0ERKsCok-AlzHtkYTkQeeqYOvdTyXQcO6_YUz1epDqTPysR3lM737CObJ7WeTddjNY2iELM3VJyJwcFSFE/s640/Graf_Anderssen_Last_Stand_by_Rufus_Jr.jpg" width="500" /></a></div>தமிழக அரசியல்களம் முன்னெப்போதையும் விட பல விசித்திரக்காட்சிகளைக் கண்டு வியந்து நிற்கிறது. தேர்தல் கூட்டணி என்பது கொள்கைக்கூட்டணியல்ல, வெறும் கொள்ளைக்கூட்டணியே என்பதை பிரதான அரசியல்கட்சிகள் அனைத்துமே மெய்ப்பித்து அம்மணமாகி நிற்கின்றன. ஒருபுறம் "காங்கிரஸ் செய்வது நியாயமா?" என்று வீராவேசத்துடன் முழங்கி மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக ஓர் ஓரங்க நாடகத்தை நடத்தி திராவிட இயக்கத்தின் சுயமரியாதை, தன்மானம் என்கிற எல்லாவற்றையும் உதறிப் போட்டுவிட்டு பதவி என்னும் கோவணத்துக்காக அலைகிறார் 'கலைஞர்' கருணாநிதி.<br />
<br />
தன்னை நம்பி உடனிருக்கும் கூட்டணிக்கட்சிகளைக்கூட துச்சமாகத் தூக்கியெறிந்து என்றுமே தானொரு தான்தோன்றித்தனமான, அகங்காரம் பிடித்த தற்குறித்தனமான தலைவிதான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார் ஜெயலலிதா. ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை ஒரே இரவில் டிஸ்மிஸ் செய்தும், சுப்பிரமணியசாமிக்கு மகளிர் அணி 'ஷோ' காட்டியதும், இன்னபிற அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகங்களையும், சர்வாதிகாரத்தையும் கைக்கொண்டு இன்னும் மிச்சமிருக்கும் 'மைசூர் திவான் பங்களாவில் அரண்மனை வைத்தியம் பார்த்தவரின் பேத்தி' என்கிற 'கெத்'தில் நிற்கிறார் ஜெயலலிதா.<br />
<br />
இந்த இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் மாற்றாக வேறு யாரும் இல்லையே என்று புழுங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு ஒரு தற்காலிக வடிகாலாய் வந்து சேர்ந்தார் விஜயகாந்த். நீண்ட நெடுங்காலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு மல்லுக்கட்டியதில் அலுத்துப்போய் அவ்வப்போது சுகன்யாக்களின் தொப்புள்களில் பம்பரம் விட்டதும் சலித்துப்போய் இறுதியாக அவர் கரைசேர்ந்த இடம் அரசியல். மாமண்டூரில் அரசுப் புறம்போக்கு நிலங்களை வளைத்துப்போட்டு ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியைத் துவங்கி 'தூய்மை'யான பொதுவாழ்வுக்கு அடித்தளம் போட்டுக்கொண்டு நுழைந்தார். பக்கத்தில் பிரேமலதாவையும், அவர்தம் இளவலார் சுதீஷையும் வைத்துக்கொண்டே கூச்சநாச்சமின்றி கருணாநிதியின் குடும்ப அரசியலை எதிர்த்து கொஞ்சகாலம் லாவணி பாடவும் செய்தார். எத்தனைகாலம்தான் 'சுட்டி சுட்டி உன் வாலைக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி' என்று பாடிக் கொண்டிருப்பது?! தனி ஆவ்ர்த்தனமெல்லாம் இனி கவைக்குதவாது என்றுசொல்லி மூட்டையைக் கட்டிக்கொண்டு போயஸ் கார்டனுக்குள் தஞ்சம் புகுந்துவிட்டார்.<br />
<br />
இவர்களில் இருந்து எந்த வகையில் மாறுபடுகிறார் அல்லது எந்தெந்த வகைகளில் ஒன்றுபடுகிறார் வைகோ என்கிற அரசியல்வாதி?<br />
<br />
மறுமலர்ச்சி திமுக என்ற கட்சியைத் துவங்கிய போதிலிருந்தே அந்தக்கட்சிக்கான சவக்குழியை கூடிய சீக்கிரம் வெட்டிவிட வேண்டும் என்கிற குறிக்கோளில் 'ஓடமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்கும் கொக்கு' போல அல்லும் பகலுமாக அயராது பணி செய்துவரும் கருணாநிதி, 'பகையாளிக் குடியை உறவாடிக் கெடு' என்கிற வித்தைகளையெல்லாம்கூட செய்து பார்த்தார். 2001 தேர்தலிலும், 2006 தேர்தலிலும் அவர் ஆடிய சதுரங்கத்தில் வெட்டுப்படும் குதிரையானார் வைகோ.<br />
<br />
தேர்தல் அரசியலில் ஈடுபடும் எந்தக்கட்சியும் சமரசங்களைத் தவிர்க்க முடியாது என்ற சூழ்நிலையில் தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேறு வழியின்றி போயஸ் தோட்டத்தில் சரண்புக வேண்டிய இழிமைக்கும் தள்ளப்பட்டார். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்று தேவை என்று இன்றைய நிலையில் ஏற்பட்டிருக்கிற ஒரு வெற்றிடம் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டிருக்கவில்லை.<br />
<br />
தனித்து நின்றே தனது கட்சியைக் காபந்து செய்ய வேண்டும் என்பது பெரியளவில் மக்களிடம் செல்வாக்கு இல்லாத நிலையில் சாத்தியமில்லை. மேலும் கட்சியில் அவருடன் இருந்த சாறுண்ணிகளும், ஒட்டுண்ணிகளுமான எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் போன்றவர்களின் 'காயசண்டிகை'ப் பசிக்கும் தீனி போட வேண்டிய கட்டாயம்.<br />
<br />
எனவே கூட்டணி அரசியல் சகதியில் அவரும் தாராளமாகப் புழங்கியவர்தான்... மறுக்கவில்லை. அவரது வார்த்தைகளிலேயே சொல்லப்போனால் காட்டாற்று வெள்ளத்திலே சந்தன மரங்களும் அடித்துச் செல்லத்தான் படும் என்கிற தமிழக அரசியல் சூழலில் கரையொதுங்க வேண்டிய நிர்ப்பந்தங்களிலும் அவருக்கென்று சில தனித்தன்மைகள் இருந்தன. மற்றெந்த அரசியல் தலைவர்களிடமும் இல்லாத அந்தத் தன்மைகள்தான் இன்று அவரைத் தனித்துக் காட்டி இருக்கின்றன.<br />
<br />
1) முதலானதும் தலையாயதுமானது வாரிசு அரசியலை இதுவரை வைகோ முன்னெடுக்கவில்லை. அவரது பிள்ளைகளான துரைவையாபுரியையும், கண்ணகியையும், தடா சட்டத்தில் சிறைவாசமிருந்த தம்பி ரவிச்சந்திரனையும் இதுவரை கட்சிக்கு பட்டாதாரர்களாக மாற்றவில்லை.<br />
<br />
2) இதுவரை மத்திய அரசில் பங்கேற்று மத்திய அமைச்சர் வாய்ப்பு கிடைக்குபோதெல்லாம் அவற்றைப் புறம்தள்ளி தனது சகாக்களுக்கே பதவியைத் தாரைவார்த்தவர் வைகோ.<br />
<br />
3) கூட்டணிக்கேற்றவாறு கொள்கைகளை மாற்றிப்பேசும் வழக்கமும் அவரிடமில்லை. இதுவரை புலிகள் ஆதரவுக் கொள்கையையோ, சேது சமுத்திரத் திட்டத்தின் பாலான தமது உறுதிகளையோ மாற்றிக்கொள்ளவில்லை.<br />
<br />
4) ஸ்டெர்லைட் ஆலைப்பிரச்சினையில் எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தபோதிலும் இன்று அவரது அரசியல் எதிகாலத்துக்கு சவாலாக வந்தபோதிலும் கூட தனது உறுதியை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இன்று ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் அந்த நிர்வாகத்தால் செய்யப்பட்ட நிலையில் இன்றளவும் சட்டரீதியாக அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவர் வைகோ ஒருவர் மட்டுமே.<br />
<br />
5) முல்லைப்பெரியாறு அணைக்கட்டு தொடர்பான போராட்டங்களிலும் முன்னிற்பவர் வைகோ மட்டுமே.<br />
<br />
6) நெய்வேலி அனல்மின் நிலையத்தை தனியார்மயமாக்க முயற்சிகள் நடந்தபோது அதனைத் தடுத்து நிறுத்திய காரணகர்த்தாக்களில் வைகோ முக்கியமானவர்.<br />
<br />
இப்போது அரசியல்களத்தில் அவமானப்பட்டு நிற்கும் நிலையில், இருபெரும் திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் வாய்ப்பை காலம் அவருக்கு வழங்கி இருக்கின்றது.<br />
<br />
வைகோவின் அரசியல் இப்போது துவங்குகிறது எனக் கணக்கு வைத்துக் கொள்ளலாம். இந்தத் தேர்தலுக்குப் பிறகும் அவரிடம் மிச்சமிருக்கும் தொண்டர்கள் இனி எக்காலத்திலும் விலைபோக மாட்டார்கள் என்று நம்பலாம்.<br />
<br />
இந்த தொண்டர் பலத்தை வைத்து அவர் தமிழக அரசியலில் ஒரு புதிய பாதையைத் துவங்கிட வேண்டும் என்பதே தமிழுணர்வாளர்களின் எதிர்பார்ப்பு. சரியான திசையில் பயணிப்பாரா வைகோ?<br />
<br />
"வீடுகட்டுவதற்கு வேண்டாம் என்று விலக்கிவைக்கப்பட்ட கல் மூலைக்கு தலைக்கல்லாயிற்று" என்கிறது விவிலியம்..(மத்தேயு சுவிசேஷம் 21)<br />
<br />
பின்குறிப்பு : இந்தக் கட்டுரை ஆக்கத்திற்கு பெருமளவு துணைபுரிந்த என் இனிய நண்பரும், என் வாழ்வில் பகிர்தலுக்கும், புரிதலுக்குமாக இருக்கும் மிகச்சில சுமைதாங்கிகளில் ஒருவருமான கா.அன்புவேலுக்கு என் நன்றிகள்<br />
<div><br />
</div></div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-61087623729970726082011-03-29T17:17:00.001+05:302011-10-19T10:16:57.441+05:30திசைமறந்து திரியும் பறவையொன்றின் புலம்பல்கள்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTzAY6VZ133I3w_mJ8RsOIvMxQRSQRHDIs4NhDPwRdSsHiGv2jeylY2n_fw9GGlcyNQzBU_DK9WKXUjgA4qG1sVJGVxB5g5FD4TNWUDhofaYgvrPA7Pff8yu6nsTesGVwYysEgkGy1PhU/s1600/2808650584_2bf83237a9_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="301" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTzAY6VZ133I3w_mJ8RsOIvMxQRSQRHDIs4NhDPwRdSsHiGv2jeylY2n_fw9GGlcyNQzBU_DK9WKXUjgA4qG1sVJGVxB5g5FD4TNWUDhofaYgvrPA7Pff8yu6nsTesGVwYysEgkGy1PhU/s400/2808650584_2bf83237a9_o.jpg" width="400" /></a></span></div><span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">அலங்காரங்களின்றி </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">எழுத நினைத்தேன்</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">ஒரு கவிதையை</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">கண்ணீராலும் துக்கத்தாலும்...</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">வழியும் கண்ணீரில்</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">காகிதக் கப்பலாய் என் காதல்...</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">வரிகளைத் தேடும் </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">வலிமையில்லை</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">பின்னொரு பொழுதில்</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">திசைமறந்து திரியும் </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">பறவையொன்றின் புலம்பல்களைக்</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">கோர்த்து</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">எழுதத் துவங்கினேன்</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">ஒரு கவிதையை.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">குஞ்சுகளைத் தொலைத்த </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">குருவியொன்று</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">ஒப்பாரி வரிகளுக்கு</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">ஒப்பனை செய்ய முன்வந்தது...</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">எழுதி முடித்த கவிதையில்</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">மிதந்து கொண்டிருந்தன</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;">கனவுகளின் சடலங்கள்</span></span><br />
<div style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; border-collapse: collapse; font-size: 12px;"><span class="Apple-style-span" style="font-family: verdana, sans-serif;"><br />
</span></div></div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-73589331569262892442011-03-24T15:15:00.001+05:302011-03-24T15:15:34.326+05:30கொஞ்சம் ரசிக்க... கவிதை, எதிர்க்கவிதை, எதிருக்கு எதிர்....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyHDapf4WAgfNEdBeF93p6LmB8LrPIC5yLk6CRatSsC2GxCZmyKb2dpACp06Faax1gD8IlPw_DDv4SfyN8spBgeZcthOjTGlGqDzSTwfczAR87dzwt4HAHSzcF1H_QqXMddPLdGmz8eEQ/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyHDapf4WAgfNEdBeF93p6LmB8LrPIC5yLk6CRatSsC2GxCZmyKb2dpACp06Faax1gD8IlPw_DDv4SfyN8spBgeZcthOjTGlGqDzSTwfczAR87dzwt4HAHSzcF1H_QqXMddPLdGmz8eEQ/s400/images.jpg" width="316" /></a></div>கவிதை எழுதி ரொம்பநாளாச்சேன்னு கை அரிச்சி ஒக்காந்திருந்தேன். இன்னிக்குன்னு பாத்து கூகிள் பஸ்ஸுல கவிதை மழையா பொழிஞ்சிட்டு இருந்தாரு அண்ணன் <a href="http://krpsenthil.blogspot.com/2011/03/blog-post_24.html">கேஆர்பி.செந்தில்</a>. அவரோட கவிதைய பாத்தவொடனே அப்பிடியே எதிர்க்கவிதை பொங்கிடுச்சி! எதிர்க்கவிதை போட்டுட்டு பொசுக்குன்னு வந்துரலாம்னு பாத்தா "என்ன கைய புடிச்சி இழுத்தியா"ன்னு இழுத்து வெச்சி வம்பளந்தாரு நண்பர் <a href="http://palaapattarai.blogspot.com/">பலாபட்டறை சங்கர்</a>. மனுசன் பின்னி பெடலெடுத்துட்டாரு. கவிதை, எதிர்க்கவிதை, எதிருக்கு எதிர் அப்டீன்னு மூணுமணி நேரம் போனதே தெரியல<br />
<br />
நண்பர்களும் நாங்க அடிச்ச கூத்தை ரசிக்கணும்ல! அதான் இந்தப் பதிவு<br />
<br />
<b>krpsenthil kumar</b> - Buzz - Public<br />
<br />
சொல்லிவிட்டு பெய்வதில்லை<br />
எப்போதும் மழை ..<br />
அது காதலைப்போல்<br />
வரமாய் வரும் ..<br />
<br />
இப்போதும் பெய்கிறது<br />
பெருமழை அவ்வப்போது,<br />
உடன் நனைய<br />
நீதான் இல்லை...<br />
<br />
உடைந்து அழும் கண்களின்<br />
உப்பு<br />
மழையில் கலந்து<br />
கடலெல்லாம் உப்பாச்சு..<br />
<br />
<i>10 people liked this - subramanian rajaraman, Karthik L (LK), ४१ தோழி १४, எஸ். கே, ஓம் அருணையடி ஓம் and 5 others</i><br />
<br />
<b>nesamitran online</b> - ஆஹா ...<br />
<br />
இந்த நரகத்தில் நான் மட்டும் உழலுவதோன்னு கடலெல்லாம் உப்பாக்குறான்யா/கடலளவு அழுகுறான்யா கவிஞன் :)11:54 am<br />
<br />
<b>subramanian rajaraman</b> -<br />
<br />
எதிர்கவுஜ எழுதி நாளாச்சு... அதுனால<br />
<br />
கண்ணு ரெண்டும் கொளமாச்சு<br />
கடலெல்லாம் உப்பாச்சு<br />
காஞ்சி போன நெலமெல்லாம்<br />
கழனியா மாறிப்போச்சு<br />
<br />
கொஞ்ச மழை பேஞ்சாலும்<br />
கூதலில ஒன் நெனப்பு<br />
கோரமழை பேயிறப்போ<br />
கொமரி உன்னை காங்கலியேEdit12:42 pm<br />
<br />
<b>ஷங்கர் Shankar</b> - எதிருக்கு எதிர்<br />
<br />
வானம் பார்த்த பூமியிலே<br />
பெஞ்ச மழை ஈரத்துல<br />
விளைச்ச கீர காசக் கொண்டு<br />
பெத்த புள்ளை பட்டணம் போயி<br />
காதலிக்கான கண்ணீருல<br />
கடலெல்லாம் உப்பாச்சுன்னு<br />
கவித ஒன்னு எழுதினானே<br />
பாடுபட்டு அனுப்பிவெச்ச<br />
ஆத்தாளோட வேர்வை<br />
கரிக்காத காரணமென்ன<br />
ராஜாராமா கரிக்காத காரணமென்ன?12:56 pm<br />
<br />
<b>subramanian rajaraman </b>-<br />
<br />
ஆத்தாவோட வேர்வையெல்லாம்<br />
ஆனிப்பொன் தங்கமய்யா<br />
அவ மனசு பூக்கணும்னு<br />
அச்சுவெல்ல மருமவன்னு<br />
ஆறு கொளம் ஏரி கரை<br />
அத்தனையும் வல போட்டு<br />
ஆப்புட்டுது கன்னிமீனு<br />
அசந்திருக்கும் நேரத்துல<br />
வலையறுத்து பாஞ்சதென்ன<br />
வாழ்க்கையெல்லாம் மாஞ்சதென்ன<br />
<br />
வானமெல்லாம் பூத்திருக்க<br />
வறண்ட நெஞ்சு இருட்டடிக்க<br />
எசப்பாட்டு நாம்படிக்க<br />
எதிர்ப்பாட்டு ஏதுக்கய்யா<br />
சங்கரனே<br />
எதிர்ப்பாட்டு ஏதுக்கய்யா?Edit1:09 pm (edited 1:10 pm)<br />
<br />
<b>ஷங்கர் Shankar</b> -<br />
<br />
Yes Sir<br />
Yes Sir<br />
Three Bags Full! :))1:11 pm<br />
<br />
<b>subramanian rajaraman </b>-<br />
<br />
புரியலயே?Edit1:15 pm<br />
<br />
<b>ஷங்கர் Shankar</b> -<br />
<br />
இக்கட்டான நிலைமைல மாட்டிக்கிட்டா இப்படி சொல்லிட்டு எஸ்கேப்பாகறது என் ஃபார்முலா! :))))))1:16 pm<br />
<br />
<b>subramanian rajaraman</b> -<br />
<br />
அடடா.. அப்பிடியே கொஞ்சநேரம் கண்டினியூ பண்ணினா எடுத்து பதிவா போட்ரலாம்னு பாத்தேனே? :)Edit1:17 pm<br />
<br />
<b>ஷங்கர் Shankar</b> -<br />
<br />
பத்து மாசம்தான் சொமந்து<br />
ரத்தம் வத்தப் பால் கொடுத்து<br />
குத்தம் கொற இல்லாம<br />
நான் வளத்த என் புள்ள<br />
<br />
பத்து நாளு முன்னாடி<br />
பளபளன்னு சேலகட்டி<br />
பல்லக் காட்டி வந்தவ<br />
பறிச்சிட்டுத்தான் போனாளே<br />
<br />
சுள்ளி சொமந்த தலையிலே<br />
கள்ளி வந்து போட்ட மண்ணு<br />
கொள்ளி வரை மறக்காதே<br />
<br />
என்ன செய்வேன் ராஜாராமா<br />
யார் தடுப்பா ராஜாராமா1:36 pm<br />
<br />
<b>subramanian rajaraman</b> -<br />
<br />
பெத்ததொரு தாயாரு<br />
சித்தமெல்லாம் கலங்கி நிக்க<br />
குத்தமென்ன நாஞ்செஞ்சேன்<br />
சத்தமாக சொல்லுமய்யா<br />
<br />
வாழக் குருத்தாட்டம்<br />
வளந்திருக்கும் பொண்ணொருத்தி<br />
வாக்கப்பட்டு வந்து நின்னா<br />
வாண்டாமுன்னா சொல்லப் போறா<br />
<br />
செல்ல மவன் வாழ்க்கையில<br />
செல்வமெல்லாம் நெறஞ்சிருக்க<br />
குத்து வெளக்கு ஒண்ணை<br />
கொண்டுவந்தா கோவமென்ன<br />
<br />
மாமியாரும் மருமவளும்<br />
மனம் நெறஞ்சி கதைபேச<br />
கொணவதியா வரணுமின்னு<br />
கொண்டிருந்தேன் கனவு ஒண்ணு<br />
<br />
கனவுல வெதச்ச வெத<br />
கருகித்தான் போகுமின்னு<br />
கண்டேனா பாவிமவன்<br />
கசங்கித்தான் போனேனய்யா<br />
சங்கரரே<br />
கசங்கித்தான் போனேனய்யாEdit1:50 pm<br />
<br />
<b>ஷங்கர் Shankar</b> -<br />
<br />
அடியாத்தீ என்று சொல்லி<br />
நாலு வெரலு மடக்கி<br />
மோவாயி தாங்க நாம் பாத்த<br />
படமொன்னு டிவியிலே<br />
வந்துச்சே குடும்ப கொடுமையெல்லாம்<br />
சொல்லிச்சே,<br />
<br />
மரம்போல நாங்கிடந்து<br />
மந்திகத கண்ட நேரம்<br />
புத்தியில ஏறலியே<br />
புள்ள இப்படி பண்ணுமின்னு<br />
<br />
அந்திசாயும் நேரம்தானே<br />
என் புள்ளையும் வந்தானே<br />
கண்ணீரத் தொடச்சி<br />
சொன்னானே குத்திக் கொன்னானே<br />
<br />
பக்கத்து வீட்டு கோவால நான்<br />
கட்டிக்கிட்டா போதுமம்மா<br />
மருமவ தொல்லை ஏது<br />
நீ கவலப்படவேணாம்மா<br />
<br />
என்ன செய்வேன் ராசா ராமா<br />
சொல்லு என்ன செய்வேன் ராசாராமா?2:12 pm<br />
<br />
<b>subramanian rajaraman</b> -<br />
<br />
அய்யய்யோ சங்கரரே<br />
அபச்சாரம் அபச்சாரம்<br />
ஆம்பளையும் ஆம்பளையும்<br />
அணைச்சிக்கிடும் குடித்தனமும்<br />
அடுக்குமா சாமிக்கும்?<br />
<br />
வாலைக் கொமரிப்பொண்ணு<br />
வரிசைகட்டி நின்னிருக்க<br />
வந்த பொண்ணு போனா என்ன<br />
வந்திடுவா அடுத்தொருத்தி<br />
<br />
வாழ்க்கையில காதலெல்லாம்<br />
வாசல் தாண்டிப் போனாலும்<br />
வசந்தங் கெட்டு போவாதின்னு<br />
வந்திடுச்சி புத்தி அய்யா<br />
<br />
செவத்த தோலு பொண்ணொருத்தி<br />
சிங்காரிச்சி வந்துநின்னா<br />
சிலுத்துக்கிட்டு காதலிச்சேன்<br />
செருப்படியும் வாங்கி நின்னேன்<br />
<br />
அத்தமவ ஒருத்தி அழகான கருப்பட்டி<br />
சித்தமதிர வைக்கும் செலமாரி நின்னிருக்கா<br />
கத்துங் குயிலோச கானம் சொக்கவைக்கும்<br />
கருத்த பொண்ணுகூட வாழ்க்க இனிச்சிருக்கும்Edit2:30 pm (edited 2:31 pm)<br />
<br />
<b>ஷங்கர் Shankar</b> -<br />
<br />
தேலிக்கை சொல்லாலே<br />
மனம் கேளிக்கை அடையும் நேரம்<br />
துடுப்பாட்ட காணொளியை<br />
காண மனம் விழையுதே<br />
<br />
அன்பான கேஆர்பி<br />
இனி கவித எழுதலேன்னு<br />
முடிவேதும் எடுக்கும் முன்னே<br />
<br />
இம்புட்டு நேரமா இழுத்திழுத்த<br />
இந்தக் கத முடிச்சிக்கலாம்<br />
நான் ஆவறேன் அப்பீட்டு<br />
அதுவே நீங்களும் ரிப்பீட்டு!<br />
யப்பா சாமி முடியல!<br />
வெளிலதான் என்னா வெயிலு!<br />
:)))))))))))2:32 pm (edited 2:33 pm)<br />
<br />
<b>subramanian rajaraman</b> -<br />
<br />
இழுத்துவெச்சி கதையளந்த<br />
இனிய நண்பர் சங்கரரே<br />
இப்போ போயி நாளைவாரும்<br />
எசப்பாட்டு பாடிடலாம்<br />
<br />
எசப்பாட்டு தான் கேக்க<br />
இங்க வந்து காது தந்த<br />
எல்லாரும் நலம்வாழ<br />
எஞ்சாமி காத்திருக்கும்<br />
<br />
</div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-82299767803388180702011-03-21T04:03:00.000+05:302011-03-21T04:03:13.085+05:30கச்சத்தீவும் நமதே! கீழைக்கடலும் நமதே!! #DefeatCongress<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZNDdbckLPdR0cHks0MnjMyL2n0xSY9RmdRUJUk6jYokkzR9Iq8PZWSBDwUTpy-uLCyFz__mswP5bUaV-jfvFuj6hfyU8q3EdsB-hc3e1ABGU6rbDNtl9_bgSNhVn4UFR3dEgAN_2IAhE/s1600/liberty.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="313" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZNDdbckLPdR0cHks0MnjMyL2n0xSY9RmdRUJUk6jYokkzR9Iq8PZWSBDwUTpy-uLCyFz__mswP5bUaV-jfvFuj6hfyU8q3EdsB-hc3e1ABGU6rbDNtl9_bgSNhVn4UFR3dEgAN_2IAhE/s400/liberty.jpg" width="400" /></a></div>காங்கிரஸை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து எதிர்வரும் 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் காங்கிரஸை மண்ணைக்கவ்வச் செய்யவேண்டும் என்று சிலநாட்களுக்கு முன் நானும் அண்ணன் கேஆர்பி.செந்திலும் பதிவுகளை வெளியிட்டிருந்தோம். எதிர்பார்த்த அளவிற்கு தமிழ்ப்பதிவுலத்தினரின் ஒத்துழைப்பு கிட்டவில்லை என்றபோதிலும், எதிர்பாராத திசைகளிலிருந்து இணைய நண்பர்கள் மூலம் ஆதரவு குவிகின்றது.<br />
<br />
நானும், அண்ணன் கேஆர்பியும் இது தொடர்பான மேலதிகச் செயற்பாடுகளையும், நடைமுறைத் தந்திரங்களையும் பற்றி தொடர்ந்து நண்பரும் பதிவருமான கும்மியுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு முன்னெடுப்பு செய்து வருகிறோம். நண்பர் கும்மி ஏற்கனவே தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான இணையநண்பர்களின் முன்னெடுப்புகளை ஒருங்கிணைத்து வருகிறார். நேற்று மாலை தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலை முடித்துவிட்டு, மேற்கொண்டு, வரும் தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடிப்பது தொடர்பான கலந்துரையாடலை நடத்தலாம் என்று கூறியிருந்தார். அது தொடர்பானவற்றைப் பேசிமுடித்தபின் தியாகராயநகரில் , 'மே பதினேழு' இயக்கமும், தமிழக மக்கள் உரிமைக்கழகமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த "தமிழக மீனவர் படுகொலையும், மக்களை திசை திருப்பும் சதியும்" என்கிற கலந்துரையாடலில் கலந்துகொண்டோம்.<br />
<br />
மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ் வெப்துனியா இணைய இதழ் ஆசிரியர் கா.அய்யநாதன், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் பா.புகழேந்தி(வழக்கறிஞர்), கச்சத்தீவு மீட்பு இயக்கம் சீதையின் மைந்தன், பாரம்பரிய மீனவர் சங்கம் மகேஷ் ஆகியோரின் உரைகளின் சாராம்சத்தைத் தொகுத்துத் தருவதன் முலம் இந்திய நடுவண் அரசு தமிழனிடம் காட்டிவரும் மாற்றாந்தாய் மனப்பான்மையும், ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் என்கிற காவாலிக்கட்சி தமிழக மண்ணுக்கும், மானவாழ்விற்கும், மனித உரிமைக்கும் செய்துவரும் பச்சைத் துரோகங்களையும் ஓரளவு எடுத்துக்காட்ட முடியும் என்று நம்புகிறேன்.<br />
<br />
மேற்சொன்ன நண்பர்களின் உரைகளிலிருந்து :<br />
<br />
எந்த ஒரு மக்கள்பிரச்சினையும் அதன் அளவில் தீவிரமடையத் துவங்கும்போது ஆளும் மத்திய அரசு தன் கைக்கூலிகளான உளவுத்துறையினர், எலும்புத்துண்டுகளுக்கு எச்சில் ஒழுக நிற்கின்ற, ஊடகதர்மம் பிறழ்ந்த பத்திரிகையாளர்கள், போலி முற்போக்கு அறிவுஜீவிகள் ஆகியோர் மூலம் மக்கள்பிரச்சினைகளில் புதிய கதையாடல்களை பரப்புரை செய்து போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்கின்றது. அதே போலத்தான் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து கொல்லப்படும் கொடுமைகள் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக மாறிப்போவதைப் பார்த்த நடுவணரசு, மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர், தடைசெய்யப்பட்ட இருமடி மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துகின்றனர், அதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டு வருகின்றனர். "தமிழக மீனவர்கள் பேராசையால் எல்லை தாண்டுகின்றனர்" என்று கொஞ்சம்கூட மனச்சாட்சியும், கூச்ச உணர்வுமின்றி தமிழக முதல்வர் கருணாநிதி சில மாதங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது ஞாபகம் இருக்கும் ( லட்சக்கணக்கான கோடிகளுக்கெல்லாம் தனது குடும்பம் ஆசைப்படுவது 'ஞாயமான' ஆசையாகவும், அன்றாட பிழைப்புக்காக மீனவன் எல்லை தாண்டிச் செல்வது 'பேராசை'யாகவும் அவருக்குத் தோன்றுவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. கொட்டுவது எப்போதுமே தேளின் குணம்! கொட்டாது என்று எதிர்பார்ப்பது நமது மடமை!).<br />
<br />
ஆனால் மீனவர்களை அவர்களின் வாழ்வாதாரங்களிலிருந்து அப்புறப்படுத்துவது என்பது பன்னாட்டு முதலாளிகளிடம் தேசத்தைக் காட்டிக் கொடுப்பதற்கான அயோக்கியத்தனத்திற்கு மீனவர்களிடமிருந்து எவ்வித இடைஞ்சலும் வராமல் இருப்பதற்கான ஒரு யுக்தியாகவே மைய அரசால் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனைப் புரிந்துகொள்ள முதலில் மீன்பிடித்தொழில் தொடர்பான சில தகவல்களை அறிந்துகொள்வது அவசியம்.<br />
<br />
இரண்டாம் உலகப்போரின் முடிவில் கடல்பரப்பில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அப்புறப்படுத்துவதற்காக நார்வே அரசு இரும்பாலான சிறப்பு வலைகளைப் பயன்படுத்தத் துவங்கியது. மீனவர்கள் பயன்படுத்தும் சாதாரண வலைகள் கடலின் பாதி ஆழத்தோடு நின்றுவிடும். ஆனால் இப்படிப்பட்ட இரும்புவலைகள் கடலின் அடியாழம்வரை இறங்கிச்சென்று கண்ணிவெடிகளை அப்புறப்படுத்த உதவின. அதே சமயம் அந்த வலைகளில் மிக அதிகமான அளவில் மீன்களும் பிடிபட்டன். இந்த கூடுதல் உபயோகத்தைக் கண்டுகொண்ட மேலைநாடுகள் தங்களுக்கான கடலுணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இவ்வகையான வலைகளை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தன. அளவுக்கு அதிகமாக இவ்வகை வலைகளைப் பயன்படுத்தியதால் இன்று மத்தியத் தரைக்கடல் பிரதேசமே மீன்வளம் இழந்து காணப்படுகின்றது. எனவே மேலைநாடுகள் தங்களது மீன் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள புதிய கடல்பரப்புகளைத் தேர்வுசெய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின.<br />
<br />
எனவே அவர்களின் பார்வை, வளம் மிகுந்த இந்தியக் கடற்பகுதியின் மீது திரும்பியது. இந்தியக் கடற்பகுதியில் குறிப்பாக மன்னார் வளைகுடா, பாக் நீரிணை பகுதிகளில் அவர்கள் மீன்பிடித் தொழிலை நடத்துவதற்கு பெரும் இடைஞ்சலாக உள்ளூர் மீனவர்களே இருப்பார்கள். அவர்களை மீன்பிடித்தொழிலில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால்...???<br />
<br />
<b><u>இந்தியாவில் இழுவைப்படகு மீன்பிடித்தொழில்</u></b> :<br />
<br />
மேலைநாடுகள் இருமடி வலைகளைப் பயன்படுத்த ஆரம்பித்த சிறிது காலம் கழித்து இந்தியக் கடல்பரப்பில் இருமடி வலைகளைப் பயன்படுத்துவதை இந்திய அரசே மீனவர்களுக்கு மானியங்களும் சலுகைகளும் கொடுத்து ஊக்குவிக்க ஆரம்பித்தது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் காமராசர் ஆட்சிக்காலத்தில் இருமடி வலைகளையும் ட்ராலர்கள் எனப்படும் இழுவைப்படகுகளையும் பயன்படுத்தி மீன்பிடித்தொழிலைச் செய்ய மிகப்பெரும் அளவில் ஊக்குவிக்கப்பட்டது. இந்திய கடலுணவுத்தேவை வருடத்திற்கு ஏறக்குறைய ஐந்தரை மில்லியன் டன்கள். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே அரசு மீனவர்களை மானியங்களும், சலுகைகளும் கொடுத்து ஊக்குவித்தது. ஆனாலும் மீன்வளம் குறைந்துவிடாமல் பாதுகாக்கும் பொருட்டு மீன்கள் குஞ்சு பொறிக்கும் பருவகாலத்தில் மட்டும் இருமடி வலைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தமிழக மீனவர்களில் ஏறத்தாழ முப்பதுசத மீனவர்கள் மட்டுமே இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலை நடத்தி வருகின்றனர். ஏனையோர் பாரம்பரிய மீன்பிடிப் படகுகளையே பயன்படுத்துகின்றனர்.<br />
<br />
காலங்காலமாக இந்திய மீனவர்கள் இலங்கையின், நெடுந்தீவு, தலைமன்னார், யாழ்ப்பாணம் வரையிலும் சென்று மீன்பிடிப்பதும், இலங்கை மீனவர்கள் தமிழக எல்லையில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதும் வழக்கமாகவே இருந்து வருகின்றது. இந்திய மீனவருக்குத் தேவையான மீன்கள் இலங்கைப் பகுதியிலும், இலங்கை மீனவருக்குத் தேவையான மீன்கள் இந்தியப்பகுதிகளிலும் பெருமளவு கிடைப்பதே இதற்குக் காரணம்.<br />
<br />
புலிகளுடனான உள்நாட்டு யுத்தம் துவங்கியபின் சிங்களப்படைக்கு இயல்பாகவே தமிழக மீனவர்கள் மீதான வெறுப்பு அதிகரிக்கத் துவங்கியது.தமிழக மீனவர்கள் மீதான அவர்களின் தாக்குதலும் பெருமளவில் நிகழ ஆரம்பித்தது. தற்போது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுக்கொல்வதும், நடுக்கடலில் சித்திரவதை செய்வதும், அவர்களின் மீன்பிடிச் சாதனங்களை நாசப்படுத்துவதும் நின்றபாடில்லை.<br />
<br />
<b><u>கச்சத்தீவைக் கொடுத்த அயோக்கியத்தனம்:</u></b><br />
<br />
இதற்கிடையில் கச்சத்தீவினை தாரைவார்த்துக் கொடுத்த அயோக்கியத்தனமும் சிங்களத்துக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. கச்சத்தீவானது பிரிட்டிஷார் காலத்திலும், அதற்கு முன்னும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான நிலமாக இருந்ததை பிரிட்டிஷ் ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.<br />
<br />
இலங்கையில் ஆட்சி செய்த பண்டாரநாயகா குடும்பமும், இந்தியாவின் ஜவகர்லால்நேரு குடும்பமும் ஒன்றுக்கொன்று நட்பாக இருந்துவந்தன. நேருவுக்குப் பின்னரும் இந்த நட்பு தொடர்ந்து நீடித்து வந்தது. இந்திராவின் ஆட்சிக்காலத்தில், இலங்கையில் திருமதி.பண்டாரநாயக பிரதம மந்திரியாக இருந்துவந்தார். தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது செல்வாக்கு மக்கள்மத்தியில் குன்றியிருந்த நேரத்தில் இலங்கையில் பொதுத்தேர்தலுக்கான காலமும் வந்தது. மக்கள் மத்தியில் குறைந்துபோன தனது செல்வாக்கினை மீண்டும் உயர்த்திக்கொள்ள அவர் கச்சத்தீவினைப் பெற்று இலங்கையோடு இணைக்க முயற்சித்தார். அதற்குத்தான் ஏற்கனவே குடும்ப நண்பரான இந்திராகாந்தி இருக்கிறாரே?! சேதுபதி மன்னருக்கும், தமிழக மீனவர்களுக்கும் சொந்தமான கச்சத்தீவு இவர்கள் யாருடைய அனுமதியும் இன்றி சட்டத்துக்குப் புறம்பான வகையில் ஒரு (அ)சுபயோகத்தில் இலங்கைக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தாரைவார்க்கப்பட்டது. இது நடந்தது 28-06-1974-ல்.<br />
<br />
இது தொடர்பான பாராளுமன்ற விவாதங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், இரா.செழியன், பி.கே.என் தேவர், முகமது ஷெரீஃப் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக மீனவர்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று தெரிந்தும்கூட இந்திய அரசாங்கம் தமிழகத்துக்கு இந்த இரண்டகமான வேலையைச் செய்தது. இதற்கு தோதாக ஏற்கனவே கடல் எல்லையைக் குறிக்கும் வரைபடங்கள் திருத்தப்பட்டு, கச்சத்தீவானது இலங்கைக்குச் சொந்தம் என்று காட்டுமாறு வரைபடங்கள் மாற்றப்பட்டன.<br />
<br />
கச்சத்தீவினைத் தாரைவார்க்கும் ஒப்பந்தம் எட்டாவது ஷரத்தின்படி இந்த ஒப்பந்தமானது அரசியல்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தின் இருவகைகளிலும் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும். ஆனால் நாளது தேதிவரையிலுங்கூட இந்த ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படவோ, பாராளுமன்ற அவைகளில் ஒப்புதல் பெறப்படவோ இல்லை.<br />
<br />
உதாரணமாக, நான் ஒருவரிடம் அவரது நிலத்தை கிரய ஒப்பந்தம் செய்து வாங்கிக் கொள்கிறேன் என்று கொள்வோம். அந்த ஒப்பந்தம் முறையாக குறிப்பிட்ட பதிவாளர்/சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டால்தானே அந்த கிரய ஒப்பந்தம் சட்டப்பூர்வமானதாக இருக்கும்? அப்படி பதிவு செய்யப்படவில்லையென்றால்...?<br />
<br />
ஆக, ஒரு திருட்டுத்தனமான, அயோக்கியத்தனமான, தமிழக மக்களின் நலனை அழிக்கக்கூடிய ஒரு ஒப்பந்தம் இன்று வரையிலும் அரசியல் சாசனத்துக்கு விரோதமான முறையில் இருப்பதைக்கூட கண்டுகொள்ளாத காங்கிரஸ் அரசின் காவாலித்தனத்தை என்னவென்று சொல்வது?<br />
<br />
<b><u>காலங்காலமாய்த் தமிழர்களுக்கு துரோகம் செய்துவரும் காங்கிரஸ் :</u></b><br />
<br />
இப்படி பரம்பரை பரம்பரையாகவே காங்கிரஸ் கட்சியானது தமிழர்களுக்கு துரோகம் செய்தே வருகின்றது. இன்றும் சிங்களக் கடற்படை தமிழக மீனவனை சுட்டுக் கொல்வதற்கு இந்திய அரசு உடந்தையாக இருப்பது அதன் கள்ளமௌனத்தின் மூலமே வெட்டவெளிச்சமாகிறது.<br />
<br />
தாங்கவொண்ணாக் கொடுமைகள் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து அவர்களை மாற்றுத் தொழிலை நோக்கி திசைமாற்றிவிட்டால், ஏற்கனவே அகோரப் பசியில் இருக்கும் பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களைக் கூப்பிட்டு ஆசை, ஆசையாக பந்தி வைக்கலாமே?<br />
<br />
<b><u>எல்லை தாண்டும் பிரச்சினை :</u></b><br />
<br />
ஐக்கியநாடுகள் சபையின் வழிகாட்டுதல்களின்படி கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பவும், ஒருவேளை சந்தேகம் எழுந்தால் அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் மட்டுமே செய்யவேண்டும். அதைமீறி அவர்களைக் காயப்படுத்துவதும், மரணம் ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றங்கள்.<br />
<br />
தனது சொந்த நாட்டு மீனவன் செத்தால் என்ன, வாழ்ந்தால் என்ன என்ற ஆண்மைகெட்ட தேசத்துக்கு என்ன மயிர்பிடுங்கி இறையாண்மை இருக்க முடியும்? தன் பெண்டு, பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாத ஒரு குடும்பத்தலைவனை பேடி என்று சொல்லித்தான் எங்களுக்குப் பழக்கம்.<br />
<br />
தம் மக்களை அநியாயமாகக் கொன்றுகுவிக்கக் கள்ளத்தனமாக துணைபோகும், கொன்று குவிக்கப்படுவதை விழிவிரிய வேடிக்கை பார்க்கும், தன் மக்களுக்குச் சொந்தமான சொத்தை திருட்டுத் தனமாக ஊரானுக்கு பட்டா போட்டுக்கொடுக்கும் காங்கிரச் கட்சியும், அரசும் நமக்குத் தேவைதானா?<br />
<br />
தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும், உடலில் தமிழ்க்குருதி பாயும் ஒவ்வொருவனும் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தமிழ் இளைஞனும் குறைந்தது பத்து வாக்குகளையாவது காங்கிரஸுக்குப் போகாமல் தடுக்க வேண்டும்.<br />
***************************************************<br />
<br />
கூட்டம் முடிவடைந்த பின்னர் 'மே பதினேழு' இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தியுடன் நானும் கேஆர்பி அண்ணனும் எமது இணைய நண்பர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னது:<br />
<br />
"தொகுதிக்கு பத்துபேர் இருந்தால்கூட போதும் தோழர். மிகத் தீவிரமான பிரச்சாரத்தின்மூலம் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸை மண்ணைக் கவ்வச் செய்யலாம். பத்து நூறாகவும், ஆயிரம், லட்சங்களாகவும் மாறும் நாள் தொலைவில் இல்லை. "நாம் தமிழர்" போன்ற இயக்கங்களுடனும் நாம் ஒருங்கிணைந்து செயல்படுவோம்"<br />
<br />
என்றார் திருமுருகன்.<br />
<br />
இன்னும் ஓரிரு நாட்களில் பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கம், தமிழ் தேசிய உணர்வுள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் இவர்களையும் சந்திக்க உள்ளோம். இணைய நண்பர்கள் மென்மேலும் களப்பணியாற்ற வரவேண்டுமாய் இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.<br />
<br />
தொடர்புக்கு :<br />
<br />
கேஆர்பி.செந்தில் - 8098858248<br />
விந்தைமனிதன்( ராஜாராமன்) - 9500790916<br />
<br />
<b><span class="Apple-style-span" style="color: #38761d;">" ஹே... பூதலமே! என் போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் அந்தப் போதினிலே"</span></b><br />
<br />
<br />
</div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-91817278501869256072011-03-20T09:25:00.001+05:302011-03-20T09:27:56.991+05:30காங்கிரசை தோற்கடிப்போம் #DefeatCongress in #TNae11...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWWtJlkKqhulnI5W4Mc6Xjz5afGHjB25S93y2eMDzsYPxD_fFep1eBgLeHrUZWVXeLN1fnF6SftoxbFvkDlvoLigqdQAD3S4iFu_-q8OMLfRlYm2wf0_29EfRdX1MiZ3iH86NaTAM9f5M/s1600/ignite.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="261" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWWtJlkKqhulnI5W4Mc6Xjz5afGHjB25S93y2eMDzsYPxD_fFep1eBgLeHrUZWVXeLN1fnF6SftoxbFvkDlvoLigqdQAD3S4iFu_-q8OMLfRlYm2wf0_29EfRdX1MiZ3iH86NaTAM9f5M/s400/ignite.jpg" width="400" /></a></div>எல்லா அரசியல் கட்சிகளுமே மக்கள்நலன், தேசநலன் போன்றவற்றைத் தலைமுழுகிவிட்டு ஆட்சி, அதிகாரம், பதவிசுகம், பணபேரம் என மூழ்கிக் கிடந்தாலும் காங்கிரஸ் கட்சிமட்டும் எப்போதும் ஒரு தனித்தன்மையுடனேயே வலம் வருகின்றது. கஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையை ஐ.நா சபை முன்னிலையில் பொதுவாக்கெடுப்பு நடத்திக் காப்போம் என்றுகூறி கபளீகரம் செய்தலில் இருந்து துவங்குகிறது சுதந்திரத்துக்குப் பிறகான காங்கிரஸின் லீலைகள். தேசநலன் என்ற பெயரில் வடகிழக்கு மாகாணங்களின் நலன்களை பலிகொடுத்ததன் மூலம் தனது கொடுங்கரங்களை தேசமெங்கும் நீட்டியது. ராணுவ ஒடுக்குமுறையின்கீழ் கட்டமைக்கப்படும் எந்த தேசியமும் தேசத்தினை அமைதியாக வாழவிட்டதாக சரித்திரமே இல்லை. நாடெங்கும் வன்முறை தலைவிரித்தாட மறைமுகமாகப் பங்காற்றி ராணுவத்திற்கென பெரும்பகுதி வளங்களைச் செலவழித்து உலகின் மிகப்பெரும் ஜனநாயக தேசத்தினை ஓட்டாண்டியாக மாற்றியதே ஐம்பதாண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் சாதனை.<br />
<br />
தமிழகத்தை எடுத்துக்கொண்டாலும்கூட இதுவரையிலும் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளான காவேரி, முல்லைப்பெரியார், பாலாறு போன்றவற்றிலும், கச்சத்தீவு மற்றும் தேவிகுளம், பீர்மேடு பிரச்சினைகளிலும் எதிலுமே காங்கிரஸ் ஒரு சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போட்டதில்லை.<br />
<br />
(சிறுகுறிப்பு : காமராஜர் ஆட்சிதான் அதைச் செய்தது; இதைச் செய்தது! என்று வாய்ஜாலக்குகளைக் காட்டுவது காங்கிரஸ்காரர்களின் ரத்தத்தில் ஊறிய விஷ(ய)ம்! ஆனால் காமராஜர் அந்த இயக்கத்தில் ஒரு விதிவிலக்கு. அப்படிப்பட்ட காமராஜரையே அவரது இறுதிக்காலத்தில் தலையால் தண்ணிகுடிக்க வைத்த மகானுபாவர்கள்தான் இந்த காங்கிரஸ்காரர்கள். தனது இறுதிக்காலத்தில் காமராஜர் இந்திய தேசிய காங்கிரஸ்காரனாக அல்ல; ஸ்தாபன காங்கிரஸ்காரனாகவே இறந்தார். இந்த விஷயங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் ஞாபகமறதியின் பாற்பட்ட அலாதி நம்பிக்கையில் மூடிமறைத்துவிட்டு 'காமராஜர்' ஆட்சி என்று பசப்புவார்கள்.)<br />
<br />
இறுதியாக ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக ஒன்றரைலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவிக்க சிங்கள அரசுக்கு துணையாக மட்டுமன்றி, அந்த பச்சைப்படுகொலைகளில் மறைமுகப் பங்கெடுப்பாளர்களாகவும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது என்பதை சமீபத்தைய விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தெரியப்படுத்தியுள்ளன.<br />
<br />
தமிழினத்தையே கருவறுத்த காங்கிரஸ் கட்சி, தமிழ்மீனவன் தனது கெண்டைக்கால் ரோமத்துக்குச் சமம் என்று அலட்சியமாய்ப் புன்னகைக்கும் காங்கிரஸ் கட்சி, இதோ மீண்டும் ஒருமுறை நமது ஞாபகமறதிமீது அதீத நம்பிக்கை வைத்து ஓட்டுகேட்டு வீதிகளில் பவனி வரத் தொடங்கிவிட்டது.<br />
<br />
தலைப்பாகைப் பிரச்சினைக்கு பஞ்சாயத்து பேசாவிட்டால் சீக்கியன் விரட்டி விரட்டி அடிப்பான்! தெலுங்கானா உரிமைப்போராட்டத்தில் அயோக்கியத்தனம் செய்தால் தெலுங்கன் துரத்தித் துரத்தி வெட்டுவான் என்கிற பயம் இருந்ததால்தான் அந்தந்த மாநிலங்களிலெல்லாம் காங்கிரஸ் பூனை வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்தது. இங்கும் எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இல்லாமல் துரத்தப்பட்டால்தான் தமிழனுக்கும் சூடி,சொரணை மிச்சமிருக்கிறது என்பது காங்கிரஸ் புத்திஜீவிகளின் மண்டையில் உறைக்கும்.<br />
<br />
வரும் 2011 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் பாடம் கற்பிக்காவிட்டால் 'என்ன செய்தாலும் தமிழ்நாட்டானுக்கு உறைக்காது' என்கிற திமிர் ஊறிப்போய்விடும்.<br />
<br />
ட்விட்டரில் ஏற்கனவே #defeatcongress என்று செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இணையத்தில் காங்கிரஸை எதிர்க்கும் அதேசமயம் வீதிகளிலும் இறங்குவோம்.<br />
<br />
இணையநண்பர்கள் நேற்று மாலை தி.நகரில் ஒன்றுகூடி இது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டோம். அதுபற்றிய <a href="http://krpsenthil.blogspot.com/2011/03/defeatcongress-in-tnae11.html">தெளிவான இடுகை</a> ஒன்றை கேஆர்பி.செந்தில் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.நண்பர்களின் பங்களிப்பை இன்னும் எதிர்பார்க்கிறோம்<br />
<br />
ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு காங்கிரஸும் அவசியமற்றவை நண்பர்களே! விரட்டுவோம் காங்கிரஸை திருத்தணிக்கு அப்பால்!<br />
<div><br />
</div></div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-73102652228517745522011-03-18T00:37:00.001+05:302011-03-18T00:37:03.780+05:30#தேர்தல் 2011 அப்டேட்ஸ்... கூகுள் பஸ்ஸும் நானும்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEZb-mq4POwVOa_d8OghTu7fMEUDaZ5ZcstObM7TGVvxbwsuhtCzjORzyZvIhQ3fOGWccDoZTjaPoPITmsWEFjNOV3uSbK0uEM-dmW9XWmM9K9wrAxMp1NShrE6s5P_AzjfcMZhDP3SL4/s1600/google-cartoon-03.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="376" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEZb-mq4POwVOa_d8OghTu7fMEUDaZ5ZcstObM7TGVvxbwsuhtCzjORzyZvIhQ3fOGWccDoZTjaPoPITmsWEFjNOV3uSbK0uEM-dmW9XWmM9K9wrAxMp1NShrE6s5P_AzjfcMZhDP3SL4/s400/google-cartoon-03.gif" width="400" /></a></div><br />
கூகிள் வழங்கும் ப்ளாக்கர் சேவையை மிஞ்சிக் கொண்டிருக்கிறது அதன் பஸ் (Buzz) சேவை. கருத்துக்கள், எதிவினைகள், மீண்டும் எதிர்வினைகள், பதில்கள் என விநாடிக்கு விநாடி அதகளம் பண்ணிக் கொண்டிருக்கின்றது கூகிள் பஸ். தமிழகச் சட்டசபைத் தேர்தல் நேரத்தில் பஸ்ஸில் விவாதங்களும், கிண்டல்களும், கேலிகளும் அனல் பறக்கின்றன.<br />
<br />
என் பங்கிற்கு நானும் பஸ்ஸில் துண்டு போட்டு வைத்திருக்கிறேன். தமிழகச் சட்டசபைத் தேர்தல் தொடர்பான எனது பஸ்களை இங்கு தொகுத்திருக்கிறேன். ரசிக்கலாம், திட்டலாம், லேசாய் புன்னகைத்து ஒதுக்கிச் செல்லலாம், முடிந்தால் கருத்துக்களையும் பகிரலாம்.<br />
******************************************************<br />
<br />
<br />
கடைய இழுத்து மூடிட்டு ஓடுனான்னா அவன் நமக்கு அடிமை. தொறந்தே வெச்சிருந்தான்னா நாம அவனுக்கு அடிமை. டேய்... எட்டிப்பார்றா... என்ன செய்றான்னு # அம்மா பத்தின பஸ் இல்லீங்கோவ் # தேர்தல்2011 அப்டேட்ஸ்<br />
******************************************************<br />
<br />
கலைஞ டி.வி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு நேரடி ஒளிபரப்புல முடிஞ்சவொடனே 'தூங்காநகரம்' வெளம்பரம் போட்டாங்க. "நாந்தாண்டி அல்வா பேசுறேன்"னு ஆரமிக்குது. ஏதாச்சும் உள்குத்து இருக்கா??? :))) #தேர்தல்2011 அப்டேட்ஸ்<br />
******************************************************<br />
<br />
இனிமே ஒடம்பொறப்புக்கெல்லாம் இதயதெய்வம் 'அம்மா'தான் போலருக்கு :))) #தேர்தல்2011 அப்டேட்ஸ்<br />
******************************************************<br />
<br />
ஸ்பெக்ட்ரம் பணம் போயஸ்தோட்டம் வரை பாய்ஞ்சிடுச்சோ? அரசியல்ல எதுவும் நடக்கலாம் #தேர்தல்2011 அப்டேட்ஸ்<br />
******************************************************<br />
<br />
சத்தியமூர்த்தி.பவனுக்குள்ள உள்ளாற வர்றவங்க மினிமம் நாலு பட்டாபட்டி டிராயராவது போட்ருக்கணும்னு புதுசா ரூல்ஸ் போட்ருக்காங்களாம். நியூசென்ஸ் கேஸ்ல மாட்டாம இருக்க முன்னெச்சரிக்கை :))) #தேர்தல்2011 அப்டேட்ஸ்<br />
******************************************************<br />
<br />
விநாசகாலே விபரீதபுத்தி # அதிமுக அணியில் மதிமுக இல்லை # தேர்தல்2011 அப்டேட்ஸ்<br />
******************************************************<br />
<br />
நேத்துதான் என்னோட சிநேகிதன் தங்கராசு சொல்லிட்டு இருந்தான்.<br />
<br />
"அந்தம்மாவுக்கு எதிர்க்கட்சி தலைவரா இருந்து சொகுசு பழகிப்போச்சு. கொடநாட்டுல நாலுமாசம், சிறுதாவூருல மூணுமாசம், ஹைதராபாத்துல ரெண்டு மாசம், போயஸ் தோட்டத்துல டிங்கரிங், மராமத்துப் பணிகளை மேற்பார்வையிடுறதுல ரெண்டுமாசம். கோயிலு கொளம், பரிகாரப்பூசைன்னு ஷேத்ராடனத்துல ஒருமாசம் அப்டீன்னு ஜாலியா பொழுதுபோக்கிக்கிட்டு, அப்பப்போ போரடிச்சா அறிக்கைக்கப்பல் செஞ்சிவுட்டு வெளையாடுறது, தொண்டர்களுக்கு தரிசனம் கொடுக்கிறது, பச்சப்புள்ளைங்களுக்கு கிலுகிலுப்பையை புடுங்கி புடுங்கி மறுவடி கொடுத்து அழுவாச்சி காட்றமாதிரி கட்சிப் பதவிகளை வெச்சி வேடிக்கை காட்றதுன்னு குந்துனாப்புல இருக்குறத உட்டுப்புட்டு ஆட்சில ஒக்காந்து லொட்டான், லொசுக்கான், நண்டுசிண்டுக்கெல்லாம் மாஞ்சி மாஞ்சி பதில் சொல்லிக்கிட்டு எதுக்கு பிரஷரை ஏத்திக்கணும்னு இருப்பாங்க."<br />
<br />
" மைசூரு திவானு பங்களாவுல வேல பாத்த பரம்பரைன்னா சும்மாவா. ஒரு கெத்து மெயிண்டெயின் பண்ணனும்லே"<br />
<br />
தங்கராசு வாயிக்கு சக்கரையை (நோ..நோ... அந்த 'சக்கரை' இல்லீங்க) அள்ளிப் போடணும் # வைகோவுக்கு வைக்கோல் :))))<br />
<br />
# தேர்தல்2011 அப்டேட்ஸ்<br />
*****************************************************<br />
<br />
தமிழகத்தின் இருபெரும் கட்சித் தலைவர்களும் அவங்கவங்க பூர்வீக ஊர்ல போட்டியிடுறாங்க... மு.க திருவாரூர்லயும், ஜெ. ஸ்ரீரங்கத்துலயும்.<br />
<br />
இதுல மட்டும் ஒரே மாதிரி சிந்திக்கிறாங்கப்பா! # தேர்தல் 2011 அப்டேட்ஸ்<br />
*****************************************************<br />
<br />
மாமல்லபுரத்துல நடக்குதாம் பஞ்சாயத்து! பக்கத்தூட்டுக்காரனோட வாய்க்காவரப்பு பாகப்பிரிவினையைவிட, பங்காளி பாகப்பிரிவினை கஷ்டமா இருக்கும் போல! :))) # தேர்தல்2011 அப்டேட்ஸ்<br />
*****************************************************<br />
<br />
20 கெடச்சாலே வேட்டிய கிழிச்சுக்குவானுங்க. இப்போ 63 வேற. சத்தியமூர்த்தி பவனத்துக்குள்ள போற ஒவ்வொருத்தனும் ஆளாளுக்கு ஒண்ணுக்கு மூணு பட்டாபட்டிய மாட்டிட்டுப் போறதா கேள்வி. :))))) #தேர்தல்2011 அப்டேட்ஸ்<br />
****************************************************<br />
<br />
சாமி இல்லேன்னாரு பெரியாரு. ஒன்றே குலம் ஒருவனே தேவன்னாரு அண்ணா. கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு போனாரு எம்சியாரு. குருபலத்துக்காவ மஞ்சத்துன்ண்டு போட்டாரு கலைஞ்சரு. சாய்பாபா மோதிரத்துக்கு வாயப்பொளந்தாரு தொரமுருகன். கோயில்கோயிலா படியேறி பரிகாரம் பண்றாங்க பொர்ச்சித்தலேவி.# டார்வின் இருந்திருந்தா theory of evaluation ஐ ரிவர்ஸ்ல யோசிச்சிருப்பாரோ???<br />
***************************************************<br />
<br />
பேசாம காங்கிரஸ்காரனுங்க 90 சீட்டு வேணும்னு சொல்லியே புடிவாதமா இருந்திருக்கலாம். மிஞ்சி மிஞ்சி போனா என்ன பண்ணுவாங்க திமுகவுல? ரெண்டுநாளு ராஜினாமா நாடகம் நடத்திட்டு அப்பாலிக்கா 90 சீட்டுக்கு ஒத்துக்குறோம்னு சொல்லி இருப்பாங்க. காங்கிரஸ்காரங்களுக்கு அரசியலே தெரியலப்பா. :))))) ஸ்பெக்ட்ரம் மாதிரி அலாவுதீன் பூதத்தை கையில வெச்சிக்கிட்டு அல்ப்பை சல்ப்பையா 63 லயே நின்னிருக்கானுங்க :))))))) #தேர்தல்2011 அப்டேட்ஸ்<br />
***************************************************<br />
<br />
அறுவது சீட்டுக்கும், சிபிஐ வேட்டைநாயை கட்டுப்படுத்திக்கவும் அவுங்க ஒப்புத்துக்குவாங்க. உலக்கைக்கு வாழ்க்கைப்பட்டா இடிவாங்காம இருக்க முடியுமான்னு இவிங்களும் சமாதானம் ஆயிக்குவாங்க. கிய்யான் முய்யான்னு கத்திக்கிட்டு இருந்த தொண்டர்கள் கைகோர்த்து வேலை பார்க்க ஆரமிச்சிடுவாங்க. தலைவருங்கோ எல்லாம் கொள்கைக்கூட்டணி, கூட்டணிக்கொள்கை எல்லாத்தையையும் பத்தி வெக்கமில்லாம மொழங்க ஆரமிச்சிடுவாங்க. அய்யா வந்தாலுஞ்சரி, அம்மா வந்தாலுஞ்சரி... அடுத்த தேர்தல் வரைக்கும் தர்பார் வாசல் காவல்காரன்கூட சாமானியப்பட்டவனை ஏறெடுத்தும் பாக்கமாட்டான். ங்கொய்யால... ஜனநாயகமாம், மக்கள்நலனாம், மசிராப்போச்சி :((( #தேர்தல்2011 அப்டேட்ஸ்<br />
***************************************************<br />
<br />
என் கூகிள் பஸ் ஐடி : subramanian rajaraman <br />
<br />
<br />
காங்கிரஸைத் தோற்கடிக்கத் தேர்தல் களத்தில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் ஒருங்கிணைந்து குழுவாகச் செயல்படலாம் என்று சென்ற பதிவில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதனை தனது தளத்திலும் வெளியிட்டிருந்தார் கேஆர்பி.செந்திலண்ணன். ஏகப்பட்டபேர் தன்னார்வலர்களாக வருவார்கள் என்று நினைத்தேன். ஒரு சில நண்பர்கள் கேஆர்பி செந்திலுக்கு தொலைபேசியில் பேசி தங்களது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று கூறியுள்ளனர்.<br />
<br />
சமூக அக்கறையுடன் அரசியல் விமர்சனங்களை எழுதிவரும் நிறைய பதிவர்கள் தமது பங்களிப்பினை சிறிய அளவிலேனும் வெளிப்படுத்தலாமே? வெறுமனே இணையத்தில் மட்டும் 'பொங்கி' நானும் சமூக ஆர்வலன் தான் என்று காட்டிக் கொள்வதனால் ஆகப்போகும் பயனென்ன?<br />
<br />
நண்பர் பதிவர் கும்மி இது சம்பந்தமான ஒழுங்கமைவுகளில் ஈடுபட்டு வருகிறார். நாளை 19.03.2011 சனியன்று ஆர்வலர்களின் சந்திப்பை ஒழுங்கு செய்வதாக உத்தேசம். விருப்பமுள்ளோர் கேஆர்பி செந்திலை 80988 58248 என்ற எண்ணிலும், என்னை 95007 90916 என்ற எண்ணிலும் அழைக்கலாம். நம்மால் முடிந்தவரை குறைந்தபட்சம் பத்து தெருக்களாவது சுற்றிவந்து தெருவுக்கு நாலு ஓட்டை காங்கிரஸுக்குப் போகாமல் தடுத்து நிறுத்தலாமல்லவா?<br />
<br />
எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் - மக்கள்<br />
தனை ஈன்ற தமிழ்நாடு தனக்கும் - என்னால்<br />
திணை அளவு நலமேனும் கிடைக்குமாயின், நான்<br />
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்.<br />
உன்னை ஒன்று வேண்டுகிறேன் - என்னால்<br />
ஆவதொன்று உண்டாயின் அதற்கெந்தன்<br />
உயிர் உண்டு!<br />
<br />
- பாவேந்தர் பாரதிதாசன்<br />
<br />
<br />
<br />
</div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-86650547461965947262011-03-17T01:18:00.001+05:302011-03-17T12:11:24.468+05:301967 ஐ காங்கிரஸின் நினைவுகளில் தட்டியெழுப்புவோம்! தேர்தல் களத்தில் சூன்யத்தைப் பரிசளிப்போம்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG0iE_diRUxZ3oS3OHJOWGtRYRyYSx2x5aNwo0BrXkrQCv-OdySU1ZZT2Yee6NIpEWLO2Ak4N564s9Sri3TWRYDHRy8MJC4Ko4LiqeCjCPYdbOJjzocFYeHhRrFInnCBsi87EN9rgQfJ8/s1600/cremation2%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="250" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG0iE_diRUxZ3oS3OHJOWGtRYRyYSx2x5aNwo0BrXkrQCv-OdySU1ZZT2Yee6NIpEWLO2Ak4N564s9Sri3TWRYDHRy8MJC4Ko4LiqeCjCPYdbOJjzocFYeHhRrFInnCBsi87EN9rgQfJ8/s400/cremation2%25281%2529.jpg" width="400" /></a></div><br />
காங்கிரசுக்கு இறுதிச்சடங்குகளை செய்யத் தேவையான சாமக்கிரியைகளைப் பற்றி நானும் <a href="http://www.krpsenthil.blogspot.com/">கேஆர்பி அண்ணனும்</a> பேசிக் கொண்டிருந்தோம். நம்மால் என்ன செய்ய இயலும் என்பதனைப் பற்றிய ஆலோசனைகளை <a href="http://www.blogger.com/profile/01308037319730639111">பதிவர் கும்மி</a> உடல்நலன் குன்றி இருந்தபோதிலும் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட நேரம் தொலைபேசி உரையாடலில் பகிர்ந்து கொண்டார். அண்ணன் குழலியுடனான தொலைபேசி உரையாடலில் அவர் திமுகவையும் சேர்த்துப் புதைக்க வேண்டும் என்ற கருத்துக்களை பகிர்ந்தார்.<br />
<br />
இருக்கும் மிகச்சில நாட்களில் மிகச்சிறு அளவில் இருக்கும் தமிழ்(உணர்வுள்ள) இணையஜீவிகள் - ப்ளாக், டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாசகர்கள்- (அதிலும் நேரடியாக தேர்தல் களப்பணிக்கு தயாராக இருப்பவர்கள் மிக மிகக் குறைவு) மிகப்பெரும் அஜெண்டாவை வைத்துக்கொண்டு செயல்படுவது என்பது நடைமுறைச் சாத்தியங்களற்ற ஒன்று என்பதை நண்பர் கும்மி தனது கருத்தாகச் சொன்னார். இவ்வாறு களப்பணியாற்றத் தயாராக இருக்கும் தமிழ் இணையவாசிகள் ஏனைய தமிழ்தேசிய இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து, அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படுவதே சரியானதாக இருக்கும் என்றும் அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.<br />
<br />
காங்கிரஸ் போட்டியிடும் 63-ல் நிச்சயம் தோற்றுப்போகும் என்ற தொகுதிகளில் கவனம் குவிப்பதை விடுத்து, காங்கிரஸ் கடுமையான போட்டியைக் கொடுக்கக்கூடிய தொகுதிகளிலும், ஏறத்தாழ ஜெயித்துவிடும் என்ற நிலை இருக்கும் தொகுதிகளிலும் கூர்மையான செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் சிறந்த பலனைத் தரும் என்பதும் கும்மி அவர்களின் ஆலோசனை.<br />
<br />
இணையத்தமிழ் வாசகர்களும், ப்ளாக்,டிவிட்டர், ஃபேஸ்புக் முதலானவற்றில் பங்களிப்போருமாக இருப்பவர்களில் தேர்தல் பணிக்கு வர விரும்புவோருக்காய் பொதுவான ஒரு ஃபோரம் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்பது எனது கருத்து. அப்படி நமக்குள்ளேயே ஒரு ஒருங்கிணைப்பும், ஏனைய இயக்கங்களினுடன் ஒத்திசைந்து செயல்படுவதும் அவசியமானது என்று கருதுகிறேன்.<br />
<br />
இந்தத் தேர்தல் பணிகளில் பிரதானமாய் காங்கிரஸுக்கு எதிராய் எடுத்துவைக்கப்பட வேண்டிய பிரச்சாரங்களாக நான் கருதுபவை:<br />
<br />
1) மிக முக்கியமானதாக ஈழப்படுகொலைகள். ஒரு இனத்தையே கருவறுத்த குரூரத்தை துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், ஒளிப்பதிவுகளின் மூலமாகவும் கொண்டு செல்லுதல். வைகோ எழுதி இயக்கிய "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" என்ற ஆவணப்படத்தினை இதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பது பற்றி மதிமுக தோழர்கள் மூலமாக நான் முயல்கிறேன். அப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் எனில் அந்த ஆவணப்படத்தினை பல்லாயிரம் குறுவட்டுக்களில் படியெடுத்து விநியோகிக்க வேண்டும்<br />
<br />
2) தமிழக மீனவர் படுகொலைகளை எவ்வித இடையூறுகளுமின்றி நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசிற்கு கால்தாங்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் அயோக்கியத்தனத்தைப் பற்றிய பிரச்சாரங்கள்<br />
<br />
3) கேவலமான பொருளாதாரக் கொள்கைகளினால் மக்களின் வாழ்க்கைத் தரத்தினைச் சீரழித்து, விண்ணளந்த பெருமாளைப்போல சிகரத்தை எட்டி நிற்குமளவு விலைவாசி உயரக் காரணமாக இருந்த கையாலாகாத்தனங்கள், அற்பத்தனங்கள் பற்றிய பிரச்சாரம்<br />
<br />
4) அரசுக்கிடங்குகளில் இருக்கும் தானியங்கள் அழுகிப்போனாலும் போகுமே ஒழிய, அடித்தட்டு மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கமாட்டோம் என்று மேட்டிமைத்திமிர்த்தனத்துடன் இறுமாந்திருந்துவிட்டு இன்று அதே அடித்தட்டு வர்க்கத்திடம் "போடுங்கம்மா ஓட்டு" என்று பல்லை இளித்து பசப்பும் பொறுக்கித்தனம் பற்றிய பிரச்சாரங்கள்<br />
<br />
5) இதுவரையிலும், மீனவர் பிரச்சினையானாலும் சரி, காவேரிப் பிரச்சினையானாலும் சரி, முல்லைப்பெரியாறு பற்றிய பிரச்சினை, ஒகேனக்கல் பிரச்சினை என தமிழக நலன் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினைகளிலும் வாய்மூடி கள்ளமௌனம் சாதிக்கும் சாமர்த்தியம் பற்றிய பிரச்சாரம்<br />
<br />
6) காமன்வெல்த் போட்டிகளில் துவங்கி ஆதர்ஷ் ஊழல், ஸ்பெக்ட்ரம் என்று நீளும் காங்கிரஸின் லட்சணமான முகத்தினை மக்களுக்கு விளக்கும் பிரச்சார யுக்திகள்<br />
<br />
7) அந்தந்த பகுதி சார்ந்த உள்ளூர்ப் பிரச்சினைகளில் காங்கிரஸின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றிய விளக்கங்கள்.<br />
<br />
இவற்றை மையப்படுத்தி ஏனைய தமிழுணர்வாளர்களுடன் இணைந்து தீவிரமாக வீதிப் பிரச்சாரங்களில் கலந்துகொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைபார்க்கும் இளைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் தேர்தல் பணிகளின் தீவிரத்தை ஏற்கனவே சிவகங்கைச் சீமான் சிதம்பரம் அனுபவித்திருக்கிறார்.<br />
<br />
63-ல் மிகக்கடுமையாக வேலைசெய்ய வேண்டியதாக இருக்கும் 25 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து நான்கு அல்லது ஐந்து பேர்கொண்ட சிறு குழுக்களாக வீதிநாடகங்களை அரங்கேற்றுவது போன்ற வேலைகளைச் செய்யவேண்டும்.<br />
<br />
அமைக்கப்படும் ஃபோரத்திற்கு தலைவர் என்று யாரும் இல்லாமல் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவை நமக்குநாமே அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறாக தொடங்கப்படும் சிறிய அளவிலான ஃபோரத்தைப்பற்றிய செய்திகளை இணையத்தில் பரவலாக அறியப்பட செய்யக்கூடிய வேலைகளையும் நாம் செய்தாக வேண்டும். சிறு பொறிதான் தீயாகப் பரவ ஆரம்பிக்கின்றது. தனித்தனியாய் தன்னார்வலர்களாய் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் தமிழுணர்வாளர்களை ஒருங்கிணைக்கும்போது அதன் ஆற்றல் மிகப்பெரிதாக இருக்குமென்று எண்ணுகிறேன். ஏற்கனவே #tnfisherman என்ற வார்த்தை டிவிட்டர் மூலம் ஏற்படுதிய அதிர்வலைகளை நாம் கவனிக்கவேண்டும்.<br />
<br />
நண்பர் கும்மி இது தொடர்பாக "நாம் தமிழர்" இயக்கம், மற்றும் சில இயக்கங்களுடன் பேசுவதாகச் சொல்லி இருக்கிறார். நானும் என் தொடர்பிலுள்ள நண்பர்களிடம் பேசுவதாக இருக்கிறேன். அண்ணன் கேஆர்பி செந்திலும் இது தொடர்பான வேலைகளில் தீவிரமாக இயங்குவார்.<br />
<br />
காங்கிரஸுக்கு போடப்படாமல் தடுக்கப்படும் ஒவ்வொரு ஓட்டும் தமிழினத்தின் வேரில் பாய்ச்சப்படும் ஜீவ ஊற்று என்பதை கருத்தில் கொள்வோம்; களமிறங்குவோம்!<br />
<br />
இதற்கென பொதுவான ஒரு வலைப்பூவோ அல்லது இணையதளமோ (சாத்தியப்படின்), இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.<br />
<br />
நாம் விதையை ஊன்றுவோம். இது விருட்சமாகுமா, இல்லை வீணாய்ப்போகுமா என்பதை நாளைய தமிழகம் முடிவுசெய்து கொள்ளட்டும்.<br />
<br />
<b><span class="Apple-style-span" style="color: red;">"காங்கிரசுக்கு ஒரு ஓட்டுக்கூட விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. அப்படியும் காங்கிரசுக்கு யாரேனும் ஓட்டுப்போடுவார்களேயானால் அது இந்த நாட்டுக்கும், திராவிட மக்களுக்கும் செய்கிற துரோகம் மட்டுமல்ல.. தன் தாய், தகப்பன், பெண்டு பிள்ளைகளுக்குச் செய்யும் பெருந்தீங்கு. இந்த நிலையில் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்று எப்படி தம்பி நான் கூறமுடியும் & நாடு நகைக்காதா? நல்லோர் கை கொட்டிச் சிரிக்கமாட்டார்களா?’’</span></b><br />
<b><span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></b><br />
<b><span class="Apple-style-span" style="color: red;">& 55 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா சொன்ன வார்த்தைகள் இவை. - இன்றும் ஜீவித்திருக்கின்றன இவ்வார்த்தைகள்.</span></b></div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-22841438924799992442011-03-16T04:00:00.000+05:302011-03-16T04:00:31.526+05:30இதோ ஜயத்ரதன்! அதோ சூரியன்! எடு காண்டீபத்தை!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiATJdau0KQWAuENPbx_ZWT7YlEcJK7C4eXlDkMKeOwCd0P6SjkA5Cb3G6-lAT986LoZJHKx9IfV-75_wF1V3SGQCL6QxfOH-ie4vcV-k-f3QF3Vp4jRou0Njs2pP22gL0fOHCHrrYNg4E/s1600/kurukshetra_war_32_bc_climactic_battle.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="272" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiATJdau0KQWAuENPbx_ZWT7YlEcJK7C4eXlDkMKeOwCd0P6SjkA5Cb3G6-lAT986LoZJHKx9IfV-75_wF1V3SGQCL6QxfOH-ie4vcV-k-f3QF3Vp4jRou0Njs2pP22gL0fOHCHrrYNg4E/s400/kurukshetra_war_32_bc_climactic_battle.jpg" width="400" /></a></div>குருஷேத்திர யுத்தகளத்தின் பதிமூன்றாம் நாள். சின்னஞ்சிறு இளைஞனாக இருந்தாலும், பகைக்கூட்டத்தினிடையே சூறாவளியாய்ச் சுழன்று சக்கரவியூகக்கணக்குகளை சிதறச்செய்த அபிமன்யூவை சுற்றி வளைக்கின்றனர் கௌரவர் கூட்டத்தின் மகாவீரர்கள். தன்னந்தனியாய்க் களத்தில் சுழன்றடித்த அபிமன்யூவை பெருவீரர்கள் கூடிப் போர் செய்தபோதிலும் தோற்கடிக்க முடியாமல் போரியல் தர்மநெறிகளுக்குப் புறம்பான முறையில் அபிமன்யூ என்ற மகாவீரனைச் சிதைத்தனர் கௌரவர் படையின் தளகர்த்தர்கள்.<br />
<br />
"என் மகன் அபிமன்யூவினை அதர்மமாகக் கொன்ற ஜயத்ரதனை நாளைய சூர்ய அஸ்தமனத்துக்குள் கொல்வேன்! இல்லையேல் தீயில் வீழ்ந்து மடிவேன்" என்று சபதம் செய்கிறான் அர்ஜுனன்.<br />
<br />
விடிகின்றது பதினான்காம் நாள். ஜயத்ரதனைப் பாதுகாப்பாக வைத்து சுற்றி அரணமைத்து நிற்கின்றனர் துரோனாச்சாரியும், கர்ணனும், பூரிச்ரவசும், சகுனியும், சல்லியனும், விகர்ணனும்,சுதாயுவும், ஸகஸ்ரபாகுவும்,கிருபாச்சாரியாரும்,அஸ்வத்தாமனும், துரியோதனனும். கடும்போரில் ஒவ்வொருவராக வீழ்த்திவிட்டு முன்னேறியபோதிலும் அர்ஜுனனால் ஜயத்ரதனை நெருங்க முடியவில்லை. சூரியன் அஸ்தமிக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எப்படியும் இன்னும் கொஞ்சநேரம் தப்பியிருந்துவிட்டால் அர்ஜுனனிடமிருந்து உயிரும் பிழைக்கும், அர்ஜுனனும் இறந்துபடுவான் என்று காத்திருக்கிறான் ஜயத்ரதன்.<br />
<br />
முக்கால நிகழ்வுகளும் தப்பாது உணரும் கண்ணனும் இதை உணர்ந்து தன் வேலையைத் துவங்குகிறான். தன் சக்கராயுதத்தை வீசியெறிய அது சூரியனை மறைத்துக் கொண்டு அஸ்தமனம் ஆனதுபோல தோற்றத்தை ஏற்படுத்துகிறது. சண்டமாருதமாய் சுற்றிச் சுழன்றும், கொண்ட சபதத்தை நிறைவேற்ற முடியாத அர்ஜுனன் தீக்குண்டத்தை வளர்க்க ஆணையிடுகிறான். "தீக்குளிக்கத் தயாரானான் பார்த்தன்" என்று கேட்டு ஆனந்தக்கடலில் முக்குளித்த கௌரவர்கள் பார்த்தன் அக்கினியில் இறங்குவதைக் காண ஆவலுடன் சுற்றி நிற்கத் தொடங்கினர்... வாயைப் பிளந்துகொண்டு ஜயத்ரதனும் வந்து எட்டிப் பார்த்துக்கொண்டு நின்றான்.<br />
<br />
ஜயத்ரதன் எதிரே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கியது கண்ட கண்ணன் ஆதவனை மறைத்திருந்த சக்கராயுதத்தை திரும்பப் பெறுகிறான். எங்கும் பரவுகிறது அந்தியின் பொன்னொளி.<br />
<br />
கண்ணன் சொல்கிறான்...<br />
<br />
"அர்ஜுனா! இதோ ஜயத்ரதன்! அதோ சூரியன்!! அஸ்தமிக்க இன்னும் நேரம் இருக்கிறது. எடு காண்டீபத்தை! தொடு அம்பினை!!"<br />
<br />
காண்டீபம் நிமிர்கிறது...<br />
<br />
காண்டீபம் வளைகிறது...<br />
<br />
காண்டீபம் துளைக்கிறது...<br />
<br />
பறந்துபோய் விழுந்தது ஜயத்ரதனின் தலை!<br />
<br />
நண்பர்களே! இது புராணம். நடந்ததாகக் கூறப்படுவது அல்லது நம்பப்படுவது.<br />
<br />
இதே அபிமன்யூ, அர்ஜூனன், ஜயத்ரதன், கண்ணன், காண்டீபம் கதை நம் காலத்திலும் நிகழ்வதை உணர்கிறீர்களா?<br />
<br />
முப்பது ஆண்டுகாலம் எத்தனை முக்கியும் முழங்கால் மயிரைக்கூட பிடுங்க முடியாமல் நுரைதள்ளிப்போய் கிடந்தது சிங்களம். மிகச்சிறு நிலப்பரப்பில் மிகச்சிறு படையை நடத்திக்கொண்டு, சாராயம் இல்லாத, விபச்சாரம் இல்லாத, தூய்மையான ஒரு நிர்வாகத்தை, இது தமிழனின் நிர்வாகமுறை என்கிற ஒரு பாரம்பரியத் தொடர்ச்சியை உலகத்துக்கே முன்னுதாரணமாய் நிகழ்த்திக் கொண்டிருந்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்களது போரியல் முறைகளில், யுத்தகளங்களில் ஊழிப்பெருவெள்ளப்பெருக்காய்க் காட்டிய வீரத் தியாகங்களில், விக்கித்துப்போய் கிடந்தன வல்லரசுநாடுகள். முப்படைகள் சேர்ந்து கடுந்தாகுதல் நடத்தினால் ஒழிய தகர்ப்பது கடினம் என்று அமேரிக்கப் படைவல்லுனர்கள் கருத்து தெரிவித்துச் சென்றிருந்த ஆனையிறவுக்கோட்டையை முப்பத்தைந்தே நாட்களில் வெறும் 1200 வீரர்களைக் கொண்டு வீழ்த்திக்காட்டிய வீரம் புலிகளுக்கே சொந்தமானது.<br />
<br />
சிவில் நிர்வாகத்திலும், ராணுவ சாதனைகளிலும் தேர்ந்து தமக்கான ஒரு விடியலை கருக்கொண்டு இருந்த ஒரு சின்னஞ்சிறு தேசத்தை, இந்திய, சீன அரசுகள் தோள்கொடுக்க, மேற்கத்திய வல்லரசுநாடுகள் பின்னிருக்க, அபிமன்யூவாய் சிலிர்த்தெழுந்து கொண்டிருந்த அந்த தேசம் சிதைக்கப்பட்டது. லட்சக்கணக்கில் நரபலியெடுத்து, சிங்களத்துக்கு வால்பிடித்து, ஆயுத உதவியும், இன்னபிற தொழில்நுட்ப உதவிகளையும் கொடுத்து தனது ஜனநாயகக் கிரீடத்தில் ரத்தாபிஷேகம் நடத்திக்கொண்டது இந்திய வல்லரசு. "இந்தியாவுக்கான போரை நாங்கள் நடத்தினோம்" என்று கூச்சலிடுகிறான் மகிந்த ராஜபக்க்ஷே.<br />
<br />
தனது தனிப்பட்ட வஞ்சம் தீர்ப்பதற்காய் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களைக் காவுகொண்ட காங்கிரஸ் கட்சி இன்று தமிழகத் தேர்தல்களத்தில் ரத,கஜ, துரக பதாதிகளோடு களமிறங்கி இருக்கின்றது. தனித்து நின்றால் தமிழகத்திலிருந்தே துடைத்தெறியப்படுவோம் என்பதை நன்குணர்ந்து வியாபார பேரங்களை வெற்றிகரமாக ஸ்பெக்ட்ரம் உதவியுடன் முடித்து மிதப்பாக உலாவரத் தொடங்கிவிட்டது.<br />
<br />
சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே தேசமக்களுக்கு துரோகம் செய்தே பழக்கப்பட்ட ஒரு கட்சி, தனது சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக்கித் துரத்திக் கொல்லும் ஒரு கட்சி ( லால்கர், தண்டகாரண்யா), நரித்தனமான தனது ஆட்சித் தந்திரங்களால் நாட்டுமக்களுக்கிடையே மதவாதத்தையும், சாதி, மொழிப்ப் பிரிவினைகளையும் செவ்வனே தூண்டிவிட்டுக் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் ஒரு கட்சி, மிச்சம் மீதி இருந்த கோவணத்தையும் அடமானம் வைத்ததுபோல கொஞ்சம்போல ஒட்டிக் கொண்டிருந்த இறையாண்மையையும் அணுசக்தி ஒப்பந்தம் மூலம் அமெரிக்க வல்லரசுக்கு பந்திவைத்த ஒரு கட்சி, "வீணில் அழுகிப்போய் கடலில் கொட்டினாலும் கொட்டுவோம்; பட்டினியில் கும்பி காய்ந்து சாகும் கஞ்சிக்கில்லா கபோதிகளுக்குத் தரமாட்டோம்" என்று திமிர்த்தனம் காட்டிய ஒரு கட்சி, தமிழனின் உயிருக்கு ஆபத்து வரும்போதெல்லாம் கள்ளமௌனம் சாதித்து சீக்கியனின் மயிருக்கு பங்கம் நேர்ந்தால் மட்டும் பொங்கியெழுந்த ஒரு கட்சி, கொஞ்சமும் வெட்கமில்லாமல் உத்தம முகமூடி அணிந்து ஓட்டுக் கேட்டு வருகின்றது.<br />
<br />
இதோ கண்களுக்கெதிரில் காட்டப்பட்டிருக்கிறது நமக்கான இலக்கு...திருத்தணி தொடங்கி கிள்ளியூர் வரையிலான அறுபத்திமூன்று சட்டமன்றத் தொகுதிகள். காங்கிரஸ் கட்சியைக் கருவறுக்க, தமிழனின் பழிமுடிக்க களமாய் விரிந்து நீள்கிறது தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2011.<br />
<br />
இணையத்தில் மட்டுமே பொழிந்து கொண்டிருக்கும் மாயமழையாய் இல்லாமல், குறைந்தபட்சம் ஆளுக்கு ஐந்து நாட்களாவது தமிழுணர்வு கொண்ட பதிவர்கள், இணைய வாசகர்கள் அனைவரும் நமக்கு அருகிலிருக்கும் அறுபத்திமூன்றில் ஒன்றைத் தேர்வுசெய்வோம். தெருத்தெருவாய் இறங்கி மக்களைச் சந்திப்போம்.குறைந்தபட்சம் ஆளுக்கு ஐம்பது ஓட்டுக்களையாவது காங்கிரஸுக்குப் போகாமல் தடுப்போம்.<br />
<br />
என்னைப் பொறுத்தவரை நான், எங்கள் ஊரிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் அப்பகுதியில் உள்ள தமிழுணர்வாளர்கள், தமிழ்தேசியம் பேசும் அரசியல் இயக்கங்கள் ஆகியவற்றிடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களோடு இணைந்து காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரத்தினை மேற்கொள்ளலாம் என்று இருக்கிறேன்.<br />
<br />
தமிழ் என்ற இன உணர்வும், மனிதநேயமும் மிக்கோர் இந்தத் தருணத்தில் நமது இனத்துக்காய் செய்யவேண்டிய கடமையை செய்ய மறந்து விடாதீர்கள்.<br />
<br />
ஈழம் என்ற அபிமன்யூவைச் சிதைத்த ஜயத்ரதன் காங்கிரஸ் இதோ அறுபத்துமூன்று தொகுதிகளில்!<br />
<br />
ஓட்டுச்சீட்டுக்களாகவும், எதிர்ப்புப் பிரச்சாரங்களாகவும் நமது கரங்களில் காண்டீபம்!<br />
<br />
வீழட்டும் காங்கிரஸ் தமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும்!<br />
<br />
பின்குறிப்பு: மயிலாடுதுறை சட்டமன்றத்தொகுதிக்குச் செல்லும் அல்லது அங்கிருந்தே தேர்தல் பணிகளை ஆற்றிவரும் தோழர்கள் யாரேனும் என்னைத் தொடர்புகொண்டால் எனக்கு மிகவும் உபயோககரமாக இருக்கும்.<br />
<br />
இணைப்பு : காங்கிரஸ் பற்றிய எனது முந்தைய பதிவு: <a href="http://vinthaimanithan.blogspot.com/2010/08/blog-post_13.html">"தமிழகத்தில் மீளுயிர்க்கும் காங்கிரஸ் - ஒரு பைனாகுலர் பார்வை!"</a><br />
<br />
</div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-83676675106530971522011-03-14T00:37:00.001+05:302011-03-14T00:45:09.748+05:30இந்தியாவா? 'இந்தி'யா வா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcDAcGj4gyuN9wp655YeMBgp0zQlKmSxeKZALFGWCA9WEa_r4wrBEK3DNitS4Wn7cHI48yyx1ml6PgmCdXzWvKq3c6Qa5hs_Xw_NIHTs1dpkRQJTqBZmmBquOG3uETCytOjGyRX0uyb3M/s1600/225px-Periyarkutiarasu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcDAcGj4gyuN9wp655YeMBgp0zQlKmSxeKZALFGWCA9WEa_r4wrBEK3DNitS4Wn7cHI48yyx1ml6PgmCdXzWvKq3c6Qa5hs_Xw_NIHTs1dpkRQJTqBZmmBquOG3uETCytOjGyRX0uyb3M/s400/225px-Periyarkutiarasu.jpg" width="318" /></a></div>'தமிழ்பிளாக்கன்' என்று ஒரு பதிவு எழுத ஆரம்பித்திருந்தேன். வழக்கம்போல முதல்பாரா எழுதி மூன்றுமாத காலம் ஆகின்றது. அப்படியே மூடிவைத்திருக்கிறேன். பெரும்பாலும் பின்னூட்டமிடும் பதிவர்கள் வெறுமனே மொய்வைக்கும் முறைக்காக எங்காவது இரண்டு வரியைப் படித்துவிட்டு அதை காப்பி&பேஸ்ட் செய்து கமெண்ட் எழுதிவிட்டு "ஆகா!சூப்பர்", "அருமை", "நல்லாருக்கு" என்பது போன்று டெம்ப்ளேட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர். மலேரியா ஜூரம் வந்தவரைப்போல ஒருநாளைக்கு ரெண்டு பதிவு எழுதி 'பிரபலன்' ஆகும் கனவில் துடிப்பவரும் பலருண்டு. மிகச்சில பதிவர்களின் வலைப்பக்கங்களைத்தவிர மற்ற வலைப்பதிவுகளில் பெரிய அளவு சீரியஸ் விவாதங்கள் நடைபெறுவது அரிதாகவே இருக்கின்றது. மாற்றாக தற்போது கூகிள் பஸ், ப்ளாக்கைவிட மிகச்சிறப்பான விவாதத்தளமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் மாறி இருப்பதால் நிறைய ப்ளாக்கர்கள் தற்போது பஸ்ஸர்களாக மாறி வருகின்றனர். கூகிள் பஸ்ஸில் ஆழமான விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதில் புருஷோத்தமன் பொன்னுசாமி (குழலி அண்ணன்), சிவகுமார் மா, பலூன் மாமா(கல்வெட்டு) போன்றோரும், இன்னும் விவாதங்களில் சீரிய பங்கெடுப்பாளர்களாக கேவிஆர், மணிஜி, குசும்பன், ஜோசப் பால்ராஜ், கென், அய்யனார், ஜ்யோவ்ராம் சுந்தர், மணிஜி, யுவகிருஷ்ணா, அதிஷா போன்ற பல பழம்பெரும் பதிவர்களும் இருக்கின்றனர்.<br />
<br />
சமீபத்தில் நான் படித்தவற்றுள் மிக ஆழமான புள்ளிகளை தொட்டுச் செல்வதாகவும் அடர்த்தியானதாகவும் நான் உணர்ந்த பஸ்ஸை இங்கு பகிர விரும்புகிறேன். மா.சிவகுமார் அவர்களின் "இந்தி தேசிய மொழியா? இந்தி கற்பது அவசியமா?" என்பது பற்றிய விவாதங்களை உள்ளடக்கிய இந்த பஸ் ஆழமான தகவல்கள் விரும்புவோருக்கு ஒரு தூண்டுபுள்ளியாக அமையும் என்று எண்ணுகிறேன்.<br />
***********************************************************************<br />
<br />
<b>சிவகுமார் மா</b> - Buzz - Public<br />
தேர்தல் கூட்டணி பற்றிப் பேசும் சந்திப்பில், ராகுல் காந்தி இந்தியில் பேசியதால் கருணாநிதியின் மனம் புண்பட்டதாம்.<br />
<br />
இதற்கும் 'தேசியக் கட்சியுடன் பேசப் போனால் இந்தியில் பேசாமல் எதில் பேசுவார்கள்' என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாமே!<br />
<br />
(தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் ஊர் பெயர் எழுதியதற்கு இப்படித்தான் சமாதானம் சொன்னார்கள்).<br />
<i><br />
</i><br />
<i> 2 people publicly reshared this - அத்திவெட்டி ஜோதிபாரதி and Santhappan Sambandham</i><br />
<i>10 people liked this - subramanian rajaraman, Karthik J, Kathir கதிர், O.R.B Raja, அத்திவெட்டி ஜோதிபாரதி and 5 others</i><br />
<br />
<b>Akilan R</b> - அவர் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் இவர் மனம் புண்பட்டிருக்காதோ..? இப்படித்தானே தமிழகத்தில் இந்தி ஒழிக்கிறேன் என்று இரண்டாவது மொழியாக கூட இந்தி படிக்க விடாமல் தமிழரை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட விட்டு பார்த்தவர்கள், ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கூட இல்லாமல் முதல் மொழியாக ஆக்கி பல ஆங்கில வழி கல்வி கூடங்களுக்கு அனுமதி அளித்து, இன்று தமிழ் எழுத பேச தெரிந்த இளைஞர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.<i>Mar 10</i><br />
<br />
<b>சிவகுமார் மா </b>- அகிலன்,<br />
<br />
நீங்கள் இரண்டு முரணான கருத்துக்களைச் சொல்கிறீர்கள்.<br />
<br />
1. இந்தி படிக்காததால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறோம்.<br />
2. ஆங்கிலம் படித்ததால் தமிழ் பேச தெரிந்த இளைஞர்கள் அருகிப் போய் விட்டார்கள்.<br />
<br />
எனக்குப் புரிந்த வரை (எனக்கு சரி எனப்படும்) திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கை:<br />
<br />
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில மொழி ஆட்சி மொழியாக இருக்கும் (அந்த மாநிலத்தில் நடக்கும் மாநில மற்றும் மத்திய அரசு பணிகள் அனைத்திலும்).<br />
<br />
வெளி உலகுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும்.<br />
<br />
வேறு மாநிலத்துக்குப் போக விரும்புபவர்கள் அந்த மாநில மொழியைக் கற்றுக் கொண்டு போக வேண்டும். எந்த மொழிக்கும் முதலிடம், முன்னுரிமை கிடையாது.<br />
<br />
இன்னொன்றையும் யோசித்துப் பாருங்கள்:<br />
<br />
இன்று ஆங்கிலம் அல்லது இந்தி பேசத் தெரியாத தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மக்களவையிலோ, மாநிலங்களவையிலோ செயல்பட முடியாத நிலை இருக்கிறது.<br />
<br />
ஐக்கிய நாடுகள் சபையில் இருப்பதைப் போல உடனக்குடன் மொழி பெயர்க்கும் பணியாளர்கள் மூலம் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியிலும் பேசவும், அதை விரும்பிய மொழியில் கேட்கவும் ஏன் வசதி செய்யக் கூடாது.<br />
<br />
15 மொழிகள் என்று வைத்துக் கொண்டால் கூட 200க்கும் மேற்பட்ட வகைகளில் மொழிமாற்றப் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். ஆயிரக்கணக்கான பேர் அந்தத் துறையில் ஈடுபட்டுத் தேர்ச்சி பெறுவார்கள். அதன் மூலம் இந்திய மொழிகளுக்கிடையே உறவாடலும், கருத்துப் பரிமாற்றமும் வளரும்.<br />
<br />
எல்லா வேறுபாடுகளையும் (diversity) அழித்து ஒற்றை கலாச்சாரத்தை உருவாக்குவது என்றும் நடக்க முடியாத ஒன்று.<i>Mar 10</i><br />
<br />
<b>Akilan R</b> - நான் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை தவறாக சொல்லவில்லை. நீங்கள் சொல்லும் கூற்றுப்படி ஆங்கிலம் இல்லாமல் வெளிநாடுகளுக்கு, ஐ நா சபைக்கெல்லாம் செல்ல முடியாதுதான். நான் கேட்க வந்தது பிறகு ஏன் இந்திஐ மட்டும் ஒழிப்போம் என்றெல்லாம் பேசுகிறார்கள்? வெறும் ஓட்டுக்காக பேசும் பேச்சுதானே இது?<br />
<br />
குண்டு சட்டிக்குள் என்று நான் சொன்னது இந்தியாவிற்குள். உதாரணமாக இன்று என் கல்வி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் இருந்து மாணவர்கள் படிக்கிறார்கள். வெவ்வேறு மாநிலத்தார் கூடி பேசும் நிலை வரும்போது அனைவரும் இந்தியில் பேசுகிறார்கள். தமிழன் மட்டும் பேந்த பேந்த முழிக்கிற நிலைமை உள்ளது. அவர்களை ஆங்கிலத்தில் பேச சொன்னால் அவர்கள் கேட்கிறார்கள்: "மற்றவர்களுடன் உரையாட ஆங்கிலம் படிக்கும் நீங்கள் இந்தியை மட்டும் ஒழிப்போம் என்று பேசுவது நியாயமா? ஏன் தேசிய மொழியில் பேசும் இந்தியர்களான எங்களை ஆங்கிலத்தில் பேச சொல்கிறீர்கள்?" இதற்கு நான் என்ன பதில் சொல்ல?<i>Mar 10</i><br />
<br />
<b>சிவகுமார் மா</b> - நீங்கள் சொல்லும் சூழல் இந்தியாவில் நிலவுவது வருத்தமான உண்மை. நானும் பல இடங்களில் இந்தக் கேள்வியைச் சந்தித்திருக்கிறேன்.<br />
<br />
இந்தியா பல்வேறு தேசிய இனங்களின் தாயகம். இந்தியாவுக்கு ஒற்றை தேசிய மொழி இருக்க முடியாது.<br />
<br />
இலங்கைக்கு இரண்டு தேசிய மொழிகள், மலேசியா/சிங்கப்பூரில் மூன்று (நான்கு?) தேசிய மொழிகள். அவற்றைப் போல இந்தியாவுக்கு குறைந்தது 16 தேசிய மொழிகள்.<br />
<br />
'தேசிய மொழியில்' பேசுகிறோம் என்று இந்தியில் பேசுபவர்கள் சொன்னால், நாமும் அவர்கள் இருக்கும் சூழலில் தமிழில் பேசலாம் (தமிழும் இந்தியாவின் தேசிய மொழிதான்).<br />
<br />
(கூட்டத்தில் இருக்கும் ஒருவருக்குப் புரியாத மொழியில் பேசுவது அநாகரீகம். அது இந்தி பேசும் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. )<i>Mar 10</i><br />
<br />
<b>Akilan R</b> - நீங்கள் நான் சொல்வதை தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன். அவர்கள் இந்திகாரர்கள் அல்ல. அவர்களுடைய தாய் மொழி எல்லாம் வெவ்வேறு. அவர்கள் கூட்டத்தில் உள்ள எல்லோருக்கும் புரிய வேண்டும் என்றுதான் இந்தியில் பேசுகிறார்கள். உதாரணமாக என் லாபிலேயே கன்னடரும் ஒரு பெங்காளியும்உள்ளனர். அவர்கள் இந்தியில்தான் பேசுவர். 16 மொழிகள் தேசிய மொழி என்றாலும் இந்திதான் இந்தியாவின் வழக்கு மொழி என்பதை நினைவு கூர்கிறேன்.<br />
<br />
மற்றவருடன் உரையாட வேண்டும் என்று ஆங்கிலம் கற்றுகொல்வதை பற்றி கவலை படாதவர்கள் இந்தியை மட்டும் தடை செய்ய வேண்டும் என்று ஏன் பேச வேண்டும்?<i>Mar 10</i><br />
<br />
<b>Akilan R</b> - அவர்கள் இந்திகாரர்கள் என்றால் நான் உடனே 'நான் மட்டும் என் தாய்மொழியை ஏன் விட வேண்டும் நான் தமிழில்தான் பேசுவேன்' என்று அவர்களிடம் சொல்லியிருப்பேன். ஆனால் அவர்கள் வெவ்வேறு மொழியினத்தார். தத்தம் நண்பர்களுடன் அவர்களது தாய்மொழியில் பேசுபவர்கள். கூட்டத்தில்தான் (மற்றவர்க்கு புரிய வேண்டும் என்று ) தம் தாய் மொழியை விட்டு இந்தியாவின் வழக்கு மொழியான இந்தியில் பேசுகிறார்கள். அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்வதற்கு எனக்கே வெட்கமாக உள்ளது. :-( <i>Mar 10</i><br />
<br />
<b>சிவகுமார் மா</b> - 1. இந்தியாவில் இந்தி மொழி பேசும் பகுதிகள் எண்ணிக்கையில் முதலிடம் (பெரும்பான்மை இடம் கிடையாது.<br />
<br />
2. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஓரிசா, மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் அந்தந்த பகுதிக்கான தேசிய இனங்கள் பல நூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மொழிகள் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.<br />
<br />
3. இந்தி பேசும் பகுதிகளில் (குஜராத், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம்) - இந்தியின் ஆதிக்கத்தால் முக்கியமான மொழிகள் அழிந்து போய் விட்டன அல்லது அழியும் நிலையில் இருக்கின்றன.<br />
<br />
4. தமிழ்நாட்டில் மையம் கொண்ட இந்தி எதிர்ப்பு நிகழ்ந்திரா விட்டால், இன்னும் சில நூற்றாண்டுகளில் அழிந்து போகும் திசையில் 2ல் சொன்ன தேசிய மொழிகள் அடி எடுத்து வைத்திருக்கும்.<br />
<br />
5. இந்தியா என்பது 3ல் சொன்ன மைய நிலப்பகுதி மட்டும்தான், சூழ்ந்த தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு தேசிய இனங்கள் இந்தி பேசும் பகுதிகளின் colony என்று ஏற்றுக் கொண்டால்தான் இந்தி மொழியை வழக்கு மொழி என்று ஏற்றுக் கொள்ள முடியும்.<br />
<br />
the authority of a thousand is not worth the humble reasoning of a single individual என்று<br />
<br />
அறிவியலைப் பற்றி கலிலியோ சொன்னது போல, நமது நிலைப்பாட்டை தெளிவாக வைத்துக் கொண்டு எத்தனை பேர் கூட்டத்திலும், தனி ஒருவராக கருத்தைச் சொல்லலாம்.<i>Mar 10</i><br />
<br />
<b>Akilan R </b>- ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஆங்கிலம் மட்டும் பெரும்பான்மை மொழியா? அதை படிக்க ஒப்புக்கொள்வது ஏன்?<br />
பெரும்பான்மை பார்த்து வருவதல்ல வழக்கு மொழி. எல்லோரும் சேர்ந்து ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதே அது.<br />
<br />
எந்த மொழியை வழக்கு மொழியாக ஏற்றாலும்(தமிழ் உட்பட ) ஒரு சில மாநிலத்தார் அதனை தாய்மொழியாக கொண்டுள்ளனர் என்ற நிலை இருக்கத்தான் செய்யும். அதற்காக அவர்கள் நம்மை அடிமை படுத்த எண்ணுகிறார்கள் என்று சொல்ல முடியாது.<i>Mar 10</i><br />
<br />
<b>சிவகுமார் மா</b> - ஃபிரான்சில் ஆங்கில மொழியை ஒப்புக் கொள்வது இல்லை. ஃபிரெஞ்சு மொழிக்கு நெருக்கமான உறவுடன் இருக்கும் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தா விட்டால், ஃபிரெஞ்சு மொழி அழிந்து விடும் என்று உணர்வு.<br />
<br />
ஒன்றுக்கொன்று நெருக்கமான உறவுடைய இந்திய மொழிகளில் ஒன்றை ஆதிக்கம் செலுத்த விட்டால், மற்ற மொழிகள் காலப்போக்கில் மறைந்து ஒழிந்து போகும்.<br />
<br />
(அதனால் என்ன என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.)<br />
<br />
மனிதரால் பேசப்படும் மொழி 'வெறும் தகவல் பரிமாற்ற கருவி' என்று சிலர் சொல்வது கிடையாது. ஒரே மொழியில் பேசுபவர்கள் தமக்குள் ஆழமான தொன்மையான கலாச்சார பரிமாற்றங்களைச் செய்து கொள்ள முடிகிறது. இன்னொரு மொழியில் அதே பரிமாற்றம் கிடைக்காது. ஒரு மொழியை இழப்பது அந்த கலாச்சார வளத்தை இழப்பதாகி விடும்.<br />
<br />
75 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தேசிய மொழி பற்றி விவாதம் வந்த போது இன்றைக்கு இருக்கும் தகவல் தொழில் நுட்பங்கள் வளர்ந்திருக்கவில்லை. அதனால் மொழிமாற்ற சாத்தியங்கள் குறைவாக இருந்திருக்கலாம். அதனால், இணைப்பு மொழியாக (வெவ்வேறு மொழி பேசும் மக்கள் உறவாடும் இடத்தில் மட்டும்) ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டார்கள் இந்தி மொழி பேசாத மக்களின் தலைவர்கள்.<br />
<br />
21ம் நூற்றாண்டில் அதுவும் தேவைப்படாது. ஒருவர் தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்று தேர்ச்சி பெற்று மற்றவர்களுடன் உறவாட, மொழி மாற்றக் கருவிகளைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் உள்ளன.<br />
<br />
தொழில் புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழி, வழக்கு மொழி என்ற கேள்வி குறைவாகவே இருந்திருக்கும். மிகச்சிலரே மாற்று மொழி பேசும் பகுதிகளுக்கு பிரயாணம் செய்திருப்பார்கள். பயணத்துக்கு முன்பு அந்தப் பகுதி மொழியைக் கற்றுக் கொண்டு போயிருப்பார்கள்.<br />
<br />
திராவிட அரசியல்வாதிகள் வியாபாரிகளாக உருவெடுக்காமல் இருந்திருந்தால், தொடர்ந்து சிந்தித்து காலத்துக்கு ஏற்ப மொழிக்கொள்கையை வளர்த்துச் சென்றிருப்பார்கள்.<br />
<br />
அது நடக்காமல், (நீங்கள் சொல்வது போல) ஆங்கிலம் மூலை முடுக்கெல்லாம் ஊடுருவி நிற்பது நமது தோல்வி.<i>Mar 10 (edited Mar 11)</i><br />
<br />
<b>டிபிசிடி TBCD</b> - @அகிலன்<br />
<br />
//ஏன் தேசிய மொழியில் பேசும் இந்தியர்களான எங்களை ஆங்கிலத்தில் பேச சொல்கிறீர்கள்?"//<br />
<br />
இந்தியாவிற்கு இன்னமும் தேசிய மொழி என்று எதுவும் நிறுவப்படவில்லை. இந்தி நடுவண் அரசின் அதிகாரப்பூர்வ மொழி. அந்தந்த மாநிலங்களில் பேசப்படும் மொழியும், ஆங்கிலமும், அந்தந்த மாநிலங்களுக்கு உள்ளது.<br />
<br />
இந்தி தேசிய மொழியாக மாற்றப்பட வேண்டும் என்று தான் இந்தியயை வலுக்கட்டாயமாக பள்ளிகளில் திணிக்க முற்பட்டனர்.<br />
<br />
நீங்கள் கூறிய பிற மாநிலங்களில் அவர்கள் பேசிய மொழிகள் இன்று வழக்கொழிந்து அந்த இடத்தில் இந்தி மட்டுமே கோலோச்சுகின்றது.<i>Mar 10</i><br />
<i><br />
</i><br />
<b>அரசு பாரி -</b> @அகிலன்<br />
<br />
1947க்கு முன்பு பெரும்பான்மை மக்களால் பேசப்பட்ட மொழி பெங்காலி... அது எப்படி பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாக இந்தி ஆனது!?<i>Mar 10</i><br />
<i><br />
</i><br />
<b>அரசு பாரி</b> - @அகிலன்<br />
<br />
இரண்டு எடுத்துகாட்டுகளை பார்ப்போம்...<br />
<br />
1. இந்தியை ஏற்றுக்கொண்டதால், அண்டை மாநிலமான கேரளாவில் 40சதவிகித மக்களுக்கு மலையாளம் பேச மட்டுமே தெரியும். எழுத தெரியாது.<br />
<br />
2. இந்தியை ஏற்றுக்கொண்டதால் மராட்டிய மொழியே வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கிறது.<br />
<br />
தமிழ்நாட்டை பொருத்தவரை இந்தி எதிர்ப்பு என்பது இந்தி திணிப்பை எதிர்த்து தான் இருந்தது... மற்றபடி தனிமனிதர்கள் தேவைப்பட்டால் கற்க எந்த தடையும் இல்லை.<i>Mar 10</i><br />
<i><br />
</i><br />
<b>சிவகுமார் மா</b> -<br />
<br />
//இந்தியை ஏற்றுக்கொண்டதால் மராட்டிய மொழியே வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கிறது.//<br />
<br />
அந்த வெறுப்புதான், சிவசேனா போன்ற கட்சிகளின் தீவிர அரசியலுக்குக் காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.Mar 10<br />
அரசு பாரி - @அகிலன் பலர் நினைத்துக்கொண்டிருப்பது போல மொழி என்பது வெறும் தொடர்புக்கொள்ளும் கருவி அல்ல (communication medium) அதையும் தாண்டி பல உள்ளன.<br />
<br />
1. அகிலன் என்கிற தனிமனிதன் வாழ்நாள் முழுவதும் லைப்பரரி ஆப் காங்கிரஸில் உட்கார்ந்து படித்தால் கூட அறிவு, சிந்திக்கும் திறன், கற்கும் திறன் போன்றவை உயர்ந்து விடாது. அறிவு, சிந்திக்கும் திறன், கற்றல் திறன் மூன்றும் தலைமுறை சுழற்சியோடு தொடர்புடையவை. ஒரு சமூகம் தலைமுறை சுழற்சியில் பெரும் அறிவை மொழியின் ஊடாக பொதிந்து வைத்துள்ளது.<br />
<br />
2. ஒரு சமூகத்தின் தாய்மொழியை சிதைப்பதன் மூலம் அந்த சமூகத்தின் அறிவு, சிந்திக்கும் திறன், கற்றல் திறன் மூன்றையும் சிதைக்க முடியும் அல்லது பின்னோக்கி தள்ள முடியும்.<i>Mar 10 (edited Mar 10)</i><br />
<br />
<b>அரசு பாரி </b>- @மா.சி<br />
<br />
//அந்த வெறுப்புதான், சிவசேனா போன்ற கட்சிகளின் தீவிர அரசியலுக்குக் காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.//<br />
<br />
மராட்டிய மக்களின் உணர்வுகளை வைத்து சிவசேனா அரசியல் மட்டுமே செய்கிறது. மராட்டிய மொழி, வாழ்வாதாரம் போன்றவற்றில் சிவசேனா அரசியல் விளையாட்டு விளையாடுகிறது.<i>Mar 10</i><br />
<br />
<b>Akilan R</b> - @அரசு பாரி:<br />
<br />
நீங்கள் கூறுவதை நான் நன்றாக அறிவேன். இங்கு தமிழில் உரையாடுவதற்கும், மேலும் என் நண்பர்களிடையேயும் நான் இருக்கும் அலுவலகம், குழுமங்கள் போன்றவற்றிலும் தமிழை நான் முன்னிறுத்தி போராடுவதற்கும் அதுவே காரணம். எனக்கும் மா.சி. அவர்களுக்கும் பொதுவாக இருந்த இந்த குணங்களே எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட காரணம்.<br />
<br />
communication medium என்ற அளவில் நான் பேசியதற்கு காரணம் நான் பேசியது எல்லாம் ஆங்கிலத்தையும் இந்தியையும் பற்றியது என்பதால். அவை நமது தாய் மொழி அல்லவாகையால் நமக்கு அவை தொடர்பு கருவிகளே.<i>Mar 10</i><br />
<br />
<b>Akilan R</b> -<br />
<br />
//மராட்டிய மக்களின் உணர்வுகளை வைத்து சிவசேனா அரசியல் மட்டுமே செய்கிறது. மராட்டிய மொழி, வாழ்வாதாரம் போன்றவற்றில் சிவசேனா அரசியல் விளையாட்டு விளையாடுகிறது//<br />
<br />
அதுதான் தமிழகத்திலும் நடக்கிறது என்பதே நான் சொல்ல வந்தது.<i>Mar 10</i><br />
<br />
<b>சிவகுமார் மா </b>- @அரசு பாரி,<br />
<br />
அகிலனின் கேள்வி, ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை வளர்த்து விட்டு இந்தியை மட்டும் எதிர்ப்பதன் போலி அரசியலைப் பற்றியது.<br />
<br />
அது திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டுக்கு இழைத்த துரோகம் என்பது உண்மைதானே!<i>Mar 10</i><br />
<br />
<b>அரசு பாரி</b> - @அகிலன், @மா.சி<br />
<br />
ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டு இந்தியை எதிர்க்க வேண்டியதேன்? இதை புரிந்துக்கொள்ள 1947 பிந்தைய அரசியலில் நடந்த தகிடுத்தோம்கள், சதிகளை புரிந்துக்கொள்ள வேண்டியிருகிறது.<br />
<br />
நேரு, படேல் மட்டுமல்ல... அம்பேத்கர் உடன் பணியாற்றிய 5 பேரும் சமஸ்கிருதத்தை பின்னணியாக கொண்டவர்கள்... சமஸ்கிருதத்தை முன்மொழிவதன் மூலம் தங்களுடைய சமூகத்தை முன் நகர்த்தி மற்ற சமூகத்தை பின் தள்ள நடந்த சதி தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நடந்த மொழி சார்ந்த குளறுபடிகள்.<br />
<br />
சமஸ்கிருதத்தை முன்மொழிய நடந்த முயற்சி தோல்வியடைந்தபொழுது... சமஸ்கிருதத்தை அடிதளமாக கொண்ட இந்தியை முன்மொழிந்து தங்களுடைய சமூக இருப்பையும், அதிகாரத்தையும் தக்க வைக்க முயற்சித்தார்கள்.<br />
<br />
ஒரு குறிப்பிட்ட சமூகத்திடன் குவியும் அதிகாரத்தை முதன் முதலில் அடையாளம் கண்டு எதிர்த்தவர்கள் பஞ்சாபிகளே! மொழி சார்நத போராட்டமாக அது அமையவில்லை... அது முழுக்க, முழுக்க பிராந்திய போராட்டமாக இருந்தது. இதனால் கிட்டதட்ட 20 லட்சம் பஞ்சாபிகள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
தமிழ்நாட்டில் மட்டுமே இது மொழி சார்ந்த போராட்டமாக இருக்கிறது... மற்றபடி உள் ஆழ்ந்து பார்த்தால் சமஸ்கிருதத்தை அடிதளமாக கொண்ட சமூகம் முன்னோக்கியும்... மற்ற சமூகத்தை பின் தள்ளும் ஒரு ஆயுதமாக மொழியை பயன்படுத்தினார்கள் என்பது தான் உண்மை.<br />
<br />
திராவிட இயக்க முன்னோடிகள் இதன் சிக்கலையெல்லாம் விரிவாக மக்கள் மன்றத்தில் வைக்கவில்லை (அண்ணா உட்பட) ... உணர்வு மட்டத்தில் இந்த பிரச்சினையை கையாண்டார்கள்.<br />
<br />
பெரியார் போன்றவர்கள் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்ட காரணம் 18ம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஐரோப்பியர்கள் முன்னோக்கி சென்றுக்கொண்டிருந்த காரணத்தால்... ஆங்கிலத்தை முன்மொழிந்து... தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை பயன்படுத்தினால்.... தமிழ் சமூகத்திற்கு கூடுதல் வளர்ச்சி கிட்டும் என்று எண்ணியிருக்கலாம் <i>Mar 10 (edited Mar 10)</i><br />
<br />
<b>ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் </b>-<br />
<br />
மாயாவதி உள்ளிட்ட இலட்சோபலட்ச மக்களின் தாய்மொழியும் இந்திதான் ;-) <i>Mar 10 (edited Mar 10)</i><br />
<br />
<b>அரசு பாரி </b>- @ரமாதாஸ்<br />
<br />
உ.பி, பீகார் போன்ற மாநிலங்களின் இன்றைக்கு கிராம மக்கள் பேசுகிற மொழியும் மேட்டுகுடி இந்தியும் வேறுபடுகிறபொழுது... மிக அழுத்திருத்தமாக சொல்ல முடியும்... எல்லோரையும் இந்து என்று கழுத்தறுக்கிற இந்திய சட்டம் போல... "இந்தி" என்று உ.பி, பீகார் மக்களின் மொழியும் சிதைக்கப்பட்டடுள்ளது.<br />
<br />
பல லட்சகணக்கான மக்களின் தாய்மொழி இந்தியே கிடையாது... "இந்தி" அவர்களின் தாய்மொழி என்று இந்திய (பார்ப்பன, பனியா) அதிகாரத்தால் திணிக்கப்பட்டுள்ளது.<i>Mar 11 (edited Mar 11)</i><br />
<br />
<b>பிரியமுடன் பிரபு</b> - Mm <i>Mar 11</i><br />
<br />
<b>Akilan R</b> - இதற்கு மேல் இங்கு நான் பேசுவது நல்லதல்ல என்று படுகிறது. மொழி பற்றிய விவாதம் என்பது போய், திராவிட 'முன்னேற்ற' கட்சிகளின் போலி அரசியலின் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சு போடும் முகம் வெளிப்படுகிறது. ஒரு இனத்தையே வெறுப்பது அல்லது எதிர்ப்பது என்றுமே போலி, ஆதாய அரசியல்வாதியின் குணம் என்றார் நெல்சன் மண்டேலா. (இதை அவர் வெள்ளையர்களை தென் ஆப்ரிக்காவில் இருந்து துரத்த வேண்டும் என்று குரலிட்டவர்களை நோக்கி சொன்னார்.) இதுவே இங்கு என்னுடைய கடைசி பதிலீடு.<i>Mar 11</i><br />
<br />
<b>அரசு பாரி</b> - @அகிலன்<br />
<br />
பல்வேறு இடங்களில் சுட்டிகாட்டியது... மீண்டும் நினைவு ஊட்ட வேண்டியுள்ளது... திராவிட இயக்க முன்னோடிகள் யாரும் குறிப்பிட்ட இனத்தை தாக்க வேண்டும், விரட்ட வேண்டும் என்று வலியுறுத்தியது கிடையாது. பெரியாரின் காலக்கட்டத்தில் அவ்வாறு செய்ய நினைத்திருத்தால்... அவருக்கிருந்த மக்களின் பலத்திற்கு முன்பு.. அச்செயல் ஒரு கட்டளையில் முடிந்திருக்கும். அதே போல அண்ணா காலத்திலும்!<br />
<br />
ஒரு குறிப்பிட்ட இனத்தின் அதிகார வெறியையும், ஆதிக்க சிந்தனையும் சுட்டிக்காட்டும்பொழுது... உங்களை மாதிரியானவர்கள் போலி நடுநிலைமை வேடம் கட்டுவீர்கள்!<br />
<br />
இங்கே ஆமாச்சு பேசியிருக்கிறார்...<br />
இந்தியாவில் எத்தனை தேசிய இனங்கள் இருக்கிறது, அவர்களின் பண்பாட்டுடைமை இருக்கிறது.<br />
<br />
ஆனால் open office இந்தியா பதிப்புக்கு Bharatiaya OO என்று பெயர் வைக்க யார் காரணம்?<br />
Bharatiaya என்ற சொல் எங்கிருந்து வந்தது?<br />
<br />
இந்தியாவில் இதுவரை நடந்துள்ள எத்தனை ஆராய்ச்சி பெயர்கள் சமஸ்கிருதம் அல்லாத பெயர் வைக்கப்பட்டுள்ளது.<br />
<br />
நுண்ணரசியலை புரிந்துக்கொள்ள மறுத்து... இது போலிதனம், அது ஆதாயத்திற்காக செய்கிறார்கள்.. புறங்கையால் எதையும் தள்ளிவிட்டு போவது எளிது!<i>Mar 11 (edited Mar 11)</i><br />
<br />
<b>Balloon MaMa -</b> .<br />
<br />
//மொழி பற்றிய விவாதம் என்பது போய், திராவிட 'முன்னேற்ற' கட்சிகளின் போலி அரசியலின் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சு போடும் முகம் வெளிப்படுகிறது. //<br />
<br />
திராவிடம் என்பது ஆரியவாதத்திற்கு (சனாதன பார்ப்பன) எதிரான கலக அரசியல் குறியீடு.<br />
<br />
இதை பெரியார் சரியாகப் பயன்படுத்தினார்.<br />
வீரமணி என்பவர் திராவிடம் என்பது அவரின் கல்லூரி மற்றும் அறக்கட்டளையைக் காக்க என்ற அளவில் பயன்படுத்தி வருகிறார்.<br />
கருணாநிதி அவரின் குடும்ப நன்மைக்காகப் பயண்படுத்தி வருகிறார்<br />
ஜெயலலிதா , கேப்டன் காந்த் ...அது என்ன என்றே தெரியாமல் அப்படிப்பெயர் கொண்ட கட்சிக்குத் தலைமை தாங்குகிறார்கள்.<br />
<br />
<br />
எனவே திராவிடம் என்பது என்ன என்று தெரியாமல் இந்தக்கால அரசியல் மொக்கைகளோடு இணைத்துப்பேச வேண்டாம்.<br />
<br />
இந்தியாவில் இருந்தாலும் வடகிழக்கு மாநிலங்களில் என்ன நடக்கிரது என்பது கடைக்கோடி தமிழனுக்குத் தெரியாது. இந்தியா என்பது பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. அதை கிந்தி என்று தட்டையாகப் பார்த்து பேசமுடியாது.<br />
<br />
மொழித்திணிப்பை எதிர்த்து வெற்றி பெற்றதால்தான் இன்று தமிழ் திரைப்பட உலகம் கோலிவுட்டைவிட சாதிக்கிறது. கிந்தியை ஏற்றுக்கொண்டிருந்தால் இங்கும் கான்கள்தான் ஆட்சி செய்திருப்பார்கள். இது ஒரு சின்ன உதாரணம்.<br />
<br />
<br />
மொழி என்பது அடையாளம் மட்டுமல்ல வரலாறு. அதை இழக்கமுடியாது.<br />
<i>.Mar 11</i><br />
<br />
<b>ப்ரியன் / Vignesh Palaniswamy </b>- Hindi yetrukondiruntal India muluthum kuthirai otti irukkalam , paavam tamilargal English ah yetrukondu ulgam yendra kundu satiyil kuthirai ooti kondirukkiraragal Mar 11<br />
<br />
<b>ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் -</b> //உ.பி, பீகார் போன்ற மாநிலங்களின் இன்றைக்கு கிராம மக்கள் பேசுகிற மொழியும் மேட்டுகுடி இந்தியும் வேறுபடுகிறபொழுது..//<br />
<br />
ஒரே மொழி அம்மொழியையே பொதுவாய் பேசும் பல்வேறு இனத்திற்கு இனம் - ராஜ்யத்திற்கு ராஜ்யம் வேறுபடுவது இயல்பான ஒன்று.<br />
<br />
ஆற்றல் படைத்தோர் அச்சிறு சிறு தனித்தன்மைகளை கூட பொதுத்தன்மையென்ற பெயரால் நசுக்கத் தான் செய்கிறார்கள். கொங்குநாட்டிற்கு இருக்கும் தனித்தன்மையை தமிழ்நாடு நசுக்குகிறது. தமிழ்நாட்டிற்கு இருக்கும் தனித்தன்மையை இந்தியா நசுக்குகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் தனித்தன்மையை அமேரிக்கா போன்ற நாடுகள் நசுக்குகின்றன..<br />
<br />
ஒருத்தன் ஒரு மொழிபேசுவோரெல்லாம் ஓரினம் என்று சொல்கிறான். வரலாறு அவன் சேர சோழ பாண்டிய இனங்களாக இருந்ததை வெளிப்படையாக தெரிவிக்கும் போதும். ஒருவன் அரசியல் சாசனத்தைக் காட்டி ஒரே நாடு ஒரெ இனம் என்று கூப்பாடு செய்கிறான் - அப்படி இணைத்த ஒரே இழை தூய்மையான ஆன்மீகம் ஒன்றைத்தவிர வேறில்லை என்பதை மறந்து. மற்றொருவன் உலகத்துக்கெல்லாம் நாட்டாமை.. உலக மக்கள் எல்லாரும் ஒன்று என்ற மேதாவித்தனத்தை சுட்டி சுரண்டிக் கொண்டிருக்கிறான். கம்யூனிஸ்ட் இன்டர்னேஷனல் அதைவிட பலே! ;-)<br />
<br />
மொழியால் ஒரு இனத்தை தாராளமாய் ஏற்படுத்துங்கள். அதில் யார்மாட்டும் துவேஷம் இல்லாது செய்யுங்கள்.<br />
<br />
மேட்டுக்குடின்னு நகரத்தில் இருப்போரை குறிப்பிடறீங்களா? கிராமங்களில்தான் அந்த வேறுபாடு ஜாஸ்தி.<br />
<br />
பீகார் மாநில மைதிலி மொழி உள்ளிட்ட இன்ன பிற விவகாரங்களும் அறிவேன். ஆனாலும் மாயாவதி போன்ற கோடானு கோடி மக்களின் தாய் மொழியும் இந்திதான்!<i>Mar 11 (edited Mar 11)</i><br />
<br />
<b>subramanian rajaraman</b> -<br />
<br />
மிகமிக பயனுள்ள அலசல். மா.சி அவர்களும், அகிலன், டி.பி.சி.டி, அரசு பாரி ஆகியோரும் இந்த விவாத்தை இன்னும் முன்னகர்த்திச் செல்ல வேண்டுகிறேன். என்னைப்போன்ற பலருக்கு மிகப் பயனுள்ளதாக அமையும்.<i>EditMar 11</i><br />
<br />
<b>டிபிசிடி TBCD -</b><br />
<br />
//அப்படி இணைத்த ஒரே இழை தூய்மையான ஆன்மீகம் ஒன்றைத்தவிர வேறில்லை//<br />
<br />
ஆன்மிகம் தானே இன்றளவிற்கும் பிரித்து வைத்து கொண்டியிருக்கின்றது.<i>.Mar 11</i><br />
<br />
<b>ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் </b>- @TBCD<br />
<br />
அதனாலதான் நான் தூய்மையான ஆன்மீகம்னு சொன்னேன். அப்படி பட்டவங்க இதையெல்லாம் காதுலையே போட்டுக்க மாட்டாங்க. unlike me ;-)<i>Mar 11</i><br />
<br />
<b>Balloon MaMa</b> - .<br />
<br />
தேசிய மொழி<br />
<br />
இந்தியாவில் தேசிய மொழி (National Language. ..similar to national flag, national anthem, national animal ) என்ற ஒன்று கிடையாது. ஒன்றும் தெரியாத கிணற்றுத்தவளைகள் கண்டது கேட்டது என்று வாய்மொழியாக இந்த பொய்யைப் பரப்பி வருகின்றனர். :-((((<br />
<br />
இது பற்றி பல இடங்களில் பேசியாகிவிட்டது<br />
http://simulationpadaippugal.blogspot.com/2006/02/blog-post_22.html<br />
http://tvpravi.blogspot.com/2007/04/hate-hindi-and.html<br />
<br />
--<br />
<br />
மாநில அரசாங்கம் நினைத்தால் நரிக்குறவர் மொழியைக்கூட அவர்கள் மாநிலத்திற்கு official language ஆக வைத்துக் கொள்ளலாம்.<br />
<br />
ஹிந்தி "தேசிய மொழி" (National language) என்பது உண்மையல்ல.<br />
<br />
THE CONSTITUTION OF INDIA<br />
PART XVII<br />
OFFICIAL LANGUAGE<br />
<br />
(பி.கு:<br />
CONSTITUTION OF INDIA வின் வேறு எந்தப் பிரிவிலும் தேசிய மொழி பற்றி இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.)<br />
<br />
PART XVII<br />
OFFICIAL LANGUAGE<br />
CHAPTER I.—LANGUAGE OF THE UNION<br />
<br />
CHAPTER II.—REGIONAL LANGUAGES<br />
<br />
CHAPTER III.—LANGUAGE OF THE SUPREME COURT,<br />
HIGH COURTS, ETC.<br />
<br />
http://india.gov.in/<br />
Home > Government > Constitution of India : English Version<br />
<br />
<i>.Mar 11</i><br />
<br />
<b>ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் </b>- @Balloon MaMa - true to a large extent but only in theory.<br />
<br />
I applied for a current account with HDFC bank for our business.<br />
<br />
Gave our Board Resolution Copy in Tamil & Director Seal in Tamil.<br />
<br />
The assistant manager & local bank authority got stunned.<br />
<br />
He was of the opinion that Bank authorities will reject it & asked things in English. I stuck to my decision.<br />
<br />
I only said - never was a law enacted in this land of that kind, by default it is a practice to copy paste such things from previous instances that happened in English[1] or an inferiority attitude towards one's own language[2] or a pre-conceived opinion that expressing in English elevates one's status[3].<br />
<br />
Today the account is going to get created without any issue only to the surprise of many banking authorities that such a thing is acceptable in their own Bank.<br />
<br />
The same thing happened when we registered a Trust & provided the trust deed in Tamil. The sub-registrar of Pallavaram municipality was surprised that she has never met such a thing in her experience over the years, but that was allowed.<br />
<br />
Isn't it unfortunate to say that this still happens after 30 years of Dravidian parties in rule that claims to have got back the lost glory?<br />
<br />
English comfortably sits today in place where Dravidian parties accused Sanskrit or Hindi was/ would sitting/ sit with people's wish.<br />
<br />
Most of them say its unusual and ask Why? I only say, there isn't any special reason whatsoever to do this. It is as usual as speaking to my mom, dad, brothers & sisters & I live in my land. [to be open, Even people in my own family finds its different ;-)] Check back the reason why are you not doing so [1] [2] [3] or [?] ?<br />
<br />
We are equally smart not to send a parcel out of Tamilnadu covered or documented or labeled totally in Tamil, probably like a Japanese or French.<br />
<br />
Not to mention, it was the Brahmin community that adopted English in its life, at the earliest stages of post East India Company, British India's history, when they took the opportunity of jobs offered under them on a large scale, qualifying themselves for it, which Justice party & others followed followed ;-)<br />
<br />
I have reason to write all these in English though. ;-)<i>Mar 11 (edited Mar 11)</i><br />
<br />
<b>Balloon MaMa</b> - @ ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்<br />
<br />
//தூய்மையான ஆன்மீகம்னு //<br />
<br />
1.ஆன்மீகம் என்றால் என்ன?<br />
2.அதன் உட்பிரிவுகளான "தூய்மையான ஆன்மீகமும்" , "தூய்மைஅற்ற ஆன்மீகமும்" எந்த தூய்மையில் வேறுபடுகிறது?<br />
<br />
புரியல தயவு செய்து விளக்கவும். ( காப்பி ரைட் டிபிசிடி)<br />
<i>.Mar 11</i><br />
<br />
<b>Janakiraman n</b> -<br />
<br />
//இந்தியாவில் தேசிய மொழி (National Language. ..similar to national flag, national anthem, national animal ) என்ற ஒன்று கிடையாது. ஒன்றும் தெரியாத கிணற்றுத்தவளைகள் கண்டது கேட்டது என்று வாய்மொழியாக இந்த பொய்யைப் பரப்பி வருகின்றனர்//<br />
<br />
அப்படியல்ல... The official language of the Union shall be<br />
Hindi in Devanagari script. என்பது ஆர்டிகில் 343ல் கூறப்பட்டுள்ளது. இதன் படி, இந்திய ஒன்றியத்தின் அலுவலக ரீதியான மொழியாக ஹிந்தி பயன்படுத்தப்படவேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சொல்லும் விதி. இது ஒருவகையில் தேசிய மொழி என்று தான் புரிந்துகொள்ளவேண்டும்.<br />
<br />
அதே போல, national flag, national anthem, national animal போன்றவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாதவை....Mar 11<br />
<br />
<b>டிபிசிடி TBCD</b> - @சானகி இராமன் -<br />
<br />
நடுவண் அரசுக்கு அலுவலக் மொழி இந்தி. தேசிய மொழி என்பது மாநில அரசுகளில் அலவல் மொழியாக ஆங்கிலமும், அந்த மாநில மொழியும் இருக்கு. அரசியல் சாசனத்தில் ஏற்றாமல் தேசிய மொழி இந்தி என்று நீங்களாக அறிவிக்க முடியாது. அதை அறிவிக்க எடுத்த முயற்சிகளை வங்காளம் ., தமிழகம் போன்ற மாநிலங்கள் எதிர்த்து, அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.<br />
தென்னாப்பிரிக்காவில் மக்கள் 5 கோடி. 11 தேசிய மொழிகள் இருக்கு. இந்தியாவில் மக்கள் தொகை 100 கோடி...30 மொழிகள் கூட தேசிய மொழிகள் ஆக்கலாம்...ஆனால் ஆக்க மனசில்லை..அவர்களுக்கு இந்தி மட்டுமெ ஆகனும்..அதன் மூலம் சமுசுகிருதம். !<i>Mar 11</i><br />
<br />
<b>Balloon MaMa -</b> @ Janakiraman n<br />
<br />
// இது ஒருவகையில் தேசிய மொழி என்று தான் புரிந்துகொள்ளவேண்டும்.//<br />
<br />
இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும் என்று நீங்கள் யாருக்குச் சொல்கிறீர்கள்? இந்திய அரசு சார்பாக எல்லா இந்தியக்குடிமகன்களுக்குமா? அல்லது எனக்கா?<br />
<br />
அலுவல்மொழி என்பதும் தேசியமொழி என்பதும் ஒரே அர்த்தம் கொண்டது என்று நீங்கள் குஜராத் கோர்ட் ஜட்ஜ்ஜை எதிர்த்து வழக்குப்போடலாம்.<br />
<br />
// Hindi is not national language: Gujarat HC<br />
The Gujarat High Court has observed that there is nothing on record to suggest that any provision has been made or order issued declaring Hindi a national language of India.//<br />
<br />
http://www.deccanherald.com/content/48899/hindi-not-national-language-gujarat.html<br />
<br />
http://articles.timesofindia.indiatimes.com/2010-01-25/india/28148512_1_national-language-official-language-hindi<br />
<br />
.<br />
<br />
<br />
யானை என்ற விலங்கு அதுபாட்டுக்கு இருக்கிறது எப்போதும் யானையாக. குருடர்கள் அதை பானை என்றும், முறம் என்றும் ,உலக்கை என்றும் , தூண் என்றும் புரிந்துகொள்வதுபர்றி அதுக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்தாலும் அதற்கு எந்தக் குறையும் வரப்போவது இல்லை.<br />
<br />
**<br />
<br />
என்னளவில் "அலுவல் மொழி" என்பதும் "தேசிய மொழி" என்பதும் வேறு.<br />
(நானும் ஹைகோர்ட் ஜட்ஜும் ஒருவகை குருடர்கள் என்று கொள்வோம்)<br />
<br />
**<br />
<br />
உங்களைப் பொறுத்தவரை "அலுவல் மொழி" என்று சொன்னாலும் அதை "தேசிய மொழி "என்றே புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் பாக்கியவான் Janakiraman n :-))<br />
<br />
<i>.Mar 11</i><br />
<br />
<b>Balloon MaMa </b>- @ Janakiraman n<br />
<br />
//அதே போல, national flag, national anthem, national animal போன்றவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாதவை...//<br />
<br />
<br />
??? @$%&^$%*((^%&()(( ????<br />
<br />
இதற்குப்பேசமால் இந்திதான் தேசியமொழி அதைச் சொல்லாத இந்திய கான்ஸ்டியூசன் சரியல்ல் என்று சொல்லிவிடலாம்.<br />
<br />
இல்லாத ஒன்றைப் பாதுகாக்கச்சொல்லி ஏன் இந்திய அரசியல் சட்டம் இப்படி மெனக்கிடுகிறது?<br />
<br />
<br />
http://india.gov.in/govt/documents/english/coi_part_full.pdf<br />
<br />
51A. It shall be the duty of every citizen of India—<br />
(a) to abide by the Constitution and respect its ideals and institutions, the National Flag and the National Anthem;<br />
<br />
Appendix I<br />
http://india.gov.in/govt/documents/english/coi_appendix.pdf<br />
<br />
//integrity of India or bringing about cession of a part of the territory of India or secession of a part of the territory of India from the Union or causing insult to the Indian National Flag, the Indian National Anthem and this Constitution; and..//<br />
<br />
97. Prevention of activities<br />
//(b) directed towards disclaiming, questioning or disrupting the sovereignty and territorial integrity of India or bringing about cession of a part of the territory of India or secession of a part of the territory of India from the Union or causing insult to the Indian National Flag, the Indian National Anthem and this Constitution,//<br />
<br />
<br />
<i>.Mar 11</i><br />
<br />
<b>ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்</b> -<br />
<br />
//1.ஆன்மீகம் என்றால் என்ன?<br />
2.அதன் உட்பிரிவுகளான "தூய்மையான ஆன்மீகமும்" , "தூய்மைஅற்ற ஆன்மீகமும்" எந்த தூய்மையில் வேறுபடுகிறது?//<br />
<br />
for me both are same. I qualified ஆன்மீகம் with தூய்மை adjective for people who might have other opinions about it ;-)<br />
<br />
i am not a guru of it. in search of it, so probably will let u know & explain if i could elevate myself to one of such kind (with or without the assistance of a guru) & if i find that u are in real search of it. meantime if interested u too search and let me know back if you attain it & i qualify for it in ur opinion.<i>Mar 11 (edited Mar 11)</i><br />
<br />
<b>டிபிசிடி TBCD</b> - @மாசி -<br />
<br />
சில பின்னுரைகள் ஈசல் (spam) என்று குறிக்கப்பட்டு மறைந்துள்ளது போல..பாருங்க !<i>Mar 11</i><br />
<br />
<b>Balloon MaMa </b>- @ Vigneshwari M -<br />
<br />
//அரசியல் சாசனம் சொல்லவில்லை.. ஒத்துக்கொள்கிறேன்.. ஆனா மெஜாரிட்டி கிட்ட நாம தோற்கிறோமா இல்லயா?? எந்த மொழியும் மற்றொரு மொழியை விட உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை.. ஆனால் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே அறிந்த காரணத்தினால் உலகம் முழுக்க சுற்றி புகழடைந்த தமிழனால் இந்தியாவின் வட பக்கம் செல்ல முடியவில்லையே!! விதிவிலக்குகளை பற்றி நான் பேசவில்லை!!//<br />
<br />
யார் சொன்னார்கள் நாம் தோற்கிறோம் என்று ???<br />
<br />
மொழியைக் காத்த ஒரே காரணத்தால்தான் இன்றும் கோலிவுட் உலகளவில் பேசப்படுகிறது. இல்லை என்றால் நீங்களும் நானும் எதோ ஒரு பிச்சைக்கார கான்களுக்கு மட்டுமே இரசிகராக இருப்போம். இணையத்தில் சிறப்பாக இருக்கவும் இதே காரணம்.<br />
<br />
.<br />
<br />
நீங்கள் செய்ய வேண்டியது இந்தியா முழுமைக்கும் இரயில் பஸ் என்று டூர் ஒரு 6 மாத காலத்திற்கு. இந்தியால் சுயமிழந்த மக்களையும் கலாச்சாரங்களையும் நேரில் அறியமுடியும். அதுவரை தமிழகத்தில் தமிழ் செய்யும் சிறப்பு தெரியாது உங்களுக்கு.<br />
<br />
<i>.Mar 11 (edited Mar 11)</i><br />
<br />
<b>Balloon MaMa </b>- .<br />
<br />
மொழி என்ற அளவில் எதுவும் எங்கேயும் இருக்கட்டும். ஆனால் இதுதான் எல்லாருக்கும் என்று தட்டையாக இந்தியாவில் பேசினால் அவர்கள் இந்திய கலாச்சார கூட்டு அடையாளத்தை உணராதவர்களே.<br />
<br />
உங்கள் அம்மாவும் நல்லவர் என் அம்மாவைப் போலவே என்றுதான் என்னால் சொல்லமுடியுமே தவிர. உங்கள் அம்மாதான் சிறந்தவர் அவரே எல்லோரையும்விட உயர்வானவர் பொதுவானவர் என்று சொல்லமுடியாது ஏன் என்றால் எனக்கென்று அம்மா இருக்கிறார்.<br />
<br />
அடையாளமற்ற அனாதைகள் வேண்டுமானால் கிந்திதான் எனது அடையாளம் என்று தஞ்சம் புகலாம்.<br />
<br />
<i>.Mar 11</i><br />
<br />
<b>குடுகுடுப்பை kudukuduppai</b> -<br />
<br />
//மொழியைக் காத்த ஒரே காரணத்தால்தான் இன்றும் கோலிவுட் உலகளவில் பேசப்படுகிறது. இல்லை என்றால் நீங்களும் நானும் எதோ ஒரு பிச்சைக்காரகான்களுக்கு மட்டுமே இரசிகராக இருப்போம். இணையத்தில் சிறப்பாக இருக்கவும் இதே காரணம்.<br />
<br />
.<br />
<br />
நீங்கள் செய்ய வேண்டியது இந்தியா முழுமைக்கும் இரயில் பஸ் என்று டூர் ஒரு 6 மத காலத்திற்கு. இந்தியால் சுயமிழந்த மக்களையும் கலாச்சாரங்களையும் நேரில் அறியமுடியும். அதுவரை தமிழகத்தில் தமிழ் செய்யும் சிறப்பு தெரியாது உங்களுக்கு.//<br />
<br />
அப்படியே வழிமொழிகிறேன்.<i>Mar 11</i><br />
<br />
<b>குடுகுடுப்பை kudukuduppai </b>-<br />
<br />
என்னுடைய பகடியான பதிவொன்று இதையொட்டி<br />
http://varungalamuthalvar.blogspot.com/2008/11/blog-post_10.htmlMar 11<br />
<br />
<b>Balloon MaMa </b>- .@ Vigneshwari M -<br />
<br />
// என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் ஹிந்தியில் பேசும் பொழுது நான் மட்டும் ஒன்றும் புரியாமல் என் நண்பர்களிடம் " What does that mean ?" என்று திரும்ப திரும்ப கேட்கும் நிலை எதனால் வந்தது???//<br />
<br />
<br />
என்ன செய்யலாம் சொல்லுங்கள். என்னைச் சுற்றி உள்ளவர்கள் நரிக்குறவர்மொழில் பேசுகிறார்கள். ஒரு பெருங்கூட்டமே ஹீப்ரு மொழியில் பேசுகிறார்கள் இதை எல்லாம் படிக்கவிடாமல் என்னை யார் செய்தார்கள்?<br />
<br />
உங்களுக்கு தேவை என்றால் படித்துக் கொள்ளுங்கள். அதற்காக அரசாங்க வரிப்பணத்தில் வாடிப்பட்டி கோவிந்துக்கும் இந்தி சொலித்தந்து அவன் என்ன மத்தியப்பிரதேசத்தில் மாங்காயா விற்கப்போகிறான்.<br />
<br />
பிறக்கும்போது எனக்கு கோபால் , ஜாவா கூடததான் தெரியாது பிழைப்பிற்காக கற்றுக்கொண்டேன். இதற்கும் கலைஞர்தான் காரணமா?<br />
<i>.Mar 11</i><br />
<br />
<b>அரசு பாரி </b>- @விக்னேஸ்வரி<br />
<br />
உங்களை போன்ற தனிமனிதர்கள் சில ஆயிரம் பேரின் வட இந்தியர்களின் உடன் தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால் 6 கோடி தமிழர்கள் இந்தி படிக்க வேண்டும் என்று கோருவது நியாயமா?<br />
<br />
பழைய பதிவு ஒன்று<br />
ஜப்பானிய மொழி கற்றுதராத... திராவிட ஆட்சியாளர்கள் ஓழிக!<br />
http://pktpariarasu.blogspot.com/2007/08/blog-post_01.htmlMar 11 <i>(edited Mar 11)</i><br />
<br />
<b>டிபிசிடி TBCD</b> -<br />
<br />
//பிறக்கும்போது எனக்கு கோபால் , ஜாவா கூடததான் தெரியாது பிழைப்பிற்காக கற்றுக்கொண்டேன். இதற்கும் கலைஞர்தான் காரணமா?// :-))))))<i>Mar 11</i><br />
<br />
<b>குடுகுடுப்பை kudukuduppai</b> - Vigneshwari M -<br />
<br />
//ஒரு தலைமுறைக்கே ஹிந்தி என்ற மொழியை அறியக்கூட விடாமல் செய்தது தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றியா?? சொல்லுங்கள்//<br />
<br />
இந்தியை தேவையானவர்கள் கற்றுக்கொள்ளட்டும். மறைமுகமாக இந்தி எதிர்ப்பு , தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடத்தை காப்பாற்றியிருக்கிறது. வட இந்திய மொழிகளை இந்தி அழித்துவிட்டது போகப்போக தெரியும்.<i>Mar 11</i><br />
<br />
<b>Balloon MaMa</b> - @ Vigneshwari M -<br />
<br />
//ஒரு தலைமுறைக்கே ஹிந்தி என்ற மொழியை அறியக்கூட விடாமல் செய்தது தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றியா?? சொல்லுங்கள்//<br />
<br />
ஹலோ ... தமிழைக் காக்கத்தான் போராட்டம். அதனால் தமிழ் வளர்ந்துள்ளது.<br />
தமிழ் நாட்டில் உள்ள எத்தனை பேருக்கு நரிக்குறவர் மொழி தெரியும்? உங்கள் மண்ணில் உங்களோடு வாழும் இவர்களின் மொழிதெரியாமல் போனதற்காக என்றாவது வெட்கப்படுள்ளீர்களா?<br />
<br />
உங்கள் ஆபிசில் எல்லாம் கிந்தி பேசுகிரார்கள் என்றால் , உங்கள் முதலாளி அவர்காசில் எல்லாருக்கும் கிந்தி கற்றுக்கொடுக்கட்டும். எங்கள் ஆபிசில் ஜப்பான்காரர் வருமுன் சிலபாடங்களைச் சொல்லித்தருவார்கள்.<br />
<br />
இதையும் கருணாநிதிதான் செய்ய வேண்டுமா?<br />
<br />
<i>.Mar 11</i><br />
<br />
<b>குடுகுடுப்பை kudukuduppai</b> -<br />
<br />
ஆங்கிலம், தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் விரைவில் அழித்துவிடும் என்பதும் உண்மை.<i>Mar 11</i><br />
<br />
<b>Vigneshwari M </b>-<br />
<br />
தமிழக அரசாங்கங்களின் தமிழ் பற்றினால் தான் தமிழ் வழியில் படிக்கும் பள்ளிகள் மிக நல்ல முறையில் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன!! only now the government has started to give preference to the ppl who studied in Tamil medium..<br />
Can anybody tell me that how many of your children are studying in Tamil medium schools??<i>Mar 11</i><br />
<br />
<b>குடுகுடுப்பை kudukuduppai</b> -<br />
<br />
தமிழ்வழிக்கல்வி முற்றிலும் செயல்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது, காரணம், ஜெர்மனோ, ஜப்பானோ, சீனனோ கண்டுபிடிப்புகள், ஆராய்சிக்கட்டுரைகள் வைத்திருக்கிறான், காலனி ஆதிக்க நாடான நாம் ஆங்கிலக்கூலிகள், எனவே ஆங்கில மீடியம் வருவது தவிர்க்கமுடியாது, இது அனைத்து இந்தியாவிற்கும் பொருந்தும். தமிழை ஒரு மொழியாகவும், வரலாறு , அன்றாட செய்திகள் படிக்கவும் அனைத்து பள்ளிகளிலும் சேர்த்தல் அவசியம். ஆங்கில மீடிய மாணவனுக்கும் வரலாறு தமிழில் போதிக்கப்படவேண்டும்.இதன் மூலம் தமிழின் பயன்பாடு புரியும்.<i>Mar 11 (edited Mar 11)</i><br />
<br />
<b>Balloon MaMa </b>- .<br />
<br />
உங்களுக்கு உங்கள் தாய்மொழியில் காதல் இருந்தால் தமிழ் தெரிந்ததற்காக பெருமைப்பட வேண்டுமே தவிர , தனக்கென சொந்த வரிவடிவம்கூட இல்லாத ஒரு மொழி தெரியாமல்போனதற்கு வெட்கப்படக்கூடாது. உலக அளவில் பல்லாயிரம் மொழிகள் உள்ளன. எத்தனை மொழிக்கு வெட்கப்படுவீர்கள்?<br />
<i>.Mar 11</i><br />
<br />
<b>சிவகுமார் மா </b>-<br />
<br />
இங்கு பேசிய அகிலன் மற்றும் பேசும் ஸ்ரீராமதாஸ் தமிழ் பயன்பாட்டுக்காக பல் வேறு தளங்களில் போராளிகளாக செயல்படுவதை நான் அறிவேன். ராமதாஸ் வங்கிக் கணக்குத் தொடங்க சாதித்ததை (மேலே அவர் சொல்லியிருப்பது) தமிழ்நாட்டில் வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.<br />
<br />
விக்னேஷ்வரியும் தமிழ் மொழிப் பற்றுடன் பேசுகிறார். (அவரது கருத்துக்கள் spamல் போய் விடுகின்றன. Not Spam சொன்ன பிறகும் அதே சிக்கல்)<br />
<br />
எழுப்பப்படுபவை இரண்டு கேள்விகள்:<br />
1. இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர பிற மக்களால் இந்தி புழக்க மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், நாமும் ஏன் இந்தி கற்றுக் கொண்டு இந்திய அரசியலிலும், வணிகத் துறையிலும் செயல்படும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது?<br />
<br />
2. இந்தியை முழு வெறுப்போடு அகற்றிய திராவிட இயக்கங்கள், தமிழை வளர்த்து, தமிழுக்கான இடம் ஏற்படுத்தாமல் அந்த இடத்தில் ஆங்கிலத்தை ஆதிக்கம் செலுத்த விட்டது போலித்தன் இல்லையா?<br />
<br />
என்னைப் பொறுத்த வரை, இரண்டாவது கேள்வியை நாம் முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்:<br />
<br />
தமிழ்நாட்டை விட இரண்டு மடங்கு மக்கள் தொகையுடைய ஜப்பான், தமிழ்நாட்டுக்குச் சமமான (அல்லது சற்றே அதிகமான) மக்கள் தொகையுடைய தென்கொரியா, ஜெர்மனி, ஃபிரான்சு போன்ற நாடுகளில் அவர்கள் மொழியிலேயே தொழில் நடத்துகிறார்கள், உயர் கல்வி பயில்கிறார்கள், ஐக்கிய நாடுகள் சபையிலும் பேசிக் கொள்கிறார்கள்.<br />
<br />
தாய்மொழி வழிக்கல்வி, செயல்பாடுதான் ஒவ்வொருவருடைய சிந்தனைத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் தமிழ்நாட்டில் ஆரம்பக் கல்வி முதல், உயர் ஆராய்ச்சி வரை, வணிக/அரசு செயல்பாடுகள் அனைத்தும் தமிழில் செய்யும் நிலை உருவாக வேண்டும்.<br />
<br />
இது சாதிக்க முடியாத ஒன்று இல்லை. 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசு இலக்குகள் அமைத்து, நிதி ஒதுக்கிச் செயல்பட்டால், தேவைப்பட்ட வளங்களை தமிழில் மொழிமாற்றி, மொழிமாற்ற வல்லுனர்களை உருவாக்கி, வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று (குத்துமதிப்பான கணக்கு) தோன்றுகிறது.<br />
<br />
இதற்குத் தேவையான அரசியல் உறுதி, குடும்ப/வியாபார அரசியலைத் தவிர்த்தால் தமிழ்நாட்டு ஆட்சியாளருக்கு நிச்சயம் கிடைத்து விடும்.<br />
<br />
தமிழில் இல்லாதது இல்லை என்று சாதித்து தொடர்ந்து அதை நிலைநாட்ட வழி ஏற்படுத்திய பிறகு தமிழ்நாட்டு மக்கள் ஆங்கிலத்தை உலகத் தொடர்புக்காகவும், இந்தியை இந்தியத் தொடர்புக்காகவும், வங்காள மொழியை பங்களாதேசத்துடன் தொடர்புக்காகவும், ஜப்பானிய மொழியை ஜப்பானுடன் தொடர்புக்காகவும் (இன்னும் சேர்த்துக் கொள்ளுங்கள் :-) கற்கும் வசதிகளை சூழலை நிச்சயமாக ஏற்படுத்த வேண்டும்.<br />
<br />
இது என்னுடைய கருத்து.<i>Mar 11 (edited Mar 11)</i><br />
<br />
<br />
<b>அரசு பாரி</b> - @ஆமாச்சு<br />
//<br />
Not to mention, it was the Brahmin community that adopted English in its life, at the earliest stages of post East India Company, British India's history, when they took the opportunity of jobs offered under them on a large scale, qualifying themselves for it, which Justice party & others followed followed ;-)<br />
//<br />
<br />
கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருவதற்கு முன்பே... ஐரோப்பியர்களுடன் செட்டியார்கள் (நகரத்தார்) வணிக தொடர்பில் இருந்தார்கள்.<br />
<br />
நகரத்தாரின் இரட்டை பேரேடு முறையே double entry system -த்தின் அடித்தளம்.<br />
<br />
அதோடு ஆங்கில ஆட்சி எங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் செட்டியார்கள்... பரவியிருந்தார்கள்.<br />
<br />
ஆங்கிலேயர்களுடன் வணிக மற்றும் பொருளாதார தொடர்பில் இருந்த செட்டியார்களின் ஆங்கில அறிவு தான் நீதிகட்சியின் ஆங்கில சார்ப்புக்கு காரணமேயொழிய... ஏனென்றால் அப்போதைய பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதிகளான பிள்ளைமார், செட்டியார், முதலியார் போன்றோர் தான் நீதிகட்சியின் அடித்தளம்.<br />
<br />
செட்டியார்கள் (நகரத்தார்கள்) ... பார்ப்பனர்களை மிக கடுமையாக எதிர்த்தவர்கள்... அவர்களுடைய எந்த கோயிலும்... பார்ப்பனர்கள் வைத்து வழிபாடு செய்யமாட்டார்கள். பண்டாரத்தை வைத்தே வழிபாடு செய்வார்கள்.<br />
<br />
பார்ப்பன சமூகத்தை பார்த்து நீதிகட்சியும் மற்றவர்களும் ஆங்கிலத்தை கற்றுகொண்டார்கள் அல்லது கடைப்பிடித்தார்கள் என்பது வரலாற்று திரிபு.<i>Mar 11</i><br />
<br />
<b>அரசு பாரி</b> - @மா.சி<br />
<br />
தமிழ் மொழி மட்டுமே இனி தனித்த அடையாளத்துடன் இருக்கபோவதில்லை! அவ்வாறான ஒன்றை உருவாக்கவும் இன்றைய உலக மயமாக்கல் சூழலில் இயலாது!<br />
<br />
ஜப்பானிய மொழி எவ்வாறு ஆங்கில மொழியுடன் கலந்து ... தற்பொழுது ஒரு புதிய வடிவத்தை முன்னெடுத்து செல்கிறதோ... அதுபோல தமிழையும் தன்னியல்பான மொழி கலத்தல் மூலம் முன்னகர்த்தி செல்ல வேண்டும்.<br />
<br />
ஆனால் இந்திய ஆதிக்க சூழலானது தமிழ் பரிணாமம் அடைவதை தடுக்கிறது. இந்திய ஆதிக்க சூழல் கிட்டதட்ட அனைத்து பிராந்திய மொழிகளையும் இல்லாதொழித்து... 'இந்தி' (அ) சமஸ்கிருத அடையாளத்துடன்... உலக மொழிகளுடன் கலக்க முனைகிறது.<i>Mar 11</i><br />
<br />
<b>Balloon MaMa</b> - @சிவகுமார் மா<br />
<br />
சிவா,<br />
யாருடைய தமிழ் உணர்வையும் , அவர்களின் பங்களிப்பையும் குறைசொல்வது நோக்கம் அல்ல.<br />
<br />
அகிலன் , ஸ்ரீராமதாஸ் மற்றும் விக்னேஷ்வரி தமிழ் பயன்பாட்டுக்காக பல் வேறு தளங்களில் போராளிகளாக இருக்கலாம்.<br />
<br />
இங்கு பேசப்படுவது (குறைந்த பட்சம் நான்) ....<br />
<br />
1.இந்தி தெரியாமல் போனதால் ஆபிசில் பேசமுடியவில்லை.<br />
2.இந்தியைவிரட்டியதால் சல்மான்கானுடன் பேசமுடியவில்லை.<br />
3.இந்தியைவிரட்டியதால் தமிழகம் என்ன பலன் அடைந்தது. எனது மருமகன் மும்பையில் "சப்பாத்தி இருக்கா?" என்று கேட்க ரொம்ப கஸ்டப்படுகிறார்.<br />
4. இந்திதான் தேசியமொழி<br />
<br />
....<br />
போன்ற பொதுப்புத்தியில் உறைந்து இருக்கும் எண்ணங்களை நோக்கியே<br />
எனது பதில்கள்.<br />
<br />
தினமலர்கூட தமிழில்தான் பத்திரிக்கை நடத்துகிறது. அதற்காக அது தமிழ் உணர்வுள்ள பத்திரிக்கை என்று சொல்லமுடியாது. அது முழுக்க முழுக்க சனாதனத்தை பரப்ப தமிழைப் பயன்படுத்தும் பத்திரிக்கை.<br />
<br />
<i>.Mar 12</i><br />
<br />
<b>டிபிசிடி TBCD</b> -<br />
<br />
இந்தி தேவையா இல்லையா என்று தீர்மானிக்காதவர்கள் கூட, இது போன்ற விவாதங்களை கவனிக்கும் பொழுது இந்தி தெரிந்திருந்தால் நான் அதுவாக ஆகியிருப்பேன், இதுவாக ஆகியிருப்பேன் என்று சிலர் சொல்வதை கேட்டு தவறான எண்ணத்துடன் செல்லக்கூடும்.<br />
<br />
அதை தெளிவுப்படுத்தவுமே ஒவ்வொரு முறை இதை யார் பேசினாலும், கல்வெட்டு (எ) பலூன் மாமா, பாரி.அரசு போன்றவர்கள் உண்மையயை/கருத்தை முன் வைக்கிறார்கள்.<br />
<br />
இத்தனை காலம் இணையத்தில் பல் வேறு விவாதக்களத்தில் பலர் பேசி வந்தாலும், இந்தி தேசிய மொழி என்று அறிந்தோ அறியாமலோ, பாடம் சொல்ல மட்டும் அணி அணியாய் வந்த வண்ணம் இருக்கின்றனர். அத்தகைய கட்டமைப்பு நம் கண்ணுக்கு எட்டாமல் நடந்த வண்ணமே இருக்கின்றது.<br />
<br />
இந்தி கற்க முடியாமல் செய்துவிட்டனர் என்று பேசுவதெல்லாம் வெட்டிப் பேச்சாக மட்டுமே நான் கருதுவேன். நிச்சமயாக நம்மில் 50% பேரேனும் தனியார் பள்ளிகளில் படித்திருக்ககூடும். தனியார் பள்ளிகள் அனைத்திலும் இந்தி கற்க வேண்டுமென்பவர்கள் கற்க வசதியுண்டு. அது போக, ஊருக்கு ஊர் இந்தி பிரச்சார சபா என்று ஒன்றில் இன்றும் பலர் இந்தி கற்றே வருகின்றனர்.<br />
<br />
இந்தியை தமிழகத்தில் கற்றாலும், பேச்ச மொழியாக இல்லாத வரை அதை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் அரை குறையான மொழியயையே கற்க முடியும். அதனாலேயே இந்தி கற்றவர்கள் கூட நாளாவட்டத்தில் அந்த மொழியயை மறக்கின்றனர்.<br />
<br />
இந்தி கற்க விடாமல் செய்துவிட்டனர் என்று சொல்பவர்களின் அடுத்த குற்றச்சாட்டு, இந்தி பேச முடியாதபடி அனைவருமே தமிழில் பேசுகிறார்கள் என்பதாகவும் வரும். இதை தான் வடநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் சொல்கின்றனர்.<br />
<br />
வடநாட்டினர் சென்னையில் தானி பிடிப்பதற்காக அனைத்து ஓட்டுனர்களுக்கும் இந்தி ஏன் சொல்லிக்கொடுக்கவில்லை என்று கேட்கின்றனர். அந்த தானி ஓட்டுனர் படிப்பறியில்லாதவராக இருந்தால் அவர் எப்படி இந்தி கற்றியிருப்பார். எப்படி பேசுவார் என்று ஒரு அடிப்படை சிந்தனை கூட அவர்களுக்கு ஏற்படாது.<br />
<br />
அவர்கள் வீட்டு கொல்லையில் அனைவருமே இந்தி பேசுவது போல உலகம் முழுவதும் இந்தி பேசுவதாக அவர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள்.<br />
<br />
இந்தி கற்றவர்கள் அனைவருமே வாழ்வில் சிறந்து விளங்கக்கூடும் என்றால் பெங்களூரில் இருக்கும் இந்தி மட்டுமே பேசும் கூர்க்காக்களும், பானி பூரி விற்பவர்களும் ஏன் சிறந்து விளங்கவில்லை என்ற கேள்விக்கு பதில் எனக்கு இது வரை கிடைக்கவில்லை.<br />
<br />
இவர்கள் அனைவரும் வடக்கே பீகார், உ.பி, போன்ற இடங்களிலிருந்து வருகின்றனர். இது முழுக்க முழுக்க இந்தி பேசும் மக்கள் கொண்ட இடம்.<br />
<br />
நம்மவர்கள் இந்தி கற்க வேண்டுமென்பது வடக்கே போய் தொழில் செய்து சிறக்க வேண்டுமென்பதற்காக என்று நான் நம்பவில்லை.<br />
<br />
அலுவலகத்தில் ”இந்தி”யர்களின் அரட்டையில் தனித்து விடப்பட்டதாக உணரும் பொழுது இந்த உணர்வு இவர்களுக்கும் வரக்கூடும்.<br />
<br />
பல மொழி பேசுபவர்கள் இருக்குமிடத்தில், பிறரை மதியாமல், பொதுவான இணைப்பு மொழியான ஆங்கிலத்தை பேசாமல், சிலருக்கு மட்டுமே புரியும், இந்தியில் பேசும், நபர்களுடன் பேச இந்தி கற்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக நினைக்கிறேன். இது போன்ற நபர்களுக்கு இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. ஒரு மொழி, ஒரு மதம், என்பது ஒரு போதும் நடக்காது என்று எடுத்து சொல்லி, பொது மொழியில் பேசுங்கள்.<i>Mar 12</i><br />
<br />
<b>Akilan R</b> -<br />
<br />
இங்கு பதிலளிக்க வேண்டாம் என இருந்தேன். ஆனால் சில வரலாற்று தவறுகளையும் குறைகளுடைய வாதங்களையும்(logical fallacies) சுட்டிக்காட்ட வேண்டும் என்று தோன்றியதால் மீண்டும்.<br />
முதலில் மா.சி அவர்களது கடைசி பதிலீடை வழிமொழிகிறேன். உடனே தமிழில் அறிவியல் வளர்க்க அரசு முனைய வேண்டும்.<br />
இரண்டு: நான் தமிழை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். தமிழை ஒழித்து இந்தியை கொண்டு வர வேண்டும் என்பது என் வாதமல்ல. தற்போதைய போலி அரசியல்வாதிகளின் நிலையை உரைப்பதே என்னுடைய நிலைப்பாடு.<br />
<br />
@பலூன் மாமா<br />
<br />
//வீரமணி என்பவர் திராவிடம் என்பது அவரின் கல்லூரி மற்றும் அறக்கட்டளையைக் காக்க என்ற அளவில் பயன்படுத்தி வருகிறார்.<br />
கருணாநிதி அவரின் குடும்ப நன்மைக்காகப் பயண்படுத்தி வருகிறார்<br />
ஜெயலலிதா , கேப்டன் காந்த் ...அது என்ன என்றே தெரியாமல் அப்படிப்பெயர் கொண்ட கட்சிக்குத் தலைமை தாங்குகிறார்கள்.<br />
....<br />
மொழி என்பது அடையாளம் மட்டுமல்ல வரலாறு. அதை இழக்கமுடியாது.//<br />
அதே நான் சொல்வது. :-)<br />
<br />
//உங்களுக்கு தேவை என்றால் படித்துக் கொள்ளுங்கள். அதற்காக அரசாங்க வரிப்பணத்தில் வாடிப்பட்டி கோவிந்துக்கும் இந்தி சொலித்தந்து அவன் என்ன மத்தியப்பிரதேசத்தில் மாங்காயா விற்கப்போகிறான்.//<br />
<br />
ஆமோதிக்கிறேன். கூட இதையும் கேட்கிறேன்: பிறகு ஏன் ஆங்கிலத்தை மட்டும் விழுந்து விழுந்து கற்றுத்தருகிறார்கள்? (ஆங்கில மொழியோடு நிற்கவில்லை இது; அனைத்து பாடங்களையுமே அதில்தான் சொல்லித்தருகிறார்கள்.)<br />
<br />
@குகுடுப்பை:<br />
//தமிழ்வழிக்கல்வி முற்றிலும் செயல்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது, காரணம், ஜெர்மனோ, ஜப்பானோ, சீனனோ கண்டுபிடிப்புகள், ஆராய்சிக்கட்டுரைகள் வைத்திருக்கிறான், காலனி ஆதிக்க நாடான நாம் ஆங்கிலக்கூலிகள், எனவே ஆங்கில மீடியம் வருவது தவிர்க்கமுடியாது,//<br />
<br />
சீனாவும் நம்மை போன்றே முன்னாளில் நன்றாக இருந்து பிறகு ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து சிதைந்து விடுபட்ட நாடே. அறுபதுகளில் இந்தியாவும் சோவியத்தும் சேர்ந்துதான் சீனாவின் முதல் ஆராய்ச்சி பல்கலைகழகங்களை நிறுவின. (அப்போது சீனா இன்னும் படையெடுக்கவில்லை. IIT போன்று அமைக்க வேண்டும் என்று சீனா ஆசைப்பட்டது.) அவர்கள் அதன் பின்னர் தங்கள் மொழியிலேயே பாடங்களை பயின்று இன்று தாங்கள் சொல்லிய நிலைக்கு வந்துள்ளார்கள். அப்படியெனில் தமிழ் அந்த நிலையை அடையாமல் எங்கும் ஆங்கிலம் வந்ததற்கு யார் காரணம் என்பதே எனது கேள்வி. நம்மை ஆண்ட ஆண்டு கொண்டிருக்கும் நல்லவர்கள் என்பது எனது பதில். அது தவறெனில் யார் காரணம் என்பதை கூறுங்கள்.<br />
<br />
@அரசு பாரி:<br />
//தமிழ் மொழி மட்டுமே இனி தனித்த அடையாளத்துடன் இருக்கபோவதில்லை! அவ்வாறான ஒன்றை உருவாக்கவும் இன்றைய உலக மயமாக்கல் சூழலில் இயலாது!<br />
<br />
ஜப்பானிய மொழி எவ்வாறு ஆங்கில மொழியுடன் கலந்து ... தற்பொழுது ஒரு புதிய வடிவத்தை முன்னெடுத்து செல்கிறதோ... அதுபோல தமிழையும் தன்னியல்பான மொழி கலத்தல் மூலம் முன்னகர்த்தி செல்ல வேண்டும்.<br />
<br />
ஆனால் இந்திய ஆதிக்க சூழலானது தமிழ் பரிணாமம் அடைவதை தடுக்கிறது. இந்திய ஆதிக்க சூழல் கிட்டதட்ட அனைத்து பிராந்திய மொழிகளையும் இல்லாதொழித்து... 'இந்தி' (அ) சமஸ்கிருத அடையாளத்துடன்... உலக மொழிகளுடன் கலக்க முனைகிறது.//<br />
<br />
அதாகப்பட்டது தமிழ் தனித்த அடையாளத்துடன் இருக்க வேண்டியதில்லை (அது முடியாது.) தமிழ் ஆங்கிலத்துடந்தான் கலந்து(என்ன வார்த்தை அது? ஆங்..பரிணாமம்) செல்ல வேண்டும். இந்தி அதை தடுக்கிறது.<br />
தடுக்கிறது எப்படின்னு எனக்கு புரியல. எனக்கு புரியறது என்னன்னா தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிழ் சாவறது பேர் பரிணாமம்; பள்ளிகளில் இந்தி கத்து கொடுத்து நாலு இந்தி வார்த்தை தமிழோட கலந்தா அது இந்தி திணிப்பு.<br />
<br />
அதோட மட்டும் இல்ல. ஆங்கிலமும் வேண்டாம் இந்தியும் வேண்டாம் தமிழை வளருங்கள், ஆங்கிலத்தை வளர்த்த போலிகளை நம்பாதீர் னு சொல்றவங்க தமிழ் பண்பாடு தெரியாதவங்க, ஆனா இந்தி எதிர்ப்புன்னு சும்மா ஓட்டுக்காக மட்டும் பேசிட்டு தமிழ் வழி அறிவியலையும் கல்வியையும் வளர்க்காத போலிகள் நல்லவர்களாம். நான் என்ன சொல்ல??<i>Mar 12 (edited Mar 12)</i><br />
<br />
<b>Akilan R</b> -<br />
<br />
இங்கு நிலவும் இன்னொரு கருத்து இந்திக்காரர்கள் இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் ஏன் பேச மறுக்கிறார்கள் என்பதும் அரசியல் சாசனப்படி ஆங்கிலமும் ஒரு இணைப்பு மொழிதான் என்பதும்.<br />
//மாநில அரசுகளில் அலவல் மொழியாக ஆங்கிலமும், அந்த மாநில மொழியும் இருக்கு.//<br />
அதைதான் நான் ஏன் என்று கேட்கிறேன். நமது நாட்டை சேர்ந்த இன்னொரு மாநிலத்தின் மொழியை இணைப்பு மொழியாக ஒப்புக்கொள்ள மனம் வராத இந்த அரசியல்வாதிகள் ஆங்கிலத்தை மட்டும் ஒப்புக்கொல்வதேன்? ஒட்டு அரசியல் என்கிறேன். இவர்கள் தமிழை வளர்க்கவில்லை. அழிக்கத்தான் செய்தார்கள்.<i>Mar 12</i><br />
<br />
<b>சிவகுமார் மா </b>-<br />
<br />
1. தமிழில் அறிவியல் மட்டுமில்லை, மேலாண்மை, சட்டம், பொருளாதாரம், வரலாறு போன்ற எல்லா துறைகளிலும் புத்தகங்கள் மொழிபெயர்க்க/உருவாக்க வேண்டும்.<br />
<br />
2. மொழியை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், மொழிக்கொள்கையை காலத்துக்கு ஏற்ப வளர்க்காமல், மக்களை ஏமாற்றி தமது வியாபரத்தை வளர்ப்பதிலேயே நேரம் செலவழித்ததன் விளைவுதான் தமிழகமெங்கும் பரவி நிற்கும் ஆங்கிலக் கல்வி மோகம், ஆங்கில வழி வங்கி/நிறுவன செயல்பாடுகள்.<br />
<br />
3. விக்னேஷ்வரி ஒரு கேள்வி கேட்டிருந்தார் - எத்தனை பேரின் குழந்தைகள் தமிழ் வழிக் கல்வி பயில்கிறார்கள்? இன்றைய சூழலில் இணையத்தில் செயல்படும் பெரும்பாலானோரின் குழந்தைகள் ஆங்கில வழிக் கல்விதான் பயில்கிறார்கள்.<br />
<br />
நடுத்தர/படித்த பெண்களிடையே (குழந்தைகளின் அம்மாக்கள்) ஆங்கில வழிக்கல்விதான் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் (இந்தி இரண்டாவது மொழியாகப் படித்தால்தான் அதிக மதிப்பெண் எடுக்க முடியும்) என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதை தவறு என்று சொல்வதால் மனம் மாறி விடப் போவதில்லை. 'ஆரம்பப் பள்ளி முதல் உயர் ஆராய்ச்சி வரை தமிழ் வழிக் கல்வி சாத்தியம், அதன் மூலம் குழந்தைகள் சாதிக்கிறார்கள்' என்று வருவது வரை ஆங்கில வழிக் கல்வி மோகம் மாறப் போவதில்லை.<br />
<br />
4. நாம் ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் விவாதிப்பதை விட ஆமாச்சு ஒரு சூழலில் உறுதியாக நின்று தமிழுக்கு இடம் ஏற்படுத்திக் கொடுப்பதன் மதிப்பு பல மடங்கு அதிகம்.<i>Mar 12</i><br />
<br />
<b>Akilan R</b> - @விக்னேஸ்வரி:<br />
<br />
நன்றி. :)<br />
@மா சி:<br />
உங்கள் பதிலை முழுவதும் ஆமோதிக்கிறேன்.<i>Mar 12</i><br />
<br />
<b>சிவகுமார் மா </b>-<br />
<br />
வசதி இல்லாத ஏழைக் குழந்தைகளை தமிழ்வழி அரசு பள்ளிகளில் படிக்க வைத்து விட்டு, தமிழ் மொழியில் வளங்களை வளர்க்கப் போராடாமல்/முயற்சிக்காமல், இருப்பது போன்ற அயோக்கியத் தனம் இருக்க முடியாது.<br />
<br />
'தயாநிதி மாறனுக்கு இந்தியும் ஆங்கிலமும் பேசத் தெரிந்ததால், கட்சியில் மற்ற தொண்டர்களைத் தாண்டி அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்பும், அமைச்சர் பதவியும் கொடுத்தோம்' என்று அயோக்கியத்தனம் திமுக தலைவர் கருணாநிதியிடமிருந்து வந்தது நினைவிருக்கலாம்.<br />
<br />
இன்றைக்கு ஓரளவு வசதியுள்ளவர்கள் எப்படியாவது தங்கள் குழந்தைகளை 'மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அனுப்பி விட வேண்டும்' என்ற ஆயிரமாயிரம் ரூபாய்கள் செலவழிப்பதற்குக் காரணம் 'தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு எதிர்காலம் இல்லை' என்ற அவர்கள் நம்பிக்கை. அப்படிப்பட்டச் சூழல்தான் இருக்கிறது. அதற்கு பொறுப்பு 'தமிழ் உணர்வாளர்கள்' என்று காகிதப் புலிகளாக உறுமிக் கொண்டிருப்பவர்கள்தான்.<i>Mar 12</i><br />
<br />
<b>Balloon MaMa </b>- @அகிலன்<br />
<br />
//ஆனா இந்தி எதிர்ப்புன்னு சும்மா ஓட்டுக்காக மட்டும் பேசிட்டு தமிழ் வழி அறிவியலையும் கல்வியையும் வளர்க்காத போலிகள் நல்லவர்களாம். நான் என்ன சொல்ல??//<br />
<br />
இந்தி எதிர்ப்பு என்பது உணர்வுபூர்வமான போராட்டம்.<br />
இப்போது இருக்கும் கழக பிரியாணிக்குஞ்சுகளை வைத்து முன்னோர்கள் நடத்திய ஒன்றினை எடைபோடக்கூடாது.<br />
<br />
தமிழ் வழி அறிவியலையும் கல்வியையும் வளர்க்காத போலிகளை நல்லவர்கள் என்று இங்கு யார் சொல்லியுள்ளார்கள்? பெயருடன் சொல்லுங்கள்<br />
<br />
தயவுசெய்து திராவிடம் என்றால் கழக பிரியாணிக்குஞ்சுகளையும் அதன் சுயநலத்தலைமையயும் வைத்துமட்டும் எடைபோடாதீர்கள். குஸ்பூகூடத்தான் கழகத்தில் இருக்கிறார். :-))<br />
<br />
**<br />
தமிழ் வழி அறிவியலையும் கல்வியையும் வளர்க்க எந்த முயற்சியும் எடுக்காத இதுவரை ஆண்ட எல்லாக் கழக அரசுகளையும் நான் குற்றம் சுமத்துகிறேன்.<br />
<br />
*<br />
<br />
நீங்கள் கேட்டுள்ள அடுத்த கேள்வி<br />
//பிறகு ஏன் ஆங்கிலத்தை மட்டும் விழுந்து விழுந்து கற்றுத்தருகிறார்கள்?//<br />
<br />
கிந்தி என்பது சனாதன சமச்கிரக மொழியின் ஒன்றுவிட்ட தம்பி.<br />
கிந்தியை ஏற்பது என்பது, சனாதன ஒட்டகத்தின் தலையை கூடாரத்தில் அனுமதிப்பது போன்றது. அதன்பின்னால் சனாதன வர்ணாசிரம முழு ஒட்டகம் உள்ளே வந்துவிடும்.<br />
<br />
கர்நாடகம் வரை ஆடும் காவிக்கட்சி ஏன் தமிழ்நாட்டில் காலூன்றமுடியவில்லை?<br />
<br />
இது மொழி தாண்டிய பேரரசியல் அகிலன். இதில் உங்களின் நிலை எனக்குத் தெரியாது. சொன்னாலும் எந்த அளவுக்கு உங்களுக்குப் புரியும் என்று தெரியவில்லை. (இது உங்களை நான் உரையாடல்கள்மூலம் அரியாததால் மட்டுமே)<br />
<br />
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்:<br />
------------------------------------------<br />
சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏன் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து கிறித்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மாறினார்கள்? அவர்கள் ஏன் இந்தியாவிலேயே சைவ, வைணவ மதங்களுக்கு மாறியிருக்கக்கூடாது?<br />
<br />
*<br />
அதே நிலைதான் ஆங்கிலத்தை ஆதரிப்பதற்கும். சனாதனக் கருமாந்திரங்களில் இருந்து விட்டுவிடுதலையாக வேண்டும் என்றால் அந்த வாடையே இல்லாத ஒன்றைத்தான் ஆதரிக்க வேண்டுமே தவிர , பேயின் சித்தப்பா பிசாசை ஆதரிக்கக்கூடாது. சரி ஏன் ஆங்கிலம் ஹீப்ருவை ஆதரிக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். ஏற்கனவே அறிமுகமான ஒன்று என்பதால் மட்டுமே.<br />
<i>.Mar 12</i><br />
<br />
<b>Balloon MaMa </b>- @சிவகுமார் மா<br />
<br />
// 'தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு எதிர்காலம் இல்லை' என்ற அவர்கள் நம்பிக்கை. அப்படிப்பட்டச் சூழல்தான் இருக்கிறது. அதற்கு பொறுப்பு 'தமிழ் உணர்வாளர்கள்' என்று காகிதப் புலிகளாக உறுமிக் கொண்டிருப்பவர்கள்தான்.//<br />
<br />
உண்மை மறுத்துச் சொல்ல ஏதும் இல்லை.<br />
<br />
தமிழுக்கான மொழிப்பங்கை ஆற்றும் ஒரு கடமையும் உள்ளது. அதே நேரத்தில் "கிந்தி படிக்காமல் ரொம்ப கஸ்டாமாயிருக்கு" என்று சொல்லி மற்றவர்களை தவறான சிந்தனைக்கு இட்டுச்செல்லும் உரையாடல்களையும் எதிர்கொள்ளவேண்டும்.<br />
<i>,Mar 12</i><br />
<br />
<b>Balloon MaMa </b>- சிவகுமார் மா<br />
<br />
//4. நாம் ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் விவாதிப்பதை விட ஆமாச்சு ஒரு சூழலில் உறுதியாக நின்று தமிழுக்கு இடம் ஏற்படுத்திக் கொடுப்பதன் மதிப்பு பல மடங்கு அதிகம்.//<br />
<br />
தமிழுக்கான மொழிப்பங்கை ஆற்றிய ஆமாச்சுவிற்கு (அகிலன் ?) சலாம் (கிந்தி சலாம்)<br />
<br />
**<br />
அவர் அங்கேயும் போராடியது ஆங்கிலத்தை எதிர்த்து என்று நினைக்கிறேன். ஒருவேளை கிந்தியாய் இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பாரா? :-))) கிந்தி ப்ரியராய் இருப்பதால் கேட்கிறேன். #doubt<br />
<i>.Mar 12</i><br />
<br />
<b>சிவகுமார் மா </b>-<br />
<br />
//அவர் அங்கேயும் போராடியது ஆங்கிலத்தை எதிர்த்து என்று நினைக்கிறேன். ஒருவேளை கிந்தியாய் இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பாரா? :-))) கிந்தி ப்ரியராய் இருப்பதால் கேட்கிறேன். #doubt //<br />
<br />
ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். இன்றைய தேதியில் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் பயன்பாட்டுக்கும் பலனுள்ள வகையில் உழைக்கும் முதல் 10 பேர் பெயர்களை பட்டியல் போட்டால் அதில் ஆமாச்சு என்று ஸ்ரீராமதாஸ் பெயர் தவறாமல் இருக்கும்.<br />
<br />
இந்தியை வெறுக்கத் தேவையில்லை, இந்தியை நேசிப்பது குற்றமில்லை. என் தாய் வாழ வேண்டும் என்றால் மற்ற தாய்களை வெறுக்க வேண்டும் என்று பொருளில்லை.<i>Mar 12 (edited Mar 12)</i><br />
<br />
<b>Balloon MaMa</b> - @சிவகுமார் மா -<br />
<br />
//இந்தியை வெறுக்கத் தேவையில்லை, இந்தியை நேசிப்பது குற்றமில்லை. என் தாய் வாழ வேண்டும் என்றால் மற்ற தாய்களை வெறுக்க வேண்டும் என்று பொருளில்லை.//<br />
<br />
உங்கள் அம்மாவும் நல்லவர் என் அம்மாவைப் போலவே என்றுதான் என்னால் சொல்லமுடியுமே தவிர. உங்கள் அம்மாதான் சிறந்தவர் அவரே எல்லோரையும்விட உயர்வானவர் பொதுவானவர் என்று சொல்லமுடியாது ஏன் என்றால் எனக்கென்று அம்மா இருக்கிறார்.<br />
<br />
அடையாளமற்ற அனாதைகள் வேண்டுமானால் கிந்திதான் எனது அடையாளம் என்று தஞ்சம் புகலாம்.<br />
<br />
மொழி என்ற அளவில் எதுவும் எங்கேயும் இருக்கட்டும். ஆனால் இதுதான் எல்லாருக்கும் என்று தட்டையாக இந்தியாவில் பேசினால் அவர்கள் இந்திய கலாச்சார கூட்டு அடையாளத்தை உணராதவர்களே.<br />
<i>.Mar 12</i><br />
<br />
<b>Gopalakrishnan (Gopi) T</b> -<br />
<br />
//இந்தி தெரியாமல் போனதால் ஆபிசில் பேசமுடியவில்லை//<br />
<br />
இந்தி அலுவல் மொழியாக கொண்ட அலுவலகத்தில் இந்தி தெரியாமல் போனால் குறை உங்களிடம். யாரும் உங்களை இந்தி கற்க தடை விதிப்பதில்லை.<br />
<br />
ஆங்கிலத்தை அலுவல் மொழியாக கொண்ட நிறுவனங்களில் குழுவினர் ஆங்கிலமற்ற வேற்று மொழியில் அலுவல் பணிகளை பேசுவதால் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதை மனிதவளத்துறையில் எடுத்துச் சொல்லி நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு (தொடர்புடையோர் பணிநீக்கம் வரை கடுமையான தண்டனைகள் கொண்ட) சட்டங்களை பெரும்பாலான நிறுவனங்கள் வைத்துள்ளன.<br />
<br />
இந்நிறுவனங்களில் அலுவல் ரீதியாய் இல்லாமல் தனிப்பட்ட சேதிகளை வேற்று மொழியில் சிலர் பேசினால் நமக்கென்ன? நமக்கு புரிந்த மொழியில் தனிப்பட்ட சேதிகளைப் பேசுவோரிடம் நட்பு பாராட்டவே நேரம் போதவில்லை.<br />
<br />
"க்யா ஆல் ஹே யார்" அப்படின்னு என்னை ஒருத்தன் கேட்டா "அருமையா இருக்கேன். நீ நல்லாயிருக்கியா"ன்னு தான் நான் பதில் சொல்வேன். "படியா ஹை"ன்னு பதில் சொல்வேன்னு எதிர்பார்த்தா அது அவன் தப்பு. அலுவல் தவிர அவன் கிட்ட எனக்கென்ன வெறென்ன உறவு?<i>Mar 12</i><br />
<br />
<b>ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் </b>- @Balloon MaMa<br />
<br />
எமது செயல் ஆங்கிலத்திற்கு எதிரானது அல்ல.<i>Mar 12</i><br />
<br />
<b>ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் </b>-<br />
<br />
வடமொழி பார்ப்பனர் மொழி மட்டும் அல்ல. தேய்ந்து தேய்ந்து அது கடைசியாக அதிகமாக பார்ப்பனர் வசம் எஞ்சியிருந்தது. அதுவும் கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளில் போய்விட்டது. வடமொழியறியாது சமண பவுத்த கருத்துக்களையும் முழுமையாக அறிந்துணர்தல் கடினம்.<br />
<br />
அதில் எண்ணற்ற பல உன்னதவிஷயங்கள் பொதிந்துள்ளதென்பதை ஓரளவிற்காவது கற்றுத் தேர்ந்து உணர்ந்து ஏற்கிறேன். அதுவும் தமிழ் நாட்டுச் சான்றோர்கள் பலர் கொண்ட உயர்ந்த கருத்தும் நிகரானவையே.<br />
<br />
நிகரான உயர்கருத்துக்களையும் வழக்கங்களையும் உலகின் எல்லாச் சமூகங்களும் எல்லா காலத்திலும் கொண்டிருந்திருக்கின்றன. எமது சமுதாயமும் கொண்டிருந்தது என்று சொல்வது சரி. எமது சமுதாயம் மட்டும்தான் உயர்ந்த பண்பாட்டின் உறைவிடமாய் இருந்தது எனச் சொல்வது அநாகரிகம்.<i>Mar 12 (edited Mar 12)</i><br />
<br />
<b>அரசு பாரி </b>- @அகிலன்<br />
//<br />
அதாகப்பட்டது தமிழ் தனித்த அடையாளத்துடன் இருக்க வேண்டியதில்லை (அது முடியாது.) தமிழ் ஆங்கிலத்துடந்தான் கலந்து(என்ன வார்த்தை அது? ஆங்..பரிணாமம்) செல்ல வேண்டும். இந்தி அதை தடுக்கிறது.<br />
தடுக்கிறது எப்படின்னு எனக்கு புரியல. எனக்கு புரியறது என்னன்னா தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிழ் சாவறது பேர் பரிணாமம்; பள்ளிகளில் இந்தி கத்து கொடுத்து நாலு இந்தி வார்த்தை தமிழோட கலந்தா அது இந்தி திணிப்பு.<br />
//<br />
<br />
இந்த மாதிரியான எகனை, மொகனை பேச்சுகளை 5 வருடமாக இணையத்தில் நிறைய பார்த்தாச்சு! :)<br />
<br />
சமூகங்களுக்கிடையிலான மொழி, பண்பாடு ஊடாடல், கலத்தல் மற்றும் தாக்கம் பற்றி கொஞ்சம் வாசித்து அறிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.<br />
<br />
ஆங்கிலத்தின் தேவையை பற்றிய நேரு மற்றும் அண்ணா இடையிலான கடிதங்கள், உரையாடல்களை படித்தாலே ஓரளவு தெளிவு கிட்டும்.<br />
<br />
அதிகாரத்தின் வழியிலான மொழி, பண்பாட்டு ஆதிக்கதிற்கும்..<br />
தேவையின் அடிப்படையிலான மொழி, பண்பாட்டு கலத்தலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கு! முந்தையது சமூகத்தை அடிமையாக்கும் செயல்... பிந்தையது சமூகத்தை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்வது.<br />
<br />
அப்புறம் இந்தி தடுக்கிறது.... இதை விளக்குவதற்கு இங்கே நேரமும், பொறுமையும் இல்லை... சிறிய அறிமுகம் மட்டும்....<br />
<br />
மொழி சார்ந்த ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது... 6 கோடி பேருக்கு தமிழ் தாய்மொழி என்பது 8கோடி பேருக்கு தமிழ் தாய்மொழி என்று மாறுவதல்ல... மொழி வளர்ப்பதன் நோக்கமே சமூகத்தை முன் நகர்த்துவதற்காக தான்!<br />
<br />
மொழியை உரம் போட்டு வளர்க்க முடியாது.... பிற சமூகங்களுடன் மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், தத்துவம் மற்றும் சிந்தனை போன்றவற்றை பறிமாற்றம் செய்வதன் மூலம் மட்டுமே வளர்ச்சி காண முடியும்.<br />
<br />
உலகின் பிற சமூகங்களுடன் மொழி, பண்பாட்டு தாக்கதிற்கு 'இந்தி' அரசாங்கம் மிக பெரிய தடையாக இருக்கிறது.<br />
<br />
'இந்தி' அரசாங்கம் சமஸ்கிருதத்தை உலகின் பிற அரசாங்களுடன் பறிமாற்றம் செய்கிறது. ஆனால் இந்தியாவின் பிராந்திய மொழிகள் மற்றும் பண்பாடுகள் பறிமாற்றம் செய்யப்படுவதில்லை..<br />
<br />
மிகச்சிறந்த எடுத்துகாட்டு வங்காள மொழி.. தமிழுக்கு நிகரான தொன்மையும்... கலை, இலக்கிய செல்வம் நிறைந்த வங்காள மொழி 'இந்தி' அரசாஙகத்தால் சிதைவடைந்துள்ளது.<i>Mar 12 (edited Mar 12)</i><br />
<b>அரசு பாரி </b>- இந்தி தேசிய இனிப்பு<br />
அதை தின்றால் இனிக்காதோ!?<br />
அந்தோ...<br />
அது இனிப்பல்ல...<br />
சமூகத்தை மெல்ல கொல்லும்...<br />
'இந்து' தேசிய கனவின் நஞ்சு!<i>Mar 12 (edited Mar 12)</i><br />
<br />
<b>ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்</b> -<br />
<br />
//கர்நாடகம் வரை ஆடும் காவிக்கட்சி ஏன் தமிழ்நாட்டில் காலூன்றமுடியவில்லை? //<br />
<br />
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற திருமூல வாசகம் இன்று தமிழகத்து மூல மந்திரமாய் ஒலிப்பதாலோ என்னவோ ;-)<br />
<br />
அது சரி, அன்றைய மொத்த மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி(+)யையும் கணக்கு பண்ணி தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் கும்மிடிப்பூண்டிக்கும் குமரிக்கும் இடையில் திராவிட மானம் திராவிட பண்பாடு என்பதிலிருந்தெல்லாம் கூனிக் குறுகி தமிழ் மானம் தமிழ் இனம் என்று பட்டம் பறக்கவிட்டு நூலறுந்து கொண்டிருப்பது ஏன்?<i>Mar 12 (edited Mar 12)</i><br />
<br />
<b><i><span class="Apple-style-span" style="color: #990000;">பின்குறிப்பு : இந்தக் கட்டுரைக்கு அதிகபட்சம் பத்து வாசகர்களையும், மூன்று பின்னூட்டங்களையும், மூன்று தமிழ்மணம் வாக்குகளையும் எதிர்பார்க்கிறேன். :))))))</span></i></b></div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-33618904947891830582011-03-04T19:40:00.001+05:302011-03-04T20:04:09.410+05:30காமராசரு ஆ(வ்வ்வ்வ்)ட்சியும் காங்கிரசூ கருமாந்திரங்களும்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzdoir9kTCgJbOX-Pw5SYXbpsLVIdCo2MfOOVJ-f3EPVXMQ_hH3IxwcO1zS1BgRmAGbssQ3xk_EbpJNC8NRmiexaP7qRpEPfnolom0-XIwRDKNQFrRDE1a-k9iEyx0dm1YwOpShY6X5dw/s1600/tamil.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="302" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzdoir9kTCgJbOX-Pw5SYXbpsLVIdCo2MfOOVJ-f3EPVXMQ_hH3IxwcO1zS1BgRmAGbssQ3xk_EbpJNC8NRmiexaP7qRpEPfnolom0-XIwRDKNQFrRDE1a-k9iEyx0dm1YwOpShY6X5dw/s400/tamil.jpg" width="400" /></a></div>"வித்தாரக்கள்ளி விறகொடிக்கப் போனாளாம் கத்தாழ முள்ளு வந்து கொத்தோட குத்திச்சாம்" என்றான் தங்கராசு திடீரென்று. வழக்கம்போல நான் முழிக்க ஆரம்பித்தேன். காலையில் அவனோடு கிளம்பியதிலிருந்தே பயல் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். அடிக்கடி திடீர் திடீரெனத் தலையை குறுக்கு நெடுக்கு, மேல்கீழ் என்று ஆட்டிக்கொண்டும், விரல்களை நீட்டியபடி, மடக்கியபடியும் என்று கோணங்கிச்சேட்டைகள் செய்தபடியே இருந்து கொண்டிருந்தான். எனக்கு ஓரளவு விஷயம் புரியத் தொடங்கி விட்டபடியால் பேஸ்தடித்து நின்றேன். சரிதான்... பயலுக்கு தேர்தல் ஜுரம் ஆரம்பித்துவிட்டது என்று.<br />
<br />
"என்ன பங்காளி? திடீர்னு பழமொழியெல்லாஞ்சொல்ற!" என்றேன்.<br />
<br />
"எலேய் முட்டாப்பயலே! இந்த ராகுல்காந்தியப் பத்தி நெனச்சேண்டா. அதான் பழமொழி ஞாவகத்துக்கு வந்திரிச்சி" அப்டீன்னான் தங்கராசு.<br />
<br />
"இந்தமாரிக்க வாலும் இல்லாம தலையும் இல்லாம சொன்னா என்ன எழவுடா புரியும்? தெளிவாச் சொல்லுடா" என்றேன் நான்.<br />
<br />
காலையில் அவரச அவசரமாக பழையசோத்துடன் சின்ன வெங்காயத்தைக் கடித்து முழுங்கிவிட்டு டவுனுக்குப்போய் ப்ளாக்கிலும், பஸ்ஸிலும் எழுதிக் கிழிக்கும் வெட்டி ஆபீசர் வேலையை செவ்வனே செய்யலாம் என்ற நினைப்பில் மண்ணள்ளிப் போட்டான் தங்கராசு. "நீங்கல்லாம் எழுதிக் கிழிக்கிற வேலயவிட, எருமமாடு மேய்க்கிறது உருப்படியான வேலடா" என்று சொல்லி, மாடுகளோடு சேர்த்து என்னையும் ஓட்டிக் கொண்டு வந்துவிட்டான்.<br />
<br />
"பங்காளி! நண்டு கொழுத்தா வளையில தங்காதுன்னு சொல்லுவாங்கடா. சும்மா இருந்த காங்கிரசுகாரப்பயலுவள ஊதிக்கெடுத்தமாரி கலைஞரு ஏத்திவுட்டு ஏத்திவுட்டே இன்னிக்கு பாத்தியா. ஆட்சில பங்கு கேக்குற அளவுக்கு வந்துட்டானுவ. அறுவத்தி ஏழுலயே இவனுங்க கால ஒடிச்சி போட்டாரு அண்ணா. அவரோட தம்பின்னு சொல்லி ஆட்சில இருக்குறவரு மறுவடி செத்துப்போன சவத்துக்கு உசுரு கொடுக்குற வேலைய நல்லா பண்ணிட்டு இருக்காருடா. இப்ப பாரு... அத்தைக்கி மீச மொளச்சா சித்தப்பாங்குற கதையா 90 தொகுதியில சீட்டு கேக்குறானுவ. ஆனா நம்மாளு இருக்காரே, வெசமம் புடிச்ச மனுசண்டா. திருமா, குருமா எல்லாத்துக்கும் பிச்சிப்பிச்சி குடுத்துட்டு மிச்சத்த கையில வெச்சிக்கிட்டு என்னா அருமயா டகால்டி வேல காட்டுறாரு. அந்தா இந்தான்னு இப்ப அறுவது வந்தாக்கா போதும்னு நெனக்கிறானுவ. கடேசி வரைக்கும் பூச்சாண்டி காட்டிட்டு கட்டக்கடேசிய இவனுங்கள தண்ணிதெளிச்சி வெரட்டி உட்டா எத்தினி தொகுதியில டெபாசிட்டு வாங்குவானுவோன்னு தெரியலடா பங்காளி. ஒத்தையா நின்னா டெபாசிட்டுக்கே சிங்கியடிக்கிற பயலுவோளுக்கு கூட்டணி ஆட்சி வேணுமாம். அத நெனச்சித்தாண்டா அந்த பழபொழியச் சொன்னேன்"ன்னான் தங்கராசு.<br />
<br />
"சரிடா பங்காளி. தமிழ்நாட்டுல எல்லா பயலுவளும் ஆட்சின்னு வந்தாக்க திருடத்தாண்டா செய்யிறானுவ. இவனுங்க மட்டும் என்னடா பாவம் செஞ்சானுவோ? ஒரு தடவ அவங்களும் ஆட்சிக்கு வந்துதான் பாக்கட்டுமே. அவனுவோளும் காமராசர் ஆட்சி, காமராசர் ஆட்சின்னு ரொம்பநாளா பொலம்பிக்கிட்டு இருக்கானுவோ. காமராசர் ஆட்சி மாதிரி வந்தா நல்லாத்தானேடா இருக்கும்" என்று அவன் வாயைக் கிண்டத் தொடங்கினேன்.<br />
<br />
மனுசச்சாணியவிட என்னைக் கேவலமாகப் பார்த்தவ்ன் சொன்னான் " காமராசரையே கடேசிக் காலத்துல கதறக்கதற அடிச்சவனுவோடா இவனுவோ. மொதல்ல இவனுவோ தனியா நின்னாக்கா அவனவன் பொண்டாட்டி புள்ளகுட்டிகூட ஓட்டுப்போடாது தெரிஞ்சிக்க"<br />
<br />
"சரி பங்காளி. நாமளும் மாத்திமாத்தி திமுகா, அதிமுகான்னு ஒக்காரவெச்சி பாத்துட்டம். ஒரு தடவ இவனுவோளுக்கும் வாய்ப்பு கொடுக்கலாமேடா? எல்லாருக்கும் ஒரு தடவ வாய்ப்பு கொடுக்கறதுதானேடா மொற?" என்றேன்.<br />
<br />
"எல்லாருக்கும் ஒரு தடவ வாய்ப்பு கொடுக்கிறதுக்கு நம்ம என்ன தேவிடியா மடமாடா நடத்துறோம் வெளங்காதவனே. இவனுவோ ஏன் வரக்கூடாதுன்னு சொல்றேன் தெரிஞ்சிக்க மொதல்ல" என்றவன் தொடர்ந்தான்...<br />
<br />
"மொதல்ல நம்ம சாதிசனத்துவள ஈழத்துல தொரத்தி தொரத்தி கொன்னது இவனுவதான். அடுத்தாப்புல வரிசையா சொல்றேன் பாத்துக்க. சொதந்தரம் வாங்குனதுலேருந்து இன்னிய வரைக்கும் இவனுவதான் இந்தியாபூரா ஒரே மாதிரி இருக்கணும்னு சொல்லி தேசிய இனங்களோட தனித்தன்மைய ஒடுக்குற வேலைய பாத்துட்டு இருக்கானுவ. தெளிவா சொல்றம்பாரு. வடகிழக்கு மாகாணங்கள்ல இன்னம் தீவிரவாதம் தீவிரவாதம்னு சொல்லிக்கிட்டு காக்காகுருவிய சுடுறமாரி மக்கள சுட்டுக்கிட்டு பொட்டப்புள்ளயள கற்பழிக்கிறதுக்கு லைசென்சு குடுக்கிறமாரி ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை கொண்டுவந்தவனுவ. காஷ்மீர்ல அந்த மக்களோட உரிமைய எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பறிச்சி அவங்களையும் துப்பாக்கி தூக்க வெச்சவனுவ. இந்தா இப்ப பாரு, எவனோ ஒரு நாதாரி சம்பாரிக்கறதுக்காவ மத்திய இந்தியாவுல இருக்குற கனிமவளத்தையெல்லாம் அடிமாட்டு ரேட்டுக்கு வெளிநாட்டுக்கு வெல பேசிட்டு அங்க இருக்குற அப்பாவி சனங்களை சொந்த எடத்த உட்டு வெரட்டுறவனுவ. அங்கங்க கெடக்குற தரிசு நெலம்போவ பாக்கிய எல்லாம் அடமானம் வெச்சி நம்ம நாட்டு மக்கள எல்லாம் அம்பது வருசம் ஆட்சில இருந்துகிட்டு கடங்காரங்களா ஆக்குனவனுவ.".... தொடர்ந்தான்...<br />
<br />
" எலேய் ஒனக்கு ஒண்ணு தெரியுமா? காங்கிரசு கட்சிதான் சொதந்தரம் வாங்கி குடுத்தின்னு காலங்காலமா புளுவிக்கிட்டு இருக்கானுவளே, அந்த காங்கிரசு கட்சிய ஆரமிச்சது ரெண்டு வெள்ளைக் காரனுவதான் தெரியுமா?"<br />
<br />
"சரிதான் பங்காளி! அந்த ரெண்டு வெள்ளைக்காரனுவளும் நம்ம சனங்கமேல அக்கறை வெச்சிக்கூட கட்சிய ஆரமிச்சி இருக்கலாம்லடா?"<br />
<br />
"ஒன்னமாரி நெறைய புண்ணாக்குங்க அப்பிடித்தாண்டா நம்பிகிட்டு இருக்கானுவ. அது இல்லடா சங்கதி. அன்னிக்கு நெலமையில நாட்டுல இருந்த கொதிப்ப அடக்குறதுக்காவயும், நம்மளமாரி வக்கத்த சனங்க பாட்டுக்கு சமதர்மம், சமத்துவம்னு கெளம்பிரக்கூடாதுன்னு வெளிநாட்டு கொள்ளக்காரனுவ உள்நாட்டு கொள்ளக்காரனுவகூட சேந்து படம் காட்டுறதுக்கு ஆரமிச்ச கட்சிதாண்டா அந்தக் கட்சி. அப்ப ஆரமிச்ச கள்ளக்கூட்டு இப்ப வரைக்கிம் தொடருதுடா. அணு ஒப்பந்தம் போடுறேன் பேர்வழின்னு அமெரிக்காக்காரங்கிட்ட நாட்ட அடமானம் வெச்ச பயலுவடா. இன்னொன்னு யோசிச்சிப் பாரு. உ.பி, ம.பி, ராஜஸ்தான், அப்டீன்னு இந்தி பெல்ட்டு மாகாணம்பூரா இந்தப் பயலுவளும், நம்ம கலைஞரு ஒருவாட்டி சொன்னாரே 'பண்டாரம் பரதேசிங்க'ன்னு அந்த பிஜேபிகாரனுவளுந்தான் ஆட்சி நடத்துனானுவ. எந்த மாகாணமாச்சும் வெளங்கி இருக்காடா? தமிழ்நாட்டை விட முப்பது வருசம் பின்னுக்கு நிக்கிதுங்களாம் அனாதப்புள்ள மாரி."<br />
<br />
"சரிடா நீ என்னதான் சொல்ல வார கடேசியா? காங்கிரசுக்காரனுவள வர உடலாமா வேண்டாமா? ஒத்த வார்த்த சொன்னாலும் நெத்தியடியாச் சொல்லு"<br />
<br />
"எலேய் கூமுட்ட! இவனுவ தமிழ்நாட்டுல கொஞ்சூண்டு கைய ஊனி எந்திரிச்சானுவன்னு வைய்யி, தமிழ்நாட்டுல ஒவ்வொருத்தனும் காலையில பேளப்போவணுமா வேண்டாமான்னுகூட டெல்லிக்கு தந்தியடிச்சித்தான் கேக்கணும்பானுவ. இருக்குற எரநூத்தி முப்பத்துநாலு கோஷ்டியும் ஆளாளுக்கு நாந்தான் மொதலமைச்சருங்கிறமாதிரி நாட்டாமை பண்ணுவானுவ. எவன் நாட்டாம பண்றதுன்னு யாருக்கும் புரியாம இருந்தா அந்த ஊரு வெளங்குங்கிற? கெடச்ச கேப்புல அறுவது சீட்டு கேக்குறப்பயே அதுக்கு எனக்கு பத்து, ஒனக்கு பதினஞ்சின்னு கொரங்கு அப்பம் பிரிச்ச கதையா ஒவ்வொரு கோஷ்டியும் அடிச்சிக்கிறானுவ. இவனுவளுக்கு ஓட்டுப்போட்டு ஒக்காரவெச்சி செதம்பரம் பத்துநாளு, வாசன் இருவது நாளு, எளங்கோவன் ஏழரை நாளு, தங்கவாலு மூனேமுக்கா நாளுன்னு வெதவெதமா மொதலமைச்சர பாக்கணும்னு நமக்கு தலையெழுத்தா என்ன?"<br />
<br />
"ம்ம்ம்ம்....." என்றேன்.<br />
<br />
"அவளத் தொடுவானேன் கவலப் படுவானேன் கச்சேரி வாசல்ல கைகட்டி நிப்பானேன்! போடா வேலைய பாத்துக்கிட்டு" என்றவன் எருமை மாடுகளை ஓட்டிச்செல்ல ஆரம்பித்தான்.<br />
<br />
<a href="http://krpsenthil.blogspot.com/2011/03/blog-post_04.html">இங்கே போய் </a>இன்னொரு தேர்தல் 2011 ஸ்பெஷலைப் பாருங்கள். அக்மார்க் கேஆர்பி குசும்பு...! </div>vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com11