சனி, 22 மே, 2010

மவனே செத்தீங்கடா....(கண்டிப்பாக இது பின்,முன்,நடுசெண்டர்,சைடு நவீனக்கதையல்ல)

பாத்ரூமில் நனைத்துப்போடப்பட்டிருந்த கரிகால சுந்தரச்செழியனின் ஜட்டி தூக்கம் கலைந்து விழித்தபோது ஆளில்லா சாலையில் தன்னந்தனியே பேசிக்கொண்டு நடந்துகொண்டிருந்த உக்கிரவழுதிப்பாண்டியனுக்கு சிறுநீர் கழிக்கும் உந்துதல் வந்து ஜிப்பை தளர்த்த பேண்ட்டிற்குள் இருந்து குதித்த பாம்பு மெல்ல நழுவி 27C யில் ஏறி அமர்ந்து 1,35,87,26,49,83,48,89,95,34,732 பைசாக்களை எண்ணிக்கொடுத்து 7830B.Cக்கு டிக்கெட் வாங்கி 15 நிமிடம் கழித்து இறங்கிப் பார்க்கையில் சூரியன் தன்பழுப்பு நிறக்கிரணங்களை வீசிக்கொண்டிருப்பதை சட்டை செய்யாமல் தாவிக்குதித்து 321-ம் கிளியோபாத்ராவின் அந்தரங்க அறைக்குள் நுழைந்து தன்னை இருபத்தி நாலு அங்குல ஆண்குறியாக உருமாற்றிக்கொண்டபின் அவளது படுக்கையில் சற்றே கண்ணயர்ந்துக் கொண்டிருக்கையில், காஷ்மீரத்துக்குடிசையொன்றில் ரோஜா நிறத்தையொத்த இளங்கன்னியை வன்புணர்ந்துகொண்டிருந்த கரும்பச்சைச்சீருடையணிந்த வீர இளைஞனின் காதுக்குள் வந்து ரீங்கரித்த குளவியொன்று மெல்ல நகர்ந்துபோய் சற்று தொலைவாயிருந்த பஃகறுளியாற்றங்கரையிலமர்ந்து இந்தக்கதையை எப்படி முடிப்பது என்று தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்த இருபத்தியெட்டாம் ஈழப்போரில் எஞ்சியிருந்த இறுதித்தமிழன் குலோத்துங்கப்புலிகேசிப்பாண்டியநெடுவழுதிப்பல்லவ காளிங்கராயனினருகிலமர்ந்து “உனக்கொரு கதை சொல்கிறேன், கேள்” என்று சொல்லத்துவங்கிய கதை யாதெனின்.........

6 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

அண்ணாச்சி அருவாள தீட்டி வைக்கிறேன் .....

பத்மா சொன்னது…

அடேங்கப்பா! நெஜம்மா எதாவது சிற்றிலக்கிய இதழுக்கு கேக்க போறாங்க ....:))

vinthaimanithan சொன்னது…

வாங்க அண்ணாச்சி வாங்க

vinthaimanithan சொன்னது…

நன்றி பத்மா மேடம்

பாரதசாரி சொன்னது…

பின்னூட்டம் மட்டும் சாதாரண மொழியில இருந்தா உங்கள பின்னவீனத்துவ எழுத்தாளரா ஒப்புக்கொள்ள மாட்டார்கள் சிறுபத்திரிகைல ஆட்டைக்கு சேக்க மாட்டாங்க அதனால் உங்கள் வழியிலே "மாமிச குழம்பு உறைநிலை விலகி பிழம்பில் வெந்த பிண்டமாய், தன் கூர் நகங்களை தானே..." ஐ நல்லா இருக்கு சார் இப்புடி எழுத...என்ன முடிக்க தான் முடியல..கமல் பேட்டி பாத்தா மாதிரி இருக்கு;-)

பாரதசாரி சொன்னது…

தலைப்பு மிகப் பொருத்தம்

Related Posts with Thumbnails