திங்கள், 3 மே, 2010

யாஹூ மெஸஞ்சரும் சில தேவதைகளும்....- ஹிஸ்டரி 2

தழுவிய சுகம்
உணருமுன்னே
தாண்டிப் போகிறதொரு தென்றல்
உன்னைப்போலவே


”நிரஞ்சனா... வாவ்.. ஸ்வீட் நேம்!” ஆதாம் காலத்து மொக்கையை அட்சரம் பிசகாம ஆரம்பிச்சான் ஆனந்து.

“தாங்க் யூ... உங்க பேரு?” ஒரு மொட்டு இதழ்விரித்தது.

“ஆனந்து.... நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

“பி.காம்... நீங்க?”

.... .... ....
.... .... ....
... .... ....

”அழகா பேசுறீங்க நிரஞ்ச்....” நிரஞ்சனாங்கிற கவிதையான பேரு ஆனந்து வாயில இருந்து ஏதோ ‘சிரிஞ்ஜ்’ ’சிரிஞ்ஜ்’ங்கிற மாதிரி வர ஆரம்பிச்சிச்சி

“நீங்களும்தான் இண்ட்ரஸ்டிங்...”

.... .... ....
.... .... ....
.... .... ....
“நான் உங்களை ஆட்(add) பண்ணிக்கலாமா நிரஞ்ச்?”

“ஓ!ஷ்யூர்”

கொஞ்சநாளா வறண்டு போயிருந்த முகிலனுக்கு அன்னிக்கு அடிச்சுது லாட்டரி. மட்டன் பிரியாணியும், V.S.O.P யும், ஒரு பாக்கெட் வில்ஸ் ஃபில்டரும் கண்ணுல பட்டவுடனேயே
வாயில இருந்து குட்டி கூவம் வழிஞ்சோடி மெரினா வழியா வங்காளவிரிகுடால சங்கமமாச்சு..

ஒரு ஸ்மால் உள்ள போனவுடனே உருண்டு பொரள ஆரம்பிச்ச ஆனந்து “ அவ என்னை ஆட் பண்ணிட்டாண்ணே...அவ என்னை ஆட் பண்ணிட்டாண்ணே...”ன்னு ஆலாபனைய
ஆரம்பிச்சான்.

அதுக்குள்ள முக்கால் பாட்டிலை மொக்கியிருந்த முகிலன் காதுல என்ன எழவு விழுந்துச்சோ தெரியல

“மொதல்ல ஆடு பண்ணனும்... அப்புறம்தாண்டா பிரியாணி பண்ணனும்” எடுத்துவுட்டான் எதிர்க்கச்சேரிய.

அடுத்தநாள்ள இருந்து, வயசுப்பொண்ணுங்க வாராவாரம் வெள்ளிக்கிழமை 6 மணியானா கோயிலுக்குப் போற மாதிரி, சாயங்காலம் 6 மணியானா கரெக்டா பக்கத்து ப்ரௌசிங் செண்டர்ல
ஆஜராயிடுவான் ஆனந்து.

பொம்பளப்புள்ளங்ககிட்ட நேர்ல பேசினாத்தானே நம்மாளுக்கு நாக்குல நண்டு கடிச்ச மாதிரி சுளுக்கிக்கும்? இது ஸைபர் ஃப்ரெண்ட்ஷிப்தானே... பரோட்டா கடையில பயில்வான் பூந்தமாதிரி
வீடுகட்டி விளையாட ஆரமிச்சான்.

“உங்களுக்கு என்னல்லாம் புடிக்கும்?” இது அவ

“எனக்கு கவிதைன்னா உசிரு... பாரதியார்லேருந்து வைரமுத்து, தபூஷங்கர்னு எல்லார் புக்கும் படிச்சிருக்கேன்”

“அய்யோ! எனக்கும் தபூஷங்கர்னா ரொம்ம்ம்ம்ப பிடிக்கும்”

“பாருங்க.. நாம எல்லாத்துலயும் ரொம்ப ஒத்துப்போறோம்ல” சைடுகேப்புல சரக்கு ரயிலையே ஓட்டுனான்

அதுக்குப் பிறகு அரியர் எக்ஸாமை அந்தரத்துல பறக்கவிட்டுட்டு அரிஸ்டாட்டில் ரேஞ்சுக்கு புத்தகமும் கையுமா திரிஞ்சான், பின்ன கவிதை படிப்பேன்னு சொல்லியாச்சு. தபூஷங்கரை எல்லாம் தாண்டி
கவிதை எழுதவேண்டாமா?

இப்படியாக கம்ப்யூட்டர்லயே காதல்கோட்டை கட்டிட்டு இருந்த ரெண்டு பேரும் ஒருநாள் மீட் பண்ணலாம்னு முடிவு பண்ணி, எங்க பார்க்கலாம்னு ஆன்லைன்ல மெட்ராஸ் மேப்பை ஓப்பன் பண்ணி
அங்குலம் அங்குலமா அலசி ஆராய்ஞ்சி கடேசியா தி.நகர் சிவாவிஷ்ணு கோயில்ல பார்த்து பேசிட்டு நடேசன் பார்க் பக்கமா நடையக் கட்டலாம்னு முடிவு பண்ணாங்க...

வெப்கேம்ல பார்த்தா த்ரில் போயிடும்னு வீராப்புல இருந்த ரெண்டு பேரும் எப்படி அடையாளம் கண்டுக்கிறது? அதான் காலங்காலமா தமிழ் சினிமா காதலுக்கு ஆயிரம் டெக்னிக்கை சொல்லிக்
கொ(கெ)டுத்திருக்கே... இவன் சந்தனகலர் சட்டை கறுப்பு கலர் பேண்ட்... அவ மெரூன் கலர் சுடிதார்.

அடுத்துவந்த நாலுநாளும் ஆனந்தோட ஆக்டிவிட்டீஸ் இருந்ததை பார்க்கணுமே... ‘தேன்குடிச்ச நரி’ உவமைல்லாம் அரதப் பழசு... கஞ்சாவை கஷாயம் வெச்சுக்குடிச்ச சாமியார் ரேஞ்சுக்கு ஒரே அளப்பறைதான்.

அந்த நாளும் வந்தது.

கோயில்ல ஒரு மூலையில மூளை ஆர்வத்துல கொதிக்க கொதிக்க நிக்கமுடியாம நின்னுட்டு இருந்தான் ஆனந்து..

கரெக்டா மணி அஞ்சரை..

கோயில் வாசல்ல மெரூன் கலர் சுடிதார்ல ஒரு சிலிண்டர் உருண்டு வந்துட்டு இருந்தது......

(சாட்டிங் ஹிஸ்டரி தொடரும்)

2 பேரு கிடா வெட்டுறாங்க:

இரகுராமன் சொன்னது…

எத்தன சிலிண்டர் உங்க மேல இப்படி பலமா உருண்டு போயிருக்கு ?? உண்மைய சொல்லுங்க :P

AkashSankar சொன்னது…

சஸ்பென்ஸ்காக தான்னே... ஆனந்த் பாவம்க...

Related Posts with Thumbnails