ஞாயிறு, 9 மே, 2010

மரணம் பற்றிய கனா

எப்போதும்
இணைந்தே இருக்கின்றன
வாழ்வும் மரணமும்

வட்டத்தின்
முதலும் கடைசியுமாய்

உச்சமென அறிந்தும்

ஏற்க
மறுக்கும் மனம்

‘அனுபவத்தைப்
பகிர்வது எவ்வாறு?’

முரணாய்த்தானுள்ளது

மரணத்தின்
சிருஷ்டி
இறைவன் என்பது

என்னதான் சொன்னாலும்

பயமுறுத்தத்தான்
செய்கிறது

யாருமற்ற நள்ளிரவில்
மரணம் பற்றிய கனா

10 பேரு கிடா வெட்டுறாங்க:

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

//என்னதான் சொன்னாலும்

பயமுறுத்தத்தான்
செய்கிறது

யாருமற்ற நள்ளிரவில்
மரணம் பற்றிய கனா//

அக்மார்க் உண்மை

Prabu M சொன்னது…

விந்தை மனிதனிடம் நிறைய எதிர்பார்த்தேன் நண்பா.... அது என் தவறாகக் கூட இருக்கலாம்....
ஏனெனில் நீங்கள் உங்கள் திருப்திக்காகத்தான் எழுதவேண்டும்... இந்தக் கவிதை உங்களுக்கு முழு திருப்தி தந்தால் நலமே....

Unknown சொன்னது…

மக்கள் பாராட்டணும்ன்னு தினமும் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டிங்களா? கொஞ்சம் dilute ஆன மாதிரி இருக்கு.

vinthaimanithan சொன்னது…

புரியுது... புரியுது..

இன்னிக்கு மேட்டர் ஒண்ணும் சிக்கலன்னு காலேஜ் பீரியட்ல எழுதினத எடுத்து upload பண்ணிட்டேன்.

இனி சரக்கு ரொம்ப முறுக்கா இருக்குற மாரி பாத்துகிறேன்

நன்றி மணி

நன்றி பிரபு
நன்றி கேவிஆர்

பா.ராஜாராம் சொன்னது…

//‘அனுபவத்தைப்
பகிர்வது எவ்வாறு?’//

நல்லாருக்குங்க. :-)

vinthaimanithan சொன்னது…

நன்றி பாரா சார்,

உங்க ஊக்கம் என்னை ரொம்ப உற்சாகப் படுத்துது...

என் பெரும்பாலான கவிதகளுக்கு ஓட்டும் போட்டு எனக்கு எனர்ஜி கொடுக்குறீங்க ரொம்ப நன்றி

நிறைகுறைகளை சுட்டிக்காட்டுங்க சார்

ஹேமா சொன்னது…

எல்லோரது மனசுக்குள்ளயும் இருக்கிற
ஒரு பயம் ,உணர்வு ,கேள்வி.
வார்தைகளால் அழகாக்கியிருக்கிறீர்கள்.

Unknown சொன்னது…

வாழ்தலே சாகத்தான் நண்பரே/...

பத்மா சொன்னது…

அது தான் நிதர்சனம் என்று தெரிந்தாலும் அது பயம் தான் .ஆசை ஆசை வேறென்ன

நேசமித்ரன் சொன்னது…

:(

Related Posts with Thumbnails