சனி, 8 மே, 2010

ஆதியில் சொல் இருந்தது

வைதரணி* நதியில்
சொற்களே ப்ரவாகமாய்

தாண்டவியலா தவிப்பில்
ஆத்மாக்களின் அழுகை

சொற்களுள் இருந்தது பிரபஞ்சம்

சொற்கள் சொற்களைப்
புணர்ந்து
சொற்களைப்
பிறப்பித்தன

சொற்கள் சொற்களை
அழித்து
சொற்களை
உயிர்ப்பித்தன

நீ

நான்

சொ

ல்

ல்

சொ

சொற்களில் மட்டும்
ஜீவிக்கிறது
மானிடம்

சொற்களாலும்
ஜீவிக்கிறது
கவிதை

ஆம்

ஆதியில்
சொல் இருந்தது

சொல் மட்டுமே

( * வைதரணி- இறந்துபோகும் ஆத்மாக்கள் பூமியைத்தாண்டி போகும்போது கடந்து செல்லவேண்டிய அக்கினியாறு- இந்து புராணங்களின்படி)

3 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

சூப்பர் தம்பி ......

பத்மா சொன்னது…

நல்லா இருக்குங்க

Unknown சொன்னது…

//நீ

நான்

சொ

ல்

ல்

சொ//

நகுலன் பாணியா? அடிச்சு ஆடுங்க

Related Posts with Thumbnails