ஞாயிறு, 15 நவம்பர், 2009

மவனே செத்தீங்கடா....

பாத்ரூமில் நனைத்துப்போடப்பட்டிருந்த “லக்கி”யின் ஜட்டி தூக்கம் கலைந்து விழித்தபோது ஆளில்லா சாலையில் தன்னந்தனியே பேசிக்கொண்டு நடந்துகொண்டிருந்த உக்கிரவழுதிப்பாண்டியனுக்கு சிறுநீர் கழிக்கும் உந்துதல் வந்து ஜிப்பை தளர்த்த பேண்ட்டிற்குள் இருந்து குதித்த பாம்பு மெல்ல நழுவி 27C யில் ஏறி அமர்ந்து 1,35,87,26,49,83,48,89,95,34,732 பைசாக்களை எண்ணிக்கொடுத்து 7830B.Cக்கு டிக்கெட் வாங்கி 15 நிமிடம் கழித்து இறங்கிப் பார்க்கையில் சூரியன் தன்பழுப்பு நிறக்கிரணங்களை வீசிக்கொண்டிருப்பதை சட்டை செய்யாமல் தாவிக்குதித்து 321-ம் கிளியோபாத்ராவின் அந்தரங்க அறைக்குள் நுழைந்து தன்னை இருபத்தி நாலு அங்குல ஆண்குறியாக உருமாற்றிக்கொண்டபின் அவளது படுக்கையில் சற்றே கண்ணயர்ந்துக் கொண்டிருக்கையில், காஷ்மீரத்துக்குடிசையொன்றில் ரோஜா நிறத்தையொத்த இளங்கன்னியை வன்புணர்ந்துகொண்டிருந்த கரும்பச்சைச்சீருடையணிந்த வீர இளைஞனின் காதுக்குள் வந்து ரீங்கரித்த குளவியொன்று மெல்ல நகர்ந்துபோய் சற்று தொலைவாயிருந்த பஃகறுளியாற்றங்கரையிலமர்ந்து இந்தக்கதையை எப்படி முடிப்பது என்று தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்த இருபத்தியெட்டாம் ஈழப்போரில் எஞ்சியிருந்த இறுதித்தமிழன் குலோத்துங்கப்புலிகேசிப்பாண்டியநெடுவழுதிப்பல்லவ காளிங்கராயனினருகிலமர்ந்து “உனக்கொரு கதை சொல்கிறேன், கேள்” என்று சொல்லத்துவங்கிய கதை யாதெனின்.........

5 பேரு கிடா வெட்டுறாங்க:

Athisha சொன்னது…

ஏன் இப்படிலாம்! ஆனா நல்லாருக்குங்க கதை! ரொம்ப புடிச்சுருக்கு!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தம்பி கோணங்கியின் கதைகளையும், சாருவின் கதைகளையும் ரொம்ப படிக்கிறீங்கன்னு நெனைக்கிறேன்...
நல்லாத்தான் இருக்கு... தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் .....

அன்புடன்,
கே.ஆர்.பி.செந்தில்

Mahesh சொன்னது…

அண்ணே... முடியல..... :))))))))))

கார்க்கிபவா சொன்னது…

முடியல சாமி.. ஆனாலும் 2007லே பதிவு ஆரம்ப் இச்ச நீங்க எப்படி எனக்கு ஜூனியர் ஆக முடியும்? நீங்கதான் மூத்தப் பதிவர்

anujanya சொன்னது…

Interesting.

Anujanya

Related Posts with Thumbnails