வெள்ளி, 18 மார்ச், 2011

#தேர்தல் 2011 அப்டேட்ஸ்... கூகுள் பஸ்ஸும் நானும்...




கூகிள் வழங்கும் ப்ளாக்கர் சேவையை மிஞ்சிக் கொண்டிருக்கிறது அதன் பஸ் (Buzz) சேவை. கருத்துக்கள், எதிவினைகள், மீண்டும் எதிர்வினைகள், பதில்கள் என விநாடிக்கு விநாடி அதகளம் பண்ணிக் கொண்டிருக்கின்றது கூகிள் பஸ். தமிழகச் சட்டசபைத் தேர்தல் நேரத்தில் பஸ்ஸில் விவாதங்களும், கிண்டல்களும், கேலிகளும் அனல் பறக்கின்றன.

என் பங்கிற்கு நானும் பஸ்ஸில் துண்டு போட்டு வைத்திருக்கிறேன். தமிழகச் சட்டசபைத் தேர்தல் தொடர்பான எனது பஸ்களை இங்கு தொகுத்திருக்கிறேன். ரசிக்கலாம், திட்டலாம், லேசாய் புன்னகைத்து ஒதுக்கிச் செல்லலாம், முடிந்தால் கருத்துக்களையும் பகிரலாம்.
******************************************************


கடைய இழுத்து மூடிட்டு ஓடுனான்னா அவன் நமக்கு அடிமை. தொறந்தே வெச்சிருந்தான்னா நாம அவனுக்கு அடிமை. டேய்... எட்டிப்பார்றா... என்ன செய்றான்னு # அம்மா பத்தின பஸ் இல்லீங்கோவ் # தேர்தல்2011 அப்டேட்ஸ்
******************************************************

கலைஞ டி.வி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு நேரடி ஒளிபரப்புல முடிஞ்சவொடனே 'தூங்காநகரம்' வெளம்பரம் போட்டாங்க. "நாந்தாண்டி அல்வா பேசுறேன்"னு ஆரமிக்குது. ஏதாச்சும் உள்குத்து இருக்கா??? :))) #தேர்தல்2011 அப்டேட்ஸ்
******************************************************

இனிமே ஒடம்பொறப்புக்கெல்லாம் இதயதெய்வம் 'அம்மா'தான் போலருக்கு :))) #தேர்தல்2011 அப்டேட்ஸ்
******************************************************

ஸ்பெக்ட்ரம் பணம் போயஸ்தோட்டம் வரை பாய்ஞ்சிடுச்சோ? அரசியல்ல எதுவும் நடக்கலாம் #தேர்தல்2011 அப்டேட்ஸ்
******************************************************

சத்தியமூர்த்தி.பவனுக்குள்ள உள்ளாற வர்றவங்க மினிமம் நாலு பட்டாபட்டி டிராயராவது போட்ருக்கணும்னு புதுசா ரூல்ஸ் போட்ருக்காங்களாம். நியூசென்ஸ் கேஸ்ல மாட்டாம இருக்க முன்னெச்சரிக்கை :))) #தேர்தல்2011 அப்டேட்ஸ்
******************************************************

விநாசகாலே விபரீதபுத்தி # அதிமுக அணியில் மதிமுக இல்லை # தேர்தல்2011 அப்டேட்ஸ்
******************************************************

நேத்துதான் என்னோட சிநேகிதன் தங்கராசு சொல்லிட்டு இருந்தான்.

"அந்தம்மாவுக்கு எதிர்க்கட்சி தலைவரா இருந்து சொகுசு பழகிப்போச்சு. கொடநாட்டுல நாலுமாசம், சிறுதாவூருல மூணுமாசம், ஹைதராபாத்துல ரெண்டு மாசம், போயஸ் தோட்டத்துல டிங்கரிங், மராமத்துப் பணிகளை மேற்பார்வையிடுறதுல ரெண்டுமாசம். கோயிலு கொளம், பரிகாரப்பூசைன்னு ஷேத்ராடனத்துல ஒருமாசம் அப்டீன்னு ஜாலியா பொழுதுபோக்கிக்கிட்டு, அப்பப்போ போரடிச்சா அறிக்கைக்கப்பல் செஞ்சிவுட்டு வெளையாடுறது, தொண்டர்களுக்கு தரிசனம் கொடுக்கிறது, பச்சப்புள்ளைங்களுக்கு கிலுகிலுப்பையை புடுங்கி புடுங்கி மறுவடி கொடுத்து அழுவாச்சி காட்றமாதிரி கட்சிப் பதவிகளை வெச்சி வேடிக்கை காட்றதுன்னு குந்துனாப்புல இருக்குறத உட்டுப்புட்டு ஆட்சில ஒக்காந்து லொட்டான், லொசுக்கான், நண்டுசிண்டுக்கெல்லாம் மாஞ்சி மாஞ்சி பதில் சொல்லிக்கிட்டு எதுக்கு பிரஷரை ஏத்திக்கணும்னு இருப்பாங்க."

" மைசூரு திவானு பங்களாவுல வேல பாத்த பரம்பரைன்னா சும்மாவா. ஒரு கெத்து மெயிண்டெயின் பண்ணனும்லே"

தங்கராசு வாயிக்கு சக்கரையை (நோ..நோ... அந்த 'சக்கரை' இல்லீங்க) அள்ளிப் போடணும் # வைகோவுக்கு வைக்கோல் :))))

# தேர்தல்2011 அப்டேட்ஸ்
*****************************************************

தமிழகத்தின் இருபெரும் கட்சித் தலைவர்களும் அவங்கவங்க பூர்வீக ஊர்ல போட்டியிடுறாங்க... மு.க திருவாரூர்லயும், ஜெ. ஸ்ரீரங்கத்துலயும்.

இதுல மட்டும் ஒரே மாதிரி சிந்திக்கிறாங்கப்பா! # தேர்தல் 2011 அப்டேட்ஸ்
*****************************************************

மாமல்லபுரத்துல நடக்குதாம் பஞ்சாயத்து! பக்கத்தூட்டுக்காரனோட வாய்க்காவரப்பு பாகப்பிரிவினையைவிட, பங்காளி பாகப்பிரிவினை கஷ்டமா இருக்கும் போல! :))) # தேர்தல்2011 அப்டேட்ஸ்
*****************************************************

20 கெடச்சாலே வேட்டிய கிழிச்சுக்குவானுங்க. இப்போ 63 வேற. சத்தியமூர்த்தி பவனத்துக்குள்ள போற ஒவ்வொருத்தனும் ஆளாளுக்கு ஒண்ணுக்கு மூணு பட்டாபட்டிய மாட்டிட்டுப் போறதா கேள்வி. :))))) #தேர்தல்2011 அப்டேட்ஸ்
****************************************************

சாமி இல்லேன்னாரு பெரியாரு. ஒன்றே குலம் ஒருவனே தேவன்னாரு அண்ணா. கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு போனாரு எம்சியாரு. குருபலத்துக்காவ மஞ்சத்துன்ண்டு போட்டாரு கலைஞ்சரு. சாய்பாபா மோதிரத்துக்கு வாயப்பொளந்தாரு தொரமுருகன். கோயில்கோயிலா படியேறி பரிகாரம் பண்றாங்க பொர்ச்சித்தலேவி.# டார்வின் இருந்திருந்தா theory of evaluation ஐ ரிவர்ஸ்ல யோசிச்சிருப்பாரோ???
***************************************************

பேசாம காங்கிரஸ்காரனுங்க 90 சீட்டு வேணும்னு சொல்லியே புடிவாதமா இருந்திருக்கலாம். மிஞ்சி மிஞ்சி போனா என்ன பண்ணுவாங்க திமுகவுல? ரெண்டுநாளு ராஜினாமா நாடகம் நடத்திட்டு அப்பாலிக்கா 90 சீட்டுக்கு ஒத்துக்குறோம்னு சொல்லி இருப்பாங்க. காங்கிரஸ்காரங்களுக்கு அரசியலே தெரியலப்பா. :))))) ஸ்பெக்ட்ரம் மாதிரி அலாவுதீன் பூதத்தை கையில வெச்சிக்கிட்டு அல்ப்பை சல்ப்பையா 63 லயே நின்னிருக்கானுங்க :))))))) #தேர்தல்2011 அப்டேட்ஸ்
***************************************************

அறுவது சீட்டுக்கும், சிபிஐ வேட்டைநாயை கட்டுப்படுத்திக்கவும் அவுங்க ஒப்புத்துக்குவாங்க. உலக்கைக்கு வாழ்க்கைப்பட்டா இடிவாங்காம இருக்க முடியுமான்னு இவிங்களும் சமாதானம் ஆயிக்குவாங்க. கிய்யான் முய்யான்னு கத்திக்கிட்டு இருந்த தொண்டர்கள் கைகோர்த்து வேலை பார்க்க ஆரமிச்சிடுவாங்க. தலைவருங்கோ எல்லாம் கொள்கைக்கூட்டணி, கூட்டணிக்கொள்கை எல்லாத்தையையும் பத்தி வெக்கமில்லாம மொழங்க ஆரமிச்சிடுவாங்க. அய்யா வந்தாலுஞ்சரி, அம்மா வந்தாலுஞ்சரி... அடுத்த தேர்தல் வரைக்கும் தர்பார் வாசல் காவல்காரன்கூட சாமானியப்பட்டவனை ஏறெடுத்தும் பாக்கமாட்டான். ங்கொய்யால... ஜனநாயகமாம், மக்கள்நலனாம், மசிராப்போச்சி :((( #தேர்தல்2011 அப்டேட்ஸ்
***************************************************

என் கூகிள் பஸ் ஐடி : subramanian rajaraman


காங்கிரஸைத் தோற்கடிக்கத் தேர்தல் களத்தில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் ஒருங்கிணைந்து குழுவாகச் செயல்படலாம் என்று சென்ற பதிவில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதனை தனது தளத்திலும் வெளியிட்டிருந்தார் கேஆர்பி.செந்திலண்ணன். ஏகப்பட்டபேர் தன்னார்வலர்களாக வருவார்கள் என்று நினைத்தேன். ஒரு சில நண்பர்கள் கேஆர்பி செந்திலுக்கு தொலைபேசியில் பேசி தங்களது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

சமூக அக்கறையுடன் அரசியல் விமர்சனங்களை எழுதிவரும் நிறைய பதிவர்கள் தமது பங்களிப்பினை சிறிய அளவிலேனும் வெளிப்படுத்தலாமே? வெறுமனே இணையத்தில் மட்டும் 'பொங்கி' நானும் சமூக ஆர்வலன் தான் என்று காட்டிக் கொள்வதனால் ஆகப்போகும் பயனென்ன?

நண்பர் பதிவர் கும்மி இது சம்பந்தமான ஒழுங்கமைவுகளில் ஈடுபட்டு வருகிறார். நாளை 19.03.2011 சனியன்று ஆர்வலர்களின் சந்திப்பை ஒழுங்கு செய்வதாக உத்தேசம். விருப்பமுள்ளோர் கேஆர்பி செந்திலை 80988 58248 என்ற எண்ணிலும், என்னை 95007 90916 என்ற எண்ணிலும் அழைக்கலாம். நம்மால் முடிந்தவரை குறைந்தபட்சம் பத்து தெருக்களாவது சுற்றிவந்து தெருவுக்கு நாலு ஓட்டை காங்கிரஸுக்குப் போகாமல் தடுத்து நிறுத்தலாமல்லவா?

எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் - மக்கள்
தனை ஈன்ற தமிழ்நாடு தனக்கும் - என்னால்
திணை அளவு நலமேனும் கிடைக்குமாயின், நான்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்.
உன்னை ஒன்று வேண்டுகிறேன் - என்னால்
ஆவதொன்று உண்டாயின் அதற்கெந்தன்
உயிர் உண்டு!

- பாவேந்தர் பாரதிதாசன்



3 பேரு கிடா வெட்டுறாங்க:

நிலவு சொன்னது…

காங்கிரசுக்கு ஓட்டுப் போடாமல் அப்புறம் யாருக்கு உங்க ஓட்டு ? இதயும் பாருங்க நண்பா
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_17.html
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_15.html

ஜோதிஜி சொன்னது…

ஒவ்வொரு நாளும் இது குறித்து நாளை எழுதி விடலாம் என்று யோசிக்கும் போது அடுத்த ஒரு மணி நேரத்தில் துப்பறியும் கதை போல மொத்தமும் மாறி விடுகின்றது. இதில் எதை நம்பி? எவருக்கு ஆதரவாக? எவரை அழிக்க? எவரை ஒழிக்க?

தமிழனத்திற்கு இது சாபம்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

திராவிடக்கட்சிகள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.. இவர்களுக்கு ஒரு மாற்று இன்னும் வரவில்லை. இருந்தாலும் விளக்குமாற்றால் அடித்து விரட்டுவதைத்தவிர வேறு வழி இல்லை

Related Posts with Thumbnails