ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

வண்புணர்ச்சி


கூர்த்த நாசியுடன் சாக்லேட் கலரில்
உதடு சுழிக்கும் புன்னகையும்
குட்டிப் பூனையாய்ச் சுருண்டிருந்த
கழுத்து முடிகளுமாய்
வாசம் வீசும்
எதிர் சீட்டுப் பெண்
அறிந்திருக்கவில்லை
நான் அவளை ரகஸியமாய்ப்
புணர்ந்து கொண்டிருப்பதை!
************************
காற்றில் முடிபறக்க
துப்பட்டா சரிசெய்தபடி கடப்பவளும்
உதடுகளில் ஐஸ்க்ரீம் வழிய
தோழியிடம் கண்ணடிப்பவளும்
முத்தமிடும் ஆசையைக் கிளர்ந்தெழச் செய்யும்
மினுமினுக்கும் கரிய கன்னங்களையுடைய
விற்பனைப் பெண்ணுமாய்
நிறைத்துக் கொள்கின்றனர்
இந்த ஞாயிற்றுக் கிழமையின்
கனவுகளை!
**************************************************

9 பேரு கிடா வெட்டுறாங்க:

dheva சொன்னது…

வழிந்தோடும் கற்பனையில் தீர்த்துக் கொள்ளப்படுகிறது ததும்பி வழியும் காமம்....! நிறைத்துக் கொள்ளும் பொழுதுகளிலுல் தீறமால் அத்துமீறும்.. நினைவுகளுக்கு யார் இடுவார் தடுப்பு....!

தம்பி.. நான் ரசித்தேன் பா....கவிதையை...!

வால்பையன் சொன்னது…

//எதிர் சீட்டுப் பெண்
அறிந்திருக்கவில்லை
நான் அவளை ரகஸியமாய்ப்
புணர்ந்து கொண்டிருப்பதை!//


டீன் ஏன் ஞாபகம் வருது தல!

தமிழ்10 வோட்டு பட்டை மால்வேர் என்கிறது ஆண்ட்டிவைரஸ் சாஃப்ட்வேர்! முக்கியமில்லைனா அதை எடுத்துருங்க தல! வர்றதுக்கு பயமுறுத்துது அது

ஹேமா சொன்னது…

விந்தையாரே அழகான ஞாயிற்றுக்கிழமையாய் அமையட்டும்.சந்தோஷமாயிருக்கீங்கபோல !

Unknown சொன்னது…

இப்பதான் பழய வாசனை அடிக்குது ...

skamaraj சொன்னது…

உள்ளது உள்ளபடி சொல்லும்.கண்ணாடிக் கவிதை.இலக்கியம் காலத்தின் கண்ணாடி.இது கலர்க்கண்ணாடி.

தனி காட்டு ராஜா சொன்னது…

//எதிர் சீட்டுப் பெண்
அறிந்திருக்கவில்லை
நான் அவளை ரகஸியமாய்ப்
புணர்ந்து கொண்டிருப்பதை!//

எதா இருந்தாலும் பையன் பிராங்கா பெசாரன் பா ....

PRABHU RAJADURAI சொன்னது…

அந்தப் பெண் நினைத்துக் கொண்டிருக்கலாம், 'முட்டாள், நானும்தான் உன்னைப் புணர்ந்து கொண்டிருக்கிறேன். ஏதோ ஆண்களுக்கு மட்டும்தான் காமம் என்று நினைத்துக் கொண்டு கழிவிரக்கத்துடன் கவிதை புனைந்து கொண்டிருக்கிறாயே' என்று:-)

நேசமித்ரன். சொன்னது…

இந்த பஸ் கவிதைல கொஞ்சம் கலாப்ரியா வாசனை இருக்கா இல்லியா ?

தமிழ்ப் பையன் சொன்னது…

காற்றில் பரவும் அவளின் வாசத்தை வன்புணர்ந்துவிட்டன எனது நாசிகள் !!!

மாற்ற வேண்டும் இந்தக் கொடும் பழக்கத்தை இல்லாவிட்டால் எனக்கு இருக்கு சிறைத்தண்டனை !!!

தண்டனைக்கு பெயர் கலியாணமாம் !!!

---- எப்பூடி

Related Posts with Thumbnails