tag:blogger.com,1999:blog-4531166869130563313.post2796383975684153918..comments2024-01-19T14:17:25.385+05:30Comments on விந்தைமனிதன்: மாற்றுமருத்துவம் ஏமாற்றுவேலையா? - Dr.புரூனோவின் பதிவையொட்டி சில சிந்தனைகள்vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-56305400114407359542011-04-04T21:15:24.895+05:302011-04-04T21:15:24.895+05:30விழிப்புணர்வை தூண்டும்
இடுகைக்கு நன்றி.விழிப்புணர்வை தூண்டும் <br />இடுகைக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-76005403817810365172011-03-20T11:38:08.579+05:302011-03-20T11:38:08.579+05:30அருமையான பதிவுக்கு நன்றி.
மாற்று மருத்துவம் என்று...அருமையான பதிவுக்கு நன்றி. <br />மாற்று மருத்துவம் என்று சொல்லும் போது இயற்கை நல வாழ்வியல் பற்றியும் சொல்லியாகி வேண்டும். ஆயுர்வேதா, சித்தா, யூனானி, ஹோமியோபதி, போன்றவற்றில் மருந்து, மருத்துவர், உண்டு. <br />இயற்கை நலவாழ்வியலில் மருந்து என்று ஒன்று கிடையவே கிடையாது. நமக்கு நாமே மருத்துவர்; உண்ணும உணவே மருந்து. "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு" என்னும் திருக்குறளை நோக்கினால் உணவே மருந்து என்னும் உண்மை புரிய வரும். நான் மாற்று மருத்துவத்துக்கு எதிரானவன் அல்ல. மருந்துகள் இல்லாமலேயே மனிதன் ஆரோக்கியமாக வாழ இயலும் என்றால், அந்த முறையான இயற்கை நலவாழ்வியலை எல்லோரும் பின்பற்றலாமே. நேரம் கிடைக்கும் போது வாருங்கள் எனது வலைப்பூவுக்கு:<br />வாழி நலம் சூழ..<br />www.frutarians.blogspot.comAshwin Jihttps://www.blogger.com/profile/18075215108280331474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-27810707779116679162010-10-16T15:16:29.738+05:302010-10-16T15:16:29.738+05:30//ஏன் சித்தா,ஆயுற்வேத மருத்துவர்கள் அலோபதியை நாடவே...//ஏன் சித்தா,ஆயுற்வேத மருத்துவர்கள் அலோபதியை நாடவேண்டும்.//<br /><br />தங்கள் முறையை விட அலோபதி பல விதங்களில் சிறந்து என்பதால்<br /><br />// அலோபதி மருத்துவத்தால் சித்தா,ஆயுற்வேத மருத்துவத்தில் ஏற்பட்ட அழிவுகள் என்ன என்பதை எனது blog_ல் எழுதி தங்களது பார்வைக்கு கொண்டுவருகிறேன் //<br />அப்படி என்றால் ஏன் சார் அலோபதி முறைக்கு வருகிறார்கள்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-47107487667123915972010-08-24T20:58:01.732+05:302010-08-24T20:58:01.732+05:30//அலோபதியில் குணமாக்க முடியாத நோய்களை மாற்று மருத்...//அலோபதியில் குணமாக்க முடியாத நோய்களை மாற்று மருத்துவத்தில் குணமாக்க முடியும்” என்பது உண்மையென்றால் எங்களை அலோபதி முறையில் வைத்தியம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஏன் உயர் நீதிமன்றத்தில் கெஞ்ச வேண்டும்'---- //<br /> <br /> அது மட்டும் அல்ல போஸ்ட்மார்டம் செய்யும் உரிமையும் சித்த மருத்துவர்களுக்கு உண்டு என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வர வாய்ப்பு உண்டு. ஏன் என்றால் சித்த மருத்துவத்திற்காண Tamilnadu Dr. M.G.R. Medical University- யின் Syllabus -ல் உள்ள பாடபிரிவுகள் <br /> 1. History and Basic Principles of Siddha Medicine<br /> 2. Bio-Chemistry<br /> 3. Anatomy - Part-I<br /> 4. Anatomy - Part-II<br /> 5. Physiology - Part-I<br /> 6. Physiology - Part-II<br /> 7. Medicinal Botany<br /> 8. Basic Principles of Pharmacy<br /> 9. Plant Kingdom<br /> 10. Metals, Minerals and <br /> Animal Kingdom<br /> 11. Micro Biology<br /> 12. Siddha Pathology<br /> 13. Modern Pathology<br /> 14. Hygiene and Community <br /> Medicine<br /> 15. Forensic Medicine and <br /> Toxicology<br /> 16. General Medicine(siddha)<br /> 17. Special Medicine including <br /> Yoga & Varma<br /> 18. Surgery including Bone <br /> Setting and Dental Diseases<br /> 19. Obstetrics &Gynaecology<br /> 20. Paediatric Medicine<br /> இவை 6 செமஸ்டராக பிரிக்கபட்டு 41/2 வருடம் படிப்பு<br /> 1 வருடம் மருத்துவ<br /> பயிற்சி.<br /> தகுதியின் அடிப்படையிலே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.<br /> தகுதியின் அடிப்படையிலே உரிமையை பெற்று பயன்படுதுவதும் பயன்படுத்தாமல் விடுவதும் அவர்கள் விருப்பம்.<br /> உயர் நீதிமன்றத்தில் கெஞ்சினால் <br />சாதகமான திர்ப்பு கிடைக்கும் என்று இந்திய இறையான்மையை கேலிகூத்தாக்காதிர்கள்.<br /> ஏன் சித்தா,ஆயுற்வேத மருத்துவர்கள் அலோபதியை நாடவேண்டும். அலோபதி மருத்துவத்தால் சித்தா,ஆயுற்வேத மருத்துவத்தில் ஏற்பட்ட அழிவுகள் என்ன என்பதை எனது blog_ல் எழுதி தங்களது பார்வைக்கு கொண்டுவருகிறேன்allinallhttps://www.blogger.com/profile/10598391424266969524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-28805965587552049442010-08-03T23:03:00.096+05:302010-08-03T23:03:00.096+05:30நல்ல ஒரு தொடக்கம்நல்ல ஒரு தொடக்கம்parthasarathynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-33201042270282158092010-08-02T10:47:15.543+05:302010-08-02T10:47:15.543+05:30SORRY FOR INTERRUPTION
READ THE LINK BELOW AND RE...SORRY FOR INTERRUPTION<br /><br />READ THE LINK BELOW AND RELAX A LITTLE BIT<br /><br /><a href="http://bibleunmaikal.blogspot.com/2010/08/blog-post.html" rel="nofollow">கிறிஸ்தவ மத குருக்கள் நோயுற்றவன் உடம்பில் ஜெபித்த எண்ணை தடவியே எப்பிணியையும் தீர்க்க முடியும். உலகில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் இடித்துவிட்டு தகுதி பெற்ற அனைத்து மருத்துவர்களும் ஸ்டெதஸ்கோப், மருந்து, மாத்திரை, மருத்துவ உபகரணங்கள் முதலியவைகளை தூக்கி எறிந்து விட்டு சர்ச்சின் மூப்பர்களாக மாறி சர்வ பிணிகளையும் தீர்க்கலாம் தானே?.</a><br /><br />..................Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-52778117229653479622010-08-02T05:09:42.423+05:302010-08-02T05:09:42.423+05:30அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது நம்முன்ன...அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது நம்முன்னோர்கள் கண்டதுதான். எது அளவு என்பதை அறிந்தவர்கள் மட்டுமே அதை உபயோகிக்க வேண்டும். நோயாளிக்கு தேவை நோய் குணமடைதல் அது எந்த முறையில் என்றாலும் அதை அவர் வரவேற்பார். அது அறுவை சிகிச்சையாய் இருந்தாலும் சரி, மாத்திரை சிகிச்சையாய் இருந்தாலும் சரி, தொடு சிகிச்சையாய் இருந்தாலும், காந்த சிகிச்சையாய் இருந்தாலும் சரி. மந்தரித்து குண்மானாலும் கூட அவருக்கு மகிழ்ச்சியே. இதில் அவரவருக்கு தெரிந்ததை தெளிந்ததை செய்வதுதான் அனைவருக்கும் நல்லதுSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-17714921326805694272010-08-02T05:06:03.852+05:302010-08-02T05:06:03.852+05:30சுத்தமான தண்ணீரைக் கூட அதிக அளவில் குடித்தால் தலை...<b> சுத்தமான தண்ணீரைக் கூட அதிக அளவில் குடித்தால் தலைவலி ஏற்படும், வாந்தி மயக்கம் ஏற்படும், சில நேரங்களில் வலிப்புகூட வரலாம் சந்தேகம் வந்தால் சில லிட்டர்களை ஒரே மூச்சில் குடித்துப் பாருங்கள். சுத்தமான தண்ணீருக்கே இப்படி பக்க விளைவுகள் இருக்கும்போது பக்கவிளைவே இல்லாத மருந்து என்பதை நம்புகிறீர்களா?</b>SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-28775660161669931392010-08-02T01:53:10.255+05:302010-08-02T01:53:10.255+05:30இது தொடர்பான எனது பதிவு இங்கே
http://sakalakaladr...இது தொடர்பான எனது பதிவு இங்கே<br /><br />http://sakalakaladr.blogspot.com/2010/08/blog-post.html<br /><br />தங்கள் கருத்துக்களை இடவும்Dr.ராம்https://www.blogger.com/profile/10836276094985157568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-28345976347205894712010-08-02T00:56:43.923+05:302010-08-02T00:56:43.923+05:30//ராம் சார் நான் அப்படி சொல்ல வில்லை அவர்களுக்கும்...//ராம் சார் நான் அப்படி சொல்ல வில்லை அவர்களுக்கும் போதுமான பயிற்ச்சி கொடுத்த பின் இந்த அலோபதியை பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. //<br /><br />அப்படி என்றால் அவர்களுக் கல்லூரியில் சேர்ந்து ஐந்த்ரை வருடம் படிக்க வேண்டியது தானே<br /><br />யார் தடுத்தது<br /><br />அப்படி படித்த பல சித்த மருத்துவர்கள் இருக்கிறார்கள் !! தெரியுமாBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-22058685655555201752010-08-02T00:52:10.004+05:302010-08-02T00:52:10.004+05:30//"இதில் தனியார் சித்த மருத்துவமனைகளும் உண்டு...//"இதில் தனியார் சித்த மருத்துவமனைகளும் உண்டு<br />தனியார் அலோபதி மருத்துவமனைகளும் உண்டு என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கிறதா"<br /><br />இல்லை சார் ஆனா இருக்கு இதில் மெஜாரிட்டி வசூல் ராஜா M.B.B.S தான் :-)//<br /><br />ஆதாரம் தர முடியுமா. <br /><br />-<br /><br />//ஒரு சித்த மருத்துவரால் தன் நோயாளிக்கான மருந்தை உருவாக்கும் திறமை பெற்றவர்//<br /><br />அப்படி பட்டவர் ஏன் சார் அலோபதி வேண்டும் என்று கேட்கிறார்<br /><br />//ஆனா அலோபதி மருத்துவரால் அது முடியாது.//<br />ஆமாம் சார்<br />இங்கு நோயாளியின் உயிருக்கு மதிப்பு அதிகம். <br /><br />// கிராமத்து பழமொழி "நாட்டையே ஆன்டவனுக்கு எறுமை எம்மாத்தரம்."//<br />உண்மைதான்<br /><br />அதனால் தான் எங்கள் முறையில் பலனில்லை. அடுத்த முறையை பயன்படுத்த அனுமதி வேண்டும் என்று கேட்கிறார்களாம் :) :)Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-56540928098922820632010-08-02T00:49:38.864+05:302010-08-02T00:49:38.864+05:30//இந்த சிரியாநங்கை அவர் உடலில் உயரும் விஷத்தை கட்ட...//இந்த சிரியாநங்கை அவர் உடலில் உயரும் விஷத்தை கட்டுபடுத்தும் தன்மை கொண்டது அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல வேண்டும் என எழுதி இருந்தேன்.//<br /><br />கட்டுப்படுத்தும் தன்மை உடையது என்றால் ஏன் மேல் சிகிச்சைக்காக செல்ல வேண்டும்.Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-34577615829571724662010-08-02T00:49:07.199+05:302010-08-02T00:49:07.199+05:30//தலைவா மருந்து கால் மதி முக்கால் இது உளவியல் சார்...//தலைவா மருந்து கால் மதி முக்கால் இது உளவியல் சார்ந்தது பாம்பு கடி பட்ட நபருக்கு மனதளவில் தைரியத்தையும் அதன் மூலம் அவருக்கு மன வலிமையையும் பெற செய்வது இந்த மூலிகை மருத்துவம்.//<br /><br />மனவலிமை மட்டும் தானா<br />நிஜத்தில் பலன் கிடையாதா<br /><br />ஆனால் நீங்கள் முதலில் கூறியது என்ன<br /><br />எது சரி<br /><br />(எது சரி என்று எனக்கு தெரியும் !!)Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-23430807236337007652010-08-02T00:48:04.721+05:302010-08-02T00:48:04.721+05:30//1) ஏற்கனவே நான் சொன்னதுபோல அலோபதி மாயைய்ல் சிக்க...//1) ஏற்கனவே நான் சொன்னதுபோல அலோபதி மாயைய்ல் சிக்கி மக்கள் உழலும்போது, தங்கள் survivalக்காக சில மருத்துவர்கள் அலோபதியையும் கையாளத்தொடங்குகிறார்கள்... இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்<br /><br />இதற்கு அடிப்படையான பன்னாட்டு நிறுவனங்களின் ஏகாதிபத்தியம் வீழ்த்தப் படுவதுதான் தீர்வு.//<br /><br /><b>சித்த மருத்துவர்களும் தங்கள் மருந்தை விட்டு விட்டு அலோபதி பரிந்துரைத்ஹால் இந்த நிறுவனங்களின் ஏகாதிபத்தியம் வீழ்த்தப்படுமா, மேலும் வளருமா என்பது தான் என் கேள்வி</b><br /><br />//2)சிலநேரங்களில் அவசியப்படும் உடனடி மற்றும் தற்காலிகத்தீர்வுக்கான மற்றைய குறிப்பாக அலோபதி முறையைக் கையாள்வதனால் எந்தவிதத்தில் மாற்று மருத்துவம் குறையுள்ளதாகிறது? //<br />எப்படி என்று தெளிவாகவே விளக்கியுள்ளேன். இதுவரை உங்களுக்கு புரியவில்லை என்றாலும் கூட நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். உடனடியாக புரியும்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-71007080206715154442010-08-02T00:44:32.944+05:302010-08-02T00:44:32.944+05:30//இதுதான் தொடர்ந்து இருக்கின்ற சிக்கல். மனிதனை எப்...//இதுதான் தொடர்ந்து இருக்கின்ற சிக்கல். மனிதனை எப்படியும் நோய்களினின்று காக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பல்வேறு நோய்தீர்ப்பு நிபுணர்களும் முயன்றுவருகிறார்கள் என்பதை அலோபதியும் அரசாங்கமும் எப்போதுதான் உணர்வார்களோ தெரியவில்லை.//<br /><br />உணர்ந்தாகிவிட்டது<br />ஆனால் ஒரு சிலர் தான் தங்கள் முறை வேண்டாம், அடுத்த முறை வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-27181064434250615092010-08-02T00:43:50.637+05:302010-08-02T00:43:50.637+05:30//மாற்றுமருத்துவத்தில் ரெய்கி சிகிச்சை மூலம் எத்தன...//மாற்றுமருத்துவத்தில் ரெய்கி சிகிச்சை மூலம் எத்தனையோ பிரச்சினைகளை , அலோபதி மருந்துகளால் குணமாகாத பிரச்சினைகளை குணப்படுத்தி இருக்கிறேன்//<br />வாழ்த்துக்கள்<br /><br />//இதனை அங்கீகாரமாகச் சொல்ல முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அலோபதியைத் தவிர எந்த மருத்துவமுறையையும் ஏற்றுக்கொள்ள முடியாத சட்டச்சிக்கல்கள். //<br /><br />இப்படி பொத்தாம் பொதுவாக கூறாமல் என்ன சட்டச்சிக்கல் என்று விவரித்தால் தீர்வு என்னவென்று பார்க்கலாம்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-46185493107635856542010-08-02T00:42:54.604+05:302010-08-02T00:42:54.604+05:30//MBBSக்கு மிகக் குறைந்தபட்சம் நன்கொடை கூட 30-40 ல...//MBBSக்கு மிகக் குறைந்தபட்சம் நன்கொடை கூட 30-40 லட்சங்கள் என்ற தனியார் கல்லூரிகளின் நடைமுறை தங்களுக்குத் தெரியாதா? அல்லது தெரியாததுபோல் இருக்கிறீர்களா? //<br />தெரியாது<br /><br />நீங்கள் தான் முதலில் 100 லட்சம் என்று கூறினீர்களே. இப்பொழுது 30, 40 என்று கூறுகிறீர்கள்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-60555120379513602232010-08-02T00:41:25.945+05:302010-08-02T00:41:25.945+05:30//அதுசரி மருத்துவரே! MBBS, MD, MS (MD,MS போன்ற உயர...//அதுசரி மருத்துவரே! MBBS, MD, MS (MD,MS போன்ற உயர்படிப்பு படித்தால்தான் மருத்துவத்துறையில் நிற்க முடியும் என்று உங்கள் பழைய பதிவில் சொல்லியிருக்கின்றீர்கள்) ஆகிய படிப்புக்களுக்கு இன்று ஆகும் செலவென்ன?//<br /><br />TUITION FEES PER ANNUM.<br />PG Diploma Rs.15,000/-<br />PG Degree Rs.20,000/-<br />MDS Rs.20,000/-Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-868706572059745132010-08-02T00:38:31.769+05:302010-08-02T00:38:31.769+05:30//நிச்சயமாக இது அனைத்து மாற்றுமருத்துவர்களின் பொது...//நிச்சயமாக இது அனைத்து மாற்றுமருத்துவர்களின் பொதுக்கருத்தாக இருக்கமுடியாது.//<br /><br />இதைத்தான் நான் கேட்டேன்<br /><br />//ஆனால் இந்த வழக்கு தொடுக்கப்படவேண்டிய கட்டாயத்தை உருவாக்கிய சமூக, பொருளாதாரக் காரணிகளை உள்ளடக்காமல் வெறுமனே ஒற்றைப் பரிணாமப்பார்வையில் பார்ப்பது அழகல்லவே!//<br />என்ன காரணிகள்<br /><br />//நவீன இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் கண்டுபிடிப்புக்களையும் ஆராய்ச்சிகளையும் பன்னாட்டு ஏகாதிபத்திய மற்றும் மருந்தியல் நிறுவனங்கள் தங்களது சுயலாபநோக்கத்துடன் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால்தான் அலோபதி இந்த அளவு கோலோச்சுகிறது என்பது எனது வாதம்.//<br />சரி<br />இனி சித்த மருத்துவர்களும் அலோபதி மருந்தை பரிந்துரைத்தால் அலோபதி கோலோச்சுவது கூடுமா குறையுமா <br /><br />இதற்கு பதில் கூறுங்கள்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-17946892300752352172010-08-02T00:37:15.525+05:302010-08-02T00:37:15.525+05:30//2)வெகுகாலம்வரை அலோபதியில் கோலோச்சிய பென்சிலின் ம...//2)வெகுகாலம்வரை அலோபதியில் கோலோச்சிய பென்சிலின் மருந்தைப் பற்றிய நவீன மருத்துவ அறிவியலின் இப்போதைய கருத்தென்ன?//<br /><br />நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை<br />விளக்கவும்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-38673917053346177422010-08-02T00:36:48.535+05:302010-08-02T00:36:48.535+05:30//ஏனெனில் அவை செயற்கை ரசாயனங்களால் தயாரிக்கப் படுப...//ஏனெனில் அவை செயற்கை ரசாயனங்களால் தயாரிக்கப் படுபவையல்ல.//<br /><br /><b>இயற்கையாக விளையும் அனைத்து பொருட்களுமே பக்க விளைவு உள்ளவையே</b><br /><br />அலோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துக்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்தவை அல்ல<br /><br />அவையும் தாவரங்கள் / பிற உயிரினங்களிலிருந்து பெறப்பட்டவையே<br /><br />மலேரியாவிற்கு சின்கோனா பட்டை பலனளிப்பதற்கு காரணம் அதில் உள்ள குவினைன்.<br /><br />குவினைனின் விளைவுகள் சின்கோனா பட்டையில் உண்டு<br />குவினைனின் பக்கவிளைவுகளும் சின்கோனா பட்டையில் உண்டு<br /><br />//ஆனால் அலோபதியில் உள்ள சாதாரண பாரசிட்டமால் கூட பக்கவிளைவினை ஏற்படுத்தக்கூடியது என்பதை ஒத்துக்கொள்வீர்களா?//<br />ஏற்றுக்கொள்கிறேன்<br />இந்த பாராசிட்டமாலுக்கு அண்ணன் ஒருவர் உண்டு<br /><br />அவர் பெயர் ஆஸ்பிரின்<br />அவருக்கும் பக்க விளைவுகள் உண்டு<br /><b>அவர் இருக்கும் oil of wintergreenக்கும் ஆஸ்பிரினின் அதே பக்க விளைவுகள் உண்டு</b><br /><br />ஆஸ்பிரின் சாப்பிட்டால் பக்க விளைவு ஆனால் oil of wintergreen சாப்பிட்டால் பக்க விளைவு கிடையாது என்பது அறியாமைBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-15450392887954894452010-08-02T00:32:03.802+05:302010-08-02T00:32:03.802+05:30//1)ஹோமியோபதியிலும், சித்தாவிலும், ஆயுர்வேதத்திலும...//1)ஹோமியோபதியிலும், சித்தாவிலும், ஆயுர்வேதத்திலும் உள்ள மிகப்பெரும்பான்மையான மருந்துகள் பக்கவிளைவற்றவை...//<br /><br />இதை நான் மறுக்கிறேன்<br /><br />அவர்கள் என்ன் ஆராய்ச்சி செய்து பக்கவிளைவுகள் இல்லை என்று கண்டுபிடித்தார்கள் என்ற விபரம் தர வேண்டும்<br /><br />ஆராய்ச்சி செய்ததால் தான் அலோபதி மருந்துக்களின் பக்க விளைவுகள் தெரிய வருகின்றன<br /><br />ஆராய்ச்சியை செய்யாமல் பக்க விளைவு கிடையாது என்று கூறுவதை ஏற்க முடியாது<br /><br />--<br /><br />சின்கோனா மரப்பட்டையை பயன்படுத்தும் போது அதற்கு பக்க விளைவு கிடையாது என்று தான் கூறினார்கள்<br /><br />ஆனால் அதே பட்டை அலோபதியால் ஆராய்ச்சிக்குட்பட்ட பின்னர் தான் பக்க விளைவுகள் தெரிய வந்தது<br /><br />இது உதாரணம் தான்<br /><br />--<br /><br /><b>விளைவை ஏற்படுத்தும் எந்த ஒரு பொருளுக்கும் பக்க விளைவு உண்டு<br /><br />இது உலக நீதி</b>Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-52392223328547098832010-08-02T00:32:01.634+05:302010-08-02T00:32:01.634+05:30"அதாவது அலோபதி மருத்துவம் படித்தவர்களே தவறு ச..."அதாவது அலோபதி மருத்துவம் படித்தவர்களே தவறு செய்கிறார்கள் .. மாற்று மருத்துவர்கள் தங்கள் படித்த மருத்துவ முறையினை பயன்படுத்தாமல் அலோபதி மருத்துவத்தை அதனை பற்றி தெரியாமலேயே பயன்படுத்தலாம் என்பதனைத்தான் தேவையான தீர்ப்பு என்று கூறுகிறீர்கள சிவா சார்" <br /><br />ராம் சார் நான் அப்படி சொல்ல வில்லை அவர்களுக்கும் போதுமான பயிற்ச்சி கொடுத்த பின் இந்த அலோபதியை பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-29112765210948168632010-08-02T00:29:21.397+05:302010-08-02T00:29:21.397+05:30//1) அலோபதியால் அனைத்துநோய்களையும் குணப்படுத்திவிட...//1) அலோபதியால் அனைத்துநோய்களையும் குணப்படுத்திவிடமுடியும் என்கிறீர்களா?//<br /><br />இல்லை<br /><br />ஆனால் எந்த நோயை குணப்படுத்த முடியாது என்பதை தெளிவாக கூற முடியும்.<br /><br />//2)அலோபதியால் முடியாதது வேறு எதனாலும் முடியாது என உங்களால் உறுதியாகச் சொல்லமுடியுமா?//<br />முடியாது<br />உதாரணமாக பெம்பிகஸ் போன்ற நோய்களுக்கு சித்த மருந்துக்கள் அலோபதி மருந்துக்களை விட அதிகம் பலன் தருபவை<br /><br />//3)"வாலிப,வயோதிக அன்பர்களை" கூவிக்கூவி அழைக்கும் மருத்துவச் சிகாமணிகளை இப்படி அனைத்து மாற்றுமருத்துவ வல்லுனர்களுடனும் பொதுமைப்படுத்திப் பேசலாமா?//<br />நான் பொதுமை படுத்தி பேசவில்லை<br /><b>நான் தெளிவாகவே வித்தியாசப்படுத்தியிருந்தேன் என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன்</b>Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-64870354087624671942010-08-02T00:27:16.005+05:302010-08-02T00:27:16.005+05:30//இதில் தெரிவது, நான் தமிழ் படித்தவரை, மாற்றுமருத்...//இதில் தெரிவது, நான் தமிழ் படித்தவரை, மாற்றுமருத்துவமுறைகளுக்கு ஆப்படித்த தீர்ப்பு என்கிற சந்தோஷத் தொனிதானே தவிர மாற்றுமருத்துவத்தினை ஆதரிக்கும் தொனியல்ல.//<br /><br />நான் இதுவரை இதில் மூன்று இடுகைகள் எழுதியுள்ளேன்<br /><br />அவற்றை படித்து பார்த்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்<br /><br />முடிந்தால் மூன்றாவது இடுகையில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க பாருங்கள் <br /><br />உங்களுக்கு உண்மை புரியும்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.com